14 ஏப்ரல் 2020

மனிதர்கள் உண்மை, நன்மை, என நம்பும் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி உண்மையான உண்மைகளை உணர்த்துகின்றது கொரோனா வைரஸ்

14.04.2020

மனிதர்கள் உண்மை, நன்மை, என நம்பும் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி உண்மையான உண்மைகளை உணர்த்துகின்றது கொரோனா வைரஸ்

குரலும் குறளும் கொரோனா வைரஸ்ஸும்
உணர்த்தும் உண்மை

„ வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.“

முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.



„ உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்“

✅ தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.



„ அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.“

✅ மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.



„ வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்“

✅ செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.



„ அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.“

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

Nisha

மனிதர்கள் உண்மை, நன்மை, என நம்பும் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி உண்மையான உண்மைகளை உணர்த்துகின்றது கொரோனா வைரஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!