27 மே 2019

ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோராய் ........2.?

இரண்டு நாட்கள் முன் நான் இட்ட பதிவு எழுத்து மாறி வாசிக்க முடியாமல் இருப்பதாக பலரும் சொல்வதனால் அப்பதிவை திருத்தி இரு பதிவாக இங்கே இடுகின்றேன்.
பதிவின் நோக்கம் எவரையும் குற்றப்படுத்தல் இல்லை. 1990 செப்டம்பர் மாதம் வரை இலங்கையில் வாழ்ந்த நான் அங்கே வாழ்ந்த காலத்தில் கண்டது, கேட்டதுமான சம்பவங்களின் சொந்த அனுபவத்துடன்.அககாலங்களில் அங்கே வாழ்ந்த பலரின் அனுபவங்களையும் கேட்டு உள் வாங்கி எழுதி இருக்கின்றேன்.
இச்சம்பவங்கள் அனைத்தும் உண்மையாகவே நடந்தது. இதில் குறிக்கப்பட்ட படுகொலை தாக்குதல்களை விட பல சம்பவங்கள் வெளியுலகம் அறியாமலே மண்ணோடு மண்ணாகி போனது. கைது செய்து காணாமல் போனோர் காணாமலேயே போய் விட்டார்கள்.
ஒரு விடயத்தை மிகத்தெளிவாக குறிப்பிட விரும்புகின்றேன். கடந்த காலம் நடந்தவைகளை பேசி ஒருவரைஒருவர் குற்றப்படுத்தி, தற்கால சம்பவங்களை நியாயப்படுத்துவோருக்கு ஆதரவு தருவது கண்டிப்புக்குரியது. விடுதலைப்புலிகள் மேல் குற்றம் சாட்டுவதை ரசிப்பதும்,அவர்கள் செய்தது, செய்யாதது என அனைத்தையும் அவர்கள் மேல் பழியாக இட்டு வன்மம் வளர்ப்பதும் எமது கண்களை நாங்களே குத்தி குருடாக்குவதுக்கு நிகரான செயல்பாடு.
ஒரிரு சம்பவங்களை மட்டும் பேசிப்பேசி வன்மம் வளர்க்கப்படுவதை விட ஒட்டு மொத்தமாக நடந்தது அனைத்தையும் எடுத்து சொல்லி புரிய வைப்பதே இச்சூழலில் அவசியமானதாக இருக்கின்றது.
மாறி மாறி குற்றம் சாட்டுவதையும், நியாயப்படுத்துவதையும், சமூகம் சார்ந்து மீட்சி திட்டங்களில் ஈடுபடும் எம் போன்றோரும் வேடிக்கை பார்ப்பது எமக்கான தீர்வுகளை தூரமாக்கி கொண்டே செல்கின்றன்.
1985 - 1990 களில் அனைத்து தமிழ் கிராமங்களுக்குள்ளும் சோதனை எனும் பெயரில் அத்துமீறி நுழைந்து உள்ளூர் மக்களை கைது செய்ததும், காணாமல போனதும் சாம்பலானதும், ஆவணப்படுத்தப்படாமலே அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன.இதோ விட்டு விடுவோம் என சொல்லி கூட்டி சென்றவர்களை திரும்பி சந்திக்க வாய்ப்பை தரவே இல்லை.
1990 ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான் குடி பள்ளிவாசலில் நடந்த சம்பவத்தை கடந்த 30 வருடங்களாகவே அதன் வடுக்களும், வன்மமும் மாறாமல் கடத்தி வருவோருக்கு தங்கள் சமூகம் தமிழ் பேசிய இந்துக்கள், கிறிஸ்தவர்களை குறி வைத்து நடத்திய தாக்குதல் விபரங்களும் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகம் விட்ட தவறுகளை அவர்களுக்கு உணர்த்தாமல் விடுதலைப்புலிகள் செய்த தவறுகளை மட்டும் மீண்டும் நினைவு படுத்துவது ஒரு பக்க சார்பானதாகவே இருக்கின்றது.
எங்கள் உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதம், தீவிரவாதிகள் எனும் பதிவுகளும், அதை ஆதரிக்கும் எம்மவர் ரியாக்சன்களும், இரு சமூகத்தினருக்கிடையில் ஏற்கனவே இருக்கும் சிக்கல்களை இடியாப்ப சிக்கலகளாக்கி கொண்டே செல்கின்றன.
 ஈஸ்டர் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களின் பின்னனியில் ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாதசக்திகளின் ஊடுருவலும், சர்வதேச மேலாதிக்க வாதமும் இலங்கையை ஆக்ரமிக்க ஆரம்பித்திருக்கின்றன.
 40 க்கும் மேற்பட்ட வருடங்கள் உள் நாட்டுக்குள் நடந்த உரிமை போராட்டத்தினூடான தாக்குதல் சம்பவங்களை தற்கால குண்டுவெடுப்பு நிகழ்வுகளை ஒப்பீடு செய்கின்றார்கள்.
 தமிழரிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப்பெறவென ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப்புலிகளுடன், ஐ,எஸ் தீவிரவாதிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நியாயப்படுத்த முனைந்த பலரை காண முடிகின்றது.
எங்கள் உரிமைக்காக போராடியவர்களை உலகம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தலாம், தடை செய்யலாம். தமிழர்களாகிய எங்களுக்கு தெரிய வேண்டும். அவர்கள் எங்கள் உரிமைக்காக ஆயுதமேந்தினார்கள். சர்வதேசமே இணைந்து எங்கள் உரிமை போராட்டத்தை நசுக்கியது.
ஈஸ்டர் கால தற்கொலை குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எந்த உரிமைக்காக மக்களை கொன்றழித்தார்கள் என அவர்களை எங்கள் உரிமைப்போராட்டத்துடன் ஒப்பீடு செய்கின்றார்கள்?
அப்போது நீ செய்தாய் தானே? இப்போது நான் செய்தால் தப்பா என எதிர் விவாதம் செய்து ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோர் நாட்டின் பாதுகாபபை கேள்விக்குறியாக்கி, அன்னியர் எம் நாட்டை அடிமைப்படுத்த இடம் கொடுப்பதை உணராதோராய் இருக்கின்றார்கள்.
நாடென்ன செய்தது எனக்கு என வினாவுவதை விட என் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என சிந்திப்பதே இன்றைய நிலையில் சிறப்பு.
கடந்ததெல்லாம் மறந்து புதியதோர் உலகம் காண நினைப்பது நல்லது தான். அதற்கு முன் அவரவர் மனட்சாட்சியின் நிமித்தம் தாமும் விட்ட தவறுகளை உணர்ந்து கொள்ள வேண்டும். எம்மை நீதிமானாக்கி, எதிராளியை குற்றப்படுத்திக் கொள்வோமானால் எம்மால் ஒரு அடி கூட முன்னோக்கி நகர முடியாது. 
இனியேனும் எம்மிரு சமூகத்துக்குமான நல்லெண்ணம்,சமுதாய நலன் சார்ந்து நீண்டகால மீட்சித்திட்டங்களை நோக்கிப்பயணிக்க வேண்டுமானால் அவரவர் தவறுகள் உணர்த்தப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக்க நீட்டப்படும் விரல்கள் தம்மை பரிசுத்தமானவர்களாக நியாயப்படுத்த எடுக்கும் முயற்சிகளால் எந்த பயனும் இல்லை.
இங்கே நான் பகிர்ந்திருக்கும் தகவல்கள். திகதிகளின் அடிப்படையில் அவரவர் சொந்த புத்தியை சரியாக கூர் தீட்டி தம்மை தாம் ஆராய்ந்தறிந்த பினஅவரவர் செயல்பாடுகளை நியாயப்படுத்தவும்.
நான் தமிழ் பேசும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கின்றேன். போராளிகள்+ இராணுவ மோதல்கள் குறித்து குறிப்பிடவில்லை.
விடுதலைப்புலிகள் + ராஜிவ் காந்தி கொலையுடன் நிகழ் கால சம்பவங்களை ஒப்பிடுவோருக்கு,அறிந்தோ அறியாமலோ அன்னிய,அண்டை நாட்டு அரசியல் சதிக்குள் சிக்கியதனால் எங்கள் உரிமைகளை நாங்கள் இழந்ததுடன், இருப்புக்களையும், இழந்து, உயிர்களையும்,உடமைகளையும் பறிகொடுத்து நாடற்றவர்களாக அகதி வாழ்க்கையின் வலிகள் என்றேனும் புரியுமோ என்னமோ?
காலம் அவர்களுக்கும் பலதை உணர்த்தும்.
முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழ பேசும் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் இராணுவத்துடன் இணைந்தும் தனித்தும் நடத்திய தாக்குதல்கள், படுகொலையானோர் விபரங்கள் குத்துமதிப்பாகவே கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.
இதை விடவும் அதிகமான இழப்புக்களை நாங்கள் சந்தித்தோம். 


 *
1990 ல் முஸ்லிம் ஊர்காவல் படை எனும் துணை இராணுவப்படையினரும், இலங்கை இராணுவமும் இணைந்தும் தனித்தும் பொது மக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் என பதிவு செய்யப்பட்டிருப்பவை. 
🔘 1.கல்முனைப் படுகொலைகள் - 250 / 12.06.1990
🔘 2.திராய்க்கேணிப் படுகொலைகள்- 47 / 06.08.1990
🔘 3.வீரமுனைப் படுகொலைகள்- 400 / 12.08.1990
🔘 4.கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்-158 / 05.09.1990 
🔘 5.சவுக்கடி படுகொலைகள் 20.09.1990
🔘 6.கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள்-152 / 11.06.1991

விடுதலைப்புலிகள் முஸ்லிம் பொது மக்கள் மேல் நடத்திய தாக்குதல்கள் என பதிவு பெற்றிருப்பவை. 
🔘 1.காத்தான் குடி 103 பேர் படுகொலை ஆகஸ்ட் 3 1990 
🔘 2.பல்லியகொடல்லை 166 -171 பேர் படுகொலை அக்ரோபர் 1991

அடுத்த பதிவில் தொடரும்.

ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோராய்.........?

அப்போது நீ செய்தாய் தானே? 
இப்போது நான் செய்தால் தப்பா?

ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோராய்.........?
நாட்டின் பாதுகாபபை கேள்விக்குறியாக்கி, அன்னியர் எம் நாட்டை அடிமைப்படுத்த இடம் கொடுப்பதை உணராதோராய்...?
கடந்த காலம் நடந்ததென ஆளுக்காள் குற்றம் குறைகள் சொல்லி விமர்சிப்போருக்கும், எங்கள் உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதம், தீவிரவாதிகள் எனும் பதிவுகளும், அதை ஆதரிக்கும் எம்மவர் ரியாக்சன்களும், இரு சமூகத்தினருக்கிடையில் ஏற்கனவே இருக்கும் சிக்கல்களை இடியாப்ப சிக்கலகளாக்கி கொண்டே செல்கின்றன.
கடந்த கதை பேசி குற்றம் சாட்டி எமது முன்னேற்றம், தீர்வுகளை தூரமாக்குவதை விட புற்றாய் வளர்ந்து சீள் பிடித்த காயத்தை வெட்டி சீளை வெளியேற்றி விட்டு கட்டுப்போடுவது நல்லதென நான் நினைக்கின்றேன்.
நாடென்ன செய்தது எனக்கு என வினாவுவதை விட என் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என சிந்திப்பதே இன்றைய நிலையில் சிறப்பு.
கடந்ததெல்லாம் மறந்து புதியதோர் உலகம் காண நினைப்பது நல்லது தான். அதற்கு முன் அவரவர் மனட்சாட்சியின் நிமித்தம் தாமும் விட்ட தவறுகளை உணர்ந்து கொள்ள வேண்டும். எம்மை நீதிமானாக்கி, எதிராளியை குற்றப்படுத்திக் கொள்வோமானால் எம்மால் ஒரு அடி கூட முன்னோக்கி நகர முடியாது. 
இனியேனும் எம்மிரு சமூகத்துக்குமான நல்லெண்ணம்,சமுதாய நலன் சார்ந்து நீண்டகால மீட்சித்திட்டங்களை நோக்கிப்பயணிக்க வேண்டுமானால் அவரவர் தவறுகள் உணர்த்தப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக்க நீட்டப்படும் விரல்கள் தம்மை பரிசுத்தமானவர்களாக நியாயப்படுத்த எடுக்கும் முயற்சிகளால் எந்த பயனும் இலை.
விடுதலைப்புலிகள் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் திகதி காத்தான் குடி பள்ளிவாசலுக்குள் நுழைந்து தாக்கியதாக சொல்லி சஹரான் குழுவினரின் ஈஸ்டர் கால குண்டு வெடிப்புக்களை நியாயப்படுத்துவோருக்கு விடுதலைப்புலிகள் 
காத்தான் குடி பள்ளிவாசலில் ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என தெரியாமல் இருக்கலாம்.

தெரிந்தவர்கள் உள்ளதை உள்ளபடி வெளியே சொல்லாத வரை தமிழ்ச்சமூகம் வீழ்ச்சியை நோக்கியே பயணிக்கும்.
இங்கே நான் பகிர்ந்திருக்கும் தகவல்கள். திகதிகளின் அடிப்படையில் அவரவர் சொந்த புத்தியை சரியாக கூர் தீட்டி தம்மை தாம் ஆராய்ந்தறிந்த பினஅவரவர் செயல்பாடுகளை நியாயப்படுத்தவும்.
நான் இங்கே தமிழ் பேசும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கின்றேன்.
விடுதலைப்புலிகள் + ராஜிவ் காந்தி கொலையுடன் நிகழ் கால சம்பவங்களை ஒப்பிடுவோருக்கு,அறிந்தோ அறியாமலோ அன்னிய,அண்டை நாட்டு அரசியல் சதிக்குள் சிக்கியதனால் எங்கள் உரிமைகளை நாங்கள் இழந்ததுடன், இருப்புக்களையும், இழந்து, உயிர்களையும்,உடமைகளையும் பறிகொடுத்து நாடற்றவர்களாக அகதி வாழ்க்கையின் வலிகள் என்றேனும் புரியுமோ என்னமோ?
காலம் அவர்களுக்கும் பலதை உணர்த்தும்.
 30.10.1990.முஸ்லிம்களை யாழிலிருந்து வெளியேற்றியதில் ஒட்டு மொத்த இலங்கை தமிழ் பேசும் இனத்தினரிடமிருந்தும் பறிக்கப்பட்ட உரிமைகளை இலங்கை அரசிடமிருந்து பெற்றிடவென போராளிகளான விடுதலைப்புலிகள் தவறு செய்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆயிரம் நியாயங்கள் கூறினாலும், தமிழ் பேசும் சக சகோதர இனம் எனும் புரிதலை கடந்து ஓரிருவர் அல்லது குழுவின் செயல்பாட்டிற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் தண்டித்தது தவறு தான். அவர்கள் அதை செய்திருக்க கூடாது. மன்னிப்பு எனும் வார்த்தையினால் ஈடு கட்டி விட முடியாத தவறு தான்.
அவர்கள் விட்ட ஆரம்ப தவறுகளின் பலனை அவர்களே அறுவடை செய்தும் கொண்டார்கள்😭.
அதற்காக.........?
அவர்கள் தவறு செய்தார்கள் என விரல் நீட்டி குற்றம் சாட்ட நீங்கள் குற்றமற்றவர்களாக இருந்தீர்களோ? 
நீங்கள் உங்கள் சார்பில் எந்த தவறும் செய்யவே இல்லையா? எனும் ஆழ் மன ஆராய்தல் அவசியம்.

காத்தான் குடி படுகொலை
***********************************

⁉️1990.ஆகஸ்ட் 3ம் திகதி காத்தான் குடி பள்ளிவாசலில் ஆயுதம் தாங்கிய குழுவினர் தாக்கினார்கள். அத்தாக்குதலில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

👩‍⚖️காத்தான் குடி பள்ளி வாசல் சம்பவத்தின் பின்னனிகள் என்ன? 

👩‍⚖️இந்த சம்பவத்துக்கு முன்னும் பின்னும் நடந்தவை என்ன? 
👩‍⚖️அவ்வாறான முடிவுக்கு நிர்பந்தித்தது எது அல்லது யார்?

காத்தான் குடி படுகொலையை மட்டுமே இங்கே பெரும் குற்றமாக்கி எனைய குற்றங்களை மறைத்து, முக்கியமாக முஸ்லிம் சமூகம் செய்த, செய்து கொண்டிருக்கின்ற தவறுகளை உணராமல் சாக்குப்போக்கு சொல்லி இடி சோறு தின்றாலும் சிங்கள அரசுக்கே சேவகர்களாக வாழ்வதை ஆதரிப்பதும், நியாயப்படுத்துவதும் தம் தவறுகளை அவர்கள் உண்ரும் தருணத்தை 
தரப்போவதே இல்லை.

தவறுகள் கண்டிப்பாக இடிந்துரைக்கப்பட வேண்டும். ஆதரவு செய்கின்றோம் எனும் பெயரில் பூசி மெழுகல்கள் தவிர்க்கப்பட வேண்டும். 
நட்பு வேறு. சமூகம் சார்ந்த எதிர்காலம் வேறு எனும் அறிவு பூர்வ சிந்தனை எமக்குள் வேண்டும். நட்பையும், சமூகத்தையும் ஒன்று சேர்த்து குழப்பி எமது சமூகத்துக்கு தீங்கு செய்வோர் பட்டியலில் இடம் பெற வேண்டாம். .

ஆம்....?
எங்கள் உரிமைப்போராட்டம் நசுக்கப்படடபோதும் வேடிக்கை பார்த்தீர்கள். போதாக்குறைக்கு உங்கள் அரசியல் ஆளுமைகள் எங்கள் மக்களையும் நிலங்களையும் அபகரிக்கும் செயல்பாடுகளில் ஈடு படும் போது ஆதரவும் தந்தீர்கள். அதற்கு யாழிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதையும், காத்தான் குடி சம்பவத்தையும் காரணம் காட்டினீர்கள்.
நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி யாகும் போதும் உங்கள் சமூகம் விடும் தவறுகளை உணராமல, நியாயப்படுத்துகின்றீர்கள்?
கிழக்கில் என்ன தான் நடந்தது? நடக்கின்றது? அங்கே தமிழர்களுக்கு பாதுகாப்பிலலத சூழல் ஏன்? கிழக்கு தமிழர்கள் பேசாமடந்தைகளாக, எவன் ஆண்டால் எமக்கென்னெ நான் என் குடும்பம் எனும் சுய நலவாதிகளாக முதுகெலும்பில்லாத கோழைகளாக மாறிப்போனது ஏன்?
கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது.
1990 ஆகஸ்ட் 3 காத்தான் குடி பள்ளி வாசலில்
தொழுகை நேரம் 103 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடுக்களை சுமப்போர்,வன்மம் வளர்ப்போர் அக்காலத்தில் தங்கள் சமூகம் விட்ட பிழைகளை உணர மறுப்பது எமக்குள் பல கேள்விகளை தந்திருக்க வேண்டுமல்லவா.....?

ஒன்றுக்கு நூறாய் இச்சம்பவம் நடந்த அடுத்த வாரமே பழிக்கு பழி வாங்கி உங்கள் இரத்த வெறியை தீத்து கொண்ட பின்னும் இலங்கை தேசத்தில் தமிழ் பேசும் இனத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை கூட பெறத்தகுதி அற்றவர்களாக்கி ,பால் சோறும் பொங்கி தின்ற பின்னும் எதை தான் எதிர்பார்க்கின்றீர்கள்?
காத்தான்குடியில் ஆக்ஸ்ட் 3 ல் 103 பேர் படுகொலையானதன் எதிரொலியாக நாங்கள் இழந்தவைகளுக்கு எங்கே நியாயம் கேட்க வேண்டும்?
திராய்க்கேணி படுகொலைகள் 
****************************************
1990 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 6 ம் திகதி இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது.இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.
வீரமுனைப்படுகொலை
*******************************

⁉️1990 ஆம் ஆண்டில் யூன்,யூலை மாதம் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் அப்பகுதி கிராம தமிழ்பேசும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் வீரமுனை பிள்ளையார் கோயில் வளவிலும், இராம கிருஷ்ன மிஷன் பள்ளியிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தார்கள்.

அவ்விடத்தில் ஆகஸ்ட் எட்டில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் உள் நுழைந்து 400 க்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டும் வெட்டியும் தாக்கினார்கள். வீரமுனை பிள்ளையார் கோயில் தாக்குதல் சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்.
1990 யூன் மாதமிருந்து காணாமல் போனோர், கைது செய்யப்பட்டோர் குறித்து இது வரை எந்த தகவலும் இல்லை என்பதை விட கைது எனும் பெயரில் கொண்டு செல்லப்பட்டவர்களை உயிரோடு அடுக்கி, டயர் போட்டு எரித்து எரிந்தும், எரியாமாலும், மட்டக்களப்பு வாவியில் எறிந்த உண்மைகள் பிணங்கள் எழுந்து வந்து சொல்லவா போகின்றன?
சத்துருக்கொண்டான் படுகொலை
********************************************

⁉️1990ம் ஆண்டு ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சோதனை எனும் பெயரில் நடத்திய கைதுகள் செயல்பாடுகளுக்கு அஞ்சி தமது இருப்பிடங்களை விட்டு சிதறியோடி பாதுகாப்புத்தேடி, பாடசாலைகள், ஆலயங்கள், பொதுக்கட்டடங்கள் என்பனவற்றில் கூட்டமாக தஞ்சமடைந்தவர்களை 

ஒரே இடத்தில் கொன்ற படுகொலைதான் சத்துருக்கொண்டான் படுகொலையாகும்.

செப்டம்பர் 9. இராணுவத்தினருடன்,தமிழ் ஒட்டுக்குழுக்களும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் சேர்ந்து மட்டக்களப்பு சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் 186 பேரை ஒன்றாகக் குவித்து அடையாளம் தெரியாமல் கொன்றழித்தார்கள்.குற்றுயிரும், குறைஉயிருமாக ஒன்றாக குவித்து டயர்களை போட்டு எரித்தார்கள்.
இதற்கெல்லாம் சாட்சி யார் என்கின்றீர்களா? 
பிணங்கள் வந்து சொல்லாது தான். 
எங்கள் மனங்கள் என்றேனும் ஒரு நாள் பேசும்.

ஆகஸ்ட் 3 காத்தான் குடி தாக்குதலுக்கு முன்னர் நடந்தது என்ன?
கிழக்கில்.அதிலும் மட்டக்களப்பு, அம்மாறையில் பூவும் நாரும், புட்டும் பூவும் ஏன் உதிர்ந்து போனது?
1990 களில் மட்டக்களப்பு, அம்பாறையில் யூன் மாதம் தொடக்கம் இராணுவத்துடன் இணைந்து, துணைப்படை எனும் பெயரில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் தமிழ்க்கிராமங்களுக்குள் நுழைந்து நடத்திய கொடுமைகளுக்கு யார் நியாயம் தீர்க்க முடியும்?
கல்முனைப்படுகொலை
********************************

⁉️1990 யூன் கல்முனையில் 200 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதும். உயிரோடு எரிக்கப்பட்டதும் அதற்கு முஸ்லிம் ஊர்காவல் படையினர் துணை போனதும், மசூதிகளில் ஆயுதங்கள் சேகரிக்கும் இட்ங்களானதும்......அன்று வரை தாயாக பிள்ளையா பழகி வந்த இரு சமூகமும் எதிரெதிராக,ஒருவரிலொருவர் நம்பிக்கைஅற்று, அச்சமும், அவ நம்பிக்கையும் நுழைத்தவர்கள் யார்?

விடுதலை போராட்ட செயல் பாடுகளை காட்டிக்கொடுத்ததும், விலை போனதும்.. பெரும்பான்மை சமூகத்தினை சார்ந்தே வெளிப்படுவதும் தான் உங்கள் நீதியா?
உங்களுக்கு வந்தால் இரத்தம்? அடுத்தவர் உயிர் என்ன தக்காளி சட்னியா?
நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. எமது பக்கம் குற்றம் சாட்டப்பட்டோர் தமது தவறுகளுக்கான பலனை அடைந்த பின்னும் அதையே பேசி தப்பிக்க முனைவோர் சிந்தியுங்கள்.
எமது விடுதலைப்போராட்டத்தையும், எமக்காக போராடிய விடுதலைப்புலிகளையும், அவர்களின் உயிர்த்தியாகத்தையும் விமர்சிக்கும் தகுதி உடையோராக இங்கே எவரும் இல்லை.
இலங்கை தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற தமிழ் பேசும் இந்துக்கள்,முஸ்லிம்கள்,கிறிஸ்தவர், பறங்கியர் என அனைத்து இனங்களின் ஒற்றுமையும் அவசியம் என்பதை போலவே எமது விடுதலைப்போராட்ட தியாகங்களுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.
அவர்கள் கடந்து வந்த போராட்ட பாதைகளில் கறைகள் இருக்கலாம், வடுக்கள் இருக்கலாம். அதற்காக அவர்கள் போராட்டமும், தியாகமும் கறைப்படுத்தப்படுமானால், அவர்கள் அர்ப்பணிப்பை புறம் தள்ளி சமூகம் சார்ந்த மீட்சிகளை முன்னெடுத்து செல்வது என்பது சாத்தியமே இல்லை.
அன்று நடந்தவைகளை பேச மறுப்பதும், மறப்பதும், மறைப்பதும் நியாயமாகவே படவில்லை.
குற்றம் சாட்டி ஒருவரிலொருவர் பழி போட்டு எமது தவறுகளை மறைப்பதை விட,வெளிப்படையாக பேசி தெளிவை பெறுவதே எமது சமூகத்துக்கு இன்றைய நிலையில் செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும்.
அனைவரும் இணைந்தே தீர்வுகளை தேடுவோம்.
இலங்கை எங்கள் தேசம். அதை பாதுகாப்பது எம் ஒவ்வொருவர் கடமையுமாகும்.
ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோராய்.........?
🔘


07 மே 2019

எதிலிகளை, எதிலிகள் உணராமல் ...?

விளைச்சல்களை வளைத்துண்ணும் 
செயற்கரிய செயற்கைப்பரப்பலால்
துரோகிகள் சூழ் உலகிலே
எதிலிகளாயானோர்
எதிர்காலம் இருண்டதாய்
எதிரிகள் நிறைந்ததாய்
மனித மமதையால் மதம் பிடித்தாட
மதமென்ன மனமென்ன 
இனமென்ன இடமென்ன 
எத்தனை தனமிருந்தென்ன? 
அத்தனையும் ஒரு நொடியில் ....? 
விதி என்போம், சதி என்போம், 
நம் மதி மறைக்க துதி செய்வோம்.

வளியதுக்கெல்லை இல்லை 
என்றுணர்ந்தோர் - வலியது 
வலிமையாய் வழியதை,அடைக்குமோ?

பாகிஸ்தானிலிருந்து எதிலிகளாய் இலங்கையின் தஞ்சமடைந்து இருப்பிடம் தேடி வீதிகளில் அலையும் 
குழந்தை 😭😭

நாங்களும் ஒரு நாள் இப்படித்தான் அலைந்தோம்.


03 மே 2019

மதம் எனும் பெயரில் மதம் பிடித்து அலைவோர் ....?

மதம் எனும் பெயரில் மனங்களில் மதம் பிடித்தலையும் அனைவரும் தீவிரவாதிகளே........!
மனிதர்களை சுயமாக சிந்திக்க விடாது, தாம் கொண்ட கொள்கைகளை மட்டுமே சரியானதென இனம்,மொழி,ஜாதி எனும் குறுகிய வட்டத்தினுள் சிந்திக்க, செயல்பட கற்பிக்கப்படுவதும் ஒருவகை தீவிரவாதமே......!
இந்துவோ,கிறிஸ்தவனோ,முஸ்லிமோ,பௌத்தனோ அவன் நம்பிக்கையை அவனுக்குள் வைத்து அவன் சார்ந்த மதம் சொல்லும்,அன்பை,அகிம்சையை, பொறுமையை,விட்டுக்கொடுத்தலை,சகிப்புத்தன்மையை போதிப்பவர்களாக இல்லை.
மத கட்டுப்பாடுகள் எனும் பெயரில் மனிதர்களை வெல்வதாக நினைத்து 
மதத்தின் பெயரால் தீவிர வாதிகளை உருவாக்கப்படுகின்றார்கள். 

எல்லா மதத்தினுள்ளும் மதத் தீவிரவாதிகள் உண்டு.

மனிதர்கள் ஆண்டாண்டு காலமாக தொடரும் நம்பிக்கைகளை கை விட்டு இன்னொன்றின் மீதான பற்றை உருவாக்க முடிவது என்பது இலகுவானது இல்லை. தம் மூதாதைய்ர் பின்பற்றியதாக சொல்லி கடைப்பிடிக்கும் நம்பிக்கைகளை விட்டு விலகி புதிதாக ஒன்றை நம்புகின்றார்கள் எனில் அதற்கான உளவியல் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும்.
தீர்வுகளை தேட வேண்டும். ஊருக்கொரு வணக்க ஸ்தலம் கட்டுவதை விட ஊரிலிருக்கும் மக்களின் குறைகளை தீர்க்க முன் வர வேண்டும்.
பெருமைக்காக வானுயர்ந்த வணக்க ஸ்தலங்களை கட்டி, அங்கே கடவுள் எனும் பெயரில் ஒன்றை அமைத்து தங்கத்தாலும், வைரத்தாலும் அலங்கரிக்க மனிதனோ பசியாலும், தாகத்தாலும் துடிக்கின்றான். 
அவன் பசியை இன்னொரு மனிதன் தனக்கு சாதகமாக்குகின்றான்.

தன் நிறைவை அடைந்த மனிதனை எதனாலும், எவராலும் அசைக்க முடியாது. மனிதர்களை தன் நிறைவடைந்தவர்களாக மாற்றும் வழிகளை காட்டாமல் மதங்கள் மூலம் மதங்களை வெல்ல முயற்சிப்பது அப்பாவி மக்களை அழிவின் விளிம்பில் கொண்டு விடுகின்றது.
மனிதர்களின் இயலாமையை தமக்கு சாதகமாக பயன் படுத்துவதும்,பசியால் தவிப்பவனுக்கு சோறு கிடைக்கும் என சொல்லியும்,வறுமையை வெல்லவும் மதங்கள் மாற்றம் என்பது மனங்களை வன்முறை பாதைக்கே வழி காட்டுகின்றன.
என் கடவுள்,என் நம்பிக்கை எனும் பெயரில் ஏட்டிக்கு போட்டியாக அப்பாவி மக்களை தம் செல்வாக்காலும், அதிகாரத்தாலும் வசப்படுத்தி, மூளைச்சலவை செய்வதும், வன்முறையை விதைப்பதும் தீவிரவாதிகளை உருவாக்குகின்றது.
பிறப்பை போலவே மனிதர்களின் மதங்கள் என்றுமே மாறுவதில்லை. மனங்கள் தான் மாறுகின்றன.
மாற்றம் ஒன்றை தாம் உணர்ந்து கடைப்பிடிக்கும் மனிதர்கள் இங்கே அரிது.

ஏதோ ஒரு சுயலாபம், சுய நலம் கருதி மதம் மாறியதாக நம்பி தாம் அதுவரை கடைப்பிடிக்கும் நம்பிக்கைகளோடு தம் பிழைப்புக்காக ஏற்றுக்கொள்ளும் புதிய நம்பிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உருவாக்கபப்டும் குழப்பங்களால் அடிப்படை மதம் எனும் நம்பிககையே தோற்கடிக்கப்படுகின்றது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை செல்லுமென நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்? 
நெருப்புக்கு அஞ்சி, எண்ணெய்ச் சட்டிக்குள் விழுவதில் வீரர்களாக நாம் வரலாற்றில் பதிவாகிக்கொண்டே இருக்கின்றோம்.

வாழ்க்கையில் பட்டறிவும், கல்வி தந்த பட்டறிவும் செல்லாக் காசாகிக்கொண்டிருக்கின்றன.

Cyclone Fani புயல். ஒடிசா 2019

மீண்டும் புயலும், காற்றுமாய் இந்தியகடலோரங்களை தாக்கி இருக்கின்றது. Cyclone Fani புயல்


 புயலின் வேகமும், காலமும் 

Cyclone Fani Could Strike in the Path of Tens of Millions in India
பத்து இலட்சத்துக்கும் அதிகமாக மக்கள் சொந்த இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்திருக்கின்றார்கள்.
இலங்கை, இந்திய தமிழ் நாட்டின் கடல்கரையோரங்களை தாக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்த பானிப்புயல் ஒடிசாவையும் அதன் சுற்றுப்புற  பிரதேசங்களையும்  170-180 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கி இருக்கின்றது.
கற்பனையை மிஞ்சும் வேகம்.
நாளை மாலை வரை இதே வேகத்தில் மழைப்பொழிவும் தொடரும் என்கின்றார்கள்.
ஒடிசா அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. கல்கட்டா விமான நிலையம் மூடப்பட்டிருக்கின்றன. பாடசாலைகளுக்கும் ,அரச அலுவலங்கங்களுக்கு விடுமுறை என முன்கூட்டி எச்சரிக்கை விடப்பட்டிருக்கின்றது.
ஒடிசா அரசின் வேகமாக செயல்பாடு உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கின்றது எனினும் இதுவரை 60 உயிரிழப்புக்கள் பதிவாகி இருக்கின்றன.
தமிழ் நாட்டின் கஜா புயல் அழிவினை விடவும் அதிகமாக இயற்கை வளங்களை பாதித்திருக்கின்றது என்கின்றார்கள்.
இதுவரை இல்லாத இயற்கை பேரழிவென நியூயோர்க் ரைம்ஸ் அமெரிக்காவிலிருந்து செய்தி வெளியிட்டிருக்கின்றது.
FANI’ is about 275 km south-southwest of Puri .To move north-northeastwards and cross Odis-ha Coast between Gopalpur and Chandbali, south of Puri on 3rd May F/N with maximum sustained wind speed of 170-180 kmph . Landfall process will continue till noon/afternoon of 3rd May.

அவசர உதவி தொடர்புகள் 
he Railways has also released helpline numbers: 
Bhubaneswar- (0674-2303060, 2301525, 2301625) 
Khurda Road (0674-2490010, 2492511, 2492611) 
Sambalpur (0663- 2532230, 2533037, 2532302) 
Visakhapatnam – (0891- 2746255, 1072) 
Puri- 06752-225922
Bhadrak- 06784-230827
Cuttack- 0671-2201865
Berhampur- 0680-2229632


கடந்த வார எச்சரிக்கை பதிவு 


26.04.2019
இலங்கைக்கு தென்கிழக்காக வங்கக்கடலில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் நாட்களில் புயலாக வலுப்பெற்று( ஃபனி எனப் பெயரிடப்படும்) 28.05.2019 அன்று கிழக்குமாகாணக் கரையோரமாக வடமேற்கு திசையாக நகர்ந்து எதிர்வரும் 28.04.2019 அல்லது 29.04.2019 அன்று வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கிற்கு அருகில் வந்து இந்தியாவின் தமிழ்நாட்டின் கடலூர் அருகே 02.05.2019 அன்று கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது கடும் காற்றுடன் மிகக் கனமழை கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகி்ன்றது. எனவே நாளை முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என வேண்டப்படுகின்றனர். புயல்தொடர்பாக வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டப்படுகிறீர்கள். தொடர்புடைய அதிகாரிகள் உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வது இழப்புக்களை தவிர்க்கும்
26.04.2019

படங்கள் இணையத்திலிருந்து எடுத்தவை.