18 மார்ச் 2024

மன்னாரின் முத்துக்குழிப்பும் முத்தரிப்புதுறையும்


உலகில் முத்துக்குளிக்கும் இடங்கள் மிகச் சிலவேயுள்ளன. இலங்கையின் மன்னார், மலபார் ஆகிய கடலோரங்களில் பரதவர்கள் இதில் தனியுரிமை பெற்றவர்களாக சிறந்து விளங்கியிருக்கிறார்கள். சங்க காலத்திற்கு முன்பிருந்தே மன்னார் வளைகுடாவில் எடுக்கப் பெற்ற முத்துக்கள் கிரேக்க, ரோமானிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கின. இலங்கையின் பல்வேறு கடற்கரை நகரங்களும் எ.கா பொற்கேணி, மறிச்சுக்கட்டி, சிலாவத்துறை முத்துக்குளித்துறையாக இருந்திருக்கின்றன.

கிமு 6 ஆம் நூற்றாண்டில் இலங்கை கடல்சார் வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தது. மேலும் எங்களிடம் கடல்சார் வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட புகழ்பெற்ற கடற்படைத் துறைமுகங்கள் இருந்தன, குறிப்பாக கடல்சார் 'பட்டுப்பாதை'க்காக கிரேக்க-ரோமன், சீனா, இந்தியா, பெர்சியா ஆகிய நாடுகளில் இருந்தவர்கள் தங்கள் வெளிநாட்டு வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தினார்கள். அதனால் இலங்கை புதிய பொருளாதார உறவுகளை ஏற்படுத்த முடிந்தது.

பழங்காலத்தில் மன்னார் முத்து மீன்பிடிக்கு பெயர் பெற்றது. விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் மசாலாப் பொருட்களுடன், முத்துக்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக இருந்தன, ரோமானிய நீண்ட தூர வர்த்தகத்தின் உச்சக்கட்டத்தின் போது, ​​அதாவது பேரரசு முழுவதும். பண்டமாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ரோமானியர்கள் வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க அளவுகளில் பணம் செலுத்தினர். கி.பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அநாமதேய எழுத்தாளரால் எழுதப்பட்ட இந்தியப் பெருங்கடல் துறைமுகங்கள் பற்றி கிரேக்க மொழியில் எழுதப்பட்ட கிரேக்க-ரோமன்
‘’Periplus of the Erythraean Sea’’ மன்னார் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. முத்துக்குளிப்பு (Pearl hunting)
முத்தரிப்புத்துறை

உலகில் முத்துக்குளிக்கும் இடங்கள் மிகச் சிலவேயுள்ளன. இலங்கையின் மன்னார், மலபார் ஆகிய கடலோரங்களில் பரதவர்கள் இதில் தனியுரிமை பெற்றவர்களாக சிறந்து விளங்கியிருக்கிறார்கள். எங்கள் கடலில் வளமான முத்துக்கள் இருந்தன. நினைவெட்டாக் காலத்திலிருந்தே எங்கள் முன்னோர்கள் கண்டெடுத்த இயற்கைச் சொத்து அது. கொற்கையிலும், மன்னாரிலும், பூம்பட்டினத்திலுமாக வருடத்திற்கு ஒரு போகம் முக்குளித்தோம்.மேற்கிலிருந்து வீசியக் காற்று கொற்கைக்கும் கீழைக்காற்று மன்னாருக்குமாகமுத்தைக் கொட்டிக் கொடுத்த அந்த இயற்கையின் சொத்துக்கு எங்கள் முன்னோர்கள் அதிபதிகளாக இருந்தனர்.

முத்துக்குளித்தல்(Pearl hunting) அல்லது முத்தெடுத்தல் அல்லது முத்து வேட்டை என்பது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பி மற்றும் நன்னீர் மட்டிகள் (freshwater pearl mussel)எனப்படும் மெல்லுடலிகளிலிருந்து முறையான மூழ்குதல் பயிற்சி மூலம் முத்தினை எடுத்து கடலின் மேற்பரப்பிற்குக் கொண்டு சேர்க்கும் முறையாகும்.முத்துச் சிப்பிகளுக்கு நான்கு வயதாக இருக்கும் போது பெறப்படுவனவற்றிலேயே அதிசிறந்த முத்துக்கள் காணப்படும். நல்ல தரமான அரிய வகையான மூன்று அல்லது நான்கு முத்துகளை பெறுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டன் சிப்பிகள் சேகரிக்கப்பட வேண்டும்.

’’பேருலகத்துமே எந்தோன்றி சீருடை விழுச் சிறப்பின், விளைந்து முதிர்ந்த விழு முத்தின், இலங்குவளையிருஞ்சேரிக் கட் கொண்டிக் குடிப்பாக்கத்தும், நற்கொற்கையோர்” என்கிற மதுரைக் காஞ்சி பாடலின் மூலம் வீரமிக்க பரதவர்கள் முத்துக்களையும் சிப்பிகளையும் கடலில் மூழ்கியெடுத்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.




பரவர்கள் சிப்பிகளைச் சேரிப்பதற்காக இடுப்பைச் சுற்றி பையொன்றைக் கட்டிக்கொள்வார்கள். நீரில் மூழ்கும் போது சரியான இடம் தென்பட்டதும் பரபரப்பாக முத்துக் களைச் சேகரித்து இடுப்பில் கட்டிச் சென்ற பை போன்ற வலையினுள் போடப்படும். அதேவேளை தோணியில் இருப்பவர் முத்துக் குளிப்பவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.மேலே வந்தவர் தோணியில் இருப்பவரிடம் தான் சேகரித்த முத்துச் சிப்பிகளை ஒப்படைத்து விட்டு சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் முத்துக் குளிக்கக் குதித்துவிடுவார். முத்துக் குளிக்கும் பணி முடிவுற்றதும் சிப்பிகளைக் கடற்கரையில் கொட்டி ஏலத்தில் விற்பனை செய்வார்கள். சில நாட்களின் பின்பு சிப்பிகளை ஒவ்வொன்றாகத் திறந்து நன்றாகக் கழுவி முத்துக்களை வெளியில் எடுப்பார்கள். இவ்வாறு சேகரிக்கப்படும் இயற்கை முத்துகள் விலை மதிப்பு மிக்க ஒன்பது இரத்தினங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது.


பரவர்கள் மற்றும் அவர்களின் பாரம்பரீய மீனவ மரபினரின் தொழிலை சில வகைகளாக பிரிக்கலாம். அவை, துணி விற்போர், கலம் செலுத்துவோர், முத்துச்சிப்பிகள் குளிப்போர், சங்குகள் குளிப்போர், துணிகள் கட்டுக்கட்டுவோர், ஆமைகளைப் பிடிப்போர், கடற்பன்றிகளைப் பிடிப்போர், சுறா மற்றும் பிறமீன்களைப் பிடிப்போர், பல்லக்குச் சுமப்போர், தலைமைக்காரர்களின் குற்றேவலர், நண்டுகள் பிடிப்போர், என பல தொழில்களையும் கடலை மையமிட்டு செய்து வந்தவர்கள் பாரம்பரீய மீனவர்கள்.ஆனால் பாரம்பரீய மீன் பிடிச்சமூகங்களின் பிரதான தொழிலாக எக்காலத்திலும் இருந்திருக்கக் கூடிய மீன்பிடி, உப்பு விளைவித்தல் போன்ற தொழிலுக்கு இருந்த முக்கியத்துவத்தை விட, அவர்கள் தொழிலின் ஒரு பகுதியாக இருந்து கடலில் மூழ்கி எடுத்து வந்த முத்துக்கு இருந்த முக்கியத்துவம் வேறு எதற்கும் இல்லை.

செல்வாக்குமிக்கோரின் கழுத்துக்களை அலங்கரிக்கும் அணிகலனாக மட்டுமல்லாமல் கிரேக்கர்களையும், உரோமானியர்களையும், அராபியர்களையும், போர்ச்சுக்கீசியரையும், பின்னர் டச்சுக்காரர்களையும் இறுதியாக வெள்ளையர்களையும் என அவர்களின் ஏக போக சுரண்டல் சந்தையில் முத்து ஒரு பிரதான பொருளாக இருந்ததாலுமே முத்து பேசப்பட்டது.

தென்னிந்தியாவைத் தவிற இந்தியக் கடலோரங்களில் வேறு எங்கும் இயற்கை கடல் முத்து எடுக்கப்படவில்லை. இந்தியக் கடலோரங்களில் பரவாலாக சங்குக்குளித்தல் நடைபெற்றதே தவிற முத்துகுளித்தல் நடைபெறவில்லை. முத்து வளம் இந்திய தீபகற்பத்தின் வேறெந்த கடல் பகுதிகளிலும் இருந்தமைக்கான சான்றுகளும் இல்லை. முத்துக்குளித்தல் நடைபெற்ற ஒரே இடம் தமிழக கடலோரங்களிலும் இலங்கையின் மன்னார் கடலோரத்திலும்தான் என்பது அரியக்கிடைக்கிற செய்தி.

பெர்ஷியா, இந்தோனேஷியா, ஜப்பான், போன்ற இடங்களில் முத்துக்குளிப்பு நடந்திருந்தாலும் இவைகளுக்கு பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழகத்தின் கொற்கை கடலோரத்திலும் சிறிலங்காவின் மன்னார் குடாவிலும் முத்தெடுத்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழக முத்துக்கள் ஆதிகாலம் தொட்டே எடுக்கப்பட்டு வருவதாக கால்டுவெல் பிஷப்பும், எம். அருணாச்சலம் என்ற மூத்த ஆய்வாளரும் கணிக்கிறார்கள்

பெரிப்ளூஸ் என்கிற நூலில் கொற்கையில் முத்துக்குளித்தலில் பாண்டியர்களுக்காக அவரின் கைதிகள் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் கிரேக்க தூதுவராக இருந்த மெகஸ்தனிஸ் இலங்கையில் முத்துக்குளித்தல் நடந்ததையும் இந்தியாவைக் காட்டிலும் தங்கம், முத்துக்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

பெர்ஷியன் கடல்பகுதிகளில் நடந்த முத்துக்குளித்தல் தொடர்பான குறிப்புகளும் உள்ளன. பெர்ஷியன் கடல் பகுதியில் கிடைத்த முத்துக்கள் ஆர்ம்ஸ் (Ormus) என்றும் தமிழக, மன்னாரிலும் கிடைத்த முத்துக்கள் ‘’கீழை முத்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கீழை முத்துக்கள் பெர்ஷிய முத்துக்களை விட கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் புகழ்பெற்றிருந்ததாகவும் தெரிகிறது

முத்தின் வகைகள்
  1. ஆணி
  2. கனதாரி
  3. மக்கை
  4. மடக்கு
  5. குறவில்
  6. களிப்பு
  7. பீசல்
  8. குறல்
  9. தூள்
  10. ஓட்டு முத்து

மன்னார் வளைகுடாவினது முத்துப்படுக்கைகள் (முத்துச்சிப்பிக்கள் காணப்படுகின்ற இடங்கள்) தொடர்பாக கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலுள்;ள வரலாற்றுப் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. போக் 1888 என்பவரின் கருத்தின்படி ஒல்லாந்தரால் 1661, 1667, 1746, 1748, 1749, 1753, 1754, 1768ம் ஆண்டுகளில் இங்கு முத்துக்குளிப்பு இடம் பெற்றுள்ளது. கௌடில்யரின் கருத்துப்படி கி.மு 3ம் நூற்றாண்டுகளில் இங்கிருந்து பெறப்பட்ட முத்துக்கள் இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த மகரப் பேரரசுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏனைய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன என்று அறிய முடிகிறது.13ம் நூற்றாண்டில் காயல் பட்டினம் சிறந்த பொருளாதார சிறப்புடன் விளங்கியுள்ளது. மன்னாரில் பெறப்பட்ட முத்துக்கள் இங்கு கொண்டு செல்லப்பட்டு ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

( முத்துக்களை பார்வையிட பாண்டியபதிகள் வந்திருக்கும்
1730 - புகைப்படம் கையால் வரைந்தது. அப்போது கேமரா கிடையாது.)


1925 ஆண்டுகளில் வரையப்பட்ட மற்றும் புகைப்பட கருவிகள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் இப்பதிவில் இணைக்கப்பட்டு உள்ளது.

வெனிசிய அறிஞர் மார்க்கோ)போலோ சொல்கிறார் 14ம் நூற்றாண்டில் மலையாளக் கரையில் உள்ள யூர்பட்டினம் சிறந்து விளங்கியது. இங்கு அதிகமாக மன்னார் முத்துக்கள் விற்கப்பட்டுள்ளதாக இவர் கூறியுள்ளார். 1294ஆம் ஆண்டு மார்க்கோ போலோ மன்னார் வளைகுடாவுக்கும் வந்துள்ளதுடன்,
அறுவடைக்காலத்தில் அங்கு கிட்டத்தட்ட 500 கப்பல்களும் படகுகளும் சுழியோடிகள் மற்றும் வர்த்தகர்களுடன் முத்துக்களைத் தேடி வந்திருந்தாக குறிப்புக்கள் கூறுகின்றன.

மொறோக்கோ யாத்திரிகர் இபுனு பதூதா, தான் இலங்கையில் கரை இறங்கிய போது ஆரியச் சக்கரவர்த்தியின் கட்டுப்பாட்டில் இருந்த முத்துச் சலாபத்திற்கு அண்மையில் உள்ள ‘பட்டாள’ நகரில் மரத்தால் செய்யப்பட்ட அடுக்கு மாளிகையில் தான் தங்கியதாகவும், அண்மையில் முத்துக்கள் குவிக்கப்பட்டிருந்ததையும் அதை அதிகாரிகள் தரம் பிரித்ததையும் , கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முத்துக்குளிப்புப் பகுதி இலங்கைத் தீவின் வட மேற்கில் உள்ள நீர்கொழும்பு முதல் மன்னார் வரையிலான கரையோரப் பகுதியை அண்டிய மன்னார்க் குடாப் பகுதியாகும். இப்பகுதி நீண்ட காலமாகத் தமிழ் அரசான யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் முத்துக்குளிப்புத் தொழிலில் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த கரையோரப் பகுதி மக்களுடன் பெருமளவிலான தமிழ்நாட்டுக் கரையோரப் பகுதி மக்களும் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தின் பாண்டிநாட்டுக் கரையோரப் பகுதிகள் பண்டைக்காலம் தொட்டே முத்துக்குளிப்புக்குப் பெயர் போனவை.



பண்டைய தமிழகத்தில் குறிப்பாக முத்து வளமிக்க கீழைக்கடலோரத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், தென் ஆற்காட்டின் கரையோயங்களில் முத்து எடுக்கப்பட்டது. இத்தொழில் பரதவர் எனப்படும் சமூகத்தினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இப்பகுதியில் கிடைத்த முத்து கீழை முத்து என பெயர் பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது. இலங்கையில் உள்நாட்டுப் போர்களின் காரணமாக இத்தொழில் நிறுத்தி வைக்கப்பட்டது.

முத்தரிப்பு துறையில் முத்து குளிப்பில் ஈடுபட்டவர்கள் பரவ சமூகத்தை சேர்ந்தவர் இவர்கள் முள்ளிக்குளத்தில் இருந்து போசாலைவரை கடற்கரை அண்டிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்
மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த முள்ளிக்குளம்,வங்காலை , தாழ்வுபாடு போசாலை, சிலாவத்துறை,போன்ற பிரதேசங்களில் உள்ள பரவ சமூகத்தினர் குறிப்பிட்ட சிலர் கடலுடன் தொடர்புபட்ட அட்டை பிடித்தல்,சங்கு குளித்தல் போன்ற நிகழ்வுகளில் இன்றும் ஈடுபட்டிருப்பதையும் அறியக் கூடியதாக உள்ளது.

கடலுக்கு அடியில் முத்துச் சிப்பிகள் விளையும் இடம் "பார்" எனப்பட்டது. முத்துக் குளிக்கும் பார்கள் மன்னாரில் மேற்குக் கரைகளில் அதிகம் இருந்து உள்ளன. முத்துக்குளிப்புப் பகுதியில் 19 பார்கள் வரை இருந்ததாகத் தெரிகிறது. அவை அவற்றுக்கு அண்மையில் உள்ள இடங்களின் பெயர்களால் அழைக்கப்பட்டன.

  • கொண்டச்சிப் பார்
  • சிலாபம் பார்
  • காரைதீவுப் பார்
  • பெரிய காரைப் பார்
  • செவ்வல் பார்
  • மோதரகம் பார்
  • அரிப்புப் பார்

மன்னார்பிரசேத்தில் வருடாவருடம் சித்திரை, வைகாசி மாதங்களில் முத்துக் குளித்தல் நடைபெற்றுள்ளது. இதற்குரிய ஆயத்தங்கள் பெப்ரவரி மாதம் முதல் செய்யப்படுவது வழக்கம். இதில்; இத்தொழிலுடன் தொடர்புபட்ட அடிப்படைவசதிகளான மருத்துவ வசதிகள், வாடிகள், ஓய்வு விடுதிகள், களஞ்சிய அறையமைப்பு,கடைகள் இங்கு நடை பெறும் முத்துக்குளிக்கும் அழகிய கைத்தொழிலைப் பார்வையிட உள்ளுர், வெளியூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் போன்றோர் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பார்வையிட்டுவந்துள்ளனார்

பிரித்தானியர் வருமானத்திற்கு முத்து பாரிய பங்களிப்பைச் செய்தமையால் அத்தொழிலைக் கண்காணிப்பதற்காகவும், வரி அறவிடுவதற்காகவும் பிரித்தானிய பிரதமரின் மகன் ஆளுனர் ப்ரெட்றிக் நோத் அவர்களால் ‘டொரிக்’ எனப்படும் 3மாடிக் கட்டிடம் சிலாபத்துறை அரிப்பு வீதியில் களிமண் ஓடைக்கு மேற்காகவும், வீதிக்கு தெற்கிலும் கடற்கரைப்பக்கமாக அமைக்கப்பட்டது. இக்கட்டிடம் அமைக்கும் போது கடல் தூரத்தில் இருந்ததாக அறிய முடிகின்றது. இன்று இக்கட்டிடம் கடல் அலையால் மோதப்பட்டுக் கொண்டு அழிவின் விளிம்பில் உள்ளது.இக்கட்டிடத்தை இப்பிரதேச மக்கள் அல்லிராணிக் கோட்டை எனவும் அழைக்கின்றனர். இக்கட்டிடத்தின் சாயல் கிரேக்க கட்டிட அமைப்பில் உள்ளது.

காலனித்துவக் காலப்பகுதியின்போது 16ஆம் நூற்றண்டு தொடக்கம் அரசாங்கத்துக்குச் சொந்தமான முத்துப்படுக்கைகள் சுழியோடிகளுக்கும் வாத்தகர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. முத்து அகழ்வுத்தொழில் 67 வருடங்களாக வெற்றிகரமாக இருந்துவந்தபோதிலும் 1881ஆம் ஆண்டளவில் விநியோகிப்பதற்கு சிப்பி கள் இல்லாமல் போனதை அரசாங்கம் அவதானித்திருந்தது. 1924ஆம் ஆண்டளவில் முத்து அகழ்வுத்தொழிலை ஒழுங்குபடுத்துகின்ற சட்டமொன்றை அமுலுக்கு கொண்டுவந்தது. இருப்பினும் அங்கு முத்துச் சிப்பிகள் எதுவுமே இல்லாதபோது அச்சட்டம் மிகவும் தாமதமானதாகவே வந்திருந்தது.

தொடர்ச்சியான முத்துக்குளித்த லால், முத்துப் படுகைகள் அழிந்து போயின.
1960ல் சிலாபத்துறையில் நோர்த் ஸ்டார், கனேடியன் ஆகிய படகுகள் மூலம் இலங்கை அரசு முத்துக்குளித்தலில் ஈடுபட்டது. இதுவே, மன்னார்ப்பிரதேச இறுதி முத்துக்குளிப்பாகும். 1961-க்கு பிறகு, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளித்தல் நடைபெறவில்லை.

ஆனால், சங்கு குளித்தல் இன்று வரை தொடர்கிறது. சங்கு குளிப்போர், ‘டர்பினெல்லா பைரம்’ எனப்படும், `பால் சங்கை’ குறி வைத்துதான் கடலுக்குள் செல்கின்றனர். இவ்வகை சங்குகள், இந்து மற்றும் புத்த மதத்தில் புனிதத்துவம் வாய்ந்தவையாக கருதப்படு கின்றன. சங்கு குளிப்போர், கடலில் 20 மீட்டர் ஆழம் வரை மூச்சுப்பிடித்து நீந்திச்சென்று சங்கு குளிப்பர். பால் சங்குகளை உயிரோடு கடலுக்கு அடியில் இருந்து எடுத்து வருவர். அதன் சதையை மாமிசமாக பயன் படுத்திவிட்டு, சங்கை விற்பனை செய்வர். பாதுகாப்பான சங்கு குளித்தலுக்கு வகை செய்யும் விதிமுறைகளை மீன்வளத்துறை வகுக்க வேண்டும்.

⚫️ மன்னாரில் முத்து தொழில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன?
நிலையான நடைமுறைகள் இன்றி அதிகப்படியான முத்து அறுவடையானது மன்னாரில் முத்து தொழில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

🟠இயற்கைச் சுற்றாடலை சாதாரணமாக மிக அதிகமாகவே மனிதன் பயன்படுத்துகிறான். விலங்கினங்களும் தாவரங்களும் வளரவும் பெருகவும் வேண்டும். ஆயினும்; சிலவேளைகளில் இத்தகைய விலங்கினங்களும் தாவரங்களும் பெருகவும் வளரவும் சந்தர்ப்பமளிக்கப்படாமல் மனிதனால் பிடிக்கப்பட்டு அல்லது அறுவடை செய்யப்பட்டு விடுகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடைபெறும்போது, அடுத்த தடவை பிடிப்பதற்கோ அல்லது அறுவடை செய்யவோ போதுமானளவுக்கு அவை கிடைக்காதுபோகின்றன. அத்துடன் அவை இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும் .இவ்வாறு முத்துகள் தொடர்பான முகாமைத்துவம் இல்லாமையால் இன்று மன்னாரில் முத்துக்களும் முத்து குளிப்பும் அழிவடைந்துவிட்டது.

‘’Periplus of the Erythraean Sea’’ ( The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) கடல்சார்ந்த எகிப்தியர் பற்றிய ( கிரேக்க-ரோமன் ) படைப்பாகும். இது நம்மிடம் வந்த பழங்கால இலக்கியங்கள் அனைத்திலும் கருப்பொருளாக தனித்துவமானது. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பிரதி 1816 முதல் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள

PERIPLUS OF THE ERYTHREAN SEA.. pdf

A periplus என்பது பாய்மரப் பயணம் மற்றும் வணிக, அரசியல் மற்றும் இனவியல் விவரங்களைப் பதிவுசெய்த துறைமுகங்கள் பற்றிய பதிவு புத்தகமாகும். வரைபடங்கள் பொதுவான பயன்பாட்டில் இருந்த ஒரு காலத்தில், இது ஒரு கலவையான அட்லஸ் மற்றும் பயணிகளின் கையேடாக செயல்பட்டது. இது செங்கடலின் கடற்கரையில் உள்ள Berenice Troglodytica ரோமானிய எகிப்திய துறைமுகங்களிலிருந்து Horn of Africa ( கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீபகற்பம்)பாரசீக வளைகுடா, அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல், பாகிஸ்தானின் நவீனகால சிந்து பகுதி உட்பட இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நிலங்களைப் பற்றி வழிசெலுத்தல் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை, பண்டைய ஹெலனிக் உலக நுண்ணறிவுகளை ( கிட்டத்தட்ட ) துல்லியமான விவரிக்கிறது. ஆசிரியர் தெரியவில்லை என்றாலும் முதல் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட வெவ்வேறு தேதிகளுக்கு உரை கூறப்பட்டுள்ளது, ஆனால் முதல் நூற்றாண்டின் நடுப்பகுதி இப்போது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்தியாவின் தென்மேற்குப் பகுதிகள் அப்பகுதியை நன்கு அறிந்த ஒருவரின் நேரடி விளக்கமாகும்,
▪️தமிழக வரலாற்றை பொறுத்தவரை இதில் தமிழகத்தின் துறைமுகங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன.
▪️ இதை பெரிப்ளசு, டொலமி காலங்களில் பயன்படுத்தியுள்ளனர்.
▪️ இதை வைத்து ரோம், சங்க காலத் தமிழகம் போன்றவற்றின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஆராயலாம்.

இலங்கை மற்றும் கிரேக்க-ரோமன் கடல்சார் வர்த்தக உறவுகள் (இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்பொருள் சான்றுகளின்படி)

இலங்கைக்கும் கிரேக்க-ரோமானுக்கும் இடையிலான வர்த்தக உறவு என்ன?.
இந்த நூலக ஆய்வைப் பயன்படுத்தி தரமான ஆராய்ச்சி முறையின் கீழ் நடத்தப்பட்டது. இந்த மூன்று மூலங்களிலிருந்தும் இலக்கிய ஆதாரங்கள், குறிப்பாக வெளிநாட்டு நூல்கள் இலங்கை மற்றும் கிரேக்க-ரோமன் வர்த்தகம் பற்றிய பல பதிவுகளைக் கொண்டுள்ளன. அந்த ஆசிரியர்களில் சிலர் காஸ்மோஸ், பிளினி, டோலமி மற்றும் ஸ்ட்ராபோ. மாந்தை, கொடவாயா போன்ற துறைமுகங்களிலிருந்தும் அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற இராச்சியங்களிலிருந்தும் சில தொல்பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.

இலங்கைக்கும் கிரேக்க-ரோமானுக்கும் இடையிலான வர்த்தக உறவுக்கான முக்கிய தொல்பொருள் சான்றுகள் ரோமன் மற்றும் இந்தோ-ரோமன் நாணயங்கள் ஆகும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதில் சில இந்திய காரணிகளும் முக்கியமானவையாக இருந்தன, ஏனெனில் இலங்கை வர்த்தகம் இந்திய வர்த்தகத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. இந்த ஆய்வின் மூலம் இலங்கையில் உள்ளக போக்குவரத்து அமைப்பு இருந்ததையும், ரோமானிய வர்த்தகம் இலங்கையில் பல இடங்களில் பரவியுள்ளது என்பதையும், சில சமயங்களில் இந்தியாவும் பாரசீகமும் இலங்கைக்கும் கிரேக்க ரோமானிய வர்த்தகத்துக்கும் இடையில் இடைத்தரகர்களாக செயல்பட்டதையும் நாம் கண்டறிந்த முக்கிய அம்சம் , இலங்கை பண்டைய வர்த்தக அமைப்பில் ஒரு மையமாக இருந்தது மற்றும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில், இலங்கை இந்து சமுத்திரத்தின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்தது.

44] இலங்கையின் பண்டைய கிரேக்க பெயர் 'டப்ரோபேன்'. [1,26,31,30,40,43,45,52,53,57] 'Taprobane' தவிர சில கிரேக்க ஆசிரியர்கள் இலங்கைக்கு 'Palaisimoundou', 'Salike' மற்றும் 'Sieladiba' பெயர்களைப் பயன்படுத்தினர்.

[57] எளிமையாக, Taprobane என்றால் 'செப்புக் கரை' என்று பொருள்படும், இது 'தம்பபன்னி'க்கு ஒத்த சொல்லைக் கொடுக்கிறது. ...

[52] 'Periplus Maris Erythraei' புத்தகத்தின் அறியப்படாத ஆசிரியர், தானே ஒரு வியாபாரி, இலங்கையின் முத்துக்கள், ரத்தினங்கள், மஸ்லின்கள் மற்றும் ஆமை ஓடுகள் போன்ற வளமான வர்த்தகத்தை விவரித்தார். [30,32] ரத்தினங்களில், ரூப் மற்றும் சிலோன் சபையர் ஆகியவை ரோமானியப் பேரரசின் காலத்தில் பிரபலமான மற்றும் மதிப்புமிக்க கற்களாக இருந்தன. Cosmos இன் கூற்றுப்படி, கிரேக்கர்கள் தவிர இலங்கை ரோமுடனும் வர்த்தக உறவைக் கொண்டிருந்தது. ...

ஆதாரங்களை பேஸ்புக் பதிவில் இருக்கும் இணைப்பில் காணலாம். படங்கள் இணையத்திலிருந்து எடுத்தேன் .

பேஸ் புக் :நிஷாந்தி பிரபாகரன்

தொகுப்பு : ஆல்ப்ஸ் தென்றல் நிஷா

மன்னார் வளைகுடாவில் கடல் சார் உயிர்கோளக்காப்பகம்

  மன்னார் வளைகுடா

மன்னார் வளைகுடா (Gulf of Mannar) இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுக் கடலின் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடா ஆகும். இது இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் 160 முதல் 200 கிலோமீட்டர் (100 முதல் 125 மைல்) அகல இடத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தின் தாமிரபரணி ஆறும் இலங்கையின் அருவி ஆறும் வளைகுடா கடலில் சங்கமிக்கிறது. தூத்துகுடி துறைமுகமும், திருச்செந்தூர் முருகன் கோயிலும் இக்கடற்கரைப் பகுதியில் உள்ள முக்கிய இடங்களாகும்!

இம் மன்னார் வளைகுடாவானது கடல்சார் உயிர்பல்வகைமையின் புகலிடமாக விளங்குகின்றது. மன்னார் வளைகுடாவில் இருந்து வடகிழக்கே ராமர் அணை, பாம்பன் பாலம், நிலமுடிவு , பாம்பன்துறை ஆகியனவும் வடமேற்கே திருச்செந்தூர் முனை, புன்னை கயல், வழிநோக்கம் வெளிச்சவீடு, சிதம்பர நகர் துறை ஆகியனவும் தென்கிழக்கே மனபாட் வெளிச்சவீடு, கிழக்கு முனை, கன்னியாகுமாரி, விவேகானந்தா பாறை ஆகியனவும் தென்கிழக்கே நீர்கொழும்பு, கொழும்பு, காலி, காலிதுறைமுகம் ஆகியவும் காணபடுகின்றன.

மன்னார் வளைகுடாவின் வடகிழக்கு பகுதியில் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் இடையில் சுமார் 30கி.மீ நீளத்திற்கு கற்பாறைகளுடன் கூடிய 13 மணற்திட்டுகள் தாழ்வான தீவுகளைப்போல் அடுத்தடுத்து உள்ளன. இந்த மணல் திட்டுகள் "ஆதாம் பாலம் என்றும் "சேது பாலம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் கடலின் ஆழம் மிகவும் குறைவு. அதிகபட்சமே 12 அடிதான். இந்தப் பாலம்தான் மன்னார் வளைகுடாவையும் பாக் வளைகுடாவையும் பிரிக்கிறது.


மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா

மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா (Gulf of Mannar Marine National Park) இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.இது தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது. 1980ம் ஆண்டு மன்னார் வளைகுடா தேசிய பூங்கா தென் கிழக்காசிய பகுதியில் முதன்முதலாக உருவாக்கப்பட்டது. பல்வகை கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாக இவ்வளைகுடா விளங்குவதால் 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் "மன்னார் வளைகுடா கடல் வாழ் தேசியப்பூங்காவை' உள்ளடக்கி சுமார் 10,500 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகம் இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகமாக அறிவிக்கப்பட்டது.இதற்கு ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பும் அங்கீகாரம் அளித்துள்ளது. கடல் தேசியப் பூங்கா என்பது ஆழமான நீலக் கடலின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதாகும்


தெற்காசியாவின் முதல் கடல் உயிர்க்கோள காப்பகமான மன்னார் கடல் பூங்கா, பல்லுயிர் பெருக்கத்தின் அடிப்படையில் இவ்வளைகுடா பகுதி உலகளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பூமியின் வளமான கடல் வாழ் பல்லுயிர் பகுதிகளில் ஒன்றாகும்.தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து 1 முதல் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா.தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் 560 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வளமான பன்முகத்தன்மை கொண்ட கடல்வாழ் உயிரினங்களையும் பல்வகை தாவரங்களையும் விலங்குகளையும் கொண்டுள்ளது. கடல் மாடு மற்றும் சதுப்புநில இனங்கள் உட்பட அழிந்து வரும் உயிரினங்களும் இதில் அடங்கும்.

பலவகையான உயிர்ப்பல்வகைமை நிறைந்துள்ள மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா 21 சிறிய தீவுகளையும், பவளப் பாறைகளையம் முகத்துவாரங்கள், கடற்கரைகள் மற்றும் சேற்றுப் பகுதிகள் ஆகியவை உள்ளடங்கும். மன்னார் வளைகுடாப் பகுதியில் காணப்படும் அழகான பவளப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாக திகழ்கிறது.

இந்த உயிர்கோளக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong) ஓங்கில்களும் (டால்பின்) இப்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளன. முத்துக்கள், சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து காணப்படுகிறது.

மேலும்
* 280 வகை கடற்பஞ்சுகள்,
* 92 வகை பவளங்கள்,
* 22 வகை கடல் விசிறிகள்,
* 160 வகை பலசுனைப்புழுக்கள்,
* 35 வகை இறால்கள்,
* 17 வகை நண்டுகள்,
* 7 வகை கடற்பெருநண்டுகள்,
* 17 வகை தலைக்காலிகள்
* 103 வகை முட்தோலிகள்
காணப்படுகின்றன.


உலகில் மொத்தம் ஏழு வகையான ஆமைகள் உள்ளன. இதில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை, சித்தாமை ஆகிய ஐந்து வகை ஆமைகள் வாழ்கின்றன. கடலில் விஷத் தன்மையுள்ள ஜெல்லி மீன்களை ஆமைகள் உட்கொள்கின்றன.பவளப்பாறையில் படியும் பாசிகளை உணவாக்குகின்றன. கடல் வளத்தை பாதுகாப்பதில் ஆமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக, கடல் சுற்றுச்சூழல் துாய்மை காவலர் என ஆமைகளை கூறுகின்றனர்.கடல் ஆமைகள் கால நிலை மாற்றத்தால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன. வேட்டையாடுதல், கடலோரத்தில் சுற்றுலா மூலம் பெருகும் வீடுகள், ஹோட்டல்கள், மின் விளக்குகள் காரணமாக பெரும்பாலானவை குஞ்சுகளாக இருக்கும் போதே திசை தப்பி விடுகின்றன. அல்லது இறந்தும் விடுகின்றன.


இந்திய பெருங்கடலில் 4 முக்கிய பவளப்பாறைகள் உண்டு. இது அந்தமான் தீவுகள், நிக்கோபார் தீவுகள், மன்னார்வளைகுடா, லட்ஷ தீவுகள் ஆகிய இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. பாம்பன் முதல் தூத்துகுடி வரையிலான 160கி.மீ நீள கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள வான் தீவு, முயல் தீவு உள்ளிட்ட 0.25 ஹெக்டயர் முதல் 125 ஹெக்டயர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன.


மன்னார் வளைகுடாவின் பவளப்பாறைகள் பிரசித்தமானவை. பிரமிக்க வைக்கும் வகையில் அழகானவை மற்றும் பெரும்பாலும் 'நீருக்கடியில் வெப்பமண்டல மழைக்காடுகள்' என்று குறிப்பிடப்படுகின்றன.ஆழமற்ற வெப்பநீர் கடல்பகுதிகளில் காணப்படும் பவளத்திட்டுகள் கல் போன்ற பொருளல்ல. இவை சுண்ணாம்பு கூட்டின் மீது ஒட்டிக் கொண்டு கூட்டம் கூட்டமாக வாழும் பவளப்பூச்சிகளினால் உருவாக்கப்படுபவை. பவளப்பூச்சி மென்மையான ஒளி ஊடுருவும் தன்மையுடைய சிறிய உயிரினமாகும்.

இவற்றின் கூடானது இப்பூச்சிகளினால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் உருவாக்கப்படுகிறது. முதலில் கால்சியம் கார்பனேட்டைக் கொண்டு கடினமான எலும்புக் கூடு போன்ற ஓர் அமைப்பைத் தோற்றுவிக்கிறது. இவை பல கிளைகளைக் கொண்ட மரங்களைப் போன்ற தோற்றம் கொண்டிருக்கும். இதனைப் பவளக்கொடி என்றும் சொல்வார்கள்! இந்தப் பவளக்கொடித் திட்டுகள் இறுகும்போது பாறைகளாகிவிடும்!கடற்கரையோரப் பகுதிகளில் சூரியவெளிச்சம் படும் தெளிவான நீர்ப் பகுதிகளில் மிதமான வெப்பநிலையில்தான் பவளத்திட்டுகள் செழித்து வளரும்.இவை உருவாக நீண்ட காலமாகும். உயிரிழந்த பவளத் திட்டுகளிலிருந்துதான் நகைகளில் பதிக்கப்படும் நவரத்தினங்களில் ஒன்றாகிய பவளம் எடுக்கப்படுகிறது. முளைப்பவளம், மான்கொம்புப் பவளம், தட்டுப் பவளம் என பவளத்திட்டுகளில் பலவகை உண்டு!

பவளப்பூச்சிகள் வாழ்நாள் முழுவதும் கூட்டில் ஒட்டிக்கொண்தான் வாழ வேண்டும். சந்ததிகள் கூடப் பிரிந்து செல்ல முடியாது. மிதக்கும் நுண்தாவரங்களே இதன் உணவாகும்.பவளத்திட்டுகள் உள்ள கடல் பகுதிகளில் பலவகையான கடல் உயிரினங்கள் வாழ்கின்றன. கடலுக்கு அடியில் ஒரு உலகம் இருக்கிறது, மிகவும் மூச்சடைக்கக்கூடியது மற்றும் மிகவும் தெளிவானது; உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் வாழும் இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் வகையில் தேசிய கடல்பூங்காவாக பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதிக்குள் மீனவர்களோ மற்றவர்களோ செல்ல தடை உள்ளது. இராமேஸ்வரத்தில் கடல் வாழ் தேசிய பூங்காவைப் பார்ப்பதற்கு கண்ணாடிப் படகுகள் உள்ளது. பூங்காவின் உள்ளே பொதுமக்கள் கண்ணாடிப் படகுகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகள்


1. வான்தீவு
2. காசுவார் தீவு
3. காரைச்சல்லி தீவு
4. விலங்குசல்லி தீவு
5. உப்புத்தண்ணி தீவு
6. புலுவினிசல்லி தீவு
7. நல்ல தண்ணி தீவு
8. ஆனையப்பர் தீவு
9. வாலிமுனை தீவு
10. அப்பா தீவு
11. பூவரசன்பட்டி தீவு
12. தலையாரி தீவு
13. வாழை தீவு
14. முள்ளி தீவு
15. முசல் தீவு
16. மனோலி தீவு
17. மனோலிபுட்டி தீவு
18. பூமரிச்சான் தீவு
19. புள்ளிவாசல் தீவு
20. குருசடை தீவு
22. சிங்கில் தீவு

மன்னார் வளைகுடா தேசிய பூங்காவின் சிறப்பு அம்சமாக 0.25 ஹெக்டேர் முதல் 125 ஹெக்டேர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.இந்தத் தீவுகளில் முக்கியமானது குருசடை தீவாகும். பல ஆண்டுகளுக்கு முன் இங்கு ஆய்வுக்கூடங்கள் இயங்கி வந்தன. கடல்சார்ந்த அறிவியலாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள் எனப் பலரும் இங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வந்தனர். காலப்போக்கில் இங்கிருந்த ஆய்வுக்கூடங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டதால் குருசடை தீவு முடங்கிப் போனது. இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள தீவுகளுக்குச் செல்ல முடியாத ஏமாற்றமும் நிலவி வந்தது.

பருவநிலை மாற்றம்,கடல் அரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. விலங்குசல்லி தீவு, கீழக்கரை குழுவில் பூவரசன்பட்டி ஆகிய 2 குட்டி தீவுகள் கடலில் மூழ்கிவிட்டன. வான்தீவும் கடலில் மூழ்கும் அபாயம் உருவானது. இந்த தீவை சுற்றி பவளப்பாறை மறு உருவாக்கம் மற்றும் செயற்கை பவளப்பாறை நிறுவுதல் போன்ற திட்டங்களையடுத்து ஓரளவுக்கு அழிவில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடாவில் 2005ஆம் ஆண்டு முதல் பவளப்பாறைகள் வெட்டியெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன் சுமார் 30ஆண்டு காலம் தொடர்ந்து அளவுக்கு அதிகமாகப் பவளப்பாறைகள் வெட்டியெடுக்கப் பட்டதாலும் முறைகேடாக குறிப்பிட்ட சிலவகை மீன்களும் தாவரங்களும் புற்களும் அதிகமாக எடுக்கப்படுவதாலும் இப்பகுதியின் உயிர்வளம் குறையத் தொடங்கியுள்ளது. பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பவளப்பாறைகளுக்கு மனிதர்களால் அழிவு ஏற்படத் துவங்கி உள்ளது.

மேலும், நவீன மீன்பிடித் தொழில்முறையும் இதன் அழிவுக்கு காரணமாகின்றன. தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி உள்ளிட்ட வலைகளையும், ஜெலட்டின் வெடி குண்டுகளையும் பயன்படுத்தி இன்று வரை மீன்பிடிப்பு தொடர்கிறது. இதனால் பவளப்பாறைகள் சேதம் அடைந்து கரை ஒதுங்குகின்றன. பவளப்பாறைகள் அழிவதுடன், அதை நம்பி வாழும் கடல் வாழ் உயிரினங்களும், அழியும் சூழல் உருவாகியுள்ளது. சமீபகாலமாக உயர் ரக ஆபரணங்கள் தயாரிப்பிற்கும் வீடுகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் மீன் தொட்டிகளை அலங்கரிக்கவும் மீன்களை வளர்க்கவும் பவளப்பாறைகள் கடத்தி அழிக்கப்படுகின்றன. பவளப்பாறைகள் கடத்தலால் மட்டுமின்றி கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமயமாதல், கடலுக்குள் அதிகரித்துள்ள வெப்பம், மாசு போன்ற காரணங்களும், தொழிற்சாலை கழிவுகளால் கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் ஆகியவற்றாலும் அழிந்து வருகின்றன.

கடல் என்பது கழிவுகளைக் கொட்டும் இடம் அல்ல.அது காடுகளைப் போலவே தாவரங்கள், நுண்ணுயிரிகள், பாலூட்டிகள் எனப் பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது. இவற்றில் கடல் வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது பவளப்பாறைகள். இவை கடலின் தட்பவெப்பத்தை பேணிக் காக்கவும் கடல் பகுதிகளை இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும் அரணாக உள்ளன. அனைவரும் நமது கடல் வளத்தைப் பாதுகாக்க முயற்சி செய்வோம்!

தொகுப்பு : Face Book : Nishanthi Prabakaran

தகவல் ஆதாரம் நன்றி : சுற்றுசூழல் பாதுகாப்பு கடல் வளமும் விழிப்புணர்வு
இணைய தளங்களில் இருந்து தரவுகள் & photos எடுத்தேன் .

தமிழர் போருண்மியத்தில் அச்சுப்பதிப்பாக

தமிழர்பொருண்மியம்



இலங்கையில் இருந்து வெளி வரும் தமிழர் பொருண்மியம் வாரப்பத்திரிகையில் இலங்கையின் இயற்கை வளங்கள்,சுற்றுலா துறை மற்றும் பாதுகாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட வேண்டிய தீவுகள் குறித்தும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் எழுதுகின்றேன். தமிழர் பொருண்மியம் யாழ்ப்பாணத்தின் காலை கதிர் பத்திரிகையை வெளியிட்டு வரும் கிரீன் மீடியா நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் பிரதம ஆசிரியராக மூத்த ஊடகவியலாளர் திரு பாரதி இராஜநாயகம் Bharati Rajanayagam அவர்கள் பணியாற்றுகிறார். Gnanam Kavini உதவி ஆசிரியராக பணியாற்றுகிறார்.இன்றைய உலகின் ஓட்டத்தில் இருந்து மாறுபட்ட படைப்புக்களோடு சமூகத்தின் அறிவு மற்றும் தற்சார்பு பொருளாதார மேம்பாட்டு தகவல்களோடு முன்னெடுக்கப்படும் பத்திரிகைக்கு நம் ஆதரவுகளை தருவோம்.
சந்தா விபரம் இணைப்பில் இருக்கின்றது .
நிர்வாகத்தினருக்கு நன்றி.
வாழ்த்துகளுடன்
- நிஷாந்தி

















 

15 ஜனவரி 2024

நன்றல்லது அன்றே மறப்பது நன்று


உதவி செய்தவையளையும்
கஷ்டப்படும் போது
கரம் பிடித்து
தூக்கி விட்டவங்களையும்
கலங்கி நின்ற நேரம்
ஆறுதல் செய்தவர்களையும்
ஏற்றிய கைகளையும்
எட்டி உதைப்போம்
எள்ளி நகையாடுவோம்

ஒதுங்கி போனாலும்
ஓரமாய் சென்றாலும்
விளக்கேற்றியவர்கள்
வாசல்களில்
விளக்குகள் அணைந்து
இருள்கள் பிடிக்கும் வரை
பாசம் எனும் வேலி போட்டு
வேடிக்கை பார்க்கும்
வேங்கைகள் நாங்கள்
நீ என்ன செய்து விட்டாய்?
கோடி கோடியாய் தந்தாயோ?
பிச்சை காரி நீ
உனக்கென்ன தலைக்கனம்
மூலையில் முடங்கி கிட
தேளாய் கொட்டிடுவோம்
அத்தனைக்கும் முத்தாய்
பல்கலை செல்லாமலே
பிழைக்க தெரியாதவன்
பட்டமும் நாம் தருவோம்

தன்னுருதி சிந்தி
கடமை உடமை என்று
தனக்கென சுயநலமாய்
வாழத்தெரியாத முட்டாள்கள்
இருக்கும் வரை
நன்றி மறந்த மனிதர்கள்
நல்லாத்தான் இருப்பார்கள்..!
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”