31 ஜனவரி 2019

சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்பட்டிருந்தார்களா? 1

சங்க இலக்கியங்கள் மற்றும் காலத்தால் முற்பட்ட தமிழ் இலக்கியங்கள் எதிலாவது , பெண்கள் பாலியல் துனபுறுத்தல்கள், செய்யபட்டமை தொடர்பாகவோ, பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கப பட்டது தொடர்பாகவோ , அத்தகைய குற்ற சம்பவங்களுக்கு அரசர்களால் வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாகவோ எங்காவது குறிப்பிட பட்டுள்ளதா? எனும் கேள்வியை Yoga Valavan Thiya ஐயா அவர்கள்  பேஸ்புக்கில் கேட்டிருக்கின்றார். அவருக்காக கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் பதில் பின்னூட்டமிட்டிருக்கின்றார்.
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்டப்பட்டிருந்தார்களா? என நாம் ஆராய்ந்தாலே பாலியல் ரிதியான அத்துமீறல்கள் நடந்திருக்குமா எனும் தெளிவும் கிடைக்கலாம்.
சங்க காலம் என்றால் எக்காலம்?
கி.மு நான்காம் நூற்றாண்டு தொடக்கம், கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை சங்க காலம் எனப்படுகின்றன.
தொல்காப்பியம், புற நானுறுப்பாடல்கள், பத்துப்பாட்டு,எட்டு தொகை. சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சீவக சிந்தாமணி எல்லாமே இக்காலத்தில் எழுதப்பட்டன.
இக்காலங்களில் தான் சேர,சோழ,பாண்டியர்கள் பேரரசுகளாக அரசாண்டார்கள்.
சிலப்பதிகாரம்,மணி மேகலை போன்ற காப்பியங்களில் கண்ணகி, மணிமேகலை எனும் பெண்களின் ஆளுமையையும், சீவக சிந்தாமணி சீவகன் எனும் ஆணையும், குறித்து பாடப்பட்டிருக்கின்றது.
பெரும்பாலோனோர் புராணங்கள், காப்பியங்களில் வரும் மணி மேகலை, கண்ணகியை விட சங்ககால மாந்தர் எனில் சீதை தீக்குளித்தாள், இராமன் சந்தேகப்பட்டான், பாஞ்சாலியை துகிலுரித்தார் என்றே பெண் அடிமைத்தனத்தின் சான்றாக விவாதத்தில் எடுத்தாள்கின்றார்கள். .
அதனால் இராமாயணம், மகாபாரதம் உடபட புராணங்கள் பெண்களை அடிமைப்படுத்தியதா என முதலில் ஆராய்ந்து தெளிவுக்கு வருவோம்.
புராணங்கள்,காப்பியங்கள் என்ன சொல்கின்றன.
பெண்களை அடிமைப்படுத்தினார்களா? 
பாலியல் ரிதிரில் பெண் உடல் ஆக்கிரமிப்புக்குள்ளானதா? பெண்களை போகப்பொருளாக பயன் படுத்தினார்களா?

இராமாயணம்
*******************
கூனி, கையேயி எனும் பெணகளின் சூழ்ச்சியும், சீதை எனும் பெண்ணின் விருப்பமுமே முக்கியத்துவம் பெற்றதாக இருந்திருக்கின்றன.

தசரதன் எனும் நாடாளும் அரசன் மனைவிக்கு கொடுத்த வரத்துக்கு கட்டுப்படுபவனாக காட்டப்பட்டிருக்கின்றான்.
சீதை தனக்கான மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவளாக மட்டுமல்ல,தன் வாழ்க்கையை முடிவெடுக்கும் சுயாதீன வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றாள்.
சீதைக்காக சுயம் வரம் நடத்தப்படுகின்றது. இராமன் போட்டியில் கலந்து வில்லை வளைத்து வென்றே சீதையை கரம் பிடிக்கின்றான்.
காட்டுக்கு செல்வதா அரண்மனையில் வாழ்வதா என முடிவெடுக்கும் அதிகாரம் சீதைக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. சீதை ஆசைப்பட்டு கேட்கும் பொருளை கொடுக்க வேண்டும் எனும் கட்டாயம் இராமனாகிய ஆணுக்கு இருந்திருக்கின்றது.
சீதையின் தந்தையும் சீதையின் விருப்பத்தையே புரிந்து நடத்தி இருக்கின்றார்.
சீதை மேல் ஆசை கொண்ட இராவணனும், சீதையை கடத்தி சென்ற போதினிலும் அவள் விருப்பமில்லாமல் அவளை வன்புணர்வு செய்யும் உரிமை அற்றவனாக காட்டப்படுகின்றான். அவள் மன விருப்பம் வேண்டி காத்திருக்கின்றான்.
சீதைக்காகவே இலங்கை அழிக்கப்படுகின்றது.
சீதை எனும் பெண் பெண் இங்கே மேன்மைப்படுத்தப்பட்டே இருக்கின்றாள்.
தன்னை நிருபிக்க சீதை நெருப்பில் இறங்கியதான சம்பவத்தில் மூலம் நெருப்பையும் கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் பெற்ற பெண்ணாக சீதை உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றாள். சந்தேகப்பட்டு சீதை தீக்குளித்து தன்னை நிருபித்தாள் எனும் வாதத்தை விட சீதைக்கு நெருப்பும் கட்டுப்பட்டிருந்தது என்பதே இங்கே கவனத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும், நெருப்பாலும் பெண்ணின் உறுதியை அழிக்க முடியாது என்பதாகவும் சொல்லலாம். நெருப்பாற்றை கடந்தவள் எனும் போதே அவள் பேராற்றல் எல்லைகள் அற்றதாகின்றன.
இலக்கியப்படைப்புக்களை எழுதியவர்கள் பெண்ணுக்கான தனித்துவத்தை மட்டுப்படுத்தி அவளின் பேராற்றலை கட்டுப்படுத்தி, அவளின் சிறகினை உடைப்பதில் பெரும்பங்காற்றி இருப்பதை மறுப்பதற்கில்லை.
மகாபாரதம்
***************
மகா பாரதத்தில் ஐவருக்கு ஒரு பெண் மனையியாகின்றாள்.பாஞ்சாலி என்பது அவள் பெயர்.

பஞ்ச பாண்டவர்களாய் உலகின் பஞ்ச பூதங்களாக நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று அனைத்தையும் ஆளும் சக்தியாகின்றாள்.
தன் கணவர்கள் தன்னை வைத்து சூதாடி தோற்று விட்டார்கள் என்றறிந்தும் அடங்கி, ஒடுங்கி, கதறவில்லை அவள். எல்லாம் இழந்த பின் என்னை வைத்து சூதாடும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது என அரச சபையில் சிலிர்த்தெழும்புகின்றாள்.
நியாயம் கேட்கின்றாள். தான் செய்யாத தவறுக்கு எப்படி தன்னை தண்டிக்க முடியும் என நீதி 
கேட்டு நிற்கின்றாள். துச்சாதனன் எனும் எதிரி அவள் துகில் உரிய வரும் போது கிருஷ்ணன் எனும் நம்பிக்கை அவளை காக்கின்றது.

அசாத்திய பெலனடைந்தவளாக அனைத்தினையும் சுக்கு நூறாக்கும் வல்லமை பெற்றவள் பெண் என்பதே மகாபாரதம் நமக்கு பாஞ்சாலி மூலம் உருவகப்படுத்துகின்றது.
சீதையும் பாஞ்சாலியும் நமக்குணர்த்துவது என்ன?
சங்க காலத்தில் ஆண்கள், பெண்களுக்குள் அடங்கி வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை ஏறு தழுவுதல், காளையை அடக்குதல், படற்பனை ஏறுதல் என பல வீர விளையாட்டுக்களின் வென்று பெண்ணை கைப்ப்டித்த கதைகள் சொல்கின்றன.
பெண்ணின் அனுமதி இல்லாமல் அவள் சுண்டு விரலைக்கூட தொடும் அனுமதி ஆணுக்கிருக்கவில்லை எனவும் அதே சங்க கால சம்பவங்கள் சொல்கின்றன.
சங்க கால மகளிர் வீரமுடைய பெண்மணிகளாகவே இலக்கியங்களில் சித்திரிக்கபபட்டிருக்கின்றார்கள்.
தலைவனை சந்தித்தல், புனைகாத்தல்,ஒழுக்கம் பேணுதல் என தனது எல்லைகளை மீறாதவளாக வர்ணிக்க்கப்படுகின்றாள்.
பெண்கள் முறத்தால் அடித்து புலியை விரட்டினாள் எனவும், அரசனுக்கே ஆலோசனை சொல்பவர்களாகவும்,
தூதுவராகவும் புலமை வாய்ந்தவர்களாக விளங்கினார்கள் என காப்பியங்கள் சொல்கின்றன.

வீரத்தில் புறமுதுகு காட்டாதவளாக வீரக்கிளர்த்திகளாக தம்மை பெண்கள் வெளிப்படுத்தினார்கள். போரில் புறமுதுகிட்டு ஓடிய மகனுக்கு பால் கொடுத்த என் முலையை அறித்தெறிவேன் என சொன்ன வீரத்தாய்ப்பரம்பரையாக பெண் விளங்கினாள்.
போர்ப்பறை கேட்டால் தம் பிள்ளையை வீட்டுக்குள் ஒளித்து வைக்கும் ஈனத்தனம் பெண்களுக்குள் இருக்கவில்லை. போர் என்றால் கையில் வேலைக்கொடுத்து சென்று, வென்று வா மகனே என்றதோடு கருவிலேயே வீரத்தையும், ஊட்டி வளர்க்கப்பட்ட . புறநானுற்று மா வீரர்களைப் பற்றியும் சங்ககால இலக்கியங்கள் சொல்லி இருக்கின்றன.
பெண்மைக்கான குண நலன்கலாக அச்சம்,நாணம், மடம்,பயிர்ப்பு எடுத்து காட்டப்பட்டிருக்கின்றது.
எச்சூழலில் இவை வெளிப்பட வேண்டும் எனவும் சொல்லப்படுகின்றன.

தலைவியானவள் காதல் கொண்ட நேரமும், தலைவன் அருகில் இருக்கும் போதும் , நீண்ட பிரிவுகளின் நேரமும் அவனைக்குறித்த அச்சம், பயிர்ப்பு, நாணம், மடம் போன்ற குணாதியசங்களை வெளிப்படுத்துபவளாக அவள் வாழ்ந்தாள் என்கின்றது .
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” என்றும்
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலன”

என்று தொல்காப்பியம் சொல்கின்றது. அச்சம், நாணம் , மடம், பயிர்ப்பு தேவைப்படும் இடத்தில் பெண்ணுக்கான குணங்கள் வெளிப்படுவதும், வீரமும் விவேகமும் தேவைப்பட்ட இடத்தில் முறத்தால் புலியை அடித்து விரட்டிய வீரத்தமிழச்சியாக பெண் வாழ்ந்ததாகவும், காலம் சூழலுக்கு ஏற்ப அவள் தன்னை தற்காத்து கொள்ளும் சக்தியாக, பயமற்றவளாக வாழ்ந்தாள் என்பதையே புராணங்கள் நமக்கு சொல்கின்றன.
அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களுக்குள்: இருக்கும் திறமையை எழுத்தில் படைத்தவர்கள் பெண்ணுக்கான தனித்துவத்தை வெளிப்படுத்தாமல் , பெண்ணின் உண்மையான ஆளுமையை மறைத்து ஆணை சார்ந்தே பெண் வாழ்ந்தாள் என தாம் வாழ்ந்த சூழலுக்கேற்ப தன் கற்பனைவளத்தை கையாண்டிருக்கின்றார்கள்.
ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஆண்களால் எழுதப்பட்ட வரலாறுகள் வேறு எப்படி இருக்கும்?
சங்க காலத்தில் பெண்கள் ஆக்கும் அழிக்கும் சக்தியை கொண்டவளாகவே எழுத்தாளப்பட்டிருக்கின்றாள் என்பதாகவே வரலாறுகள் நமக்கு சொல்கின்றன. சிலப்பதிகாரத்து கண்ணகி மதுரையை எரித்ததும் அந்த சக்தியினால் தான்.
பெண்ணுக்குள் இத்தனை சிறப்பிருக்க அவள் தன்னை தானே தாழ்த்தி, பாலியல் வன்புணர்வெனும் பெயரில் அவள் அனுமதி இன்றி நடக்கும், அக்கிரமங்களை கண்டு கூனிக்குறுகி, தன்னை தாசி எனவும், தான் ஆண்களுக்கு அடிமை எனவும் சித்தம் கலங்கும் படி உளவியல் பாதிப்பை உருவாக்கி அவளை ஒடுக்கி அடக்குவது ஏன்?
சங்ககாலத்தில் காதலும், களவொழுக்கமும், கந்தர்வ மணமும் அனுமதிக்கபப்ட்டிருந்தது,ஆண் பெண் நட்பு அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்துமீறி அவளை ஆக்கிரமிக்கும் கயமைத்தனம், பெண்ணை போகப்பொருளாக நடத்தும் நிலை அன்றில்லை.
வீட்டுக்குள் வாழ்ந்தாலும், நாட்டை ஆளும் வல்லமை கொண்டவளாக அனைத்தையும் அடங்கி ஆண்ட போது இந்த சமுதாயத்தில் அவள் பேசு பொருளாகவே இல்லை. அவளை ஒரு பொருட்டாக உலகம் கவனிக்கவே இல்லை.
அவளை அடக்கி வீட்டினுள் முடக்கி, உரிமைகளை பறித்து கொண்ட சமூகம். வீட்டினுள் அடங்கி கிடந்த வரை கண்டு கொள்ளாத சமூகம் அவள் தன் உரிமைக்காக போராட ஆரம்பித்த போதே அவளை தண்டிக்கும் வடிகாலாக அவள் உடல் மீதான வன்புணர்வை ஆரம்பித்திருக்க வேண்டும்.
பிற்காலத்தில் பெண்ணுக்குள் மறைந்திருக்கும் சக்தி மேன்மை பெறுவதை விரும்பாத, பெண்ணுக்குள் அடங்கி வாழ்ந்த ஆண்கள் தாங்கள் இல்லாமல் அவளால் சந்ததி பெருக்க முடியாதென்பதை உணர்ந்து கொண்ட போதே தங்கள் சர்வாதிகாரத்தை பெண்ணுக்குள் திணிக்க முற்பட்டிருக்க வேண்டும்.
ஆண்,பெண் உறவின் மூலமான சந்ததி உருவாக்குதல் எனும் பெயரில் பெண்ணுக்கான பலமே பலவீனமானது.
பெண்ணுக்கான உரிமைகளை தட்டிப்பறித்து, இழந்ததை மீட்க போராடுகின்றோம் எனும் பெயரில் பெண்ணுக்கான ஆற்றலும், அறிவும், விவேகமும் வீணாக்கப்படுவதை அவள் உணர முடியாத படி அறியாமையினால் அடக்கப்பட்டிருக்கின்றாள்.
அவள் அனுமதி இன்றி அவள் உடல் மீது அத்துமீறி ஆக்கிரமிப்பது மட்டுமல்லாமல் அவளை குற்ற உணர்வில் ஒடுக்கி அடக்கி ஆள நினைக்கின்றார்கள்.
தீர்வு தான் என்ன?
பாலியல் வன்புணர்வினை தன் விரலில் சிறு காயம் பட்டால் எப்படி உணர்வார்களோ அப்படியான உணர்வோடு அணுகி, பெரும் குற்றமிழைத்ததாக, எதையோ பறி கொடுத்து விட்டதாக சொல்லியும் நீதி நியாயம் கேட்டு குரலெழுப்பியும்,உளவியல் பாதிப்பை திணிக்காமல் கடந்து,நிமிர்ந்து நில் என வாழ்ந்து காட்டவே எங்கள் சங்ககால சரித்திரங்கள் எங்களுக்கு பாடம் போதித்திருக்கின்றன.
சீதையால் நெருப்பை அடக்கி ஆள முடியும் என்பதனால் அவள் நெருப்பை கடந்தாள். பாஞ்சாலியால் அரசனையும் தட்டிக்கேட்கும் அதிகாரமும், பஞ்ச பாண்டவர்களை அடக்கி ஆளும் வல்லமையும் இருந்ததனால் நீதிக்கு போராடினாள், தவறை தட்டிக்கேட்கும் விவேகம் பெற்றவளாய் கண்ணகி நிமிர்ந்து வாழ்ந்தாள். அவர்களை போல் வரலாற்றில் அனைத்தையும் அடக்கி ஆளும் வல்லமை மிக்கவர்களாக பெண்கள் மாற வேண்டும்.
காப்பியங்களும், புராணங்களும் பெண் பெருமையும், வீரமும், துணிச்சலையும் கூறி உயர்த்தி நிற்க பிற்கால உரையாசிரியர்கள் தம் கற்பனைக்கேறப் அரசனையும் தாசிகளையும், கோயிலுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட தேவதாசி பெண்களையும் முன் நிறுத்தி பெண்மையை சிறுமைப்படுத்தி பெண் எனில் அடிமையானவள் எனும் உணர்வை திணித்து வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள்.
90 வீத பெருமை கொண்ட பெண் சமூகமானது 10 வீத சிறுபான்மை அடிமைப்பட்ட பெண்கள் செயல்பாடுகளை கொண்டு தம் சக்தியை தாமே அழித்து கொண்டுள்ளார்கள். .
பெண்ணை கொண்டே பெண் பெருமை அழித்து சிறுமை படுத்துவதை தான் 'மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்று ஏன் பாரதி கூறி இருப்பாரோ?
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்த்தப்பட்டார்களா ? 2 

பேஸ்புக்கில்
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்த்தப்பட்டார்களா ? 1 
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா ? 2