19 ஜனவரி 2020

முதுமை கொடுமை எனும் Suya பச்சாதாபம் தேவை இல்லை!

எப்போதும் எங்கள் கலாசாரம் வேற, பண்பாடு வேற.  நாடு வேற. சூழல் வேற என சொல்லி  எமக்கு வேண்டாதவர்களை மேலை நாட்டினரிடமிருந்து பழகிக்கொள்ளும் நாங்கள் அவர்களிடம் காணப்படும் தனி மனிதசுதந்திரம், உரிமைகளை தக்க வைத்து கொள்ள திடடமிடும் வாழ்வியல் நெறியையும் கவனத்தில் கொள்வோமானால்
இந்த மாதிரி காதில் விழும்
வார்த்தைகளை உருவாக்கும் சுழலை நாம் தவிர்க்க முடியும்.

முதியோர் பேணல் எனும் வறட்டு கௌரவம், ஊர் உலகத்துக்கு பயந்து பெற்றோரை
வீட்டுவேலைக்கும், குழந்தை பராமரிப்புக்கும் பயன் படுத்தும் பாசவலைகள், வயதான காலத்தில் அப்பா உன்னிடம், அம்மா என்னிடம் என அவர்கள் அனுமதி இல்லாமல் அங்கும் இங்கும் அல்லாட விடாமல் ஓரிடத்தில் நிம்மதியாக வாழும் வாழ்க்கையை திடடமிடும் படி விழிப்புணர்வு அவசியம்.

மாறி வரும் காலம்,வேகம், உறவுகளுக்கு தக்க நாமும் மாறனும்.

பழங்கால வாழ்க்கை நியதிகளை   பேசி எஞ்சி கிடக்கும் அன்பும் வற்றி போக வைக்க கூடாது.

சுயமாக தம் தேவையை  பூர்த்தி செய்ய முடியாதோருக்கு
முதியோர்இல்லங்கள்  தரும் அன்பும் ஆதரவும் பாதுகாப்பும் சிறந்தது .

பிள்ளை பாசத்தில்   அடங்கி பயந்து இடி சோறு தின்பதை விட முதியோர் இல்லங்களில் தங்கள் சம வயதுடையோருடன் பேசி சிரித்து இஷடம் போல் வாழ்ந்து கொள்ள திடடமிட்டு  சுயத்தை தக்க வைத்து  கொள்வோருக்கு அவர்கள் பிள்ளைகள் அன்பும் நிரந்தரமாக தொடரும் .

முதுமை காலத்தில் பிள்ளைகள் தன்னை தாங்கும் சுமை தாங்கிகள் எனும் எதிர்பார்ப்பை பெற்றோராக நாம் வளர்த்து கொள்ளாமல் எங்கள் கடமை முடித்து எங்கள் முதுமைக்காலத்துக்கு திடடமிடுவதே சிறந்த வழி

முதுமை கொடுமை எனும் Suya பச்சாதாபம் தேவை இல்லை

குழந்தைகள் பெற்றுக்கொள்வது நமது கடைசி காலபாதுகாப்புக்கு  இல்லை, வயது போனால் படுக்கையில் வைத்து பராமரிக்கணும் எனும் எதிர்பார்ப்பில்  பிள்ளை பெற்று கொள்ள கூடாது.

• எங்கள் பிள்ளைகள் எங்கள் சுமை தாங்கிகள் அல்ல.
• பிள்ளைகளை எங்கள் சந்தோஷத்துக்காக பெற்று கொள்கின்றோம்.
• எந்த பிள்ளையும் என்னை நீ பெற்று எடு என கேட்பதில்லை .
• குழந்தை  பிறப்பு எங்கள் பெருமை .
• மனித சந்ததி வளருக்கிறது.
• குழந்தைகளை பெற்று எங்கள் பரம்பரை பெயரை தக்க வைக்கின்றோம்.

இப்படி எங்கள் சுய நலத்துக்கு பெற்று விட்டு அவர்கள் மேல் பாரம் சுமத்தும் உரிமையும் எமக்க்கல்லை என உணரணும்.

தென்னை வைத்தால் இளநி கிடைக்கும்
பிள்ளை பெத்தால்........?
எனும் எதிர்பார்ப்பே அடிப்படை
தவறு.

இந்த பரந்து விரிந்த உலகில் அன்பை பெற கொடுக்க பெற்ற பிள்ளைகளால் மட்டுமே முடியும் என்பது எங்கள் மக்களின் குறுகிய மன நிலை பாடு.

அன்பை பெறவும் கொடுக்கவும் தயாராக வாழ்க்கையை திடடமிடுவோருக்கு முதுமை சொர்க்கம்.

வாயில்லா மிருகங்களிடம் அன்பை பெற அதில் நிறைவு பெற முடிவது சாதாரண விடயம் அல்ல .

உலகின் விலை மதிப்பில்லாதது தாய் அன்பெனில் அதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்க கூடாது.

நான் பெற்று  வளர்த்தேன்
எனக்கு நீ கடைசி காலத்தில் அன்பை கொடு எனும் எதிர்பார்ப்பு   சுய நலமானது.

பெற்று வளர்ந்து நல் மனிதனாக
உருவாக்கி பிழைக்கும் வழி
காட்டி  அவன் வளர்வில் வாழ்வில்  நிறைந்து தமக்கும் தன் முதிய காலத்துக்கும் போதிய சேமிப்பை, வருமானத்தை திடடமிடுவோருக்கு அவர்கள் பிள்ளைகள் அன்பும் நிரந்தரமாக கிடைக்கும்.

உழைக்கும் காலத்தில் கண்முடித்தனமான பிள்ளை பாசத்தில் அதீத நம்பிக்கை வைத்து சேமிப்பில்லாமல் நிர்க்கதியாக பிள்ளைகளை சார்ந்து வாழும் வாழ்க்கை முறை தவறு எனும் விழிப்புணர்வு முக்கியமே தவிர  அன்பை சடடம் போட்டு பெற முடியாது.

அன்பு நிலைக்க வேண்டும் எனில் எவரும் எவருக்கும் சுமையாக வாழ கூடாது.
எதிர்பார்ப்பும் இருக்க கூடாது

ஆணும் பெண்ணும் உழைக்கும் காலத்தில் தம் எதிர்காலம் குறித்து திடடமிடும் விழிப்புணர்வை உருவாகாமல் முதுமை சுமையானது
தனிமை துயரானது எனும்
சுய பச்சாதாபம், தன்னிரக்கம்
போன்ற எதிர்மறை சிந்தனையை தவிர்த்து,

முதுமையில் தனிமையை இனிமையாக ்கும் வழிகளை உருவாக்க முடியும்.

ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து மனங்கள் விரிச்சலடைந்து வெறுப்பை வளர்ப்பதை விட அவரவர் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து தேவைப்படும்
போது அன்பையும், ஆதரவையும் , மதிப்பையும்  தக்க  வைக்கும்  சூழலை  குறித்து திடடமிட வேண்டும்

நான் வாழும் சுவிஸ் நாட்டில் தங்கள் முதுமை காலம் குறித்து. 30 - 40  வயதுகளில் திடடமிடும் பலரை காண்கின்றேன்

தம் வயோதிக காலத்தில் எங்கே வாசிக்க வேண்டும், எப்படி வள வேண்டும் என திட்டமிட்டு  தம் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்காமல். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அன்பை முழுமையாக பெற்று   அவர்களின் விசேச நாள், திருமண நாள். களில்  தமது பெற்றோர், தாத்தா பாட்டி விருப்பம் கேட்டு அதை நிறைவேற்றும் இளையோரை  இங்கே காணலாம்

முதியோர் இல்ல பராமரிப்பில் உடல்கள்  பிரிந்து உள்ளங்கள்  நெருங்கி வாழ்வார்கள்

உடலால் நெருங்கி உள்ளங்களை கொல்லும்
எம்மவர் கடைப்பிடிக்கும் நம்பிக்கைகளும் கடடாயம் மாற்றம் பெற வேண்டும்.

15 ஜனவரி 2020

உழவன் நாள், அறுவடை நாள் ,தைத்திரு நாள் வாழ்த்துகள்

உழவன் நாள்
                        அறுவடை நாள் 
          தைத்திரு நாள்  வாழ்த்துகள்    

எனது அம்மா வழி தாத்தா ஓர் உழவன்!
இதில் எனக்கு பெருமை❤️💃

இலங்கையில் கிழக்கு மாகாணம், திருகோணமலையில், தம்பலகாமம் எனும் வேளாண்மை கிராமத்தின் வயலும் வாழ்வுமாக நெல், வாழை, தென்னந்தோட்டங்களில் தங்கள் உயிர்ப்பை உணர்த்திய

பராம்பரியம், பழமை
பண்பாடடை,பாதுகாக்கும்
உழவன் மகனாய்
மேன்மை மிகு மாமனும்,
அவர் தம் மக்களும்

ஓலைக்குடிலும்
மாட்டுசாண தரை மெழுகலும்
திருக்கோணேஸ்வரத்திலிருந்து
கதிர்காமம் போகும் முருகனை
சுமந்து செல்லும் மயில் உதிர்த்த
மயிலிறகும்... 😍
ஏழ்மையிலும் எளிமையாக
நெல்லவித்து குத்தி வரும் உடன் தவிட்டு சிவப்பு அரிசிக்கோறுடன்
மாமி சமைத்த முருங்கை இல்ல சுண்டலும்
அமிர்தமான காலங்கள்.

மலை உச்சியில் மகாவலியாய்
உயிர்த்து கடலில் சங்கமிக்க
பயணிக்கும்  நதி,
கரையோடும், ஊரோடும்
வாய்க்காலாகி
நெல்லுக்கும் புல்லுக்கும் பொசிந்து
குளிக்க துவைக்க
கூடிக் கும்மாளமிட
குன்றுகளாய் கரும் எருமை
இளைப்பாற
சேற்றில் புரண்டு
சோற்றை அள்ளி உண்ண
வயலும் வாழ்வுமாக
மண்ணை பதப்படுத்தி
எம்மை உயிர்ப்பித்த
                     உழவன் நாள்!
                அறுவடைப்பெரு நாள் !

நெற்பல பொலிக!
பொன்பெரிது சிறக்க!"
விளைக வயலே! அருக இரவலர்!"
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!"
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
பசிஇல் லாகுக! பிணி சேண் நீங்குக!
நன்று பெரிதுசிறக்க! தீதில் லாகுக!!
மாரி வாய்க்க! வளம்நனி சிறக்க!
நண்பர்கள் 
அன்பர்கள்
உறவுகள் 
அனைவருக்கும்
              தைத்திரு நாள்  வாழ்த்துகள்     

புகைப்படத்தில் மாமனும், மாமன் மகனும் Shankar Mari and   Thiyani Shankar
அவர் தம் சுற்றமும் ( Trincomale , Tambalakamam)







08 ஜனவரி 2020

நாடு பற்றி எரியும் போது பிடில் வாசித்தது நீரோ மட்டுமல்ல.!

நாடு பற்றி எரியும் போது பிடில் வாசித்தது நீரோ மன்னன் மட்டுமல்ல.
அவுஸ்ரேலிய நாட்டு பிரதமரும் பிடில் வாசிக்கின்றார்.
  

அவுஸ்ரேலியா காடுகள்  ஆண்டு தோறும் எரிவதும், எரிந்து பட்டுப்போன மரங்கள் துளிர்ப்பதும், எரியும் மரங்களின் வித்துக்கள் வெடித்து சிதறி விதையாக்குவதும், தன்னைத்தானே தற்காத்து கொள்ளும் இயற்கையின் மறு சுழற்சியாக இருக்க, இக்காலத்தில் மட்டும் பேரிடராய், பேரிழப்புகளோடு 5  மாதங்கள் கடந்தும் காடுகள் எரிவதற்கு காரணம் என்ன?

அவுஸ்ரேலியா காட்டுத்தீக்கு காரணம் தேடி காட்டின் வளத்தையும்  மரத்தையும் செடியையும் உயிரையும் தன உயிர் போல்  நேசித்து  பாதுகாக்கும்  ஆதிவாசி பழங்குடி மக்கள் மீதும், மின்னல் மீதும், வெப்பத்தின் மீதும், கழுகு போன்றஉயிரினங்கள் காலம் காலமாக தொடரும் வாழ்க்கை சுழற்சிகள் மீதும் பழி சொல்லி  ஊடகம் தன்னை தற்காத்து கொள்(ல்) கின்றது. சமூகம் கண்ணை முடி ஆமோதிக்கின்றது .
I
ஆனால் இது இயற்கையின் அழிவு அல்ல என்பதை தொடர்ந்த செயல்பாடுகள் நிரூபிக்கின்றன


பொதுவாகவே கோடை காலத்தில் பூமியின் வெப்பம் அதிகரிக்கும் போது காற்றில் ஈரப்பதம் குறைந்து, நிலமும் வறண்டு போய் விடும். இக்காலத்தில் நெருக்கமாக வளர்ந்து ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள்  ஒன்றோடொன்று உராய்ந்தோ,மின்னல் தாக்கியோ, வெடித்தோ, மனிதர்களின் தவறுகளினாலோ எரிய ஆரம்பிக்கும்.

எளிதில் எரியும் எண்ணெய் தன்மை கொண்ட
யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த அவுஸ்திரேலியக் காடுகளில் பூமியின் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி  வெடித்து, சிதறுவதும்  காடு தீப்பற்றி  எரிவதும்  ஆண்டு தோறும் நடந்து கொண்டிருக்கும் சம்பவம்.

காட்டுத்தீ என்பது அவுஸ்ரேலியாவுக்கு புதிதல்ல!

காடுகள் பற்றி எரிவதும், சாம்பலிலிருந்தும்  முளைப்பதும் காலம் காலமாக இயற்கையாக நடைப்பெறும் சுத்திகரிப்பு
சுழற்சியாகியாகும்!

மரங்கள் எரியும் போது வெடித்து சிதறும் விதைகள் பல பக்கமும் பரவி புது மரங்கள் முளைப்பதும்,எரிந்து பட்டுப்போன மரங்கள் துளிர்ப்பதும். பெரும் வனாந்தரங்களில் நடைப்பெறும்  இயற்கையின் அற்புதங்கள்!

காடுகள் தம்மை தாமே புதுப்பித்து கொண்டே இருக்கும்!

ஆஸ்திரேலியாவில் பெரும்பாலும் வருடா வருடம்  டிசம்பர்இறுதியில் அங்கங்கே   ஆரம்பிக்கும் காட்டுத்தீ  ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் தீவிரமடைந்து ஏப்ரல் மாதங்களில் நிதானமாகும்.

ஒரே நேரத்தில்  ஐந்தாறு  இடங்களில் எரிந்தாலும்  பழங்குடி மக்களின் Back Burning  பழைமையும், நவீனத்துவ  தீயணைப்பு நுட்பங்களையும்  இணைத்து  போதுமான பணியாளர்களும் தொடர்ந்து முன்னேற்பாடடோடு செயல்பட்டு  காட்டுத்தீ எனும் இயற்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள்.

பழங்குடி மக்கள்  அங்கங்கே குறிப்பிடட எல்லைகளுக்குள் திட்டமிட்டு தீயை வளர்த்து காட்டுத்தீயின் திசையையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவார்கள். காட்டை வசப்படுத்தி வாழும் அவர்கள் பகுதி, பகுதியாக  காடு வாழ் உயிரினங்களையும், பிராணிகளையும் தம்மையும்  காட்டுத்தீயிலிருந்து காப்பாற்றி இடம்பெயரச்செய்வார்கள்.

காலம் காலமாக தொடர்ந்து நடக்கும் சம்பவம் ஒன்று
பரபரப்பாகியதும், கட்டுப்படுத்த முடியாத படி பல மாதங்கள் தொடர்ந்து எரிவதும், பல நுறு இடங்களில் பற்றிபரவிக்கொண்டிருப்பதும்
முன்னெப்போதும் இல்லாத படி அதிக இழப்புக்களோடு  தொடர்வதும்
ஏன் எனும் கேள்வி எமக்குள்  தோன்றுகின்றதல்லவா?

காட்டுகின்றது.



 •
இக்கால சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி  இதனால் பரபரப்புக்கு காரணமாக இருந்தாலும்.......?

முன்னெச்சரிக்கை செய்தும் அதை அசடடை செய்த, தகுந்த தற்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிய அரசின் மெத்தனம்  இத்தனை இழப்புக்களின் பின்னனியில் இருக்கின்றதா?
எனும் ஐயம் எழும் காரணங்களை பார்க்கலாம்.

* 2019 / 2020  காட்டுத்தீயால மனித உயிரிழப்பு 200க்கும் அதிகமாகி  இருக்கின்றன.

 * காட்டு உயிரினங்கள், பறவைகள் ,கங்காரு இனங்கள் கோடிக்கணக்கில் அழிந்து போயிருக்கின்றது.

* இன்னமும் பல இடங்கள்ள மக்கள் வெளியேற்றம்  தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

* பல ஆயிரம் மில்லியன் டொலர் பொருளிழப பும்

* இனி எப்பேதும் சீர் செய்ய முடியாத இயற்கை அழிப்பும்

* காற்றின் மாசும் அதிகரித்திருக்கின்றன

இப்படியான ஆபத்துக்கள் நாடடை சூழ்ந்து கொண்டிருப்பதையும்,கடந்த காலங்களை விட இவ்வருடம் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதையும் ஆளும் மத்திய அரசுக்கு அதிகாரிகள் சில மாதங்கள் முன்பே அறிவித்திருக்கின்றார்கள்

அனைவரும்  கூடி பேசி பாதுகாக்கும் தீர்வுகளை குறித்து ஆராயலாம் எனும் தீயணைப்புப் படையினரும், விஞ்ஞானிகளும்  வைத்த கோரிக்கைகள், வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

முன்னெச்சரிக்கை செய்தும்
அவைகளை அசடடை செய்த
ஆஸ்திரேலியா அரசாங்கம் இத்தனை அழிவுக்கு பின்னும் தொடர்ந்து
பற்றி எரியும் நெருப்பை கட்டுப்படுத்த எந்த வழியும் இல்லாத கையறு நிலையில் தாமதமாகவே  விழித்து கொண்டு  நிற்பதாக போக்கு

❓காட்டுத்தீக்கு உலகத்தின் வெப்பமயமாக்குதலும் காரணம் என்றால் உலகம் வெப்பமயமாதலுக்கு முழு மூலக்காரணம் யார்?

பூமி வெப்ப மயமாக்குவதன் விளைவுகளாக கால நிலைகள் மாறி இயற்கை சீறிச்சினந்து
நாட்டின் வளங்களும், பொருளாதாரமும்,உயிர்களும் அழிகின்றது எனபதை  இக்கால ஆஸ்திரேலியா அரசாங்கம் ஒப்புக்கொள்ள  தயார் இல்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயம்.

பூமி வெப்பம் அடைவதை தடுக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக செயல் பட்ட காலங்களும் இருந்தது.

இன்றைய அரசாங்கம் பூமியை தோண்டி நிலக்கரிகளை எடுக்க அனுமதிப்பதன் மூலம் தாமும் சேர்ந்து  பூமியை வெப்பமாக்குகின்றது.

இவ்விடத்தில் தான்  இந்த காட்டுதீ இயற்கையை மீறிய செயற்கையாக திடடமிட்டு தீ வைக்கப்பட்டிடுக்குமோ எனும் ஐயம் எழுகின்றது

இந்த முறை கோடைக்கு முன்பே செபடம்பரில் நியூ சவுத் வேல் வடக்கில் ஆரம்பித்த  காட்டுத்தீயும் தென்கிழக்கில் தொடர்ந்து விக்ரோரியாவில் நடுக்காடு என  வழக்கமில்லாத புது முறையில் தீ பரவி  ஒன்றை கட்டுப்படுத்து முன் இன்னொரு இடம்  என்று நுறு இடங்களுக்கும் மேல் தொடர்ந்து எரிவதன் மர்மம்  என்ன?

பூமி பாதிக்கப்படுகின்றது, பூமியை தோண்டி ஆயில்கள் எடுக்கின்றோம் என பூமிக்குள் கிடக்கும்னு CO2  வெளிக்கிளப்புவது நல்லதல்ல, காற்றோடு  கலந்து வளி மண்டலத்தில் காபனீர் ஓட்ஸைட் அதிகரிப்பும் பூமி வெப்பமாக்குவதன் பிரதான வகிபாகம் பெறுகின்றது  என பூமி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தும். நிலக்கரி  தோண்ட அரசு கொடுக்கும் அனுமதிக்கும்,
எண்ணெய் வளம் கொண்ட யூகலிப்டஸ் காடுகளின் அழிவுக்கும்.........?

காடுகளும் அதன் உயிரினங்களும், மனித உயிர்களும் பாதுகாக்கப்படுவதை
விட அந்த நிலங்களிலிருந்து கிடைக்க போகும்  இலாபம் பேராசைக்கு பலியாகி போதுமான  தீயணைப்பு பணியாளர்கள், தீயணைப்பு கருவிகளைமுன் ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் தற்காப்பு உதவிகளும் செய்யாமல் வேடிக்கை பார்த்திருக்கின்றது

ஒரு பக்கம் காடெரிந்து உயிர்கள் அழிய  இன்னொரு பக்கம் புதுவருட கொண்டாடடங்களும்
காளியடடங்களும், ஹவாய் தீவில் உல்லாசமுமாக இந்த காட்டுத்தீயின் பின்னால் மறைந்திருக்கும்  அக்கிரமங்களை குறித்து மக்கள் முன் வெளிப்படுத்தாமல் பழங்குடி மக்கள் மீதும், இயற்கை மீதும் பழிகளை  தேடி அலைந்து காரணமாக்கி தன்னை சமாதானப்படுத்தி கொள்கின்றது  சமூகம்.

ஆண்டுகள் தோறும்  அதிகரித்து வரும் வெப்பம், அதனால் வரும் பின் விளைவுகள் குறித்து முன்னெச்சரிககை இல்லாமல்
Liberal Party of Australia 🇦🇺
ஆளும் அரசு ஆடசிக்கு வந்தவுடன் தீயணைப்பு பணியாளர்களை
எவ்வித தொலை நோக்கமும் இல்லாமல்
பணிநீக்கம் செய்திருக்கின்றது.

குறைந்த  இடங்களில் தீ எரிந்த கடந்த காலங்களில் நிறைந்த தீயணைப்பு பணியாளர்கள் விழிப்போடு செயல்படடார்கள். இன்று அதிக இடங்களில் பரவி எரியும் தீயை அணைக்க  போதுமான பணியாளர்களும் உபகாரணங்களும் தம்மிடம் இல்லை என பிரதமரை நோக்கி குற்றம் சாட்டுகின்றார் தீயணைப்பு துறை அதிகாரி.

அரசின் மெத்தனம் கடந்தும் நாடடையும் காடடையும் பாதுகாக்க தாமாக முன் வந்துஎவ்வித பொருளாதார எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணித்து  இணைத்து  காட்டுத்தீயோட போராடி 6 Fire fighters  உயிரிழந்து இருக்கின்றார்கள்.

தன்னார்வலர்களாக இணைந்த
பொதுமக்களின் ஆதரவு இல்லை எனில் இழப்பின் வீரியம் இன்னும் அதிகமாகி இருக்கும்.

மனிதர்கள்  தெரிந்தே செய்யும் தவறுகளால்  பூமி வெப்பமடைவதும் ‚, காடுகள் எரிவதும்,உயிர்கள் அழிவதும் தொடராமல் தடுக்கப்படவேண்டும்.

இயற்கையை வெல்ல மனிதனால் முடியாது போகட்டும்.இயற்கை தன்னை தானாகவே தற்காத்து கொள்ளும் வழிகளையும் அடைக்காது பாதுகாப்போம் 🙏

#Bush_Fires_in_Australia
#Donate_for_Australia