02 பிப்ரவரி 2019

சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா? 2

சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா? பதிவின் தொடர்ச்சி.
முதல் பதிவை படிக்க 
சங்க காலத்தில் காதலித்து கை விட்ட ஆண்களுக்கான் தண்டைனை கொடுமையாக இருந்தது என்பதை அக நானூறு 256 ம் பாடலில் காண முடிகின்றது.
தலைவன் என்பவன் தலைவியை மறந்து பரந்தையை தேடி சென்று கூடி குலாவி யதை அறிந்த தலைவி, தலைவனுடன் கோபம்/ ஊடல்கொண்டதாகவும்,
பரந்தையிடமிருந்து திரும்பிய தலைவன் அவள் தோழியிடம் சென்று தலைவியின் கோபத்தை சமாளிக்க சொல்லும் போது தலைவி 
நீ பொய் சொல்லாதே, நீ என் தலைவியை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் ஆற்றில் குளித்து விளையாடியது எல்லோருக்கும் தெரியும் என்கின்றாள். உன் தவறினை, வஞ்சனையை நான் மட்டுமல்ல இந்த ஊரே அறியும். நீ எங்களுக்கு மறைக்க நினைக்காதே, உன் செயலை எல்லாரும் அறிவோம் என சொல்லி விட்டு கள்ளூர் எனும் ஊரில் நடந்த சம்பவத்தை விபரிக்கின்றாள்.

நீ பரந்தையோடு கூடி குலாவியது கள்ளூரில் நடந்த சம்பவத்தை விடவும் அதிகமாக மக்களால் பேசப்பட்டது என எனக்கு தெரியும் என சொல்கின்றாள்.
**பிணங்குஅரில் வள்ளை நீடுஇலைப் பொதும்பின்
மடிதுயில் முனைஇய வள்உகிர் யாமை 
கொடிவிடு கல்லிற் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின் 
நுகர்வார் அருந்து மகிழ்புஇயங்கு நடையொடு 5
தீம்பெரும் பழனம் உழக்கி, அயலது 
ஆம்பல் மெல்அடை ஒடுங்கும் ஊர!
பொய்யால்; அறிவென்; நின் மாயம் அதுவே
கையகப் பட்டவும் அறியாய்; நெருநை 
மைஎழில் உண்கண் மடந்தையொடு வையை 10
ஏர்தரு புதுப்புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது 
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத்
**
கரும்புத்தோட்டங்களும், வயல்களையும் கொண்ட கள்ளூர் எனும் ஊரில் வாழும் பெண் தன் விருப்பமின்றி தன்னை ஒருவன் அத்து மீறியதாக ஊர்ச் சபையில் சொல்கின்றாள். சம்பந்தபப்ட்டவனோ தனக்கு அவளை தெரியவே தெரியாது என்கின்றாள். ஆனால் ஊர்ச்சபை சாட்சிகளை விசாரித்து அவன் பொய் சொல்வதாக அறிந்து அவனை மரக்கிளையில் கட்டி வைத்து சுண்ணாம்பு நீரை கரைத்து அவன் தலையில் கொட்டியதாகவும், அது தக்க தண்டனை என மக்கள் ஆரவாரித்திருந்தார்கள்: அந்த ஆரவாரத்தை விடவும் உன் செயல் இந்த ஊரில் பேசப்பட்டதை நான் அறிவேன் என்கின்றாள்.

**தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்,
கரும்பமல் படப்பைப், பெரும்பெயர்க் கள்ளூர்த் 15
திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன், 'அறியேன்' என்ற 
திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய் 
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி 
நீறுதலைப் பெய்த ஞான்றை; 
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. 21

முதல் சம்பவம் நேரடி சம்பவமாகவும், இரண்டாம் சம்பவம் எங்கோ நடந்ததை சொல்லி பெண்ணை ஏமாற்றினால் என்ன நடக்கும் என தெரியுமோ எனும் மிரட்டலுடனும் தொனிக்கும் இந்த பாடல் வரிகளை தான் பெரும்பாலான ஆய்வாளர்கள், சங்க காலத்திலும்,பாலியல் வன்முறை இருந்ததென்பதற்கு சான்றாக முன் வைக்கின்றார்கள்.
இவ்வரிகளில் காதல் துரோகம், நம்பிக்கை துரோகம் வெளிப்படுதபப்டுகின்றதே தவிர பாலியல் வன்முறை எனும் பெண் விரும்பாமல் வற்புறுத்தி உறவு கொண்டதாக சொல்லப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
'அறியேன்' என்ற 
திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய் 
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி 
நீறுதலைப் பெய்த ஞான்றை; 
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே
எனும் வரிகள் மூலம் பெண்ணை தெரியாது என பொய் சொன்னதற்கான தண்டைனையாகவே மூன்று சுடவுகள் கொண்ட மரக்கிளை நடுவில் நிறக வைத்து சுண்ணாம்பி நீரை காய்ச்சி தலைமேல் ஊற்றி கொடுமையாக தண்டித்திப்பதை நாம் உணர முடியும். 
சங்க காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு மிகக்கடுமையான தண்டனை இருந்ததென்பதை இவ்வரிகள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும், 
.
அக்காலத்திலும் நீதி விசாரிக்கும், சபைகள் இருந்திருக்கின்றன. சாட்சிகளை வைத்து விசாரித்து தீர்ப்பும் கொடுத்திருக்கின்றார்கள். இதனால் அக்கால இளைஞர்கள் காதல்,களவொழுக்கம் தொடர்பாக தெளிவான சிந்தனைகளை கொண்டவர்களாக் வாழ்ந்திருக்க வேண்டும்.

காதலித்து கைவிட்டதற்கே இப்பெரும் தண்டனை எனில் பெண் விருப்பமின்றி, கட்டாயப்படுத்தினால் எவ்வகை தண்டனையை அடைவார் என உணர்த்த இச்சம்பவங்களை எங்கோ நடந்ததாக காட்டி தோழியானவள் தலைவனிடம் சொல்லும் பாடல் வரிகளும் தலைவி எனும் பெண்ணுக்கான பெருமையை கட்டியம் கூறி நிற்கின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு தண்டனை கடுமையாக இருந்திருக்கின்றதென்பதை கூறும் பாடல்களை சங்க கால காப்பியங்கள் பலவற்றில் பல உரையாசிரியர்களும் எடுத்துரைத்திருக்கின்றார்கள் எனினும் பெண்களுக்கான பாலியல் வன்முறைச்சம்பவங்கள் நடந்ததாக தெளிவான குறிப்பை அறிய முடியவில்லை.

சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா 1?
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா 2? 

1 கருத்து:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!