05 பிப்ரவரி 2019

இந்தச் சமுதாயம் என்ன அவ்ளோ நல்ல ஆண்களையா பெற்றிருக்கிறது❓

முதல் திருமணத்துக்கே வரதட்சனை வாங்குபவரிடத்தில் இரண்டாம் திருமணம் செய்பவரிடம் மட்டும் நேர்மையை அன்பை உண்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்.?
👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉
மேலே நான் குறித்திருப்பதை போல் பல பதிவுகள் ஆண் எதிர்ப்பெனும் பெயரில் தினமும் பகிரப்படுகின்றன. ஆண்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்பதை போன்ற தோற்றம் அதிகமாகுவதை காண முடிகின்றன.
என் நட்பில் இருக்கும் அனைத்து ஆண் நட்புக்களுக்குமான பதிவு இது.
💯உங்கள் நட்பிலிருக்கும் பெண் தோழமைகள் இடும் பதிவுகளில் இருக்கும் உட்கருத்துக்களை எத்தனை வீதம் உள் வாங்கி லைக்கோ காமெண்டோ செய்கின்றீர்கள் / அந்தப்பக்கமும் இந்த பக்கமுமாக , நடு நிலை வாதியாக உங்களை இனம் காட்டி எதை சாதிக்கப்போகின்றீர்கள்?
அதிக, நட்பு, பாலோயர்கள், ஷேர்ஷ்கள் என தாம் சொல்வதும் செய்வதும் சரி எனவும், அதுவே புரட்சி, புதுமை எனும் பெயரில் கௌசல்யாவை போல் செய்த தவறும், செய்யும் தவறுகளும் உணர வைக்கப்படாத பெண்கள் சமூகமொன்றை உருவாக்கி பெண்களுக்கு நல்லது செய்வதாகவும்,ஊக்கப்படுத்துவதாகவும் நினைத்து சமூக சீர்குலைவுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இப்படியான பதிவுகளை அதிகளவில் லைக் செய்வதும் ஆண்கள் தான். அவர்களை பின் தொடர்வதும் ஆண்கள் தான். தான் வளர்த்த கடா தன் மார்பில் பாய்வதை எத்தனை பேர் புரிந்திருக்கின்றார்கள்?
உண்மையில் ஆண்கள் நலல்வர்களா? கெட்டவர்களா? 😍😎
🤜நாங்கள் என்னமோ ஆண்கள் வாசனையே உணராதவர்கள். கஷ்டமே படாமல் போராடாமல் வாழ்க்கையில் தங்கக்கரணடியும்,ரோஜாப்பூக்கள் கொட்டிய தரையில் பாதம் படர நடந்து வளர்ந்து வந்தவர்களை போல் நானிடும் கேள்விகளுக்கு உங்களுக்கு தெரியாதுங்க🤜. சொன்னாலும் புரியாதுங்க 🤜 எனும் ரெடிமேட் பதிலும் தயாராக வைத்திருக்கின்றார்கள்🤜.
ஆமாம் புரியாது தான்.அடிபட்டு அல்லல்பட்டு, போராடி மேலேறி வந்தவர்களுக்கு இன்றைய பெண் சுதந்திரம் புரியாமல் தான் இருக்கின்றது. அப்படியே இருக்கட்டும், இவர்கள் தேடும் ஆணில்லாத சுதந்திரமும் பெண்ணியமும் எனக்கு வேண்டவே வேண்டாம்.
குடிகாரனாய் குடும்பத்தை கவனிக்கவில்லை எனும் குறை இருந்தாலும் நல்ல மனிதராய் என் ரோல்மாடல் என் அப்பா தான். எனக்குள் மனித நேயம் விதைத்தவர்கள் என் அப்பாவும், தம்பியும், மகனும் தான். என் தம்பியும், மகனும் என் உயிர் மூச்சுக்கள், என் கணவர் தான் பக்க துணை, அண்ணன்கள் தான் உந்து சக்தி, என் எனர்ஜியாக என்னை இயக்கும் எல்லோரும் ஆண்கள் தான். அதற்காகவெல்லாம் அவர்களால் எனக்கு பிரச்சனையே இல்லை. குறைகள் இல்லை எனவெல்லாம் பொய் சொல்ல முடியாது. எல்லாரும் எல்லா குறையும் நிறையும் கலந்தவர்களாக தான் இருக்கின்றார்கள்.
அப்பா, அண்ணா, தம்பி, கணவன், மகன், தோழன் எனும் பெயர்களில் என்னை சுற்றி இருக்கும் ஆண்கள் எனக்கான வாழ்க்கைத் தூண்களாகவே இருக்கின்றார்கள்.என்னை தாங்குகின்றார்கள். என் மேன்மையில் பங்கு பெற வேண்டியவர்கள் இவர்கள் தான். இவர்களில் யார் ஒருவர் இல்லை என்றானாலும் என் அங்கத்தில் குறை ஏற்பட்டதான வலியையே நான் உணர்வேன். அதனால் ஆண்களை குறித்து வரும் எதிர் விமர்சனப்பதிவுகள் எனக்கு புரியாது தான்.
வாழ்க்கையில் போராட்டம் என்பதை உணராமல் சொகுசாக வாழ்ந்தவர்கள் தான் பெண்ணியம் எனும் பெயரில் கிளம்பி ஆண்களுக்கு எதிரான புரட்சியை நடத்துகின்றார்கள் என நினைத்து கடந்து செல்ல முடியாத படி ஆண் எதிர்ப்பு வாதம் அதிகமாகிக்கொண்டிருக்கின்றது.
ஆண்கள் நல்லவர்கள் இல்லை,ஆண்களால் பெண்களுக்கு பாதிப்பு அதிகம், ஆண்களால் பாதுகாப்பு இல்லை என்பதை போன்ற பதிவுகளை கண்டும் காணாமல் பதிவை முழுமையாக படித்து உள் வாங்காமல் மேலோட்டமாக படித்து லைக் செய்து ஆதரவு தருவது எதிர்காலத்தில் எவ்வகையான தீமைகளை உருவாக்கும் என எவரேனும் உணர்ந்திருக்கின்றீர்களா?
அப்பா,அண்ணன்,தம்பி, மகள், மாமன், மச்சான், தோழன் என ஆணை சுற்றியே எங்கள் வாழ்க்கை வண்ணமயமாக்கப்பட்டிருக்க சமீப காலங்களில் ஆண்களுக்கெதிரான பதிவுகளும், சிந்தனைகளும் அதிகாக பகிரப்படுவதும் அதை ஆண் நட்புக்கள் ஊக்குவிப்பதும் அவரவர் பாலோயர்கள், நட்பெண்ணிக்கையின் அடிப்படையில் அவர்கள் சொல்வதெல்லாம் சரியெனும் புரிதலை சமூகத்துக்கு வழங்குகின்றீர்கள் என உங்களுக்கு புரிந்தே இருக்கின்றதா?
ஒரு ஆண் செய்யும் தவறை இன்னொரு ஆண் சரியாக்குகின்றான் என கூட உணர்த்த நினைக்காமல் கண்ணை மூடி ஆதரவு தருவது எதிர்கால சமூகத்துக்கு நல்லதே இல்லை.
என்ன தான் நடக்கின்றது நம் தமிழ்ச்சமூகத்தில்?
ஆண் எதிர்ப்பு எனும் தீக்குச்சி பற்றவைக்கப்பட்டு சிறு நெருபபாக சமுகத்தில் எதிர் வினைகளோடு பற்றிப்படர ஆரம்பித்திருக்கின்றது.
தம்மை குறித்தே எழுதப்படுகின்றது, தாமே விமர்சிக்கப்படுகின்றோம், தம் சுயமே இங்கே சுக்கு நூறாக பிச்சி உதறப்படுகின்றதென அறியாமையோடு நட்பிலிருக்கும் பெண்கள் எழுதுவதைஎல்லாம் கண் மூடி லைக் செய்வதும் கருத்திடுவதும் சரியான வழிகாட்டலா?
என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதை அறியாமல் தம் மனசுக்கு பிடித்தவர் அல்லது அவர் நட்பில் நாம் இருக்கின்றோம் என பெருமையான நினைத்து 
நியாயத்தை கூட எடுத்து உணர்த்தாமல், தவறென தெரிந்திருந்ததையும் எடுத்து சொல்லி புரிய வைக்காமல் கடந்து செல்வோர் இங்கே அதிகம் என எனக்கும் தெரியும்.

அடிமைத்தனம் செய்யவும் வேண்டாம். அடிமைப்படவும் வேண்டாம் எனும் சக சம உணர்வை உருவாக்காமல் ஆண்களை ஒதுக்கிய சமூகம் ஒன்றை உருவாக்க நீங்கள் ஆதரவு தருவதை ஆண்களாகிய நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்களா?
சமூக வலைத்தளங்களில் வெளி வரும் பதிவுகளை அசட்டையாக கடந்து செல்ல முடியாத சூழலில் நாம் வாழ்கின்றோம். இங்கே தீமைகள் இலகுவாக பரவுகின்றன. நன்மைகளை எடுத்து சொல்வோர் ஒதுக்கப்படுகின்றார்கள்.
நீங்கள் எப்படிப்பட்டவர்? சிந்தியுங்கள்.
இந்தச் சமுதாயம் என்ன அவ்ளோ நல்ல ஆண்களையா பெற்றிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!