03 மே 2019

Cyclone Fani புயல். ஒடிசா 2019

மீண்டும் புயலும், காற்றுமாய் இந்தியகடலோரங்களை தாக்கி இருக்கின்றது. Cyclone Fani புயல்


 புயலின் வேகமும், காலமும் 

Cyclone Fani Could Strike in the Path of Tens of Millions in India
பத்து இலட்சத்துக்கும் அதிகமாக மக்கள் சொந்த இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்திருக்கின்றார்கள்.
இலங்கை, இந்திய தமிழ் நாட்டின் கடல்கரையோரங்களை தாக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்த பானிப்புயல் ஒடிசாவையும் அதன் சுற்றுப்புற  பிரதேசங்களையும்  170-180 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கி இருக்கின்றது.
கற்பனையை மிஞ்சும் வேகம்.
நாளை மாலை வரை இதே வேகத்தில் மழைப்பொழிவும் தொடரும் என்கின்றார்கள்.
ஒடிசா அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. கல்கட்டா விமான நிலையம் மூடப்பட்டிருக்கின்றன. பாடசாலைகளுக்கும் ,அரச அலுவலங்கங்களுக்கு விடுமுறை என முன்கூட்டி எச்சரிக்கை விடப்பட்டிருக்கின்றது.
ஒடிசா அரசின் வேகமாக செயல்பாடு உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கின்றது எனினும் இதுவரை 60 உயிரிழப்புக்கள் பதிவாகி இருக்கின்றன.
தமிழ் நாட்டின் கஜா புயல் அழிவினை விடவும் அதிகமாக இயற்கை வளங்களை பாதித்திருக்கின்றது என்கின்றார்கள்.
இதுவரை இல்லாத இயற்கை பேரழிவென நியூயோர்க் ரைம்ஸ் அமெரிக்காவிலிருந்து செய்தி வெளியிட்டிருக்கின்றது.
FANI’ is about 275 km south-southwest of Puri .To move north-northeastwards and cross Odis-ha Coast between Gopalpur and Chandbali, south of Puri on 3rd May F/N with maximum sustained wind speed of 170-180 kmph . Landfall process will continue till noon/afternoon of 3rd May.

அவசர உதவி தொடர்புகள் 
he Railways has also released helpline numbers: 
Bhubaneswar- (0674-2303060, 2301525, 2301625) 
Khurda Road (0674-2490010, 2492511, 2492611) 
Sambalpur (0663- 2532230, 2533037, 2532302) 
Visakhapatnam – (0891- 2746255, 1072) 
Puri- 06752-225922
Bhadrak- 06784-230827
Cuttack- 0671-2201865
Berhampur- 0680-2229632


கடந்த வார எச்சரிக்கை பதிவு 


26.04.2019
இலங்கைக்கு தென்கிழக்காக வங்கக்கடலில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் நாட்களில் புயலாக வலுப்பெற்று( ஃபனி எனப் பெயரிடப்படும்) 28.05.2019 அன்று கிழக்குமாகாணக் கரையோரமாக வடமேற்கு திசையாக நகர்ந்து எதிர்வரும் 28.04.2019 அல்லது 29.04.2019 அன்று வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கிற்கு அருகில் வந்து இந்தியாவின் தமிழ்நாட்டின் கடலூர் அருகே 02.05.2019 அன்று கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது கடும் காற்றுடன் மிகக் கனமழை கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகி்ன்றது. எனவே நாளை முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என வேண்டப்படுகின்றனர். புயல்தொடர்பாக வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டப்படுகிறீர்கள். தொடர்புடைய அதிகாரிகள் உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வது இழப்புக்களை தவிர்க்கும்
26.04.2019

படங்கள் இணையத்திலிருந்து எடுத்தவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!