14 அக்டோபர் 2020

COVID 19 இரண்டாம் அலை..!

 COVID 19 முதல் அலை 

நவம்பரில் சீனா, பெப்ரவரி இத்தாலி உலகளவில் மார்ச் மாதம் Lock down  ஆரம்பித்தது.

இரண்டாம் அலை COVID 20  செப்டம்பரில் ஆரம்பித்து முன்னரை விட மும்மடங்கு வேகமாக பரவுகின்றது. ஐரோப்பா நாடுகள் கனடா, அமெரிக்க எங்கும் மீண்டும் ஊரடங்கு நிலை பகுதி பகுதியாக அமுல் படுத்துகின்றார்கள். 

 எனினும் முதல் அலை, இரண்டாம் அலை இரண்டுக்கும் இடையிலான பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள்  அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும்மாறுபட்டிருக்கின்றன

COVID 19 முதல் அலையில் நோயை பரவ விட்டு நோயாளிகளை தனிமைப்படுத்தி நோய் தீவிரமடைந்த பின் நூறு, ஆயிரம் நபர்கள் என்றளவில் Corona Virus test செய்து மருத்துவம் செய்தார்கள். அதனால் இறப்பு வீதமும் அதிகமானது. 

COVID 20  இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு  சோதனைகள்  அதிகரித்துள்ளார்கள்.   இலட்சக்கணக்கானோருக்கு தினமும் ஆரம்ப நிலைகளிலேயே  Test செய்ய பட்டு positiv வருமானால் அந்த நபர் சார்ந்து பழகியோருக்கு அறிகுறி இல்லாமலே test  செய்து விடுகின்றார்கள். அதனால் அனாவசிய தனிமைப்படுத்தல்கள், பயங்கள் தவிர்க்க படுகின்றன. 

உதாரணமாக இப்போது இருமல், தடிமன், காய்ச்சல், தொண்டை வறட்சி, நோ, சுவாசத்தில் வாசனை இல்லை, நாக்கில் சுவை மரப்பு ( இந்த அறிகுறிகள் Covid 19 க்கானது மட்டும் அல்ல )  உங்களுக்கும் கொரோனா  வைரஸ் தொற்று இருக்குமோ என்று ஐயம் இருந்தால் உடனே உங்கள் குடும்ப மருத்துவருக்கு தொடர்பு கொண்டு corona வைரஸ் test செய்ய வேண்டும் என்று கேட்கலாம். இதன் மூலம் நோயானது ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டு  கையாளப்படுகின்றது. நோயாளர்களை தனிமைப்படுத்தும் நாள்களும் குறைக்கப்பட்டிருக்கின்றன,

இப்போது நோய் பரவும் வேகத்துக்கு  இழப்புகள் குறைவாக இருப்பதாக ஊடகங்களில் வெளியிடுகின்றார்கள். ஆனாலும் நிலைமையின் தீவிரம் அடுத்தடுத்த மாதங்களில் தான் உணர முடியும். .

✳️ இலங்கையில் சுகாதார துறை முதல் அலையை உலகளவில் சிறப்பாக கையாண்டு  குறைந்த இழப்புகளுடன் கடந்திருந்தது. 

இரண்டாம்  அலையை கையாள்வதில் சற்று பதட்டம்  அடைவதாக தோன்றுகின்றது. எனக்கு இப்படி தோன்றுகின்றதா..? அல்லது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறித்த போதிய தெளிவு இன்மையால் பதறுகின்றார்களா..? 

அப்படியே அவரவர் நாட்டு சூழலையும் இங்கே எழுதினால் கடந்த முறை போல் எமது மருத்துவ நண்பர்களுக்கும், சுகாதார துறை பணியாளர்களும்கும் பயன் படும். 

Covid 19 இரண்டாம் அலை

இதையும் கடந்து வருவோம்

COViD 19 பரவல் தடுப்பு தற்பாதுகாப்பு ஆலோசனைகள் எச்சரிக்கைகள்



1 கருத்து:

  1. இரண்டாம் அலை - இந்தியாவிலும் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. ஆனாலும் மக்களின் மனதில் அத்தனை பயம் இல்லை - முகக் கவசம் இல்லாமல் சுற்றும் மனிதர்களின் எண்ணிக்கை பயம் தருகிறது.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!