30 அக்டோபர் 2020

சுவிட்சர்லாந்தில் தற்போதைய நிலைமை..!

 சுவிட்சர்லாந்தில் தற்போதைய நிலைமை..! 

20.10.2020 

சுவிட்சர்லாந்தில் உள்ள மருத்துவமனைகள் ஏற்கனவே அவற்றின் லிமிட் வரம்பில் உள்ளன. எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், ஐ.சி.யூ (தீவிர சிகிச்சை பிரிவு) படுக்கைகள் இன்னும் 15 நாட்கலில் நிறைந்து விடும். “மருத்துவ உதவி தேவைப்படும் அனைவருக்கும் இனி சிகிச்சையளிக்க முடியாது. ” என்று உயர் சுகாதார அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

🇨🇭 "கொரோனா வைரஸின் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் ஜெனிவா, ஃப்ரிபோர்க்.  இரண்டு கன்டோன்களும்சுவிஸ் இராணுவத்தை உதவிக்கு அழைத்துள்ளன. 

🇨🇭 Neuenburg நர்சிங் ஊழியர்களை தனியார் கிளினிக்குகளில் இருந்து விலக்கிக் கொண்டிருக்கிறது: கோவிட் -19 தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, நியூசெட்டல் மாநில கவுன்சில் இன்று நர்சிங் ஊழியர்களையும் தனியார் கிளினிக்குகளின் பொருள் வளங்களையும் உதவி கோர Kanton Neuenburg  முடிவு செய்திருக்கின்றது. 

🇨🇭 Jura : ஜூரா மருத்துவமனை நாளை ( 28.10) முதல் அவசர மற்றும் அவசியமில்லாத அறுவை சிகிச்சைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. 

🔹

8.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் 135,000 க்கும் அதிகமானோர்  கொரோனா வைரஸ் பொசிட்டிவ் உறுதிப்படுத்த பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2,000 பேர் இறந்துள்ளனர்.

பல மண்டலங்கள் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்திருந்தன, ஆனால் பொதுமக்கள் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை. "முடிந்த போதெல்லாம் வீட்டிலேயே இருங்கள்" என்று( Coordinated Medical Service ) Martin Ackermann வலியுறுத்தி இருக்கின்றார்.

சுவிட்சர்லாந்தில் தற்போதைய நிலைமை..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!