15 நவம்பர் 2020

நாடெங்கும் ஒரு இலட்சம் தொழில் முனைவோர்..!

 #காணி!

சுயதொழில் முயற்சி!!

அடுத்து என்ன செய்யப் போகிறோம்???

ஒரு தெளிவான விளக்கம்!!! 

உங்கள் திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றப் போகிறீர்கள் என்ற விபரிப்பு!!

காணியை தயார்ப்படுத்துவதில் இருந்து அதில் இருந்து பெறப்படும் உற்பத்தியை சந்தைப்படுத்துவது வரை என்ன என்ன செய்ய இருக்கிறீர்கள்? 

எப்படி செய்ய இருக்கிறீர்கள்? 

இந்த வீடியோவில்  Thirunavukkarasu Thayanthan  பேசுவதை கேளுங்கள்..! 

ஒரு  இலட்சம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் உள் நாட்டு உற்பத்திகளை பெருக்குவதன் மூலம்  தனி நபர்  மற்றும் சமூகத்தின் தற்சார்பு  பொருளாதாரம் , உள் நாட்டினுள் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயம்,பண்ணை,ஆடு மாடு கோழி வளர்ப்பு முதல் அனைத்து சுயதொழில், உள் நாட்டு வெளி நாட்டு ஏற்றுமதி உற்பத்திக்கான திட்டங்கள் செய்யும் ஆர்வமுள்ளோருக்கு  அரசு காடுகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்திருந்தது. 

இந்த திட்டத்தில் வடக்குக்குள் மட்டும்  ஒரு இலட்சம்  தொழில் முனைவோர் உருவாகும்வாய்ப்பு இல்லை. 

நாடெங்கும் ஒரு இலட்சம்..! 

உதாரணமாக  இலங்கையில் 25  மாவட்டம்   மாவட்டத்துக்கு சராசரி 4000 தொழில் முனைவோர் 

இது ஐந்து வருட திட்டத்தில்  ஒரு வருடத்துக்கு ஒரு மாவட்டம் 800  துண்டு நிலம் நாட்டின் அபிவிருத்தி, உள்நாட்டினுள் தற்சார்பு உற்பத்தி விவசாயம், பண்ணை வளர்ப்பு, உள்நாட்டு வெளி நாட்டு ஏற்றுமதி திட்டங்கள் நண்டு இறால் வளர்ப்பு நாட்டுக்குள் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்க்கும் திட்டங்கள். போன்ற  சுயதொழில் முயற்சிகளுக்கு முன்னுரிமை  தருவார்கள்.

தேக்கு மரம்  வளர்ப்பு திட்டத்துக்கு இந்த திட்டத்தில் நிலம் ஒதுக்க மாட்டார்கள். விண்ணப்பம் செய்ய வேண்டாம்.அதுக்கு  அரசின் குத்தகை நிலம் பெறலாம். அதன் விபரம் தேவை எனில் கேளுங்கள்.

விண்ணப்பங்கள் பிரதேச செயலகத்தில் கொடுத்து குறிப்பிட்ட நாட்களுக்குள் உங்களை நேரில் அழைத்து விசாரிப்பார்கள். 

அதற்கு தெளிவான  திட்டவரைவு தயார் செய்து கொள்ளுங்கள். திடடவரைவு எப்படி இருக்கணும்..? உண்மையில் உதவி தேவைப்படுவோர் மட்டும் என் inbox ல் விபரங்களை type  பண்ணுங்கள். Mail I’d தருவேன். நண்பர்களும் உங்களுக்கு உதவ என்னுடன் இணைந்து கொள்வார்கள்.  

உங்கள் திட்டத்தினை ஆரம்பிக்க உங்களிடமும் ஓரளவு சொந்த முதலீடு இருக்கணும்.  

#காணி  ஒதுக்கிய பின் அதில் முயற்சிகளுக்கு அரசின் நிதி உதவிகளும், வங்கி கடன்களும் கிடைக்கும்.அடுத்தவரிடம் கையேந்தாமல் சொந்தமாக  உழைத்து இன்னும் நாலு பேருக்கு வேலையும் கொடுக்க முடியும்.

சுய உழைப்புக்கு அஞ்சாத, வசதி, வாய்ப்பு இல்லாத  ஆர்வமிருக்கும் இளையோருக்கு  உதவுவோம். 

தயவு செய்து இலவசம் என்று எங்கள் நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.. 

ப்ளீஸ் 🙏



தொழில் முனைவோர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!