21 ஜூலை 2019

கறுப்பு யூலை (Black July,) இனக்கலவரமா (Riot)?

 இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகள் 12, 13 மற்றும் 14&ன்படி இலங்கையின் பிரஜைகளுக்கு அந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வசிப்பதற்கான உரிமையென்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வழங்கப்பட்டுள்ளது.
👩‍⚖️
கறுப்பு யூலை (Black July,) 
ஜூலை 23, 1983

இலங்கை சிங்கள இனவாதிகளால் தென்னிலங்கையில் தமிழன் என அடையாளம் காணப்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 
இரண்டு வாரங்களுக்கும் மேலாக தென்னிலங்கையிலும்,மலையகத்திலும் தொடர்ச்சியான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

தமிழர் கடைகள், இருப்பிடங்கள் என அடையாளம் காணப்பட்டவைகள் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் கொடுமைகள் நடத்தப்பட்டன.
தமிழர்களுக்கு உதவிய சிங்கள்,முஸ்லிம் மக்களும் தாக்கப்பட்டார்கள்.அவர்கள் சொத்துக்கள் பறிக்கப்பட்டன.

பல முதலாளிகள் ஒரே இரவில் அனைத்தையும் இழந்தார்கள். திட்டமிட்ட படி தமிழர் வர்த்தகம் முடக்கப்பட்டது. பொருளாதாரம் சிதைவுற்றது. அதிகாரங்கள் பறிக்கப்பட்டது. உயிர்ப்பயம் உரித்தாக்கப்பட்டது. தமிழர்கள் தம் சொந்த நாட்டினுள் அகதிகளாக்கப்பட்டார்கள்.
சிறைச்சாலையின் திறவு கோல் வன்முனையாறர்கள் வசம் கை மாறியது. உரிமைக்குரல் கொடுத்தோரின் குரல்கள் நசுக்கப்பட்டது. வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதிகளக அடைக்கப்பட்டிருந்தவர்கள் உட்பட 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்டார்கள்.
கறுப்பு யூலை (Black July,)
இனச்சுத்திகரிப்பா (Ethnic cleansing) ?
இனப்படுகொலையா (Genocide) ? 
இனக்கலவரமா (Riot)?

 
புகைப்படங்கள் இணையத்தில் இருந்தே எடுத்தேன். 

இனக்கலவரம்(Riot) என்றால் என்ன ?
கலவரம் அல்லது Riot என்றால் இரு இனங்கள் அல்லது குழுவினர் மோதிக்கொள்வது.சமூகத்தின் சீரழிவை , இழப்புக்களை உருவாக்குவது.

83 ல் நடந்தது இனக்கலவரமா? இரு இனம் அல்லது குழுக்கள் மோதிக்கொள்வது தான் இனக்கலவரம் எனும் வரையறைக்குள் வருமாயின் அன்றைய நாட்களில் இரு இனங்கள் மோதிக்கொண்டனவா?
எங்கள் மீதான நீதிகளும், நியாயங்களும் ஏன் தூரமாகின்றன?
சிந்திப்போம்.
வெலிக்கடை சிறைச்சாலையில் எமதுரிமைக்காக குரல் கொடுத்தோர் உட்பட கொடூரமாக கொல்லப்பட்ட 56 பேரின் உயிருக்கான நீதி விசாரனைகள் இன்று வரை கிடைக்கவும் இல்லை. எவரும் தண்டிக்க, கண்டிக்கப்படவும் இல்லை.
தமிழர்கள் மீதான அத்தூமீறல்களுக்கு அன்று துணை போன அரசையும் ஆட்சியாளர்களையும்,அதிகாரத்தையும் இன்று நல்லாட்சி என எமது அரசியல் வாதிகளே தாங்கிக்கொண்டுள்ளார்கள்.
.😭


மேலதிக விளக்கம் தேடி...
*********************************

இனச்சுத்திகரிப்பு என்றால் என்ன? 
Ethnic cleansing

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் தவிர வேறு எவரும் இருக்கக்கூடாது’ என்ற எண்ணத்தோடு மற்ற இனத்தவரைப் பலவந்தமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையே ‘இன சுத்திகரிப்பு’ என்று அழைப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விதிகளின்படி இது மனித குலத்துக்கு எதிரான குற்றமாகும். ஐ.நா. சபையும் இதை இன அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு இணையான குற்றமென்று
வகைப்படுத்தியிருக்கிறது.

Ethnic cleansing is the systematic forced removal of ethnic, racial and/or religious groups from a given territory by a more powerful ethnic group, often with the intent of making it ethnically homogeneous.[1][page needed] The forces applied may be various forms of forced migration (deportation, population transfer), intimidation, as well as genocide and genocidal rape.
Ethnic cleansing is usually accompanied with efforts to remove physical and cultural evidence of the targeted group in the territory through the destruction of homes, social centers, farms, and infrastructure, and by the desecration of monuments, cemeteries, and places of worship.

புகைப்படங்கள் இணையத்தில் இருந்தே எடுத்தேன். 
இனப்படுகொலை (Genocide)
ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்.

17 ஜூலை 2019

மதமெனும் மதம் பிடித்தாட்கொள்வோர்க்கு.....?



அறிவுடை மாந்தர், அறிவினை தொலைத்தார்
அழிவினை நாடும், அகமதை கொண்டார்.

சைவமென்றும் வேதமென்றும் 
சாகாச சாணக்கியர்களின் 
சூழ்ச்சிகள் ஜெயித்து
அரங்கேற்றமாவதும்..........?

சாவது வந்தும்,சாதியை சுமந்து 
மனிதம் தொலைந்து, 
மனங்களை கொன்று,
மதங்கொண்ட மனிதர்களாவதும்............?

பட்டகாலில் பட்டதும்
தொட்ட குடியெல்லாம் கெட்டதும் 
பகுத்தறிந்திடும் பட்டறிவென 
சலசலப்பதும்.......?

இலக்கினை தொலைத்த 
இனமொன்றாய் ..............?

வீதியில் நிற்பதே எம் விதி என ஆனதோ?
🌚🌚🌚
மனிதம் தொலைத்து மதம் பேசுவோர் சற்று எட்ட நில்லுங்கள்.
மனிதர் வாழட்டும்.
நீங்கள் விதைப்பதையே அறுவடை செய்வீர்கள் என்பதையும் மறவாமல் விதையுங்கள்.😭

புகைப்படம்  சொல்லும் சேதி???/ 😭😭😭😭😭😭

ராஜஸ்தானில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு நபர் உயர் ஜாதி சமூகத்தை கைநீட்டி பேசியதன் காரணத்தால் கைகள் வெட்டப்பட்டு நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்....
இது தான் நீதி.....இந்தியாவின் இந்துக்களுக்கான நீதி... இந்த நீதி இன்னும் இலங்கைத்தமிழர்களுக்குள் பரவலாகவில்லை.
இனி அதுவும் நுழைந்து விடலாம்.