23 ஜூன் 2017

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்



படம் இணையத்திலிருந்து  
  1. அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம்
  2. அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி
  3. அழகான சின்னத்தேவதை
  4. ஆனந்தக்குயிலின் பாட்டு
  5. இந்த மன்றத்தில் ஓடி வரும் 
  6. இரத்தத்தின் இரத்தமே
  7. எல்லாமே என் தங்கச்சி- என் தங்கை கல்யாணி
  8. எதையும் தாங்குவேன் அன்புக்காக 
  9. எந்தன் பொன் வண்ணமே
  10. என்ன தவம் செய்து விட்டோம் 
  11. என் தங்கை ஆயிரத்தில் ஒருவள் என்று பூக்களும் நட்சத்திரங்களும் சொல்லும், 
  12. ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு
  13. ஒரு கொடியில் இரு மலர்கள்-காஞ்சித்தலைவன் 
  14. ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம் நான் மெதுவாய்க்கரைய
  15. கண்ணனின் சன்னிதியில் 
  16. கல்யாணச்சாப்பாடு போடவா
  17. காத்தாழம் காட்டு வழி
  18. கொடியில் இரண்டு மலர் உண்டு.- உயிரா மானமா?
  19.  சாமந்திப்பூப்போல சாய்ந்தாடம்மா 
  20. சின்னத்தங்கம் என் செல்லத்தங்கம்
  21. பூப்பூவாய் புன்னகைக்கும் இவள்
  22. பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
  23. பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்லை
  24. மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
  25. மலர்ந்தும் மலராத 
  26. மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்
  27. மானூத்தி மந்தையிலே மாங்குட்டி பெத்த பயிலே
  28. மண்ணைத்தொட்டு 
  29. முத்து நகையே
  30. முத்து முத்தான கண்ணீர்த்துளிகளை விரயம் செய்து ஏன் அழுகிறாய்
  31. தங்க நிலவே உன்னை உருக்கி
  32. தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி - ராஜ காளி அம்மன்
  33. தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என் பந்தம்
  34. தண்ணீரிலே தாமரைப்பூ
  35. தாயின் முகமிங்கு நிழலாடுது
  36. திரு நிறைச்செல்வி  மங்கயர்க்கரசி
  37. தென்  பாண்டித்தமிழே
  38. தென்கிழக்குச்சீமையிலே செங்காத்து பூமியிலே
  39. தோள் மீது தாலாட்ட என் பச்சைக்கிளி நீ தூங்கு
  40. நண்டூருது நரியூறுது
  41. வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும்... செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்
                                          
Agneepath - Abhi Mujh Mein Kahin ஹிரிதிக் ரோசன் ,

எங்கள் பிளாக்கில்  வெள்ளிக்கிழமை பதிவாக வந்திருக்கும்    வெள்ளி வீடியோ. ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும். எனும் தலைப்பில்  அண்ணன் தங்கை பாடல் தொகுப்பை   கண்டதும் நான் சேனைத்தமிழ் உலா வில் ஒருவருடம் முன்பு  பகிர்ந்த பாடல் தொகுப்பு நினைவுக்கு வந்தது. எங்கள் பிளாக் பதிவுப்பாடல் தொகுப்பில் வந்த பாடல்களில்  13  பாடல்கள் என் தொகுப்பில்  இல்லை. அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள் இத்தனை உண்டென்பதே இப்பதிவுகள் பார்த்ததும் தான் அறிய முடிந்தது. 

ஒரு காலத்தில் இந்த அண்ணன் தங்கை பாடல்களை  இணையத்தில் தேடி இருக்கின்றேன். இணையத்திலும் இத்தனை பாடல்கள் அண்ணன் தங்கை பாசம் சொல்ல இருந்தாலும் அவை  ஒரே தொகுப்பாய் இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதை ஒரு தொகுப்பாக்கினால் என்ன எனும் சிந்தனையில் தோன்றியதே இந்த  பதிவு. 

பாடல்களை ஒலி ஒளியாக வரிவரியாக பதிந்து முழுத்தொகுப்பாக்க நேரம் எடுக்கும் எனினும் இப்பதிவில் முதல் வரிகளை  மட்டும் நினைவு படுத்தும் படி மொத்தம் 39 பாடல்களை   தொகுத்திருக்கின்றேன். 

கீழே இருக்கும் இணைப்புக்களில்   இங்கே தொகுத்திருக்கும் பாடல்களுக்குரிய ஒலிஒளிக்காட்சிதொகுப்பும், வரிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த தொகுப்பில் இல்லாத வேறு பாடல்கள் உங்களுக்கு தெரிந்தால் அதை பின்னூட்டத்தில் சொல்லுங்கள் நட்பூக்களே!

  நன்றி எங்கள் பிளாக்..

கறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி?

பேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில்  பொட்டுச்சிரட்டை  படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச்சுவது எப்படி என இணையத்தில் தேடினால் சரியாக தரவுகள் இல்லை என்பதனால் நாமாவது நமக்குத்தெரிந்ததை எழுதிப்பதிவாக்கி விடலாம்  என நினைத்து பொட்டுக்காய்ச்ச ஆரம்பித்து விட்டேன். 

புகைப்படம் நன்றி இணுவையூர் மயூரன் 

சிறுவயதில் எங்கள் வீட்டில்  அம்மா தேங்காய்ச்சிரட்டைகளில் பொட்டுக்காய்ச்சி ஊற்றி காயவைத்தும் வைப்பார். வருடக்கணக்கில் அந்த பொட்டுச்சிரட்டை பயன் படும். 

ஸ்டிக்கர் பொட்டு அதிகம் பாவனைக்கு வராத காலங்களிலும்  தினம் பள்ளி செல்லும் போது  சிரட்டையில் இருக்கும் மையை கொஞ்சம் தண்ணீர் தெளித்து தடவினால் கறுப்பு மையாக வரும். அதை  நெருப்புக்குச்சியின் குண்டு முனைப்பக்கமாக  ஒட்டி  நெற்றியில் நடுவில் மேலிருந்து கீழாக  ⧫  கோடு போட்டு கீழே அதே குச்சியின் முனை அளவு ஒரு டொட் வைப்போம். 

                                     
அதிலும் முக்கியமாக சின்னக்குழந்தைகளுக்கு  ஆணானாலும், பெண்ணானாலும்  மூன்று வயது வரையேனும்  நெற்றியில் பெரிதாகவும் கன்னத்தில் சிறிதாகவும் ஒரு பொட்டு வைத்து அழகு படுத்தி விடுவார்கள். எங்கள் வீட்டிலும் இதற்காகவே பொட்டுச்சிரட்டை காலியாகாமல் காய்ச்சப்பட்டு நிரப்பப்பட்டு கொண்டிருக்கும். கன்னத்தில் வைக்கும் குட்டி வட்டம் திருஷ்டிக்கானது என்பதும் நம்பிக்கை தான். 

படம் இணையத்திலிருந்து 

ஸ்டிக்கர் பொட்டு எனும் பெயரில் விதவிதமான வடிவங்களிலும்,வர்ணங்களிலும்  பொட்டுக்கள் வந்த பின்னும்  இந்த சிரட்டைப்பொட்டுக்கு மவுசு இருக்கத்தான் செய்தது.. கொஞ்சம் வளர்ந்த பின் சந்துப்போட்டெனும் பெயரில் குட்டி டப்பாவில் சிவப்புக்கலர் பொட்டு வாங்கித்தந்தார் அம்மா. அதை  நெற்றிக்கு வைத்ததை விட கைவிரல்களுக்கு கியூரெக்சாக  பூசியே சீக்கிரம் முடிந்து போகும், விரல்களுக்கு பூசப்பட்ட சாந்துபொட்டும் அடுத்த  ஒரு மணி நேரத்தில் பட்டை பட்டையாக கழண்டு உரிந்து விடும். அப்போதெல்லாம் எங்களுக்கு சிரட்டைப்பொட்டுத்தான் உதவும். 
                                                படம் இணையத்திலிருந்து 
அதே போல்   கைவிரல்கலுக்கு மருதோன்றி இலைகளை தேடி அரைத்து விரலில்  பத்து போட்டுக்கொண்டு விரல் சிவந்து விட்டதா என  போட்ட மருதோன்றி பத்தை  தூக்கி தூக்கி பார்த்து விரல்களை தவிர உள்ளைங்கையிலும்  அதிகம் சிவந்து  அழுகை அழுகையா வர வைக்கும். மருதோன்றி  இலைகளை  அம்மியில் அரைத்தால் அதற்கும் அடி விழும், பயந்து பயந்து ஒழித்து மறைத்து அரைத்து  விரலில் ஒட்டிக்கொண்டு அதையும் மறைந்து விடலாம் என நம்பிய  காலங்கள் அவை.  

அரிசிக்குறுனையில் தான் அப்போதெல்லாம்   பொட்டுக்காய்ச்சுவார்கள், இப்போது சவ்வரியிலும் காய்ச்சுகின்றார்கள். அரிசிக்குறுணையை விட சவ்வரிசி விலை அதிகம் என்பதனால் பெரும்பாலும் அரிசிக்குறுணை தான் பொட்டுக்காய்ச்ச பயன் படும். வசதி இருப்போர் சவ்வரிசியிலும் காய்ச்சலாம்.சவ்வரிசிப்பொட்டு சற்று அதிக பசைத்தன்மையோடிருக்கும்.

பொட்டுக்காய்ச்சுவது எப்படி?

ஒரு கைப்பிடி சவ்வ்ரிசி அல்லது அரிசிக்குறுணையை  மண் சட்டியில் (மண் சட்டி கிடைக்காவிட்டால் வாணலியில் காய்ச்சலாம்.)   போட்டு அடுப்பை பற்ற வைத்து நிதானமாக மிதமான சூட்டில் வறுக்கும் போது குறுணை  முதலில் வறுபட்டு   நிறம் மாறி  தொடர்ந்து வறுக்க கறுப்புக்கலராகி நல்ல மைக்கறுப்பாகும் போது  அப்படியே திரண்டு   ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் பதத்தில்  ஒரு கப் தண்ணீரை விட்டு  கொதிக்கும் வரை காய்ச்ச வேண்டும். இதனுடன் சிறிது பர்வ்யூம் சேர்த்தால் . பொட்டு வாசனையாக இருக்கும், செவ்வரத்தம் பூவின் சாறு அல்லது தேங்காய் எண்ணெய் கொஞ்சம் விட்டு காய்ச்சினால் பொட்டு பளபளவென  இருக்கும். நாங்கள்தேங்காய் எண்ணெய்  ஒரு துளி விட்டுக்காய்ச்சுவோம். 

பொட்டுக்காய்ச்ச முன் காய்ச்சிய மையை ஊற்ற  தேங்காய்ச்சிரட்டையை இருபக்கமும் நல்லா வளவளப்பாக  பளீச் என சீவி தயார் செய்து கொள்வது முக்கியம். பொட்டுக்காய்ச்சியதும் அதை சிறு துணியினால் வடிகட்டி எடுத்தால்  சகடுகள் எல்லாம் தனியாகி  திக்காக இருக்கும்   மையை அதற்கென தயாராக இருக்கும் சிரட்டையில்    ஆப்பச்சட்டியில் மா ஊற்றி சுழட்டுவது போல் சிரட்டைக்குள் சுழற்றினால்    சிரட்டையில் பரவலாக ஒட்டும். எனினும் சிறிது நேரத்தில் கீழே வடிந்து நடுவில் சேரும். கவலை வேண்டாம். அப்படியே ஆற விட வேண்டும்.. பொட்டுக்காய்ச்சி ஆறவைத்து பதப்படுத்தும் பணி ஒரு நாளில் முடியாது என்பதை புரிந்து  பொறுமையாக 
காய்ச்சிய மையை  சிரட்டையில் ஊற்றி சுழட்டி  ஒரிடத்தில் அசைக்காமல் காய விட வேண்டும். இரண்டாம் மூன்றாம் நாளில்     மை சிரட்டையின் நடுவில்  தேங்கி  மேலே  பாலாடைபோல் படர்ந்து இருக்கும் அதை உடைத்து மீண்டும்   சில தடவை  சிரட்டைக்குள் பரவலாக படும்படி சுத்தி  காய வைக்க வேண்டும். இப்படி முழு மையும்,  சிரட்டையில் பரவலாக சம நிலைக்கு வரும் வரை  சிரட்டையை சுழற்றி காய விட்டால்  ஒரு வாரத்தில் மை இறுகி பொட்டுப்பதத்தில் வந்து விடும். 

அதில் ஒரு துளி நீர் விட்டு குழைந்தால் பொட்டு தயார். கடைகளில் வாங்கிப்பயன் படுத்தும் பொட்டுக்களில் இரசாயனங்களை சேர்த்து தோலுக்கு ஒவ்வாமை வரலாம். ஆனால் வீட்டில் இவ்வாறு காய்ச்சி பதப்படுத்தி பயன் படுத்தினால் வருடக்கணக்கில் அந்த பொட்டுச்சிரட்டை  குறைந்த செலவில் ஆரோக்கியமானதாகவும் நீண்டகால பயனுடனும் இருக்கும், 

19 ஜூன் 2017

சட்டியுடன் ஒட்டி உறவாடும் தோசையை பிரிப்பது எப்படி?

டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
தோசை வார்க்கும் சட்டிகளில் பரோட்டா, சப்பாத்தி, போன்றவைகளும் எண்ணெய் சேர்த்த பொரியல்வகைகளும் செய்தால் சட்டியிலிருந்து தோசை கிளம்பாமல் ஒட்டிக்கொண்டு அடம்பிடிக்கும், இரும்புச்சட்டியிலோ, நான்ஸ்டிக் சட்டியிலோ தோசை வார்க்க முன் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதன் மேல் சமையல் உப்பை தூவி கோல்ட் கலராகும் வரை வறுத்து கொட்டி விட்டு சட்டியை கழுவி அல்லது நன்கு துடைத்து மீண்டும் சூடாக்கி எண்ணெய் தடவி தோசை வார்த்து பாருங்கள் முதல் தோசை அடம் பிடிக்கும், இரண்டாம் தோசை ஜம்ம்ம்முன்னு இலகுவாக மேலே கிளம்பி வரும், புதிய ஆப்பச்சட்டியைப்பழக்கவும், புதிய தோசைக்கல், சட்டிகளை பழக்கவும் இதே முறை தான்.