29 ஆகஸ்ட் 2019

ஆப்பிள்: பழம் வேண்டுமா? அள்ளிக்கொண்டு போங்கோ 🤷‍♀️🤷‍♀️

ஆப்பிள்: பழம் வேண்டுமா?
அள்ளிக்கொண்டு போங்கோ 
🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏

கனவுத்தோட்டம் 
காய்த்ததும் கனிந்ததும்
கற்பனையென்றெண்ணி
நிச்சலனமாயிருந்தேன்🙋‍♀️🙆‍♀️

நச்சென சத்தம் 🙆‍♀️🙆‍♀️
நடு உச்சி வீக்கம் 
அண்ணாந்து பார்த்தேன்
ஆங்காங்கே ஆப்பிள்

ஆ.. வென அதிர்ந்து 
சட்டென சறுக்கி 🙇‍♀️🙇‍♀️
பரதம் ஆடி - தாழ்
பணிந்து எழுந்தேன் 
குவியலாய் ஆப்பிள்.

பூத்துக்காய்த்து 
பறிப்பாரின்றி 
பழுத்து,விழுந்து 
குன்று மணி போல் 
செஞ்சிவப்பில் 
பளபளவெனவே
சிதறிக்கிடக்குது

ஈரிரண்டு வயதில் 
ஏ பார் அப்பிள் 
அழகாய் சிவப்பில் 
அரண்மனை பழமாய்
பறித்திட முடியா
பணக்கார பழமது

நாலிரண்டு வயதில் 
நாலிரொரு துண்டு 
நா ருசித்த அப்பிள்
நா உணர்ந்த வாசம் 
நானின்றுணர்ந்தேன்

ஈரேழு வயதில் 
திருடிச்சுவைத்து
திக்குத்திக்கென 
விக்கித்திரிந்த 
நினைவுச் சுழலில் 
நானின்று சுழன்றேன்

அன்றொரு பொழுதில் 
அரண்மனை பழமாய் 
அதிசயமானது
இன்றிங்கென் காலடியில் 
கொட்டிக்கிடக்குது.

நச்சில்லா அருங்கனி 
நான் கற்ற முதல் கனி
எட்டாக்கனி யன்று
கிட்டிக்கிடக்கு 
தின்றிங்கே
இயற்கையின் அதிசயம்
இதுவொரு அற்புதம்
ஏற்றமும் இறக்கமும் 
இறைவனின் கொடையல்லோ?

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏







26 ஆகஸ்ட் 2019

தேச பக்தி என்பது..சுயத்தை இழப்பதல்ல.!

சுயமாக சிந்திக்காமல் ஒரு கட்சி அல்லது அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தையும் நியாயப்படுத்தி அவர்கள் செய்வதெல்லாம் சரி என வாதிடுவது தான் தேச பக்தி என்றால்............!
அந்தத்தேச பக்தி...........!
என் செருப்புக்கு சமானம்........!

நான் சொல்லல்ல..
சொன்னவர் சுபாஷ் சந்திரபோஷ்.

அவர் சொல்லவில்லை என்றாலும் 
நான் சொல்லுவேன்
தேச பக்தி என்பது சுயத்தை இழப்பதல்ல!
தேச பக்தி என்பது மக்களை அடிமைப்படுத்துவதற்கல்ல!
தேசத்தை நேசிப்பது ..! 
தேசத்தை அழிக்கும் காரியங்களில் ஈடுபடுவோருக்கு வக்காலத்து வாங்குவதன் பெயர் தேச பக்தியாய் இருக்கவே முடியாது. 
சமூகத்தின் சீர்கேடுகள் தொடரவும்,சமூக சார்ந்த முன்னேற்றம் தடைப்படவும்,இளைஞர்கள் வழி தடம் மாறிச்செல்லவும் இம்மாதிரியான சுய சிந்தனை அற்றவர்கள் தான் மூல காரணம்.

அன்னியன் அல்ல எம்மவனே எமக்கெதிரி.


24 ஆகஸ்ட் 2019

அமேசான் என்கிற ஆச்சரியம்!

அமேசான் என்கிற ஆச்சரியம்!
வருடமெல்லாம் கொட்டும் மழை! 
சூரிய வெளிச்சமே பார்க்காத தரை!
மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு!
அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்!!
இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்!
ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்.
இந்த காடுகள் ஆபத்தானவை.
இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது!
இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.
இச்சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்!!
இதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும்.
இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.
இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது.
முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
இந்த காடு மற்றும் நிதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள்.
அமேசான் நதி பிறக்கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக் கொண்டு கடலில் சென்று கலக்கிறது.
'இங்கு இருக்கும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை' என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்கு உணர்த்தும்.
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
அமேசான் ஆற்றின் எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை!
இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும்!
எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை.
1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை!
அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும்.
மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக வினாடிக்கு 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது.
ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது!
மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும்.
முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது.
பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் 'மனவுஸ்' வரை செல்லலாம்.
சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம்.
அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை.
பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும்.
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
''அமேசான் மழைக்காடுகள்''
அமேசான் காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லையகளாக கொண்டுள்ளது.
சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது.
பூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது.
பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான்.
மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது.
இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன.
உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் இருக்கின்றன.
3,000 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன.
உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன.
எண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள்.
அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உலகிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.
ஆகஸ்ட் 2012-க்கும், ஜூலை 2013-க்கும் இடையே அமேசான் வெப்பக் காடுகள் அழிக்கப்படும் வீதம் 28% அதிகரித்திருப்பதாக பிரேசில்அறிவித்திருக்கிறது.

⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்.
இங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள்.
கி.பி. 1500-ம் ஆண்டு 6,090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தார்கள்.
ஆனால் இப்போது, வெறும் 2.5 லட்சம் பேர் தான் உள்ளனர்.
இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்களை சேர்ந்த மக்கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர்!
இன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது.
காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல்.
ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.
ஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர்.
ஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர்.
அவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவை தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்.
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
உலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன.
பெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன.
இதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
இந்தப் பகுதியில் காணப்படும் ஈல் வகை மீன் ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது.
இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.
தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன.
அதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம்.
ராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு.
இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன.
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது!
இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இது 'வாலியா ஹம்சா' என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது.
அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது.
சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது!
நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்.
எனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
குளிரான அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது.
4 மைல் நீளமுடைய இந்த ஆறு பேரு நாட்டின் Mayantuyacu பகுதியில் Andrés Ruzo என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆற்றில் விழுபவர்கள் அனைவரும் தீயில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆற்றுக்கு பின்புறத்தில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது.
அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து பாறையில் விழும் நீர்தான் சூடாகிறது.
உடைந்த பாறை கற்களோடு ஆவி பறக்க அதன் கொதியாற்று படலம் ஆரம்பிக்கிறது.
இதன் அகலம் 25 மீட்டர் (82 அடி) இதன் ஆழம் 6 மீட்டர் (22 அடி) இதன் வெப்பம் ஆவி பறக்கும் அளவுக்கு Tea போடலாம் என Gizmodo ஆய்வு கூறுகிறது.
100 டிகிரிக்கான கொதிப்பும் ஆவியாதலும் இருக்கிறது.
விலங்குகள் மட்டுமல்ல நாம் தவறிவிழுந்தாலும் வெந்து இறப்பது உறுதி.
இது சிறிய ஆறு.
ஆனாலும், இதற்கு, மொத்த நீர்பரப்பும் கொதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மதிப்பிலான வெப்பம் பூமியிலிருந்து எப்படி கிடைக்கிறது என்பதுதான் வியப்பு.
ஆனால், இந்த ஆற்றுக்கு வெகுதூரத்தில்தான் உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன.
வெப்பத்திற்கு காரணமான பூமியின் வெப்ப ஊற்றுகள் ஓரிடத்தில் உள்ளதா இந்த ஆற்றுப்பாதையின் நெடுகிலும் உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
 நகலெடுத்த பதிர்வு
தொகுத்தவருக்கு நன்றி💗💗💗💗

அமேசான் காட்டுத்தீ

உலகம் தன் கவனத்தை அமேசானின் பக்கம் திருப்பியே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்,இயற்கையை நேசிக்கும் மக்களும் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள்.
ஆம்......! சர்வதேச அழுத்தங்களை தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை காட்டுத்தீயை அணைக்க இராணுவத்தை பயன் படுத்தும்படியான உத்தரவை பிரேசில் ஜனாதிபதி வழங்கி இருக்கின்றார்.
இன்று சனிக்கிழமை தொடக்கம் அடுத்த ஒரு மாதம் இராணுவம் அமேசான் பகுதிகளில் எரியும் காட்டுத்தீயை அணைக்கும் செயல்பாடுகளை தொடரும்.
⧪ அமேசான் காட்டுத்தீ கவனயீர்ப்பு மனிதச்சங்கிலிப்போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிடும் ஜப்பான்.
⧪ பிரேசிலில், 40 நகரங்களில்அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டன,
⧪ பல ஐரோப்பிய தலைநகரங்களில் பிரேசிலிய தூதரகங்கள் மற்றும் தூதரகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
⧪ காடழிக்கப்படுவது தொடருமானால் பிரேசில் நாட்டின் மீதி பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என எச்சரிக்கின்றார் பிரான்ஸின் அதிபர் மக்ரோன்
⧪ பிரேசில் தனது காடழிப்பு கொள்கைகளை மாற்ற வேண்டும் எனும் சர்வதேசக்கவனயீர்ப்பை வேகப்படுத்தும் முயற்சிகளாக அமேசான் காடழிப்பு தொடர்பாக பேச உலகின் முக்கிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் இந்த வார இறுதியில் அவசரப்பேச்சுவார்த்தைகக்காக ஒன்று கூடுகின்றார்கள்.
⧪ சனிக்கிழமையன்று பியாரிட்ஸில் உள்ள ஜி 7 க்கு மாநில மற்றும் அரசாங்கத் தலைவர்கள் வரவிருந்த நிலையில், பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் இடையிலான மெர்கோசூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைத் தடுப்பதாக அச்சுறுத்தி இருக்கின்றன.
------ போல்சனாரோ, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் காட்டுத்தீயை அணைக்க எடுக்கும் அவசர முயற்சிகள் தொடர்பாக தவறான தகவல்களை தந்ததாக பிரான்ஸ் குற்றம் சாட்டியது, எனவே பிரேசில்,அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகிய நாடுகளுடனான மெர்கோசூர் ஒப்பந்தத்தை பிரான்ஸ் ஆதரிக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தைக்கு இரண்டு தசாப்தங்கள் எடுத்துள்ளது, ஆனால் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை.
⧪ ஏனைய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களும் மெர்கோசூர் (தெற்கு பொது சந்தை) ஒப்பந்தத்திலிருந்து விலகிச் செல்ல நிர்பந்திக்கப்படுகின்றார்கள்..
⧪ முதல்முறையாக ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் Boris Johnson, அமேசான் விடயத்தில் தான் “ஆழ்ந்த அக்கறை” கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்,
⧪ தொழிலாளர் தலைவர்Jeremy Corbyn போல்சனாரோவுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைககளுக்காக அழுத்தம் கொடுத்திருக்கின்றார்.
⧪ பிரேசிலின் முன்னாள் சுற்றுச்சூழல் மந்திரி Marina Silva "இந்த நாடு அமேசானில் காடழிப்பைக் குறைக்க ஒரு கடுமையான முயற்சியை மேற்கொண்டது, இப்போது எல்லாவற்றையும் தவிர்த்து வருவதை நாங்கள் காண்கிறோம்"
இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த வேண்டும், ”என்று கூறி இருக்கின்றார்.

⧪ Angela Merkel, German "அமேசான் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து பிரேசிலுக்கும் பிற பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் அதிர்ச்சியையும் அச்சுறுத்தலையும் தருகிறது" என்று மேர்க்கெலின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் வெள்ளிக்கிழமை பேர்லினில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அமெரிக்கா அதிபர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. டிரெம்ப் காட்டுத்தீயை எதிர்த்து போராட நாங்கள் உதவுவோம் என தெரிவித்திருக்கின்றார்.
Wildfires in the South America including the Amazon rainforest of Brazil on 20 August. 
Photograph: VIIRS/Suomi NPP/Worldview/NASA

A Nasa images shows several fires burning in Brazilian states.
Photograph: HO/AFP/Getty Images 
Protesters march in Rio on Friday against the government of Brazilian president Jair Bolsonaro over the fires in the Amazon rainforest.
Photograph: Mauro Pimentel/AFP/Getty Images

அமேசான் மழைக்காடுகள் கற்றுத்தரும் பாடம்.
சமூகம் சார்ந்த அழிப்புக்களை எத்தனை மூடி மறைக்க நினைத்தாலும் அவை வெளி வரும் போது 
அப்பிரச்சனை சார்ந்து கையாளக்கூடியவர்கள் 
கவனத்தில் கொண்டு சேர்க்கப்படுமானால் அத்தனைக்கத்தனை விரைவாக பயனும் அடைவோம் என்பதை அமேசான் காட்டுத்தீக்கு பின்னரான மக்கள் குரல்கள் நிருபிக்கின்றன.

ஆம்......! அமேசான் காட்டுத்தீ பிரேசில் அரசின் மீதான சர்வதேச நெருக்கடியை உருவாக்கிக்கொண்டிருக்கின்றது.

23 ஆகஸ்ட் 2019

அமேசான் மழைக்காடுகள் எரிந்து கொண்டிருக்கிறன..

உலகத்தின் மிகக் குறைந்த கவனத்தைப் பெற்ற மற்றொரு பேரழிவு!
எங்கள் பூமி எரிந்து கொண்டிருக்கிறது!
நாம் வாழும் பூமிக்கு தேவையான சுவாசக்காற்றின்  20% வீத ஆக்ஸிஜனைக் கொடுக்கும் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள் எரிகின்றன.
உலகின் மிகப் பெரிய உயிர்ப் பெருந்திணிவும் பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான்_காடுகள்_பற்றி எரிகிறது.


ஆம் அமேசான் மலைக்காடுகள் .....!
உலகத்தின் சுவாசம் 
பூமிப்பந்தின் நூரையீரல் 
பூமியில் ஈரப்பதமான இடங்களில் முக்கியமானதுமாகும்.!
பிரேசில்,பொலிவியா மற்றும் பராகுவே: அமேசானின் பரந்த பகுதியை தம் வசம் வைத்திருக்கும் மூன்று நாடுகளிலுமிருக்கும் அமேசான் மழைக்காடுகள் மூன்று வாரங்களாக தொடர்ந்து எரிகின்றது.
பூமியின் குளிரான இடங்களில் ஒன்றான சைபீரியா தீப்பிடித்து எரிகிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகள் பல வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெட்ரோலிய மற்றும் கணிம வள நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அதில்  60% அமேசான் காடுகளை உள்ளடக்கிய பிரேசில் முக்கியத்துவம் பெறுகின்றது.
 பூமியில் தண்ணீர் வளமிக்க நாடுகள் பட்டியலில் முதலாவது இடத்தில் இருப்பது பிரேசில் 
 பூமியின் மனிதர்கள் சுவாசிக்க தேவையான பிராண வாயு / ஒட்சிசனில் 20% வீதம் அமேசான் காடுகளின் மூலமே கிடைக்கின்றது.
 மழைக்காடுகள் கார்பனை உறிஞ்சி  பிராணவாயுவான ஆட்சிசனை வெளியிடுகின்றன.
⧪ பூமியின் 10% விலங்கினங்கள், 
⧪ 40,000 மர செடி வகைகள்
 3000 பழ வகைகள் 
அரிய வகை தாவரங்கள், கனிமங்களை தன்னகத்தே மறைத்து அமேசான் காடுகளை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.
அரசியல் ஆளுமைகளின் அதிகார, பேராசையினால் ஏற்பட்ட வெறி காட்டுத்தீயாக எரிந்து கொண்டிருக்கின்றன. முழு வனத்திலும் 30 வீதம் முற்றாக  சாம்பலாகியும்  தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கின்றன.
அமேசன் காட்டின் வளங்களை நாட்டின் முன்னேற்றத்துக்காக பயன் படுத்துவதாக பிரோசிலிய அதிபர் பொல்சானாரோ தன் தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தார். அவரின் வாக்குறுதியை நிறைவேற்ற அங்கே வாழும் பழங்குடி மக்கள் தடையாக இருப்பதனால் அவர்களை காடுகளை விட்டு துரத்தி விட செயற்கையான முறையில் காட்டுத்தீ ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என அமேசான் Waorani  பழங்குடி மக்கள் குற்றம்சாட்டுகின்றார்கள்.
ExxonMobil,TotalSA,Shell போன்ற பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து அமேசான் காடுகளில் தங்குதடையின்றி பெட்ரோலிய வளத்தை சுரண்டுவதற்கு  தடையாக  அமேசான் பழங்குடிமக்கள் இருக்கின்றார்கள். 
சில மாதங்களுக்கு முன் அமேசான் காட்டுப்பகுதியின் பெற்றோலியம், போன்ற கனிம வளங்களை தோண்டி எடுக்க அரசின் ஆதரவுடன் திட்டமிட்ட பெற்றோலிய நிறுவனங்களை அமேசான் பழங்குடி மக்கள் நீதி மனற உத்தரவின் மூலம் தடுத்திருக்கின்றார்கள்.
அமேசான் காடுகளுக்கு அருகே வாழும் பழங்குடி மக்களை வெளியேற்ற முயற்சிப்பதும் அதனை எதிர்த்து வழக்கு தொடுத்து வெற்றி பெறும் போது காடுகளில் செயற்கை தீ விபத்துகளை ஏற்படுத்தி அவர்களை அச்சுறுத்தி வெளியேற்ற நினைப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
காட்டுப்பகுதியை அண்டி வாழும் கிராமத்து மகக்ளும் விவசாய நிலங்களை உருவாக்கும் திட்டத்தில் சட்டவிரோதமான முறையில்  செயற்கையாக காடுகளுக்கு தீவைத்து சாம்பலாக்குவதை அரசு அனுமதிக்கின்றது.
காட்டுத்தீ பரவிக்கொண்டிருக்கும் காலத்தில் அரசாங்கம் கூறிய அதிக வறட்சி, அதனால் உருவான காட்டுத்தீ எனும் நொண்டிச்சாக்குகளை சூற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மறுத்திருக்கின்றார்கள்.
கடும் வறட்சிக்காலங்களிலும். எல் நீனோ வருடங்களிலும் ஏற்படாத அழிவுகளை இவ்வருடம் இக்காட்டுத்தீ உருவாக்கி இருக்கின்றன. . முன்னெப்போதும் இல்லாத அழிவினை அமேசான் வனம் சந்தித்து கொண்டுள்ளன. 
அமேசான் காடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட்,அக்டோபர் மாதங்களில் தீ ப்பிடிப்பது வழமையானது தான் எனினும் அவை இவ்வருடம் போல் பாதிப்பை தரவில்லை எனவும். இவ்வருடம் அமேசானில் அதிக வறட்சி நிலவவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

2018 ஆம் ஆண்டில் 40000 இடங்களில் தீப்பிடித்ததாக பதிவாகி இருந்தன. 2019 ஆம் ஆண்டில் 73 ஆயிரம் இடங்களில் தீப்பிடித்ததாக பதிவாகி இருக்கின்றன. கடந்த வருடத்தை விட இவ்வருடம் 86% வீதம் 9500 infernos அதிகமாக காட்டுத்தீ அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 9000 தீப்பிழம்புகள் பதிவாகி இருக்கின்றது. 
இயற்கை தன்னை தானே புதுப்பித்து கொள்ளும் நிகழ்வாகவே கடந்த கால காட்டுத்தீ களும் கடந்து சென்றிருக்கின்றன. கடந்த வருடங்களை விட இவ்வருடம் அதிக அழிவை தரும் தீ மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவே குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
தீப்பிடித்ததே மனிதர்களின் தவறுகளினால் தான் எனும் குற்றச்சாட்டை அசட்டை செய்து அது குறித்த கவலையை நிராகரித்திருக்கின்றார் பிரேசில் அதிபர் பொல்சானாரோ. "நான் கேப்டன் செயின்சா என்று அழைக்கப்பட்டேன், இப்போது நான் நீரோ, அமேசானை எரிய வைக்கிறேன்" விவசாயிகள் நிலத்தை துடைக்க நெருப்பைப் பயன்படுத்தும் ஆண்டின் காலம் இது என்றும் கூறி இருக்கின்றார்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாக்கும் அரசாங்க நிறுவனங்களின் முயற்சிகளையும் போல்சனாரோ தடுத்துள்ளார்.
இந்த தீ 1.2 மில்லியன் சதுர மைல் அகலம் கொண்ட புகை அடுக்கை உருவாக்கியுள்ளதுடன் புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான காடுகளின் இழப்பு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் காடுகளின் அழிவினால் இனி வரும் காலத்தில் ஐரோப்பிய, ஆபிரிக்க கண்டங்களுக்கு மறைமுகமான பாதிப்பை அடுத்தடுத்த வாரங்களில் உணர்த்தலாம் என்பதோடு , உலகம் முழுவதும் கால நிலை மாற்றங்களில் கடும் பாதிப்பை உருவாக்கலாம் என சூழலியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றார்கள்.

எமது சிந்தனைக்கு....
கடந்த வருடம் பிரான்சின் "நோட்டி டாமே" தேவாலய தீ விபத்தின் போது பதறித்துடித்து தீயை அணைக்க உதவிய உலகத்தின் அக்கறையும், சர்வதேச தொலைக் காட்சிகளின் கவனயீர்ப்பும், மக்களின் வாழ்வாதாரங்களும், வளங்களும் சுரண்டப்படும் போது மௌனமாகிப்போகின்றன.
இந்த பூமி கொடூரமானவர்களின் ஆளுகையில் தனது இயல்பை இழந்து கொண்டே இருக்கின்றது.
உலகம் அமைதியாகி வேடிக்கை பார்க்கின்றது.
இயற்கை தன்னை புதுப்பித்து கொண்டே இருக்க. மனிதனோ அதை புரிந்திடாமல் தான் மீண்டு வர முடியாதென தெரிந்தும், அழிவுக்கே வித்திட்டுக்கொண்டே செல்கின்றான்.
நாங்களும் யாருக்கோ தானே என அமைதியாக கடக்கின்றோம்.
 
உலக வரை படத்தில் அமேசான்  மழைக்காடுகள
விண் வெளியிலிருந்து   
பற்றிஎரிகின்றது அமேசான் 
  பசுமையாய் அமேசான்
எரிகின்றது.  
அகோரமாக எரியும் தீயை இப்படியும் அணைக்கலாம். 
சம்பலாகியது வனங்கள் மட்டும் அல்ல. மனங்களும் தான்.