ஆனால் நிலையான காதல் மறைவதில்லை
விசாலமான மனதில் நிர்பந்தங்களின்றி உதயமானதே காதல், இரண்டான இதயங்கள் ஒன்றாகிடும் போது அன்பானது அங்கே முழுமை அடைகின்றது!
உண்மைக் காதல் இதமானது, நம் மனக்காயங்கள் தீர்க்கும் மருந்து, தாலாட்டும் தென்றல், உற்சாகத்தின் ஊற்று, இதமான போர்வை என நம்மையே நம்மில் உயிர்ப்பிக்கும் வித்தையை உணர்த்தும்!
இப்படி காதலிப்போருக்கு எல்லா நாளும் காதலர் தினம் தான்
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே !
காதலும் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படிப்பட்ட காதலுடன் தான் நாம் கடவுளை வேண்டுகின்றோமா?உள்ளம் உருகி வேண்டிடும் கடவுளில் மீதான காதலுக்கு ஈடிணை உண்டா? எத்துணை அற்புதமான காதல் இது,
இறைவனிடம் பக்தி கொண்டு தன் கண்ணையே கொடுத்த பக்தனின் பக்தியே காதலின் முழுமையை உணர செய்யும்போது இவ்வுலகின் போலித்தனமான அன்புக்கு காதலென எப்படி சொல்வேன்.
நிர்மலமான மனதுடன் எதிர்பார்ப்பில்லாமல் சுய நயலமற்றதான நேசிப்பை இவ்வுலக காதலுடன் ஒப்பிட்டு அனர்த்தமாய் சிந்திக்கும் மனநிலையை என்னவென்பேன்?
காதலில் கரைய மடி கொடுத்து
என் கற்பனைகள் உயிர்க்க
திடம் கொடுத்து
மண்ணான என்னை
பொன்னாக மாற்றும்
மெய் ஞானம் தேடி
கல்லான மனதை
கற்பூரமாக்கி
நான் பெற்ற ஞானம்
கண் தூங்கும் முன்னே
என் முன்னே வந்து
காணாத இன்பம்
நான் காண செய்த
காதலே உமக்கு நன்றி!
காதல் ஆணின் வாழ்க்கையில் ஓர் அதிகாரம் மட்டுமே;
ஆனால் பெண்ணின் வாழ்க்கையில் முழு வரலாறு-
எதிர்பார்ப்பில்லாத அன்பு முழுமையடைதலே காதலில் வெற்றி!
நான் உனக்கு இதை செய்தேனே ஏனக்கு நீ அதை கொடு எனும் எதிர்பார்ப்பின்றி எங்கெல்லாம் அன்பு செலுத்துகிறோமோ அங்கெல்லாம் நம் அன்பு காதலாகிறது.
நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை நேசிக்கிறாயா என கேட்டு செலுத்தும் எதிர்பாப்புடனான அன்பை காதலென்று எப்படி சொல்வேன்.?
தடைகள் தான், காதலுக்கு அதிக மதிப்பைத் தருகிறது
காதலோடு.....!
நான் சென்ற இடமெல்லாம் காதல்
நான் காண்பவை எல்லாம் காதல்
காணாத உங்களில் காதல்
கண்ட உங்கள் பதிவிலே காதல்
அன்பு செலுத்துவோர் மீது காதல்
அன்பு செலுத்தாதோர் மீதும் காதல்
இருப்போர் மேலே காதல்
இல்லாதோரிடம் அதிக காதல்
ஏழையை கண்டால் காதல்
எதிரியின் மீதும் காதல்
கற்றோரை கண்டால் காதல்
கல்லாதோர் மீது
இரக்கம் கொள்ளும் காதல்
உலக ஞானத்தின் மேலே காதல்
மெய்ஞானத்தின் மீதும் காதல்
நான் சென்ற இடமெல்லாம் காதல்
இன்று முதல்
காதலின் மேலும் காதல்!
எதிர்பார்த்து விதைப்பதைக் காதல் அறுவடை செய்யாது
மண்ணில் இந்தக்காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எனக்கு வானத்தின் மேலே காதல்
வான் மேகத்தின் மேலே காத்ல்
மலைகளின் மேலே காதல்
பூக்கும் மலர்களின் மேலும் காதல்
உயிர்களின் மேலே காதல்
இந்த உலகத்தின் மேலே காதல்
இன்னும் கொஞ்சம் உலகத்தில் வாழக்காதல்
என் குடும்பத்தின் மேலே காதல்
முத்தமிழ்மன்றக்குடும்பத்தின் மேலும் காதல்
பணத்தின் மேலே காதல்
அது தரும் பகட்டின் மேலும் காதல்
படிப்பின் மேலே காதல்
அதனால் வரும் மகிமையின் மேலும் காதல்
என் கடமையின் மேலே காதல்
படைத்த கடவுளின் மேலும் காதல்
என் எழுத்துக்கள் மீதும் காதல்
இதைபடிக்கும் உங்கள் மேலும் காதல்
காதலின்றி நான் இந்த உலகத்திலேது?
இதயத்தைத் தவிர காதலுக்கு குடியிருக்க வேறிடம் இல்லை
காதலையும் காதலித்து உங்களையும் நீங்களே காதலித்து பாருங்கள்!
மனதில் பட்டாம் பூச்சி பறப்பதையும், கவலைகள் பறந்தோடுவதையும்
தினம் தினம் புதிதாய் பிறந்த உணர்வையும் அடைவீர்கள்!

