07 மார்ச் 2019

எங்கட தமிழரிட்ட இருக்கின்ற நல்ல பழக்கம் என்ன தெரியுமா?

எங்கட தமிழரிட்ட இருக்கின்ற நல்ல பழக்கம் என்ன தெரியுமா?
எந்த பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனைக்கான சமகால சூழல், நமது சமூகத்தின் மேம்பாட்டை நிம்மதியை குறித்து சிந்திக்க மாட்டார்கள்.
மூன்று நான்கு தலைமுறைகள் அல்லது நூறுவருடம், ஆயிரம் வருடப் பாராம்பரியம், பெருமை பேசுவது. எதை எதையெதுடனோ முடிச்சிப்போட்டு இருக்கும் சிக்கலை பெரிசாக்குவது. அல்லது கம்முன்னு உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது.
ஆயிரம் ஆண்டு காலம் இல்லை அதுக்கு முன் பூமி தோன்றிய காலம் முதல் இலங்கை இருக்கு. அதில் மனிதரும் இருக்கினம். அங்கே வாழ்ந்தது ஆறறிவு மனித இனமா என்பது தான் எண்ட மண்டைக்குள் இருக்கும் கேள்வி?
எம்பூட்டு பெருமை பேசிட்டிருக்கோம். இருப்பதையும் இழக்க வைக்கும் பெருமை.
ஆதித்தொன்மை மிக்க தமிழனுக்கென சுயமான ஆளுமையோட ஒரு சிறு துண்டு பரப்பில் இது எண்ட நாடு எண்டு சொல்ல ஒண்டுமில்லை.
அவன் செய்தான், அப்ப செய்தான், 
இப்ப நான் செய்யக்கூடாதா, செய்தால் என்ன இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்பது. அப்ப அவன் செய்திருந்தால் அக்கால சூழல் எப்படி இருந்தது?என்ன நடந்தது என எவருக்கும் தெரியாது.

கேட்டு கேட்டு தான் இருந்ததை இழந்து இன்னமும் பழம் பெருமை பேசிட்டு நடு ரோட்டில் நிற்கின்றம்.
என்னமோ இவங்க நேரில் பார்த்து வந்தது போல் எழுதுவாங்க, தமிழர் எனும் உணர்வும் வீரமும் எழுத்தில் மட்டும் அனல் பறக்கும்.
தென்னிந்திய திருச்சபைகளைகள்,கிறிஸ்தவ மதம் பரப்ப வந்த மிஷனரிகள் , பௌத்த மரம் பரப்ப அரச மரக்கிளையோட வந்த சங்கமித்தை, விஜயனும் தோழர்களும், வியாபார நிமித்தம் வந்த அராபியர்கள், யவனர்கள் என காலத்துக்கு காலம் எவனென்வனோ வந்தான். போனான்.
அவன் வந்த காலத்தில் தமிழர்கள் மேன்மை அடைந்திருந்தார்கள்.ஆட்சி அதிகாரங்களோட வாழ்ந்தார்கள் வந்தவனை வா வா என இரு கை கூப்பி வரவேற்று, உட்கார வைச்சு விருந்தளித்தார்கள். வீட்டுக்குள் வாசலோடு அனுப்ப வேண்டியவனெல்லாம் உப்பும் உறைப்புமா சமைச்சத திண்டு போட்டு /உப்ப தூவி அவிச்சி திண்டவனுக்கு நமம் மசாலாவெல்லாம் போட்டு சமைச்சால் சும்மாவா இருக்கும், ஆஹா , ஓஹோ விருந்தோம்பலில் சிறந்தவன் தமிழன் எண்டதும், நம்மாளுங்களும் அப்படியே ம்யங்கி போய் வீட்டுக்குள் கூட்டி வைச்சு படுக்கையும் போட்டு விசிறியும் விட்டாங்க.
நெடு நெடுவென உயரமா வெள்ளையா இருந்தவனை பார்ததும் வெள்ளை தோல் எண்டால் கடவுள் எனும் ரேஞ்சுக்கு கூனி குறுகி கும்பிடு போட்டு காலடியில் உட்கார்ந்தும் இருப்பாங்க. 
இப்படித்தான் எல்லாரையும், நல்லவன் என நம்பி கடைசில தனக்கும் போக்கிடம் இலலாமல் இருப்பை எல்லாம் இழந்து கை கட்டி வாய் பொத்தி நிண்டான். கூழை கும்பிடு போட்ட தமிழனின் பண்பும்,பணிவும்,அவனை ஏமாளி என புரிய வைச்சிருச்சி.

அப்ப இருந்த சனமும் ஏன் எண்டு கேட்கல்ல. கேட்டாங்களா என எனக்கு தெரியல்ல. ஏன் எண்டால் எல்லாரும் தொன்மை பேசினமே தவிர ஆதாரங்கள் என்பது அரிதாகவே ஆவண[ப்படுத்தி இருக்கினம். அப்ப அவன் செய்த தப்புத்தான் நம்ம தலையில் விடிந்திருக்கு.
இப்ப எல்லாத்தையும் இழந்து போட்டு கேவலப்பட்டு நிற்கின்றம். உங்களுக்கு வெட்கமா இல்லையோ என்னமோ எனக்கு வெட்கமா இருக்கு.
ஏன் தெரியுமா.? ஏண்ட மூண்டு தலைமுறைக்கு முந்திய தலைமுறை அதாகப்பட்டது 150 / 200 வருடம் முந்தி என்னோட முப்பாட்டனுக்கு முந்திய தலை முறையும் இந்த தப்பை செய்திருக்கு.
எங்கூரில் பிள்ளையார் கோயிலும், அம்மன் கோயிலும் இருக்கும் நிலம் எங்க குடும்பத்தின் தானமாம், அதனால் எங்க குடும்பத்துக்கு என இன்னமும் முதல் பூஜையும் மரியாதையும் இருக்கு எண்டு என் அம்மாம்மா முதல் அம்மா வரை சொல்வாங்க. ஆதாரம் இருக்கா என இனி நானும் தோண்ட போறேன். எண்ட உரிமையை கேட்க போறேன். 😍
அதான் அப்படி எண்டால் 
வேதக்காரர் கதை இன்னொரு பக்கம். 
பைபிளில் நூதனம் பார்த்து மனிதரை ஒதுக்கி வைக்க சொல்லவும், இல்லை. தெரிந்து தின்னாதே. தெரியாமல் திண்டால் அது உன் தப்பில்லை. எதை திண்டாலும் ஜெபிச்சிப்போட்டு திண்ணு

உன் ஒரு கண்ணால் உன் சகோதரனுக்கு கேடு உண்டாகும் என நினைச்சால்,உன் கண்னை பிடுங்கி போடு எண்டு தான் பைபிள் சொல்லுது .
படைச்சதை திண்டால் என்ன தின்னாட்டில் என்ன?
எவன் எதை தின்னனும் என நீங்கள் ஏன் நிர்பந்திக்கின்றீர்கள்? நீங்கள் செய்தால் அதை எல்லாரும் செய்யணும் எண்ட எதிர்பார்ப்பு ஏன்? 
அவனவன் அவனவனுக்கு பிடிச்ச மாதிரி வாழுறான்.

உரிமையை காப்பாத்துதுவதில் தனி மனித விருப்பு வெறுப்புக்கு இடமில்லங்க.
அன்னியனுக்கு இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான் எண்ட பட்டறிவு அனுபவம் ஏற்கனவே இருக்கில்ல. அப்புறம் என்ன மண்ணுக்கு உள்ளூட்டு பிரச்சனைக்கு அடுத்தாத்து காரனை பந்தி விசாரிக்க கூப்பிடுறியள் என்கின்றேன். அங்கயும் பிச்சி இங்கயும் பிச்சி மொத்தமா எல்ல்லாத்தையும் பிச்சி எடுக்க திட்டம் போடுறியளோ?
உங்கட வீட்டில் நடக்கும் பிரச்சனைக்குரிய தீர்வை உள்ளூட்டுக்குள் நிண்டு கொண்டு, கேட்டு பெறணும், எந்த உரிமைக்க்கு போராடுறியளோ அதை முதல்ல பெறணும். ஒன்றில் ஆரம்பிச்சு பத்தில் நிறுத்தி, பத்துக்கு முன்னால் இருகும் ஒன்றை விட்டு ஒட்டுமொத்தமா பூஜ்ஜியத்தில் எங்கட சனத்தை கொண்டு வந்து விட்டிருக்கியள்.
இன்னுமா புத்தி வரலல். 
எண்ட வீட்டு பிரச்சனையை நானே தீர்த்துப்பேன், நாட்டாமை செய்ய எவனும் வர வேண்டாம். அண்டை அயலில் இருக்கவுகளோட சமாதானமா இருக்கிறது. ஆபத்து நேரம், அவசர உதவிக்கு தான். வீட்டுக்குள் வநது படுக்க சொல்லி கேட்க தேவைல்ல.

வீட்டு சாவியை கொடுத்து காவல் காரனாக்கி வீட்டுக்குள் பூந்து வீட்டு பிரச்சனையை தீர்த்து வைக்கணும் என ஒரு தடவை அல்ல பல தடவை பட்டும் புத்தி கொள்முதலில் தான் இருக்கியள்.
ஆளாளுக்கு பதிவு போட்டு மதம் காக்க மதம் பிடிச்சி மதவெறியை ஊட்டி பிரிவினை வளர்த்து நாட்டாமைக்கு எவனை நுழைக்கலாம் என தான் யோசிக்கிறியளே தவிர இந்த பிரச்சனைக்கு தற்கால தீர்வை தேடவும், அந்த மகக்ளின் அமைதியையும் நிம்மதியையும் நீங்கல்லாம் விரும்பல்லல்.
உங்களுக்கு தமிழ் மக்கள் எப்பவும் ஏதோ ஒரு பிரச்சனையில் எரிந்திட்டே இருக்கணும், அதில் நீங்கள் குளிர் காயணும்.
ஈழத்து வாழ்மக்களே, இவங்க வெளி நாட்டில் பத்திரமா, பாதுகாப்பா இருந்து கொண்டு நல்லா ஏத்தி ஊத்தி விடுவாங்க. இவங்கட போலிபேச்சை நம்பி நாம் இழந்தது போதும்.
உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்துது இனியும் உங்கள் நிம்மதியை இழக்காதிங்க போயிட்டு உங்கட புள்ள குட்டிகளை பாருங்க படிப்பிக்க என்ன செய்யலாம் என யோசிங்க. இப்போதைய இருப்பை இழக்காமல் இருக்கணும். அவ்வளவ தான் நான் சொல்வன்.

திருக்கேதீஷ்வரன் கோவில் நுழைவு வாயில் வளைவுப்பிரச்சனையும் தீர்வும்

இலங்கைத்தமிழக்கிறிஸ்தவர்கள் அனைவரும் இணைந்து தொன்மைமிக்க திருக்கேதீஸ்வர கோயிலுக்காna நுழைவு வாயிலை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே எம் முன் இருக்கும் ஒரே தீர்வு.
அரசு மற்றும் ஆலயங்கள் சார்ந்த நிர்வாகத்தினரே நீங்கள் கூடிப்பேசி மனங்களில் பிரிவினை விஷ விதைகளை தூவுவதை நிறுத்துங்கள். தீர்வை மட்டும் எமக்கு முன் வையுங்கள். உங்கள் வழக்கும், வாய்தாவும், சட்டமும், திட்டங்களும் எமக்கு வேண்டாம். எங்கள் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். உங்கள் வரலாறுகளை மண் தோண்டிப்புதையுங்கள். மக்கள் மனங்களை கூறுபோடாதீர்கள்.
நடந்து கொண்டிருப்பது இரு மதத்தின் பிரச்சனை இல்லை.எமது உரிமை, உடமையை பாதுகாக்கும் கடமை.
மனங்களின் பிளவினை விரிசலாக்காமல் கடந்த நாட்களில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கான பிராயச்சித்தத்தை கிறிஸ்தவ மக்கள் செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை அலசுவோம்.
சற்று நீண்ட பதிவு தான். ஆனாலும் கட்டாயம் படியுங்கள்.
சத்தியம்,நீதி எல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்கிற அளவுக்கு உங்கள் இனம், மதம், அரசியல் சார்பு ஆகியவற்றின்மீது நீங்கள் உணர்வுபூர்வமாக பிடிப்புக் கொண்டிருந்தால், நீங்கள் கற்ற கல்வி பயனற்றதுதான். உங்களுக்குக் கிடைத்த அறிவுத்தேடலுக்கான வாய்ப்புகள் பயனற்றவை. கவைக்குதவாத பற்றார்வங்களை வென்று நீங்கள் மேலேற முடியவில்லை என்றால், இந்த சமூகத்துக்கு நீங்கள் ஒரு சுமைதான்.
ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பதன் வரையறை என்ன?
மக்களுக்கான உரிமை அபிவிருத்தி எனும் பெயரில் நவீனங்களை நுழைத்தலினால் கிடைத்து விடாது.வானுயந்த கட்டடங்களை அமைப்பதினாலும் கிடைக்காது தொழில் நுட்ப சாதனங்களை பரவலாக்குவதனாலும் பெற முடியாதது.
எமது உரிமை என்பது இறையாண்மையை,தனித்துவத்தை இழக்காது, அறிவையும்,ஆற்றலையும், பாரமபரியங்களை விட்டுக்கொடுக்காது காப்பாற்றுவதிலும்,
இருப்புக்களை அழிந்து போகாது பாதுகாப்பதிலும் இருக்கின்றது.

தமிழர்க்கான உரிமை, சமூக மீட்சி என்பது பாராம்பரிய மொழி,மதம்,கலை, காலச்சாரம், கட்டுமானங்களோடு மட்டுமலல் பொதுச்சொத்துக்களில் எமக்கிருந்த உரிமையை விட்டு கொடுக்காமல் காப்பாற்றுவதிலும் இருக்க வேண்டும்.
திருக்கேதீஸ்வர கோயில் வளைவினால் தமிழர்களாகிய நமக்குள் இந்துக்கள் /கிறிஸ்தவர் எனும் பிளவானது ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
நடப்பதெல்லாம் நல்லதுக்கே என இதிலும் நாம் நன்மையை தேட முடியும்,இப்பிரச்சனையை வைத்தே நிரந்தர தீர்வினை நோக்கி நகர்த்த நம்மால் முடியும்.
மனங்களை பிரித்தாழ சூழ்ச்சிகள் செய்வோரின் தந்திரங்களுக்கு பலியாகாமல் எம்மக்களுக்கான தீர்வுகளை நமக்குள் நாமே திர்மானிக்க வேண்டும்.
சில விடயங்களில் உரிமை என்பது கேட்டுப்பெறுவது அல்ல.எடுத்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நமக்குள் திணிக்கப்படுகின்றது.
மக்கள் சொல்வதை செய்யத்தான் நிர்வாகங்களும் அரசும். எந்த நிர்வாகத்துக்கும் ஆடும் மகுடிகளாக மக்கள் வாழ தேவையில்லை. அவரவர் சுய புத்தியை தீட்டுவோம். ஆராய்வோம். .
சிறுபிள்ளைதனமான சிலரின் செயல்பாடுகளையும் எழுத்துக்களையும், ஒருபக்கசார்பான துவேஷங்க்ளையும ஒதுக்கி, இந்த பிரச்சனையில் நாம் செய்யகூடியது என்ன?
சைவம், கோயில் என இரு மதம் சார்ந்த தனிப்பட்ட பிரச்சனை இது இல்லை என்பதை பொதுமக்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது உரிமையை காப்பாற்ற முடியாத மதம் இருந்தென்ன போயென்ன? 😡
திருக்கேதீஷ்வரம் கோயில் குறித்த கடந்த கால வரலாறும் அக்கோயிலின் பாராம்பரியமும் இராமாயண காலத்தோடு சம்ப்ந்தபட்டதென தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது./ படம் இணைத்துள்ளேன்.
கோயில்கள் என்பது மதங்களின் அடையாளம் அல்ல மனங்களின் சங்கமம் . மனிதர்களை நெறிப்படுத்தவே கோயில்கள் .அன்பையும் அகிம்சையையும் போதிக்க வேண்டிய மத ஆலயங்கள் வன்மத்தையும், வன்முறையையும் வளர்க்குமானால் கல்லறைகளாகி விடும்.
திருக்கேதீஸ்வர கோயிலுக்கான திருக்கேதிஸ்வரம் செல்லும் பாதையில் 1km க்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த அழகாக,அ லங்கரித்த நுழைவாயில் வளைவு வீதி அபிவிருத்தி எனும் பெயரில் வீதி அபிவிருத்தி சபையினரால் அகற்றப்பட்டிகிறது.
திருக்கேதீஷ்வர நுழைவு வாயில் வளைவொன்றின் புகைப்ப்படத்தினையும், தற்காலிக வளைவின் தோற்றமும் புகைப்படமாக, பகிர்ந்துள்ளேன்.
1.கோயிலுக்கு செல்லும் பாதையில் 1km க்கு முன்பாக நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வளைவு வீதி அபிவிருத்தி எனும் பெயரில் நீக்கப்பட்டது
2.அப்போது ஆட்சேபனை தெரிவித்த மக்களுக்கு அரசு சார்பில் மீண்டும் அவ்விடம் அமைக்கப்படும் எனும் உறுதி மொழி வழங்கப்பட்டிருக்கின்றது. .
3. வீதி அபிவிருத்திக்கு பின் மீண்டும் அவ்விடத்தில் மீளமைக்க அரசு மறுக்கிறது. மக்கள் ஆதரவில்லை எனும் சாக்குபோக்குக்கள், வளைவுக்கு முன் இருக்கும் சர்ச் குறித்த பிரச்ச்னைகள் புதிதாக முளை விடுகின்றது.
4❗️அந்த வளைவு அவ்விடத்தில் முன்னும் இருந்தது எனும் போது வீதி அபிவிருத்திக்கு பின் அவ்வளைவை அங்கே நிரந்தரமாக நிர்மாணிப்பதில் என்ன தடை
5. மக்கள் அனைவருமே ஒருமனப்பட்டு அவ்வளவை மீண்டும் இருந்தது போல் கட்டி விடு என அரசு நிர்வாக்த்தை உரிமையாக நிர்ப்பந்தித்திருக்க வேண்டும்.மகக்ள் ஒருமனப்பட்டிருக்க வேண்டும்.
ஆண்டாண்டு காலமாக நமக்கென தொடர்ந்து வரும் பாராம்பரியங்களை விட்டுக்கொடுக்காது, நமது மண்ணுக்கான இறையாணமை, பண்பாட்டு கலாச்சாரங்களை கட்டிக்காப்பதில் மத பேதம் எங்கிருந்து நுழைந்தது?
6. இதற்கிடையில் அந்தவீதியில் புதிதாக தாக நுழைந்த பௌத்த கோயிலை அனுமதித்து இருக்கின்றீர்கள். புத்தர் சிலை வந்தால் அனுமதிக்கின்றீர்கள். ஏற்கனவே இருந்த நுழைவு வாயில் வளைவை எதிர்க்கின்றீர்கள்?
எவ்வகை நியாயம் இது?
இந்த பிரச்சனையில் பின்புலம் கோயில் நுழைவாயில் சம்பந்தப்பட்டது அல்ல.அனைத்து தமிழர்கள் உரிமைக்குமானது.
இழந்து வரும் எமது உரிமை சார்ந்தது. 
இலங்கையில் எமக்கு சொந்தமான தொன்மை மிக்க வரலாற்று சிறப்புக்களை நாம் இழந்து கொண்டுள்ளோம்.

இன்று நாம் அந்த நுழைவாயிலை நமது கையால் உடைத்து போட்டோமானால் எதிர்காலத்தில் பௌத்தர்கள் பெயர் சொல்லி அந்த வீதியில் நுழைவாயில் கட்டும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கின்றோம் என்பதை உணராவிட்டால் இருப்பையும் இழப்போம்.
எமது தொன்மையை இழப்போம்.
நுழைவாயில் வளைவு சம்பந்தமாக இனி பேசி தீர்க்க எதுவுமே இல்லை. மன்னார், யாழ் கத்தோலிக்க தேவாலய ஆயர்களும், மக்களும் தம் சுய விருப்பு வெறுப்பை தவிர்த்து உடனடியாக அந்த நுழைவாயில் வளைவை முன்னிருந்ததை விடப் பிரமாண்டமானதாக அழகாக கட்டிக்கொடுக்க வேண்டும் எனும் சகோதரத்துவ மத நல்லிணக்கம் நல்லெண்ணத்துடன் முடிவெடுப்போம்.
இலங்கைக் தமிழக்கிறிஸ்தவர்களே அனைவரும் ஒன்றிணையுங்கள். முடிவு ஒன்று மட்டுமே எமக்கு முன் இருக்கின்றது.கட்டுமான பணிகளுக்காக அமைப்பை உருவாக்குங்கள்.
எம்மக்கள் மீட்சி எம்மால் மட்டுமே சாத்தியம்.எமக்கிடையில் எந்த தரகரகளும் வேண்டாம். அழுத்தமாக பதிவுகளை இடுங்கள்.
ஓரிரவில் மன்னிப்பு அறிக்கை வெளியிட ஆயரால் முடியுமானால் இதுவும் அவரால் முடியும்.
🙏🙏🙏திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் வளைவை அவ்விடத்தில் நிரந்தரமாக கட்டுவதற்காக முதல் நிதி எனது குடும்பத்தின் சார்பில் வழங்கப்படும். ❤️
இதை வாசிக்கும் மக்களே தயவு செய்து கடந்து செல்லாதீர்கள் .உங்கள் கருத்துக்களை பதிவாக்குகள். மாற்றுக்கருத்துக்களை எதிர்க்கருத்துக்களாக்கும் ஒரு பகக் சார்பான குறுகிய புத்தி என்னுள் இல்லை.

திருக்கேதீஷ்வரன் கோவில் நுழைவு வாயில் வளைவுப்பிரச்சனையும் தீர்வும்




திருக்கேதீச்வரம் செல்லும் ஏ 14 சாலையில் இருக்கும் வளைவு. 
 Entrance Of Thirukkeethiswaram எனும் தலைப்பில் 
lk. Geoview.info இணையத்தில் பதிவாக்கி இருக்கும் புகைப்படம் இது.
இப்படித்தான் வீதி சீரமைப்புக்கு முன் பழைய நுழைவு வாயில் இருந்திருக்க வேண்டும் என யுகிக்க முடிகின்றது.

 மார்ச் 2019 ஆம் ஆண்டில் விதி அபிவிருத்திக்கு பின் 

  கத்தோலிக்க தேவாலயமும் தற்போதைய ஆலய நுழைவு வாயிலின் தோற்றமும். மார்ச் 2019


உண்மையை நாம் உணர இந்த ஒரு படமே போதும். ஆலயத்தின் தொன்மையை இராமாயண காலத்தின் சம்பவங்கள் நடந்ததாக இலங்கையை இணைக்கும் வரைபடம் உணர்த்துகின்றது.


திருக்கேதீஸ்வரம் செல்லும் பாதையில் இருக்கும் வளைவு.
Entrance Of Thirukkeethiswaram எனும் தலைப்பில்
lk. Geoview.info இணையத்தில் பதிவாக்கி இருக்கும் புகைப்படம் இது.

இப்படித்தான் வீதி சீரமைப்புக்கு முன் பழைய நுழைவு வாயில் இருந்திருக்க வேண்டும் என யுகிக்க முடிகின்றது.



04.03.2019 ல் மன்னார் திருக்கேதிஷ்வர ஆலய தற்காலிக நுழைவு வாயில் தோற்றம்.

தேடலில் வேறு புகைப்படம் கிடைக்கவில்ல்லை.. என் இன்பாக்ஸில் வந்ததை தேவை கருதி பகிர்ந்துள்ளேன்.


04 மார்ச் 2019

“நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுப்போம்”

“நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுப்போம்”
மன்னாரில் கிறிஸ்தவர்களால் நிகழ்த்தப்பட்ட, 
அத்துமீறல்கள்,மத அவமதிப்புக்கு, கிறிஸ்துவின் வார்த்தைகளை விசுவாசித்து பின்பற்றும் 
நிஷாவாகிய நான் கடும் கண்டனங்களைப் 
தெரிவிக்கின்றேன்.

மதத்தின் பெயரால் மதப்போரை துவக்குகின்றவனும், 
மாற்று மத நம்பிக்கைகளை தூற்றுபவனும் 
மற்ற மதத்தவர் மீது வன்மம் பாராட்டுகிறவனும் எந்த மதத்திலும் இருக்க தகுதியற்றவன் என்பது எனது கருத்து.

சம்பந்தப்பட்டவர்கள் தாம் செய்த தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பதுடன்,மீண்டும் அதே அலங்கார வளைவை அவ்விடத்தில் சீரமைத்து கொடுக்கும் படியும் அழுத்தம் கொடுப்பதே கிறிஸ்துவை பின்பற்றுவதாக் சொல்வோருக்கு முன் இருக்கும் ஒரே தேர்வு.
மேலும், இப்பிரச்சனையினூடான உரசல்களை , விரிசல்களாக்கி உரிமைக்கான போராட்டத்தில் உரிமை, உடமை, உயிர்ப்புக்களையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் எமது மக்களுக்குள் பிரிவினையை உருவாக்க முயற்சிக்கும் அனைவரும் கண்டிப்புக்குரியவர்கள்.
எமது இளையோரின் உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளுக்கு ஆதரவு கொடுப்பதுடன், எதிர் வார்த்தைகளால் மத வெறியூட்டும் செயல்பாடுகளிலும் ஈடுபடும் எவராக இருந்தாலும் என் நட்பிலிருந்து நீக்கப்படுவார்கள்.
சமூகத்துக்கு தொண்டாட்டுவதாக சொல்லி இன,மத வெறிகளை பரவ விடுவோர் எவராக இருந்தாலும் அவர்கள் ஒதுக்கபப்ட வேண்டியவர்களே.
.#மதவாதம் / #மதவெறி எனும் தீவிரவாதம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
இந்த மாதிரியான சமூக விரோத செயல்பாடுகளின் போது சமூக வலைத்தளங்களின் மூலம் உடனடித்தீர்வுகளை தேடி எத்தகைய அழுத்தங்களை தரலாம் என அறிந்திருப்பீர்கள்.
நமக்கென்ன என நாம் விலகிச்செல்வதனால் தான் தீங்குகளை பரப்புவோர் அதிகாகி இருக்கின்றார்கள்.
எம் இளையோருக்காக சரியான வழிகாட்டல்கள் அரிதாகி போயிருக்கின்றது. தயவு செய்து இனியும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல் உங்கள் கருத்துக்களை அழுத்தமாக பதிவாக்குங்கள்.



கிறிஸ்தவ சகோதரர்களே!!!
❤️❤️ஆகையால் உங்களுக்கு பிறர் என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்களோ அதை அவர்களுக்கு செய்யுங்கள்.
🔘 நீங்கள் நியாயத்தீர்ப்புக்குள்ளாக தீர்க்கப்படாதிருங்கள்.
🔘 எந்த தீர்ப்பை இடுவீர்களோ அந்த தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்
🔘எந்த அளவையால் அளக்கின்றீர்களோ, அதே அளவையால் நீங்களும் அளக்கப்படுவீர்கள்.
🔘உன் கண்ணில் இருக்கின்ற விட்டத்தை கவனியாது, உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துருப்பை பார்ப்பதேன்?
🔘உன் சகோதரனை நோக்கி உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடு என எப்படி சொல்வீர்கள்? உங்கள் கண்களில் துரும்பு இருக்கின்றதே?
🙏🙏இந்த நேரம் உங்களுக்கானது, மன்னிப்பை வேண்டுங்கள்.
🙏🙏🙏 மன்னிப்பு மகத்தான மாற்றங்களை விளைவிக்கும்.

மதம் எனும் மதம்!!

மறத்தமிழர்கள் மறைந்து போனதால்
மானத்தமிழினம் மதம் பிடித்தலையிது
மனிதம் மனங்களில் மரணித்து போகுது 
மனமொன்றிங்கே மௌனமாய் கதறுது!!

நடப்பதெல்லாம் நலமாயில்லை
நாமுணரும் தருணமும் இல்லை
நாளைய தேசம் பகற்கனவாகி 
நாடுகள் தோறும் அகதியாய் அலைவோம!!

இன வாத விசத்தால் 
இலங்கை தீவை 
இரு கூறாக்கி 
இருப்பை தொலைத்தோம்!!

உரிமை கேட்டோம் 
உடமை இழந்தோம்
உணர்வுகள் மரத்தோம்
உயிர்ப்பை அழித்தோம்!!

விடுதலை தேடி 
வீட்டை இழந்தோம்,
நியாயம் பேசி 
நிம்மதி தொலைத்தோம்!!

மதம் எனும் பெயரால்
மனங்களை பிரித்து
தமிழர் நாம் இனி 
தனித்து வமாவோம்!!😭👿