10 மார்ச் 2023
மரவள்ளிக்கிழங்கு அறுவடை / பாடசாலை தோட்டம்
கிழக்கு மாகாணம், அம்பாறை வளர்த்தாபிட்டி பாடசாலையின் மரவள்ளிக்கிழங்கு அறுவடை.
கடந்த வருடம் நாட்டின் நெருக்கடி நிலையை தொடர்ந்து வீட்டு தோட்டம் / பாடசாலை தோட்ட முன்னெடுப்புக்களில் நாட்டின் பல பகுதிகளிலும் வீட்டு தோட்ட விதைகள், நாற்றுக்கள். தடிகளை வழங்கி இருந்தோம். நடவு செய்யப்பட்டவைகள் பல தடைகளை கடந்து பலனை தந்து கொண்டிருக்கின்றன. பலருடைய வீட்டு தோட்டங்களில் இராசவள்ளிக்கிழங்கு, வற்றாளைகிழங்கு, கொச்சிக்காய், தக்காளி காய்த்து சிறந்த பயனை தருகின்றதாக தகவல் தந்து கொண்டிருக்கின்றார்கள்.
பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், எங்கள் உயிர்ப்பூ மகள்கள் நிலக்சனா, மனோதினிக்கும். மரவள்ளி தடிகளை இலவசமாக தந்துதவிய மட் / களுதாவளை பிரதேசத்தை சேர்ந்த சௌந்தராஜன் ஐயா அவர்களுக்கும் இந்த திட்டங்களுக்குரிய நிதி அனுசரனை, ஆதரவுகளை த்ந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
அம்பாறை வளர்த்தாபிட்டி பாடசாலையின் மரவள்ளிக்கிழங்கு அறுவடை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!