10 மார்ச் 2023

பாடசாலைத்தோட்டத்தில் பச்சை மிளகாய் பயிர்செய்கை

புகைப்படத்தில் இருக்கும் பச்சை மிளகாய், இரத்தின புரி காவத்தை தமிழ் பாடசாலைதோட்டத்தில் இயற்கை முறை பயிர் செய்கை. ( செத்தல் மிளகாய் )காய்ந்த மிளகாய் விதைகளை தூவி நாற்று உருவாக்கிய ஒரு தொட்டிச்செடியிலிருந்து விளைந்தவைகள்.தக்காளிகளும் தற்பொழுது காய்த்திருக்கின்றன. பாடசாலை தோட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதை குறித்தும் இனி கவனம் கொள்ள வேண்டும். ( வேலி இல்லாத பாடசாலை தோட்டம் என்பதனால் சுமார் 200 தொட்டிச்செடிகளிலிருந்து பல செடிகளை பாடசாலை விடுமுறை காலத்தில் களவெடுத்து சென்றிருக்கின்றார்கள். ) எதிர் வரும் காலங்களில் ஒவ்வொருவரும் தமது சிறிய தற்சார்பு வீட்டு தோட்டம் ஒன்றை உருவாக்கிகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்வோம். உணர்த்துவோம். பச்சைமிளகாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!