10 மார்ச் 2023

பொத்துவில் அக்/ அல்- இஷ்றாக் மகா வித்தியாலயத்தில் பாடசாலை தோட்டம்

#உயிர்ப்பூ பாடசாலை தோட்டம் 07.12.2023 டிசம்பரில் முதல் அறுவடையாக கிடைத்த மரக்கறிகள், மிளகாய்களை புகைப்படங்களில் காணலாம். இப்பாடசாலையில் தோட்டத்தின் மண் வளப்படுத்தும் படியாக சணல் விதைகளும் விதைக்கப்ப்ட்டிருக்கின்றன. மிக சிறப்பான முன்னெடுப்ப்பை தொடர்கின்றார்கள்.
அதிபர் அவர்கள் வாட்சப்பில் கூறிய கருத்தை இணைத்துள்ளேன். பொத்துவில் அக்/ அல்- இஷ்றாக் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை தோட்டச் செய்கையில் பல மட்ட பாராட்டைப் பெற்றதாக உள்ளது. விவசாய பாடம் ஒரு பிரதான பாடமாக உள்ளது. தோட்டச் செய்கையில் ஆர்வமுள்ள மாணவர்கள் உள்ளனர். இங்கு தோட்டம் சிறப்பாக உள்ளது. ஆயினும் குறைகளுமுள்ளது.அதிலும் பயிர் பாதுகாப்பு மிகக் கடினமானதாக உள்ளது. குரங்குகள் அட்டகாசம் மிக அதிகம். இப்பாதுகாப்பு ஏற்பாட்டை செய்வதில் பாடசாலை நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றது. இந்நிலையில் எமது பாடசாலைக்கு சென்ற 2022.11.30ஆம் திகதி கள விஜயம் உயிர்ப்பூ நிறுவன உறுப்பினர்கள் 03கொண்ட குழு மேற்கொண்டது. இதன் போது இத்தோட்ட மேம்பாட்டிற்காக உபகரணங்கள், மண் வளத்தைப் பேண சணல் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்காக என்னுடையதும் பாடசாலை சார்பாமதுமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது தோட்டம் அறுவடைக்காக காத்திருக்கின்றது. இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் தினங்களில் இந்நிகழ்வு இடம் பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் எனக்கான பயிர் காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால் இன்னும் வினைத்திறனுடன் இத்தோட்டத்தினை மேற்கொள்ள முடியும் என்பதையும் இதனை உயிர்ப்பூ நிறுவனத்தினூடாக எதிர்பார்த்துள்ளேன் என்பதையும் கண்ணியத்தோடு தெரியப்படுத்துகிறேன். நன்றி. பொத்துவில் அக்/ அல்- இஷ்றாக் மகா வித்தியாலயத்தில் பாடசாலை தோட்டம்
#பாடசாலை_தோட்டம் #ஆல்ப்ஸ்_தென்றல்_நிஷா #உயிர்ப்பூ 26.02.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!