06 டிசம்பர் 2016

இரும்புப்பெண்மணிக்கு ராயல் சல்யூட்!

  • மக்களால் நான் மக்களுக்காகவே நான்
  • அரசியலில் எனக்கு தந்தையோ கணவனோ இல்லை. நான்தான் அரசியல்... நானேதான் வந்தேன்... நாட்டுக்காக என்னை அர்ப்பணித்துக்கொண்டேன்" 
  • I am a self made woman...ஜெ.ஜெ

சட்டங்கள் இயற்றவும்,பட்டங்கள் ஆளவும் பாரினில் பெண்கள் வரவேண்டும் எனும் பாரதியின் கனவுக்கு சொந்தக்காரர்.
புரட்சிகரமான துணிச்சல் மிக்க செயல்பாடுகளுக்கு உரிமையாளர்.
இந்திராகாந்திக்குப்பின் அரசியல் எதிரிகளையும் அசைத்திருக்கும் சம காலத்து சாதனைப்பெண்மணி!
ஜெ.ஜெ! வெற்றியின் தாரக மந்திரம். இவருக்கு நிகர் இவரே!
அம்மாவெனும் அழைக்க கருவில் சுமந்த பிள்ளை இல்லைதான். ஆனாலும் அம்மா எனில் பெற்ற தாய்க்கு நிகராக பலர் நினைவில் தோன்றுபவர்! .
இனிவரும் ஒவ்வொரு நொடியும் தன் இழப்புக்களை நினைவு  படுத்தி க்கொண்டே இருக்க , தன் துரோகிகளையும் தன்னைக்குறித்து பேசச்செய்ய கூடிய சாதனைகளின் நிஜ நாயகி.
பெண்ணாக மண்ணுக்கு பெருமை சேர்த்தவர். வாழும் காலத்தில் விமர்சிக்கப்பட்டாலும் விடை பெறும் போது கறை அற்றவராய் சென்றிருக்கின்றார்.இவரைக்குறித்த விமர்சனங்கள் இடப்படும் போதெல்லாம் இவரின் தன்னம்பிக்கை குறித்து என் பதிவை இட தயங்கியதே இல்லை. அது எதிர்மறை விமர்சனமானாலும்... அரசியல் தாண்டி பெண்ணாய் என்னை பெருமிதப்படுத்துபவர் ஜெ மேடம்.
எதிரிகளின் கண்ணில் விரல் விட்டு ஆட்டி பலருக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்து,தைரியமாக, திறமையுடனான பல பாராட்டத்தக்க,தனித்துவமான செயல்பாடுகள் இவரினுள் இருந்தன.அரசியல் பின்புலம் இன்றி அரசியல் ராஜ தந்திரிகளுக்கு நிகரான நகர்வுகளை தனதாக்கிக்கொண்டவர்.
தன் ஆளுமையினை ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படுத்திய பல சந்தர்ப்பங்களை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.ஏழைகளின் ஏக போக உரிமையாளினி.பெண், நடிகை என கிண்டல் செய்தோரை நிஜ நாயகியாகி மண்டியிட வைத்த தி கிரேட் லேடி .
*தென்னிந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்.
*தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர்
* பன்முகத்திறமையாளர்
* பேச்சாற்றல் மிக்கவர்
* காமராஜர், எம்.ஜி. ஆருக்கு பின் தமிழ்கத்தின் ஆளும் சக்தியாக தன்னை நிலை நிறுத்தியவர்.
* எம். ஜி. ஆருக்கு பின் தொடர்ந்து இரு முறை முதல்வராகியதுடன் ஆறு தடவைகள் முதலமைச்சராக பதவி வகிந்தவர்.
* மத்திய அரசையே ஆட்டி வைத்தவர்
*பிரதமர்களின் நல் மதிப்பை பெற்றவர்.
*சத்துணவுக்கு நிகராய் மலிவு விலை அம்மா உணவகங்கள். 
 இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு
*தொட்டில் குழந்தை திட்டம்
*மழை நீர் சேகரிப்பு
* பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்க்களுக்கான தனி அறை
*பள்ளி சிறுமிகளுக்கு காலணி, மிதி வண்டி
*லாட்டரி ஒழிப்பு
* முல்லைப்பெரியாறு, காவிரி விடயத்தில் காட்டிய உறுதி
*அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், பேருந்து பணியாளர்கள் விடயத்தில் எடுத்த முடிவுகள்
இன்னும் இன்னும் பல உண்டே!
எப்படி இவரால் இத்தனையும் சாத்தியமானது?
தன் சொந்த வாழ்வில் இவர் நம்பிக்கைக்குரியவராய் நம்பத்தகுந்தவராய் நிலை நின்றுள்ளார்.தன்னை நம்பியவர்களை கை விட்டதே இல்லை.
“செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” என எனக்கு இவரைக்குறித்து தோன்றும்.துரியோதனன் செய்வது தவறென தெரிந்தும் கர்ணன் அவன் பக்கம் நின்றதும் உயிர் துறந்ததும் எதற்காக?
இரத்த உறவுகளை தூரமாய் நிறுத்திடும் நிர்ப்பந்தம் ஏன்?. மகாபாரத கர்ணனைபோல் செஞ்சோற்றுக்கடன் தீர்த்தாரோ?
யாரறிவர்?
ஈழத்தவர்க்கு எதுவும் செய்ததில்லை என்கிறார்கள்.
செய்கின்றோம் என சொல்லி கடைசிவரை நம்ப வைத்து துரோகிகளான பல தமிழ் நாட்டு அரசியல் வாதிகள், தன் அரசியல் சுய இலாபத்துக்காக எம் மரணத்தினையும் விலை பேசியவர்கள் முன் உள்ளதை உள்ளபடி உணர்த்தி நிதர்சனம் புரியவைத்த பெண்மணி இவர்.
*ஈழமக்களுக்கான 2009 நடந்த இனப்படுகொலைகள் என ஏற்று சட்ட மன்றத்தில் தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தியவர்
** இலங்கையின் இனப்படுகொலையை கண்டித்து தீர்வுகாண தனித்தமிழீழத்துக்காக இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மாற்றப்பட வேண்டும் என தெளிவாக கருத்துரைத்தவரும் இவர்தான்.
***இலங்கை இராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அழிக்க மறுத்ததும் இவரே தான்.
****ராஜிவ் காந்தி கொலையில் தூக்குத்தண்டனை கைதிகளுக்குரிய மனிதாபிமான நடவடிக்கை, தீர்மானம் நிறைவேற்றல் என பின்னனியிலிருக்கும் உண்மை உணர்ந்து அவர்கள் விடுதலைக்காக தமிழக அரசு சார்பில் நீதிமன்றம் செல்ல எடுத்த முடிவு.
இன்னும் எம்மைக்குறித்த இளக்கம் இருந்திருக்கும், அரசியல் நிர்ப்பந்தம் கைகளை கட்டி இருக்கலாமோ என்னமோ?
தமிழ் நாட்டுமக்களுக்கு இவரைப்போல் இனி யார் வருவார்?


படம் இணையத்தில் எடுத்ததே.

3 கருத்துகள்:

  1. ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறோம்
    அவர் ஆன்மாசாந்தி அடைவதாக.

    பதிலளிநீக்கு
  2. ஆழ்ந்த அனுதாபங்கள் !ஆத்மா சாந்தியடையட்டும்!

    பதிலளிநீக்கு
  3. ஆழ்ந்த இரங்கல்கள். தமிழகம் ஒரு பெரிய தலைவியை இழந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!