26 செப்டம்பர் 2020

பார்த்தீபன் கனவு எங்கே பலிக்கிறது..?

      திலீபன்...! 

பார்த்தீபன் கனவு எங்கே பலிக்கிறது..? 

மருத்துவ கல்லூரி மாணவனாக  Doctor க்கு படித்து இன்று எதோ ஒரு நாட்டில் பேரோடும் புகழோடும், காசோடும் , நிம்மதியாக, வளமாக வாழ வேண்டியவர். 

 உரிமை, உடமை, தன மண், தமிழ் மண்  விடுதலைக்கக அகிம்சை வழியில் (. மகாத்மா ஆங்கிலேயருக்கு எதிராக உண்ணாவிரதம் எனும் அகிம்சை போராட்டத்தில் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று கொடுத்தாராம்)  கிடைக்கும் என்று தன் வாழ்வையும், கல்வியையும்,  எதிர்காலத்தையும்  அர்ப்பணித்தார் 💔 #திலீபம்

எம்மக்கள் கௌரவமாக வாழ  வேண்டும். என்று அநீதிக்கு எதிராக  நீதி கேட்டு  உயிரை கொடுத்ததுக்கு நன்றி கடனாக தான் “ கல்லாமல் கல்லாவில் காசு போட்டு  கௌரவ கலாநிதி பட்டங்களும், விருதுகளும்”   கொடுத்து எங்கள் கல்வி மீதான  மதிப்பையும் தரமிறக்கும் பணியில்.... (   விருது, புகழ், பட்டம் எனும் போதைக்குள் சிக்கி  நடக்கும் அநீதிகளை கண்டும், காணாமல் நமக்கென்ன என்று கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ) 

இதெல்லாம் காசு கொடுத்து கிடைக்கும் என்றால் திலீபன் போல் கெட்டிக்கார மாணவர்களின் உயிர்களை எதுக்கு பணயம் வைக்கணும்..? 

வருடத்துக்கு ஒருதடவை நினைவு கூறலும், அஞ்சலியுமாக  கடந்து செல்லாமல் அவர்களின் உயிர்தியாகங்களுக்கான காரணங்களை உணர்ந்து தற்கால  அநியாயங்களை குறித்தும் அக்கறை கொள்ளுங்கள் 

“  பல்லாயிரம் பேரின் உயிர்தியாகங்களை அர்த்தமற்றதாக்கி கொண்டிருக்கின்றோம்” 

🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥

1 கருத்து:

  1. யாரிடம் நோவது!காலத்தின் கைகளில் தான் தீர்ப்புக்களும்!

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!