26 மார்ச் 2019

மோடி அரசின் ஐந்தாண்டு சாதனை....!!!! World Happiness Report 2018

மோடி அரசின் ஐந்தாண்டு சாதனை....!!!!
World Happiness Report 2018
தனி நபர் வருமானம், சுதந்திரம், சமூகம், பொருளாதாரம் எனும் அடிப்படையில் தன்னிறைவு பெற்று மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் இந்திய மக்கள் 2014 / 2016 ஆண்டுகளில் 122 ஆவது இடத்தில் இருந்தார்கள்.
🔻மிஸ்டர் மோடிசாரின் ஆட்சியில் வேகமாக பின்னேற்றம் பெற்று 🇮🇳⬇️2018 / 133 ம் இடத்தை பிடித்திருக்கின்றார்கள்.😎😢
உலகத்தில் மொத்த நாடுகள் 156.
🇨🇭🇮🇳🇱🇰🇹🇨🇬🇧🇵🇰🇱🇧🇱🇷🇧🇮🇰🇭🇱🇰🇹🇨🇬🇧🇵🇰🇱🇧🇱🇷🇧🇮🇰🇭🇮🇳🇮🇳
2018 ஆண்டு கணக்கெடுப்பில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளில் முதல் ஐந்து இடங்களில்  
1.பின்லாந்து
2.நோர்வே
3.டென்மார்க்
4.ஐஸ்லாந்து
5. சுவிஸர்லாந்து 
ஆகிய நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

2014 / 2016 ஆண்டுக்கணக்கெடுப்பில் நான்காம் இடத்திலிருந்த பின்லாந்து 2018 ஆம் ஆண்டு ⬆️முதலிடத்தை பிடித்திருக்கின்றது.
அவுஸ்ரேலியா 10 
ஜேர்மனி 15 
அமெரிக்கா 18
பிரிட்டன் 19 
சிங்கப்பூர் 
எனும் வரிசையில் இலங்கை வாழ் மக்கள் ⬆️ 116 ஆவது இடத்தை பிடித்து கொள்கின்றார்கள் / நான்கு தசாப்தங்கள் உள் நாட்டு யுத்தங்களை சந்தித்தும் இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கை இந்திய மக்களை விட முன்னேறி இருக்கின்றது என்பதை இக்கணிப்பு உணர்த்துகின்றது.

இலங்கை 🇱🇰
2014 / 2016 ஆண்டுக்கணக்கெடுப்பில் 120 இடத்திலிருந்த இலங்கை ⬆️ 2018 /116 இடம் நோக்கி முன்னேறி இருக்கின்றது.

ஊழலில் மட்டுமே இலங்கை இந்தியாவை விட முன்னேறி இருக்கின்றது.ஊழலை குறைத்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் முதல் 100 நாடுகளின் பட்டியலுக்குள் இடம் பிடித்து விடலாம்.
பாகிஸ்தான் 🇵🇰 2014 / 2016 ஆண்டுகளில் 80 ஆவது இடத்தில் இருந்தது. ⬆️ 2018 / 75 ஆம் இடம் பிடித்திருக்கின்றது.
இந்தியாவுக்கு கீழே 23 நாடுகள் இன்னும் இருக்கின்றது.நமக்குக் கீழேயும் உள்ளவர் கோடி என்பதை நினைச்சு பார்த்து நிம்மதி தேடுவோம் என்கின்றீர்களா? 😍
உள்நாட்டு உற்பத்தி,
தனிநபர் வருமானம் 
சமூகம் சார்ந்த ஆதரவுகள் 
ஆரோக்கியமான வாழ்க்கை திட்டமிடல்
வாழ்க்கைத் தேர்வுகளை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்
பெருந்தன்மை
ஊழல் குறித்த புரிந்துணர்வு,

என்பவற்றின் அடிப்படையில் இக்கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டிருக்கின்றது.
நாங்களும் முன்னேறி இருக்கின்றோம், சுந்தர் பிச்சை கூகுளில் இருக்கார், நாசாவில் எங்க விஞ்ஞானிகள் இருக்காங்க, ஒலிம்பியாரிட்டில் எங்க பசங்க வேலை செய்கின்றார்கள்,ராக்கெட் விட்டோம், ஐடியில் நாங்கள் தான் பெஸ்ட் / உங்களை ஏமாற்றிக்கொள்ள போகின்றீர்களா?
வறட்டுகௌரவம் பார்த்து இருப்பு நிலையை இழக்காமல் இனியேனும் சுதாகரித்து கொள்ளுங்கள்.
தேசபக்தி,தேசியம் எனும் கண்மூடித்தனமான நம்பிக்கையால் நாட்டின் வளர்ச்சியே கிழ் நோக்கி சென்று கொண்டுள்ளது. அகக்கண்களை நன்றாக திறந்து உலகத்தில் நடப்பதை உணருங்கள்.

2018 / 122 மொசாம்பிக் 
2018 / 144 ஜிம்பாபே
கூட தன் நாட்டின் பேரழிவுகளை உடனுக்குடன் தரவேற்றி நடப்பு நிலையை உலகறிய செய்யும் போது தமிழ் நாட்டு தமிழர்கள் கற்காலம் நோக்கிப்ப்யணிப்பதும் ஜாதி,மதம் என பிரிந்து ,வீண் பெருமைகள் பேசி, கல்வி முதல் அனைத்திலும் பின் தங்கி இருப்பதை அடுத்த பதிவில் காணலாம்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே 🇮🇳

எனக்கு சக்தி எல்லாம் பிறக்கவில்லை. 
தலைச்சுத்தி தான் வருகின்றது.


1 கருத்து:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!