15 செப்டம்பர் 2018

தருமங்கள் தவறுதே?

பட்டென்று போனதென 
பொட்டில் அடித்தால் 
போலொரு நொடி 
துடிக்குதே எம் நாடி.

நல்லவர்களெல்லாம் 
சட்டென்று விண்செல்லல் 
வீணர்களிற்கே 
இடமென்றுணர்த்திடுதே.

எவருக்கும் இடமிங்கே 
நிரந்தரமில்லை என்றுணர்ந்தாலும்
இவரிங்கே இனியில்லை 
உணர்வுகள் துடிக்குதே

சட்டென,சடுதியில் சலசலப்பில்லாமல் 
சென்றிடல் வரமாய் தானிருந்தாலும் 
யாம் என நினைப்போர் செய்
தருமங்கள் தவறுதே?


ஒத்தை மகளை பொத்தி வைத்து 
பத்திரமா பாதுகாத்த வித்தை கண்டு 
காலனுக்கிங்கே பொறுக்க வில்லையோ?


இளவயது மலரது உதிர்வது கொடியது.
இருப்போரை இறக்க வைக்கும் வலி தருவது.
இரு சின்னஞ் சிறு அரும்புகளையும் நான்கு வயதே ஆன மொட்டையும் விட்டு மலரது உதிர்ந்து போனது. 34 வயதில்  இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து ஒரே வாரத்தில்  தான் உதிர்ந்து போகும் கொடுமையை என்ன வென்பது? 


5 கருத்துகள்:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!