18 செப்டம்பர் 2018

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 4

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள்* 
பகுதி 4

கி,மு 1400 இலிருந்தே கானான் தேசம் இஸ்ரேல் என்று அழைப்படலாயிற்று.
அன்று யோசுவா தலைமையில் தோற்கடிக்கப்பட்ட கானானியர் இன்றைய பாலஸ்தீனியர் அல்ல!
அன்றைய கானானிய ஆட்சி..
நியாதிபதிகள் ஆண்டார்கள்
கி.மு 1020 ஆண்டு வரை இராஜாக்களால் ஆளப்பட்டது.
முதல் அரசனாக சவுலைத்தொடர்ந்து தாவீதும் தாவீதை தொடர்ந்து தாவீதின் மகனும் ஞானவானும் ஜெருசலேம் தேவாலயம் கட்டியவனுமான் சாலமோனும் அரசாண்டார்கள். .
சாலோமோன் ஆட்சிக்கு பின் கானானியதேசம் இரண்டாக பிளவு பட்டது.
கானானிய தேசம் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் எனவும், யூதேயா எனவும் இரு நாடுகளாக்கப்பட்டது.
சமாரியா இஸ்ரவேலின் தலை நகராகவும்,
ஜெருசலேம் யூதேயாவின் தலை நகராகவும் நிர்மாணிக்கப்பட்டது.
கி.மு 722 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட சமாரியாவை தலை நகராக கொண்ட இஸ்ரேல் நாடு.
ஆசீரியர்களால் அழிக்கப்பட்டு.இஸ்ரேலில் வாழ்ந்த அதன் குடிமக்கள் பல் தேசங்களுக்கும் அகதிகளாக துரத்தப்பட்டார்கள்.

100 வருடங்களுக்கு பின் யூதேயா தேசமும் பாபிலோனால் பிடிக்கப்பட்டு. அதன் மக்களும் சிதறடிக்கப்பட்டு.கி,மு 586 ல் சாலோமோனால் கட்டப்பட்ட ஜெருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டது.
யூதேயாவை பிடித்த பாபிலோனியர் யூத மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்தினாலும். அதன் பின் 50 வருடங்கள் பின் பெர்சிய மன்னன் சைரஸ் பாபிலோனை கைபற்றி யூதர்களை விடு்வித்து எருசலேமை மீள கட்டும் அனுமதி கொடுத்தார்!
கி.பி சுமார் 50 ஆயிர்ம யூதர்கள் செருபாபேல் என்பவர் தலைமையில் இஸ்ரேலுக்கு திரும்பினர்.
எஸ்ரா என்பவர் தலைமையிலும் இன்னும் சில யூதர்கள் நாடு திரும்பினார்கள்.
கி. மு 520- 512 ஆம் ஆண்டில் மீண்டும் இரண்டாவது தடவை ஜெருசலேம் தேவாலயம் கட்டப்பட்டது.
இஸ்ரேல் கி.மு.333ல் அலெக்ஸாண்டரின் படைகளால் கைப்பற்றப்பட்டது!
கி.மு.63 வரை கிரேக்கர்களின் ஆட்சியின் கீழ் இஸ்ரேல் இருந்தது.
கி.மு.63ல் ரோமப்படையினர் டைட்டஸ் என்பவர் தலைமையில் ஜெருசலேம் நகரைப் பிடித்ததோடு கி.பி.70ல் ஜெருசலேம் தேவாலயத்தையும் இடித்தார்கள்!
ஜெருசலேமுக்கும் ஏலியா கெபிடலேனியா என பெயர் மாற்றம் செய்தனர்!
கி.பி.313 வரை.... அதாவது கி.மு 63 இலிருந்து கி.பி 313 வரை இஸ்ரேலில் ரோமர்களில் ஆட்சி இருந்தது.
ரோமர்களிடமிருந்த இஸ்ரேல் கி.பி.313 முதல் 636 வரை பைசாண்டியர்களால்ஆளப்பட்டு பைசாண்டிய அரசர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்களா
யிருந்தன்ர்.

கி.பி.636ல் அரபியர்கள் வசம் வந்தது. இவர்கள் ஆபிரகாம் மகன் இஸ்மவேல் வம்சத்தார் என்பதை நினைவில் கொள்க..
கி.பி 70 இல் இடிக்கப்பட்ட தேவாலயம் இருந்த இடத்தில் தான் காலிஃப் அப்டெல் மாலிக் என் என்பவர் முஸ்லிம் வழிபாட்டுத்தலமான டோம் ஆஃப் தி ராக்-ஐ கட்டினார்.
கி.பி.1099 முதல் 1291 வரை சிலுவைப்போர் வீரர்கள்
கி.பி. 1291 முதல் 1516 வரை மம்லுக் அரசின் வசமும் இஸ்ரேல் நாடு இருந்தது

1516 முதல் 1918 வரை ஓட்டோமான அரசர்கள் இஸ்ரேலை ஆண்டனர்.
அவ்வழியில் கி.பி 1520-1566 ஆண்டு வரையான சுல்தான் சுலைமான் என்பவர் ஆட்சியில் ஜெருசலேம் சுவர்கள் கட்டபட்டது.
ஃப்ரான்ஸின் நெப்போலியன் போனபார்ட் என்பவர் காசா நகரை கி. பி 1799ல் கைப்பற்றி தொடர்ந்து ஜெருசலேமையும் கைப்பற்ற திட்டமிட்டார்! ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை!அவர் பின் வாங்கி சென்றார்.
கி. பி 1909ல் இஸ்ரேலில் தலை நகராகிய டெல் அவிவ் நகரம் (Hill of Spring) அமைக்கப்பட்டது.
கி. பி 1917ல் முதலாம் உலகப்போர் தொடங்கியது.
அக்டோபர், 1918ல் ஜெருசலேம் நகரை பிரிட்டிஸ் படைகள் கைப்பற்றியது! ஆல்ன்பை என்பவரது தலைமையில் சென்ற படைகள் எகிப்திலிருந்து சீனாய் பாலைவனம் ஊடாக வந்து கைப்பற்றினாலும் நகருக்குள் கால் நடையாக சென்றதாக வரலாறு சொல்கின்றது!
1948 வரை இஸ்ரேல் பிரிட்டன் வசம் இருந்தது!
இது வரலாறு. 
இந்த வரலாறின் படி

கி.மு.63ல் ரோமப்படையினர் டைட்டஸ் என்பவர் தலைமையில் ஜெருசலேம் நகரைப் பிடித்ததோடு கி.பி.70ல் ஜெருசலேம் தேவாலயத்தையும் இடித்தார்கள்!
ஜெருசலேமுக்கும் ஏலியா கெபிடலேனியா என பெயர் மாற்றம் செய்தனர்!
கி.பி.636ல் அரபியர்கள் வசம் வந்தது. இவர்கள் ஆபிரகாம் மகன் இஸ்மவேல் வம்சத்தார் என்பதை நினைவில் கொள்க..
கி.பி 70 இல் இடிக்கப்பட்ட தேவாலயம் இருந்த இடத்தில் தான் காலிஃப் அப்டெல் மாலிக் என் என்பவர் முஸ்லிம் வழிபாட்டுத்தலமான டோம் ஆஃப் தி ராக்-ஐ கட்டினார்.
தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!