18 செப்டம்பர் 2018

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 3



இந்த வரைபடத்தில் இன்று இஸ்ரேல், பாலஸ்தினம் என பிரிக்கப்பட்டு காட்டபபட்டிருக்கும் நாட்டுக்கான வரலாறு இன்று நேற்றையதோ சில நூறு வருடங்கள் கொண்டதோ அல்ல!
கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சரித்திர முக்கியத்துவம் கொண்ட பூமி அது. அதாவது ஆபிரகாமுடைய வரலாறுட்ன சம்பந்தப்படுத்தபடும் இடம் இஸ்ரேல்.
ஆபிரகாமில் மகன் ஈசாக் ஈசாக் தன் மகன்கள் ஏசா, யாக்கோபுடன் ஊர் எனும் பட்டணத்தினை விட்டு கி.மு 2161 ல் தற்போதைய இஸ்ரேல் எனப்படும் கானான் தேசம் வந்ததிலிருந்து ஆரம்பமாகும் வரலாறு அது.
தம் வம்ச உரிமையை அசட்டை செய்த ஏசாவுக்கு கொடுக்காமல் யாக்கோபின் மேல் பிரியமாயிருந்தபடியால் யாக்கோபுவிற்கு இடப்பட்ட பெயரே இஸ்ரேல் ..

அதாவது ஆபிரகாம் சந்ததியில் வந்த ஈசாக்கின் மகன் யாக்கோபின் பெயர் இஸ்ரேல்.

யாக்கோபின் வழி வந்தோரே இஸ்ரவேலர் எனப்பட்டனர்.இந்த யாக்கோபின் மகனான யூதாவின் வழி வந்தோர் யூதர்கள்.
கானான் எனப்பட்ட இன்றைய இஸ்ரேலில் கி.மு.1871ம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சம் தாங்க இயலாது இஸ்ரேவேல் சந்ததியினர் எகிப்துக்கு நடந்து போனார்கள்.
எகிப்தில் 400 வருடங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிருந்து மோசேசால் மீண்டும் கி.மு.1441ம் ஆண்டில் இஸ்ரேல் தேசம் நோக்கி வந்தார்கள். நைல் நதியை நடந்தே கடந்தார்கள் எனும் வரலாறும் உண்டு.
கிட்டத்தட்ட 40 வருடங்கள் காடுகள், மலைகள், நதிகள் என அலைக்கழிக்கப்ட்டு எகிப்திலிருந்து புறப்பட்ட தலைமுறை அல்லாது புதிய ஒரு தலைமுறையாக மீண்டும் கி.மு.1400ம் ஆண்டில் அப்போதைய கானானியர் வசமிருந்த இஸ்ரேலை யோசுவா தலைமையில் போராடி வென்று இஸ்ரேலில் குடியேறினர்.
அதாவது கி,மு 1400 இலிருந்தே கானான் தேசம் இஸ்ரேல் என்று அழைப்படலாயிற்று. அன்று யோசுவா தலைமையில் தோற்கடிக்கப்பட்ட கானானியர் இன்றைய பாலஸ்தீனியர் அல்ல!
கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன்னரே யுதர்களுக்கு சொந்த மான இடமாக இருந்தது இஸ்ரேல். குர் ஆனையும், பைபிளையும் இணைப்பது சம வரலாறுகள் தான். இவ்வரலாறு குரானிலும் இருக்கும்.
சரி இங்கே பாலஸ்தினியர்கள் எப்படி வந்தார்கள் என்பதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
 யூதர்களும் இன்றைய கிற்ஸ்தவர்கள் என பைபிளை பின்பற்றுவோரும் ஒரே மார்க்கத்தவர் அல்ல.. யூதர்கள் தம்மை தவிர எவரையுமே இறைவனின் பிள்ளைகள் என ஏற்பதில்லை.
கிறிஸ்தவர்களை அவர்கள் புற ஜாதிகள் என்றே சொல்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!