08 மே 2020

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 10

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 10

தென்னை வளம் கொண்ட  இலங்கை,இந்தியா போன்ற
பிரதேசங்களில் வாழும் மக்கள்

தென்னையை மூலதனமாக்கி கொள்வதோடு சிறு வீட்டு தோட்டம், ஆடு, மாடு,கோழி வளர்ப்பிலும் கவனம் செலுத்தலாம்

தென்னை அடி முதல் நுனி வரை ஒரு பிள்ளை போல் நூறு ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து பயன் தரக்கூடியது.

„ உன்னை பெத்ததுக்கு நாலு தென்னம்பிள்ளை நட்டிருந்தாலும் எனக்கு கடைசி காலத்தில் கஞ்சி ஊத்தி இருக்கும்“  என பொறுப்பில்லாமல் திரியும் பிள்ளையை பார்த்து பெற்றோர் சொல்லும் முது மொழி.

அன்றாட உணவு தயாரிப்பில் முக்கிய இடம் தேங்காய்க்கு உண்டு என்பதனால்
விலை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். அதிக விளைச்சல் அல்லது குறைந்த விளைச்சல் இரண்டிலுமே நஷ்டம் அடைவது அடிக்கடி நடப்பது தான்.

உற்பத்தியாளனும், நுகர்வோரும் தீர்வு இல்லை என தெரிந்தும் அரசின் நிர்வாகத்தை மாறி மாறி குறை சொல்வதை விட  அதிகமாக தேங்காய் உற்பத்தியாகி விலை குறையும் போது இரண்டு மூன்று மாத தேவைக்கு தேவையான தேங்காயை வாங்கி கோதுடைத்து மேல் தோல் தோல் சீவி அல்லது சீவாமல் துண்டுகளாக்கி  காற்று போகாமல் வாக்கும் செய்து  பிரிஷேர் இல் போட்டு விடுங்கள்

♦️ தேவைக்கு சில மணி நேரம் முன் பிரிஷெர்இலிருந்து எடுத்து வெளியே வைத்து  இளகியதும் கிரைண்டரில் போட்டு வெந்நீர் விடடு அடித்து வடித்து எடுத்தால் தேங்காய் பால் தயார்.

♦️அல்லது தேங்காய் துருவியில்  துருவி டப்பாவில் அல்லது வாக்கும் bag ல் போட்டு காற்று போகாமல் பாக்கெட் செய்து பிரிஸ்சர் செய்யலாம். தேங்காய் சம்பலிலிருந்து குரக்கன் மா அவித்து புட்டுக்கு பிரட்டுவது வரை இந்த தேங்காய்ப்பூவுக்கு பவர் அதிகம்

♦️ தேங்காய் துருவி நல்ல சூரிய வெயிலில் காய வைத்து உலர்த்தி டப்பாவில் போட்டால் சுண்டல், புட்டு, முதல் லட்டு திருபோஷா மா தேங்காய் சீனி  வறுத்து தின்பது வரை உதவும்.

விளைச்சல் அதிகமாகி விரயம் ஆகாமல் உற்பத்தியாளனும் நஷ்டம் அடையாமல்,நுகர்வோரும் இலாபம் பெறும் சிறந்த வழி இது என்பது என் அனுபவம்தே ங்காய்.

தேங்காய்
           🔹 இளநீர்
           🔹 தேங்காய்
           🔹 முற்றிய தேங்காய்
           🔹 தேங்காய் பூ வற்றல்
           🔹 தேங்காய் பூ இனிப்புகள்
           🔹 தேங்காய் துருவி பிரிஸர்
           🔹 தேங்காய் எண்ணெய்
           🔹 புண்ணாக்கு
           🔹 தேங்காய் பால்
           🔹 தேங்காய் பால் பவுடர்
           🔹 நீரா பானம் / கள்
           🔹 தென்னை நார் கயிறு
           🔹 வீட்டுத்தோட்டத்திற்கு எரு
            (கோகோ பீட்)

🇵🇭 பிலிப்பைன்ஸின் விவசாய ஏற்றுமதி துறையில் அதிக வருமானம்





அதன் மதிப்பு கூட்டிய தயாரிப்புகளில்
🔹தேங்காய் எண்ணெய்,
🔹கோகோ நீர்
🔹ஆர்கானிக் தேங்காய்
🔹தேங்காய் சர்க்கரை
🔹தேங்காய் மாவு ஆகியவை அடங்கும்.

தேங்காயை எப்படி மதிப்பு கூட்டி சேமிக்கலாம்?  சந்தைப்படுத்தலாம்?
பெரும் தொழில் வாய்ப்பு ஆலோசனைக்கு வீடியோ லிங்க் பாருங்கள்

🇮🇩 இந்தோனேசியாவில் தேங்காய் 👇
Indonesia : vedio

இதையும் வாசியுங்கள்
👇👇

🔷 கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 8
கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 8

🔷 கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 9
கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 9

ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதால் 8.9.10 பதிவுகளை ஒரே நேரம் பகிர்ந்தேன்

பதிவினை குறித்த உங்கள் கருத்துகளே இத்தொடரை இனியும் தொடர வேண்டுமா எனும் முடிவெடுக்க வைக்கும்

புகைப்படம் : இணையத்தில் இருந்து

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 10

தொடர்வோம்

நன்றி
Nisha

1 கருத்து:

  1. மக்கள் தீர்க்க தருசனமாக சிந்தித்தால் நிச்சயமாக இன்னும் வியாபாரம் சூடுபிடிக்கும்!

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!