08 மே 2020

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 8

தற்சார்பு வாழ்க்கையின் வெற்றி ...! 

🔹 எங்கள் பிரதேசத்தில் விளையும் உற்பத்தி பொருட்களை பயன் படுத்துவது
🔹 எமக்கு தேவையானதை நாமே உருவாக்கி கொள்ளும் போது  தற்சார்பு வாழ்க்கைக்கான தேவைகள் நிறைவேறும்!

✖️ வெளியிலிருந்து வரும் இறக்குமதி பொருட்களை குறைத்து அல்லது தவிர்த்து கொள்ளும் போது நாங்கள் தற்சார்பு வாழ்க்கைக்குரிய இலக்கை நோக்கி நகர்த்த படுவோம்! 

எங்கள் அத்தியாவசிய தேவைகளாக மாறி விடட மீன்டின், மைசூர்ப்பருப்பு, கோதுமை, உலர் பால் மா ரின்களை தவிர்க்க கூடியவற்றுக்கு  உதாரணமாக சொல்லலாம். 




▪️ பருப்பை உற்பத்தி செய்யும் இந்தியா,கனடா, துருக்கி மக்கள் உண்பதை விட இலங்கையர் பருப்பில்லாத விருந்தில்லை என திணிக்கப்பட்டிருக்கின்றோம். 

▪️ கடலும், நதியும், குளமுமாக சுற்றி வர  நீர் சூழ வாழும் நாங்கள் மீன் ரின்வெளிநாட்டிலிருந்து இறக்குகின்றோம்.

▪️ மந்தை வளர்ப்புக்கு சாதகமான நிலவளங்கள் கொண்ட எங்கள் தேசத்தில்  பசுவும் கன்றுமாக வளர்த்து பிரெஷ் பால் குடித்து வாழ கூடிய வாய்ப்பு பெற்றவர்கள்
சத்தில்லாத இனிப்பு நிறைந்த ஆரோக்கியமற்ற உலர்ந்த பால் மா ரின்களை இறக்குமதி செய்வதோடு அதிக விலை கொடுத்தும் வாங்குகின்றோம்.

▪️எங்கள் நாட்டில் கோதுமை உற்பத்தி இல்லை.ஆனால் பிரட் இல்லாமல் எங்களுக்கு விடியாது.

அவசர அவசியத்துக்கு பயன் படுத்துவதும் அதுவே அத்தியாவசியம் என கொரோனா வைரஸ் lockdown பொருளாதார நெருக்கடி காலத்திலும் இனியும் தொடர முடியுமா? 

இயற்கை  வளம் எங்கள் நாட்டினுள் இருக்க நாட்டுக்குள் உற்பத்தி செய்யாத உணவு பொருளுக்கு அடிமைப்பட்டு எங்கள் விவசாயிகளின் உற்பத்தியை புறம் தள்ள உருவாக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை இனி என்றாலும் உணரணுமா இல்லையா? 

தற்சார்பு வாழ்க்கையில் நாங்கள் முன்னேறணும் என்றால் நாடு முன்னேறணும். நாடு முன்னேறணும் என்றால் நாங்கள் மாறனும். 

அதை தான் ஒளவையார்

• வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்“ 

அதாவது  ஆளும் அரசனின் பணி மக்கள் பசிப்பிணி போக்குவதே! 

ஒரு நாட்டு மன்னனின் பெருமை வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே இருக்கிறது என்றும் உணர்த்துகின்றார்.

விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். விவசாயம் நல்ல முறையில் நிகழ்ந்தால், நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.  நாடும் சுபிக்ஷமாக இருக்கும் என்று ஒரே வார்த்தையாக 'வரப்புயர' என ஒரு சொல்லுக்குள் அடக்குகின்றார்..!

ஒளவையார் சொல்லியும் உணராதவர்களாக நாங்களும்.......? 

ஒளவையார்  சொல்லாமலே  
தானாக  இதை உணர்ந்த நாடுகள் வளங்கள் ஏதும் இல்லாமலேயே முன்னேறியும்  இருக்கின்றன. 

🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 
நான் வாழும் நாட்டில் மட்டும் அல்ல முழு ஐரோப்பாவுக்குள்ளும் யூன் தொடக்கம் செப்டம்பர் வரை காய்கறி, பழங்கள் மும்மடங்கு விலை எகிறும்.

அது ஏன் என்பது எங்களவர் பலருக்கே தெரியாது!

வின்டரில் ஒரு கிலோ 1 Euro அல்லது 2 Frக்கு மேல் போகாத கத்தரிக்காய் சம்மரில் ஆறு ஏழு  பிராங்க் வரை எகிறும்.

🔶 கோடையில் நாட்டுக்குள் விளையும் உற்பத்தி பொருளுக்கு சந்தை வாய்ப்பை பெருக்கி வெளி நாட்டு உற்பத்தி பொருளை தடை செய்து அல்லது மும்மடங்கு வரி என குறைத்து இறக்கு மதி செய்ய அரசாங்கம் நிர்பந்திக்கும், அதிக வரிக்கு ஏற்ப பொருளை விலையேற்ற கட்டுபடியாகாது என இறக்குமதி குறையும்.

( எம்மவர் சின்ன வெங்காயம் தான் வேண்டும் என கிலோ 15 Fr / 2500 Rs கொடுத்ததும் வாங்குவார்கள்.) இப்போது சின்னவெங்காயமும் சம்மரில்  இங்கேயே உற்பத்தி செய்து விற்கின்றார்கள்.

🔸 பசு,மாடு,ஆடு,கோழி என மந்தை வளர்ப்பில்  ஈடுபடும் பண்ணையாளர்களை ஊக்குவித்து தன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் Swiss அரசு அண்டை நாட்டு எல்லைகள் ஊடாக பால் மற்றும்  பால் சார்ந்த உணவு பொருட்கள், இறைச்சி போன்றவை  நாட்டுக்குள் கொண்டு வர பொருள் விலையை விட நான்கைந்து மடங்கு வரி , தண்டப்பணம் அல்லது அபராத தொகை என பல வழிகளில் கடுமையாக கட்டுப்படுத்துகின்றார்கள்.இதன் மூலம் உள் நாட்டின் உற்பத்தி விரயமாகாமல் விலை போகின்றது.  

எங்கள் நாட்டில் என்ன வளம் இல்லை என்று சொல்லுங்கள்.....!? 

நாம் எதை செய்ய வேண்டும் என்பதை களமும் காலமும் தான் முடிவெடுக்க வேண்டும் என்பதை அரச அதிகாரிகளும் இதை தெளிவாக உணர்ந்து மக்களுக்கு வழி காட்டிட வேண்டும்.மேம் போக்கில் வீட்டு தோட்டம்  என எல்லோருக்கும் விதையும், மானியமும் அறிவிப்பது சிறந்த தெரிவாக இருக்கின்றதா? 

கூறுங்கள்।


அடுத்த பதிவில் தொடர்வேன் 

Nisha 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!