10 அக்டோபர் 2020

உலக மனநல நாள் ( World Mental Health Day) Part - 1

 அக்டோபர் 10 ...! 

                       உலக மனநல நாள்

                ( World Mental Health Day) 

                                 Part - 1 

உறவினர்கள், உறவுகளின் பிரச்சினைகள் 

பணியிடம், பொருளாதாரச் சிக்கல்கள், அடாவடியாக கொடுமைக்கு ஆளாதல், நாள் பட்ட உடல் வலிகள் என்று பல்வேறு பட்ட சூழல்களில் மனிதர்கள் மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு போன்ற உளவியல் பாதிப்புகளுக்குஉட்படுகின்றார்கள். 

மன நோயின் ஐந்து பிரதான எச்சரிக்கை அறிகுறிகள்: 

🔹நீண்டகால சோகம் அல்லது எரிச்சல்.

🔹உயர்ந்த மற்றும் குறைந்த மனநிலை மாற்றம்.

🔹அதிகப்படியான பயம், கவலை அல்லது

சோர்வு 

🔹சமூகதிலிருந்து விலகி வாழ்தல் 

🔹உணவு அல்லது தூக்க பழக்கத்தில் வியத்தகு மாற்றங்கள்.

உடல், மனபழக்கவழக்கம் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளை உணர்வு, உடல் மற்றும் செயல் பாடுகளின் மாறுதல்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.


உணர்வு  மாற்றம்

🖤 அதிக கவலை

🖤 மனச்சோர்வு

🖤 பயம் 

🖤 மனப் போராட்டம்

🖤 எளிதில் எரிச்சலுறல்  

🖤 கோபப்படல்

🖤 குற்றவுணர்வு 

🖤 இயலாமை

🖤 வெட்கம்

🖤 தனிமையாக உணர்தல்

🖤 எச்சரிக்கை உணர்வு

🖤 மனக் குழப்பம் / மனக் கலக்கம்

🖤 மனதை ஓய்வாக வைத்துக்கொள்ள முடியாமல் உணர்தல்

🖤 மனதை ஒருமுக படுத்த முடியாமல் அலைபாயும் தன்மை 

🖤 எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை 

🖤 ஆளுமைச் சிதைவு


உடற்றொழிலியல்  மாற்றம்

🔹 தசைகளில் ஏற்படும் இறுக்கம் 

🔹 கடுமையான உடல்வலி 

🔹 தலைவலி

🔹 நெஞ்சுவலி போன்ற வலிகள் 

🔹 வயிற்றுப்போக்கு (Diarrhoea) 

🔹 மலச்சிக்கல், (Constipation)

🔹 குமட்டல் (Nausea)

🔹 தலைச்சுற்றல் (Dizziness)

🔹 அதிகரித்த இதயத் துடிப்பு

🔹 அதிரினலின் சுரப்பு அதிகரிக்கும்


மாற்றமடையும் பழக்கவழக்கம் :

▪️ மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ உணவு உட்கொள்ளல்

▪️ அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை 

▪️ சமூகத்திலிருந்து ஒதுங்கி இருத்தல்

▪️ வேலைகளைப் பின்போடல் 

▪️ பொறுப்புக்களில் இருந்து ஒதுங்குதல் 

▪️ அதிகரிக்கும் மதுபானப் பாவனை

▪️ போதைப்பொருள் பாவனை

▪️ புகைத்தல் 

▪️ நகம் கடித்தல் போன்ற ஒழுங்கற்ற பழக்கங்கள்.

கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவுகள், அயலார், நண்பர்கள், நமக்கு

தெரிந்தவர்கள்  சற்று கூர்ந்து கவனித்தால் அவர்களின் செயல் பாடுகள், உணர்வுகளில் படிப்படியான  மாற்றங்களை அவதானிக்க  முடியும். 

உளவியல் பாதிப்புக்கு அடிப்படை காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து அந்த சூழலிலிருந்து விலகி அன்பு, ஆதரவு கிடைத்தாலே பலர் ஆரம்ப நிலையில் மீண்டு விடுவார்கள். அறியாமை மற்றும் கவலையினம் உயிர் இழப்புக்களை உருவாக்கி விடுகின்றது. 

உலக மனநல நாள் ( World Mental Health Day)



கொரோனா வைரஸ் இரண்டாம் அலை

 என் வசிப்பிடத்தில் இருந்து Swiss , Bern மாநகர பெரிய Insel Hospital, 68 Km தூரம் ( இது சுவிஸ் நாட்டின் அனைத்து New அறிவியல் மருத்துவ தொழில் நுட்ப வசதிகளையும் கொண்ட பிரதான பெரிய மருத்துவ மனை) 

பொதுப்போக்குவரத்தில் ( Bus - Train - Walk - Tram )  பயணத்துக்கு ஒரு மணி நேரம் தேவை ( After OP வேகமாக இயங்க முடியாது என்பதால்  எனக்கு மேலும் 30 நிமிடங்களும் தேவை.) எனக்கு இங்கே தான் கடந்த ஐந்து வருடம் தொடர் check up . மாதம் ஒரு தடவை எனும் check up இருக்கும். ஜூன் மாதத்துக்கு பின் வாரம்  ஒருதடவை என்றானதும்  பொதுப்போக்குவரத்தில் தான் பெரும்பாலும் பயணம். 

🔹

எங்கள் நகர Hospital 6  km  தூரம்.

இரண்டு பஸ் மாறி செல்ல 30  நிமிடங்கள்

கார் பயணம் என்றால் 10 நிமிடங்கள்.

வாரத்துக்கு இரண்டு தடவை ( சில நேரம் மூன்று ) இங்கே பிசியோ தெரபி இரண்டு வருடமாக செல்கின்றேன்.( ட்யூமர் தலை சுத்துக்கு தெரபி) மார்ச்  ஆகஸ்ட் ( Corona virus Lock down ) தெரபிக்கு போகவில்லை . செப்டம்பர் 20 தொடக்கம் மீண்டும் பிசியோ தெரபி ஆரம்பம். 

போன கிழமை வரை பொதுப்போக்குவரத்து 

பயணங்களில் மக்கள் நெருக்கடி இல்லை.  சானிடைசர் தடவி, மாஸ்க் அணிந்து இரண்டு மீட்டர் டிஸ்ட்னஸ்  தூரத்தில் நின்று ( நான் மட்டும் அமரும் இருக்கை😍) என்று கடைப்பிடித்தேன். ஒன்றும் பயமில்லை.

🔹

ஆனால் இன்று.... !?  

07.10.2020. 7.45 க்கு Bern - Insel Hospital நோக்கி பயணம்... நான்கு நபர் அமரும் இருக்கையில் முதல் முப்பது நிமிடம் நான் மட்டுமே..! அதற்கு பின் திபு.. திபு என்று கூட்டம்.  ரயிலுள் அமரும் இருக்கைகள் நிரம்பி நிற்போரும்நெருங்கி... முன் இருக்கையில் ஒருவர் அமர என் வலது  பக்கத்து இருக்கையில் கைப்பை வைத்திருந்தேன். அதை எடுத்து ஒருவர அமர .. நெஞ்சுக்குள் ஒரு வெப்பம் பரவ ஆரம்பித்தது உண்மை... இதில் எங்கே டிஸ்டன்ஸ் கடைப்பிடிப்பது...? அப்படியே திருப்பி ஜன்னல் பக்கமே பார்த்து கொண்டு...வேற வழி இல்லையே..🥵

கொரோனா வைரஸ் முதல் அலை மார்ச் -  யூலை வரை என் உடல் நிலை கருதி வெளியே எங்கும் செல்லாமல் அளவாக வாங்கி, குறைவாக உண்டு வீட்டுக்குள் பத்திரமாய் இருந்தேன். 

இனி....🖤🖤🖤🖤

பள்ளிகளுக்கு Holi day  என்பதால் குழந்தை குட்டிகளுடன் பயணம் செல்கின்றார்கள். ரயில்வே ஸ்டேஷனில் மீண்டும் திருவிழா கூட்டம்...! கொரோனா வைரஸ் இரண்டாம் அலை என்கின்றார்களே ...? Mask  அணிந்தால்  பாதுகாப்பு என்று ஏனைய நாடுகள் போல் அசால்ட்டாக திரிகின்றார்களோ..? 

இப்படி பயணித்தால் நிச்சயம்   கொரோனா வைரஸ் நோய் சீக்கிரம்  வேகமாக பரவும். அது தான் அரசின் திட்டமும் என்று தெரிகின்றது.

பள்ளிகள், கல்லூரிகளுக்கும்  12  வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கும் மாஸ்க் அணிவது  கடடயாம் இல்லை என்று அறிவித்திருப்பதன் மூலம்  இளையோருக்குள் கொரோனா வைரஸ் பரவ விட்டு மீண்டு வர

போகின்றார்களோ..? 

அது அத்தனை இலகுவானதாக இருக்குமோ.,? 

இங்கே நாங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம்.  மந்தை எதிர்ப்பு சக்தி சரியாக செயல் பட குறைந்தது 70 % மக்களுக்குள் கொரோனா வைரஸ் பரவ வேண்டும். நோய் தொற்றில் எதிர்த்து தாக்கு பிடித்து மீண்டும் வருவோர் இந்த பூமியில் வாழும் தகுதி பெறுவார்..! 

எனில் ..,,,? உங்கள், எங்களதும் பிள்ளைகளதும் பாதுகாப்பு எங்கள் முயற்சிகளால் மட்டுமே சாத்தியம். 

குளிர் காலம் வேறு  ஆரம்பித்து விட்டது. குளிர்காலத்தில பரவும் Grippe ( வைரஸ் ) இருமல்,தடிமன்,தொண்டை வறட்சி என்று ஆரம்பிக்கும். அதுவா ...இதுவா என்று புரியாமல் பிள்ளைகளுடன் நெருங்கவும், விலகவும் முடியாமல் தவிக்கும் நிலை உருவாகும். 

வர போகும் ஆபத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கோ..அவ்வளவு தான் 

நன்றி 

நிஷா

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை


COVID19 - Switzerland, Bern

 07.10.2020

Switzerland, Bern மாநகரத்தின்  அனைத்து பொது உள்ளரங்குகளுக்குள்ளும் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த வாரம் திங்கள் கிழமை (12.10.2020) முதல் Mask அணிய வேண்டும். 

🔹கடைகள் / Geschäfte

🔹வணிக மையங்கள் / Einkaufszentren

🔹தபால் நிலையம் / Poststellen

🔹ரயில் நிலையம் / Bahnhöfe

🔹அருங்காட்சியகங்கள் / Museen

🔹தேவாலயங்கள் / Gotteshäuser

🔹பிரார்த்தனை அறைகள் / Gebetsräume

🔹சினிமா திரையரங்குகள்/Kino & Theater 

🔹நூலகங்கள் / Bibliotheken

🔹நிர்வாக அலுவலக கட்டிடங்கள் 

🔹வழிபாட்டுத் தலங்கள் / Gotteshäuser

🔹 உணவகங்கள்,  / Restaurants 

பொது மக்களின் பாவனைக்குரிய அனைத்து இடங்களுக்கும் திங்கட்கிழமை முதல் Mask கட்டாயமாக்கபட்டிருக்கின்றது. 

🌻 பார்கள், கிளப்புகள், டிஸ்கோக்கள் மற்றும் நடன அரங்குகள் மற்றும் உணவகங்களில்

Mask அணிய வேண்டும். ( விருந்தினர்கள் மேஜையில் அமர்ந்திருக்கும்  போது Mask கழற்ற அனுமதிக்கப்படுவார்கள்.) பார்ட்டி லிமிட்  300 பேர் வரை மட்டுமே ..! 

🌻அனைத்து  வரவேற்பு அறை, 

ஆடை மாற்றும் அறை மற்றும் கேட்டரிங் பகுதிகளில் Mask தேவைப்படுகிறது.

👼 Kindertagesstätten :குழந்தைகள், சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்து  சிறப்பு சூழ்நிலைகளில் அல்லது தனிப்பட்ட உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப Mask  அணிய வேண்டும்.

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

♦️கல்வி மற்றும் கலாச்சார இயக்குநரகத்தின் மேற்பார்வையில் உள்ள

அரசு மற்றும் தனியார் பள்ளிகள்  &  பல்கலைக்கழகங்களின் உள்ளரங்குகளுக்குள்  Mask அணிவது கட்டாயம் இல்லை ( இருப்பினும்,  உள்ளரங்குகள் தொற்றுநோயியல் நிலைமைக்கு மிக விரைவாக மாற்றியமைக்க வேண்டும்.) 

♦️வங்கிகளின மண்டபங்கள் மற்றும் சுய சேவை பகுதிகளிலும்  Mask அணிவது கட்டாயம் இல்லை

♦️விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிப் பகுதிகளிலும் Mask அணிவது கட்டாயம் இல்லை.

இந்த அறிவிப்பு 2021  ஜனவரி இறுதி வரை  கட்டாயமாக்க பட்டிருந்தாலும் இடைப்படட காலங்களில்  எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருக்குமானால் மாற்றப்படலாம். 

வெளிப்புற பாதுகாப்பு அடையாளமாக சுகாதார முகமூடிகள் செயல்படுகின்றன. மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். 

                 “ Bern மாநகரம் ஆபத்தில்

              உள்ளவர்களையும் அவர்கள்                              

         சுதந்திரங்களையும் பாதுகாக்க             

      விரும்புகிறது” 

                           "எல்லோரும் சுகாதார விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியது மிகவும் முக்கியம், முடிந்த போதெல்லாம் தனி நபர்களுக்கிடையில் 1.5 மீட்டர் தூரத்தை  Distanz வைத்திருங்கள் "என்று சுகாதார துறை அதிகாரி அறிவித்துள்ளார். 




#07.10.2020

Switzerland, Bern மாநகரத்தின்  அனைத்து பொது உள்ளரங்குகளுக்குள்ளும் 

12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த வாரம் திங்கள் கிழமை (12.10.2020) முதல் Mask அணிய வேண்டும். 

🔹கடைகள் / Geschäfte

🔹வணிக மையங்கள் / Einkaufszentren

🔹தபால் நிலையம் / Poststellen

🔹ரயில் நிலையம் / Bahnhöfe

🔹அருங்காட்சியகங்கள் / Museen

🔹தேவாலயங்கள் / Gotteshäuser

🔹பிரார்த்தனை அறைகள் / Gebetsräume

🔹சினிமா திரையரங்குகள்/Kino & Theater 

🔹நூலகங்கள் / Bibliotheken

🔹நிர்வாக அலுவலக கட்டிடங்கள் 

🔹வழிபாட்டுத் தலங்கள் / Gotteshäuser

🔹 உணவகங்கள்,  / Restaurants 

பொது மக்களின் பாவனைக்குரிய அனைத்து இடங்களுக்கும் திங்கட்கிழமை முதல்  

Mask கட்டாயமாக்கபட்டிருக்கின்றது. 

🌻 பார்கள், கிளப்புகள், டிஸ்கோக்கள் மற்றும் நடன அரங்குகள் மற்றும் உணவகங்களில்

Mask அணிய வேண்டும். ( விருந்தினர்கள் மேஜையில் அமர்ந்திருக்கும்  போது Mask கழற்ற அனுமதிக்கப்படுவார்கள்.) பார்ட்டி லிமிட்  300 பேர் வரை மட்டுமே ..! 

🌻அனைத்து  வரவேற்பு அறை, 

ஆடை மாற்றும் அறை மற்றும் கேட்டரிங் பகுதிகளில் Mask தேவைப்படுகிறது.

👼 Kindertagesstätten :குழந்தைகள், சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்து  சிறப்பு சூழ்நிலைகளில் அல்லது தனிப்பட்ட உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப Mask  அணிய வேண்டும்.

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

♦️கல்வி மற்றும் கலாச்சார இயக்குநரகத்தின் மேற்பார்வையில் உள்ள

அரசு மற்றும் தனியார் பள்ளிகள்  &  பல்கலைக்கழகங்களின் உள்ளரங்குகளுக்குள்  Mask அணிவது கட்டாயம் இல்லை ( இருப்பினும்,  உள்ளரங்குகள் தொற்றுநோயியல் நிலைமைக்கு மிக விரைவாக மாற்றியமைக்க வேண்டும்.) 


♦️வங்கிகளின மண்டபங்கள் மற்றும் சுய சேவை பகுதிகளிலும்  Mask அணிவது கட்டாயம் இல்லை

♦️விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிப் பகுதிகளிலும் Mask அணிவது கட்டாயம் இல்லை.

இந்த அறிவிப்பு 2021  ஜனவரி இறுதி வரை  கட்டாயமாக்க பட்டிருந்தாலும் இடைப்படட காலங்களில்  எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருக்குமானால் மாற்றப்படலாம். 

வெளிப்புற பாதுகாப்பு அடையாளமாக சுகாதார முகமூடிகள் செயல்படுகின்றன. மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். 

                 “ Bern மாநகரம் ஆபத்தில்

              உள்ளவர்களையும் அவர்கள்                              

         சுதந்திரங்களையும் பாதுகாக்க             

      விரும்புகிறது” 

                           "எல்லோரும் சுகாதார விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியது மிகவும் முக்கியம், முடிந்த போதெல்லாம் தனி நபர்களுக்கிடையில் 1.5 மீட்டர் தூரத்தை  Distanz வைத்திருங்கள் "என்று சுகாதார துறை அதிகாரி அறிவித்துள்ளார். 

Mask அணிய வேண்டும்


#

ஆப்பிள் வற்றல்

 பிசியோ தெரபியே செய்து உடல் அசைத்து களைத்து வந்து  நிடோ பால் கோப்பி & ( இலங்கை சுக்கு மல்லி கோப்பி  ) ஆப்பிள் வற்றலும் இன்றைய பின்னேர சிறு உணவானது. 

ஆப்பிள் வற்றல்  தங்கை ( Jeruscha Jeeva) வீட்டு ஆப்பிள் மரத்து பழங்களை வற்றலாக பதப்படுத்தி, Johannisbeeren பழங்களில் ஜாமும்  செய்து எனக்கும் கொடுத்தாள் ❤️

நீங்களும் செய்யலாம். ( மாதக்கணக்கில்  வைத்து உண்ணலாம்). கடைகளில் 100 gr பாக்கட் 3 SFr. சீசன் காலத்தில் மலிவாக ஆப்பிள் கிடைத்தால் வற்றல் செய்து பிள்ளைகளுக்கு சிற்றுண்டியாக கொடுக்கலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.

ஆப்பிள் பழங்களை கழுவி  நடுவில் இருக்கும் விதை நீக்கி மெல்லிய துண்டுகளாக நறுக்கி நல்ல கோடை வெயிலில் உலர்த்தி எடுக்கலாம். அல்லது back ofen இல் வைத்து கிரில் setting இல் காய விடலாம். 

( கடந்த வருடம் நானும் செய்தேன். இவ்வருடம் நான்உணவு பொருட்கள் ஒன்றுமே பதப்படுத்தவில்லை 🖤)

ஆப்பிள் வற்றல்