30 ஜூன் 2020

சுவிட்சர்லாந்து corona virus

ஜூன் 21 மாலை சுவிஸ்ஸில்   சூரிச்  மாநிலத்திலிருக்கும்  இரவு விடுதியில்  இடம் பெற்ற சூப்பர்ஸ்ப்ரெடர்  நிகழ்வை நடத்திய நபருக்கு கொரோனா Virus positive  உறுதிப்படுத்திய பின் அந்த நிகழ்வும் கலந்து கொண்ட 300  பேர் தனிமைப்படுத்த பட்டிருக்கின்றார்கள்.சிலருக்கு ( இது வரை ஐந்து நபர்களுக்கு ) சோதனை செய்யப்பட்டு  வைரஸ் பொசிட்டிவ். உறுதிப்படுத்தபட்டிருக்கின்றது. 

சுவிட்சர்லாந்து, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை விதித்து யூன் மாதத்தில் படிப்படியாக Lock down  தளர்த்தி எல்லைகளை மீண்டும் திறந்த பின்  கடந்த வாரத்தில், உறுதிப்படுத்தப்பட்ட புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 

திங்கள்-  18 
செவ்வாய் - 22
புதன் - 44 
வியாழன் -52 
வெள்ளி 58 
சனி -69
ஞாயிறு - 62

29.6.2020 - Schweiz & Liechtenstein இரண்டு மாநிலத்தில் மட்டும் 35 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.  

ஒருவருக்கொருவர் 1.5 மீட்டர் தூர இடைவெளியை தொடர  முடியாவிட்டால் மக்கள் முகமூடி அணிய வேண்டும்.பொதுப்போக்குவரத்தில்  corono virus தொடர்பு தடமறிதலுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும்  பொது போக்குவரத்தில் முகமூடிகளை கட்டாயமாக அணிய வேண்டும் என்று அரசாங்கம் பரிந்துரைக்கிறது.





தமிழன் உருப்படுவதுக்கு வழி என்ன என்று தேடுங்கள்..

இலங்கை,  தமிழ்  அரசியல்வாதிகளின் தேர்தல்   பிரச்சாரத்தில்...! 

இலங்கையில் தமிழர்கள் சார்பில் அரசியல் களத்தில் நிற்போர் என்ன கற்றிருக்கின்றார்கள்? எவ்வளவு சொத்திருக்கின்றது? எதை சுரண்டி இருக்கின்றார்கள் எனும் தனி மனிதர் தூற்றலும் போற்றலும், ஆளுக்கொரு தலைவனை முன் நிறுத்தி ஆபாச அர்ச்சனைகளும் அதிகமாகி கொண்டிருக்கின்றதே அன்றி...! 

▪️பிளவு பட்டு கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றிணைத்து,தமிழ் இளைய தலைமுறையை சீர்படுத்துவோம்.

▪️வீழ்ச்சியடையும் கல்வியை உயர்த்த வேண்டும்.
    •  கல்வி சாலைகளை செப்பனிட வேண்டும்,        
    • பாழடைந்து கிடக்கும் பள்ளி மைதானங்கள்
    • விஞ்ஞான ஆய்வு கூடங்கள், நூலகங்களை அமைத்து சிறுவர் கல்வியை மேம்படுத்துவோம். 
   • ஆசிரியர் பற்றாக்குறைகள், மிரடடல் உருட்டல் இல்லாமல்  சுயமாக இயங்கும் பயிற்சிகள் ( உள்ளூர் பள்ளிகள் அபிவிருத்தி செய்ய விடாமல் தடையாக இருக்கும் புல்லுருவிகளை அகறறவோம்) 

▪️ இழந்திருக்கும் தமிழர் நிலங்களை மீட்டு, பாதுகாத்து தருகின்றோம்.

▪️தமிழர் பிரதேசங்களுக்கான அபிவிருத்திகள்
       • பிரதான விதிகளுக்கு தார் பூசி நான்கு தலைமுறை கடந்து விடடது . மழைக்காலத்துக்கு முன்  உள்ளூர் தெருக்களுக்கு கிரவல் கொட்டி சீர் செய்தது எல்லாமே நாற்பது வருடங்கள் முந்தைய கனவாகி போனது.
   • வளம் நிறைந்த பிரதேசத்தில் உள்ளூர் உற்பத்திகளை கொண்டே வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் உருவாக்கி தமிழர்களுக்கு தொழில் வாய்ப்புகளை
ஏற்படுத்தும் திட்ட்ங்கள்.

▪️ தமிழர் இன்று இழந்திருக்கும்
சுய உரிமை,  கூனி குறுகி முதுகெலும்பு உடைந்து தன்னம்பிக்கையை தொலைத்து வாழும் எம்மக்களை மீண்டும்  உயிர்ப்பிக்கும் முன்னேற்ற திட்டங்கள், கவுன்சிலிங்குகள்

இன்னும் இன்னும் எத்தனையோ தேவை இருக்க ...! 

ஒருத்தரை ஒருத்தர் முதுகில் குத்தி, விமர்சித்து  மல்லாக்க படுத்து கொண்டே தங்கள் மேல் தாங்களே எச்சில்  துப்பி  கொள்( ல்)கின்றார்கள். அதை தவறென சுட்டி உணர்த்தாமல் கற்றோரும், பெற்றோரும் வேடிக்கை பார்க்கின்றார்கள். 

என்றும் தமிழனுக்கு எதிரி. விரோதி அந்நியர் இல்லை...! தமிழனே தான்🖤

கண்களை திறந்து அக்கம் பக்கம் பாருங்கள். உங்களை போல் தன் இனத்தினை காட்டி, கூட்டிகொடுக்கும் இழி செயலை வேறெந்த இனத்தவனாவது செய்கின்றானா? 

உரிமை.. உரிமை என சும்மா பேசி பாவ்லா காட்டி உள்ளத்தையும் இழக்காமல் தமிழன் உருப்படுவதுக்கு வழி என்ன என்று தேடுங்கள்..🙏


22 ஜூன் 2020

Covid 19 / 12 நாட்கள் ஊரடங்கில் என்ன சாதிக்க முடியும் ?

மூன்று மாத ஊரடங்கில் சாதிக்க முடியாத ஒன்றை , 12 நாட்கள் ஊரடங்கில் எப்படி சாதிக்க முடியும் ? பரிசோதனைகள் அதிகம் செய்து பாதித்தவர்களை தனிமைபடுத்துவதே அதிக பலனை கொடுக்கும் ! என்றும்  Face  book  நண்பர்Rajasimmon AB Positive பதிவு இட்டிருந்தார். இதே கேள்வி பலருக்கும் இருக்கின்றது 

அவருக்கும்இ ன்னும் பலருக்கும் இந்த பதிவு 

முதல் கேள்விக்கு  : முடியும்...! 
புதிய தொற்றுகள் உருவாகாமல் தடுக்க முடிந்தால் அதுவே நோய் தொற்றை கட்டுப்படுத்தும்.

இரண்டாவது கேள்விக்கு எல்லோருக்கும் சோதனை எனும்ஆரம்ப அடிப்படையே தவறான ஆரம்பம்.  கொரோனா வைரஸ் எல்லோருக்கும் சோதனை அவசியம் இல்லை.  சாத்தியமும் இல்லை. ஆரம்ப அறிகுறி இருக்கும் எல்லோருக்கும்
கூட சோதனை அவசியம் இல்லை. 

என்ன செய்யலாம்? 

எல்லாமே lockdown ஆரம்ப முதல் என் பதிவுகளில் எழுதியது.  மீண்டும் எழுதுகின்றேன். 

🔹 12 & 15 நாள் மிகவும் கடுமையான lockdown  யாரும் வெளியே வராமல் முழு தமிழ் நாடும் அடஜிஸ்ட் சென்னை மட்டுமே என்றாலும் மருத்துவ மற்றும் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டினுள் வருமானால் புதிய நோய்  தொற்றுகள் உருவாகாது தடைபடும்.
▪️ இத்தாலி இறுதி மாதங்களில் இதை தான் செய்தது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பாதிப்புக்குள்ளான இடங்கள் கடுமையாக்கப்படடன. 

🔹 ஆரோக்கியமான உடலினுள் ஏற்கனவே உருவான தொற்றுகளும்  இந்த காலத்தில் புது தொற்றை உருவாக்காமல் அதன் வீரியத்தை  இழந்து கொள்ளும்.  7  நாள்களின் பின்  ஒருவருக்கு அறிகுறி தொடர்ந்தால் சோதனை செய்யலாம்.

🔹 நீரழிவு. இதயம். கிட்னி , உறுப்பு மாற்று, சுவாச நோய்களும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோருக்கு  ஆரம்ப அறிகுறிகளில் தொலைபேசி or இணையத்தின் ஊடாக மருத்துவர் ஆலோசனை அவசியம் எனில் அவரவர் உடல் நலன் சார்ந்து மருத்துவ கண்காணிப்பு போதுமானது. 

🔹 எவரையும் நேரில் மருத்துவமனை வர வேண்டாம். வீட்டில் இருங்கள் எனும் அறிவிப்பு மருத்துவ துறையினரின் பணிசுமையை குறைக்கும். மருத்துவ பாதுகாப்பு துறை சேவையாளர்கள் பாதுகாப்பை  குறித்தும் அரசு அக்கறை கொள்ள வேண்டும். 

🔹மருத்துவமனையில் குவியும் நோயாளர்களால் மருத்துவ பணியாளர்கள் பாதிக்க படுகின்றார்கள். மேலும் நோய் பரவுகின்றது.அங்கும், இங்கும் மக்கள் அல்லாடுவதால்  காவல் துறை பணியாளர்கள் பலியாகின்றார்கள்.

🔹 முக்கியமாக அரசு நிர்வாகத்துறை தலைமைச்செயலகம். மருத்துவ துறை, காவல் பாதுகாப்பு  துறை பணியாளர்கள் பாதிக்க படுவது  நல்லது அல்ல 

🔹 அறிகுறி இருப்போர் தங்களை  மற்ற குடும்ப உறவுகளிடமிருந்து தனிமை படுத்தி கொண்டால் போதும். வீட்டில் இருக்கும் முதியோரை தனியே எப்போதும் வைத்திருங்கள்.எல்லோரும் வெந்நீர் குடிப்பது விடடமின் சி & d ஆரோக்கியமான  உணவுகள் எடுத்து கொள்ளலாம் 

கொரோனா  வைரஸ் உலகளவில் குறைந்த வீதமானோருக்கு தான் கடும் பாதிப்பையும் 6  விதம் மரணத்தையும் ( பிற நோய் காரணிகளும்  )  ஏற்படுத்தி இருக்கின்றது. கொரோனா வைரஸ் பொசிட்டிவ் என்றால் எல்லோரும்செத்து போவதும் இல்லை. எல்லோருக்கும் வென்றிலேற்றார் வைக்கும் படி கடுமையாவதும் இல்லை பலருக்கு சளி, காய்ச்சல் போல் கடந்து விடும். மருத்துவ இயந்திரத்தின் தேவை எல்லோருக்கும் அவசியம் இல்லை.

🔴 தொற்றாளர்களை தனிமை படுத்துகின்றோம் எனும் பெயரில் தனி முகாம், வீடுகளில் அடையாளமிடுதல், தெருக்களை அடைதல் எனும் சில்லி தன முயற்சிகளால் மக்கள் பதட்டம் அடைகின்றாரகள். வீடுகள் இல்லாத மக்களை முகாம்களுக்கு அனுப்பலாம் 

🔴 இந்த பீதியும் பதட்டமும் ஆபத்தானது. எல்லோரும் வீட்டினுள் இருந்தால் எப்படி உணவு அத்தியாவசிய பொருள் கிடைக்கும்? 

💚 வீடு வீடாக போய். ஒவ்வொருவராக சோதனை செய்ய செலவாகும் மனித & பொருள் ஆற்றலை தொழில் வாய்ப்பு இல்லாத மக்களுக்கு இந்த நாடகளுள் உணவு மற்றும் பால் பொருள்கள் வினியோகிக்கலாம். அம்மா உணவகம் , சமுதாய கூடங்களினுடான ஏழை மக்களுக்கு உணவு கொடுக்கலாம் 

💚 அரசாங்க ஊழியர்கள் பணியாளர்கள் சம்பளத்தில் 10 தொடக்கம் 20  விதம் இவ்வாறான மக்களுக்கு மனமுவந்து உதவலாம் 

💚 செத்த பின் நஷ்ட ஈடு 50  இலட்ச்சம் என அறிவிப்பது விட அந்த பணத்தில் வாழவும் ppt  பாதுகாப்பு உடைகள்உபகாரணங்களுக்கும்  செலவு செய்யலாம் 

💚 வீட்டு சொந்த காரர்கள் வாடகை பணம்  குறித்து அரசாங்கம் வங்கி லோன் மின்சாரம் போன்றவை குறித்து  தெளிவாக முடிவெடுக்கும் படி  கோரிக்கை வைக்கலாம். 

இன்னும் எவ்வளவோ செய்யலாம் . மனித உயிருக்கு முன்  அத்தனையம் தூசி எனும்  உணர்வு அனைத்தையும் செய்ய வைக்கும்.

Note 
*****
சித்த மருத்துவம் அனுமதிக்கப்பட்டு விடடாலும் நோய் பரவும் வேகத்தில் மருந்துகள் தயாராக வேண்டும்  நோய் பரவல் தடுக்கப்பட வேண்டும். இவை  இரண்டும் ஒரே நேரத்தில் சாத்தியமாக வேண்டும். நோய் பரவிக்கொண்டே இருந்தால் அதே வேகத்தில் குணமாக்குதல் என்பதன் சாத்தியம் குறித்தும் சிந்திக்க வேண்டும் .

இந்தியாவின் பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறையின் தற்போதைய மருத்துவமனை திறன்  அறிந்து கொள்ள https://alpsnisha.blogspot.com/2020/06/blog-post_22.html?m=1






இந்தியாவின் பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறையின் தற்போதைய மருத்துவமனை திறன் :

COVID -19 

இந்தியாவின் பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறையின் தற்போதைய மருத்துவமனை திறன் : 

இந்தியாவில் மொத்த மக்கள் தொகை சுமார் 130 கோடி 
இந்தியாவில் சுமார் 19 லட்சம் மருத்துவமனை படுக்கைகள், 
95 ஆயிரம் ஐ.சி.யூ படுக்கைகள்
48,000 வென்டிலேட்டர்கள் 
உள்ளன என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஏழு மாநிலங்களில் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள், - 
- உத்தரபிரதேசம் (14.8%),
- கர்நாடகா (13.8%)
- மகாராஷ்டிரா (12.2%) 
- தமிழ்நாடு (8.1%) 
- மேற்கு வங்கம் (5.9%) 
- தெலுங்கானா (5.2%)
-  கேரளா (5.2%).

COVID 19 நோயாளிகளின்  தொற்று பரவும் வேகத்துக்கு  விரைவாக விரிவாக்கம் தேவை. 

தமிழகத்தில் : 

கோவிட் -19 நோயாளிகளைச் சமாளிக்க தமிழகத்தில் சுமார் 3,000 வென்டிலேட்டர்கள் உள்ளன என்று மாநில சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் 04.04.2020 தெரிவித்திருந்தார் .

Tamil Nadu 
Hospitals /  மருத்துவமனைகள் = 2439 
பொது : 1217
தனியார்: 1222


Ventilators  = 3884
பொது: 1938
தனியார் : 1936

 ICU Beds = 7769
பொது : 3877
தனியார் : 3892

 Hospital Beds / படுக்கைகள் = 155375
பொது :77532 
தனியார் 77843