* Jewish in Palestine லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
* Jewish in Palestine லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 டிசம்பர் 2023

யாழ்ப்பாணத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் சுண்டிக்குளம் தேசிய பூங்கா

 

சுண்டிக்குளம் தேசிய பூங்கா

உயர்ந்த உயிர்ப் பல்வகைத் தன்மையைப் போன்றே தனித்துவமான நீர்வாழ் மற்றும் கடலோர சூழல் அமைப்புகளினாலும் கொண்ட இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண தீபகற்பத்தை​ நோக்கி களப்பைச் அண்டி அமைந்துள்ள ஈரநில சூழல் தொகுதியொன்றாக   ​​ சுண்டிக்குளம் தேசிய பூங்காவை இனங்காட்ட முடியும்.  19565.33ஹெக்டயார் நில அளவைக் கொண்ட இப்பிரதேசம் 1983 பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி சரணாலயமொன்றாக ஆரம்பத்தில் பெயர் பதிக்கப்பட்டிருந்ததோடு வன விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகளின்படி 2015 ஜூன் மாதம் 22 ஆம் திகதி தேசிய பூங்காவொன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது. பூங்கா புச்சிலைப்பலி மற்றும் கரச்சி பிரதேசங்களுக்கிடையில் அமைந்துள்ளதோடு இதற்கு அண்மையிலான நகரம் கிளிநொச்சியாகும்.

சுண்டிக்குளம் பூங்காவின் நிலம் களப்பு சூழல் அமைப்பொன்றினை அண்டி அமைந்துள்ளமையினால் இங்கு நன்னீர் மற்றும் உவர்நீர் நிலங்களினுடைய குணாதிசயங்களைக் காண முடியும். கடல் மட்டத்துக்குச் சமாந்தரமாக அமைந்துள்ள இது தாழ்நறில உலர் காலநிலைப் பண்புகளைக் காட்டும் பல சூழற் தொகுதிகளின் இணைப்பினால் ஆன சமவெளிப் பிரதேசம் என்பதோடுஇங்கு நீரின் உவர்த்தன்மை காலத்துக்குக்காலம் மாறிதல்களுக்கும் உட்படுகின்றது.  வடகீழ் பருவ மழை மற்றும் வெப்ப ​மழை மூலம் மழை கிடைப்பதோடு வருடத்தில் ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரையான காலம் வரண்ட காலநிலையொன்றினைக் காட்டுகின்றது.

பல சூழல் அமைப்புக்களினால் ஆன இப்பூங்காவில் உயர் தாவர பன்முகத்தன்மையைக் கண்டு கொள்ள முடிகின்றது.  அதன்படி தாவர இனங்கள் சுமார் 187 ஆனவை​ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு அவற்றில் பெருமளவு ஈரநிலத்தை அண்டி வளரும் தாவர இனங்கள் ஆகும்.  அவற்றில் சதுப்புநில புதர்கள் இனங்கள் மற்றும் கடற் புட்கள் இனங்களையும் பெருமளவில் கண்டு கொள்ள முடிகின்றது.  சதுப்பு நில இனங்களாக சாம்பல் சதுப்பு நிலம், கறுப்பு சதுப்பு நிலம், கைதை, சிவப்பு சதுப்பு நிலம், கிண்ணை என்பவற்றைக் கண்டு கொள்ள முடிகின்றது.  பாரியளவு தாவரங்களை பூங்காவினுள் காண முடியாவிட்டாலும் அவற்றுள் ஆசியப் பனையை காணலாம். மேலும் நீர்த் தாவர இனங்கள் சுமார் 18 உம் இனங்காணப்பட்டுள்ளன. 

கிண்ணை
கிண்ணை


                                                        ஆசியப் பனை


சுண்டிக்குளம் தேசிய பூங்காவின் நிலம் ஈர மற்றும் உலர் ஆகிய இரு சூழல் அமைப்புகளினயும் கொண்ட நிலமொன்றாவதனால் விலங்குகளின் பன்முகத் தன்மையில் உயர் நிலையில்  உள்ளது. அதாவது இச்சூழல் அமைப்​​புக்களுள் உணவு அதிகமானதும் தமது இனத்தினைப் பெருக்குவதற்கு உகந்த இடங்கள் காணப்படுவதனால் பறவையினங்கள் சுமார் 136 இனங்காணப்பட்டுள்ளதோடு அவற்றினுள் புலம்பெயர் பறவைகளைப் பெருமளவு கண்டு கொள்ளலாம்.  அரிதாகக் காண முடியுமான பறவைகளாக பட்டைவால் மூக்கன், பெரும் பூநாரை, நெடுங்கால் உள்ளான், பழுப்புத்தலை கடற்பறவை, சாதா உள்ளான், பெரிய கோட்டான், பருத்த அலகு ஆலா, சின்ன பச்சைக்காலி, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்றவை இனங்காணப்பட்டுள்ளன.
பெரும் பூநாரை

பட்டைவால் மூக்கன்
நெடுங்கால் உள்ளான்

பழுப்புத்தலை கடற்பறவை

சதுப்பு முதலை

சாதா உள்ளான்

தேன் கரடி



சுற்றுலாவிடுதி


சுண்டிக்குளம் தேசிய பூங்காவினைப் பார்வையிடுவதற்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு கடற்கரையை அண்டியதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடத்திச் செல்லப்படுகின்ற சுற்றுலா விடுதிகளில் சுமார் பத்து பேருக்கு தங்குமிட வசதிகளை வழங்க முடிவதோடு அதனை ஒதுக்கிக் கொள்வது கொழும்பில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

சுண்டிக்குளம் தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

சுண்டிக்குளம் தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

 மேலும் விரிவாக விபரங்களை அறிந்து கொள்ள இணைப்பில் செல்லுங்கள். 

18 செப்டம்பர் 2018

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 3



இந்த வரைபடத்தில் இன்று இஸ்ரேல், பாலஸ்தினம் என பிரிக்கப்பட்டு காட்டபபட்டிருக்கும் நாட்டுக்கான வரலாறு இன்று நேற்றையதோ சில நூறு வருடங்கள் கொண்டதோ அல்ல!
கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சரித்திர முக்கியத்துவம் கொண்ட பூமி அது. அதாவது ஆபிரகாமுடைய வரலாறுட்ன சம்பந்தப்படுத்தபடும் இடம் இஸ்ரேல்.
ஆபிரகாமில் மகன் ஈசாக் ஈசாக் தன் மகன்கள் ஏசா, யாக்கோபுடன் ஊர் எனும் பட்டணத்தினை விட்டு கி.மு 2161 ல் தற்போதைய இஸ்ரேல் எனப்படும் கானான் தேசம் வந்ததிலிருந்து ஆரம்பமாகும் வரலாறு அது.
தம் வம்ச உரிமையை அசட்டை செய்த ஏசாவுக்கு கொடுக்காமல் யாக்கோபின் மேல் பிரியமாயிருந்தபடியால் யாக்கோபுவிற்கு இடப்பட்ட பெயரே இஸ்ரேல் ..

அதாவது ஆபிரகாம் சந்ததியில் வந்த ஈசாக்கின் மகன் யாக்கோபின் பெயர் இஸ்ரேல்.

யாக்கோபின் வழி வந்தோரே இஸ்ரவேலர் எனப்பட்டனர்.இந்த யாக்கோபின் மகனான யூதாவின் வழி வந்தோர் யூதர்கள்.
கானான் எனப்பட்ட இன்றைய இஸ்ரேலில் கி.மு.1871ம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சம் தாங்க இயலாது இஸ்ரேவேல் சந்ததியினர் எகிப்துக்கு நடந்து போனார்கள்.
எகிப்தில் 400 வருடங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிருந்து மோசேசால் மீண்டும் கி.மு.1441ம் ஆண்டில் இஸ்ரேல் தேசம் நோக்கி வந்தார்கள். நைல் நதியை நடந்தே கடந்தார்கள் எனும் வரலாறும் உண்டு.
கிட்டத்தட்ட 40 வருடங்கள் காடுகள், மலைகள், நதிகள் என அலைக்கழிக்கப்ட்டு எகிப்திலிருந்து புறப்பட்ட தலைமுறை அல்லாது புதிய ஒரு தலைமுறையாக மீண்டும் கி.மு.1400ம் ஆண்டில் அப்போதைய கானானியர் வசமிருந்த இஸ்ரேலை யோசுவா தலைமையில் போராடி வென்று இஸ்ரேலில் குடியேறினர்.
அதாவது கி,மு 1400 இலிருந்தே கானான் தேசம் இஸ்ரேல் என்று அழைப்படலாயிற்று. அன்று யோசுவா தலைமையில் தோற்கடிக்கப்பட்ட கானானியர் இன்றைய பாலஸ்தீனியர் அல்ல!
கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன்னரே யுதர்களுக்கு சொந்த மான இடமாக இருந்தது இஸ்ரேல். குர் ஆனையும், பைபிளையும் இணைப்பது சம வரலாறுகள் தான். இவ்வரலாறு குரானிலும் இருக்கும்.
சரி இங்கே பாலஸ்தினியர்கள் எப்படி வந்தார்கள் என்பதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
 யூதர்களும் இன்றைய கிற்ஸ்தவர்கள் என பைபிளை பின்பற்றுவோரும் ஒரே மார்க்கத்தவர் அல்ல.. யூதர்கள் தம்மை தவிர எவரையுமே இறைவனின் பிள்ளைகள் என ஏற்பதில்லை.
கிறிஸ்தவர்களை அவர்கள் புற ஜாதிகள் என்றே சொல்வர்.

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 2

இப்பகுதியில் பைபிள் மற்றும் குரான் வேதங்கள் சொல்லும் வரலாறுகளும் சேர்ந்து வருவதனால் மத நம்பிக்கையை மட்டும் நுழைத்து இதை வாசிக்காமல் வரலாற்றை மட்டும் கருத்தில் கொள்ளவும்.
வேதம் போதிக்கின்றேன் என்பவர்கள் கடந்து செல்லுங்கள். 
புரிதலுக்கு நன்றி 
நிஷா

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை எதனால் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது?
எருசலேம் எனும் இடத்தை தமக்கான புனித இடம என பலஸ்தீன அராபியரும், இஸ்ரேலிய யூதரும் சொந்தம் கொண்டாடி அவ்வுரிமையை விட்டுக்கொடுக்காமல் போராடுகின்றார்கள்.

பலஸ்தீனிய அராபியர்களும் இஸ்ரேலிய யூதர்களும் யார்? காலம் காலமாக இவர்களுக்குள் போராட்டம் தொடர்வது ஏன்?
இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.
தமிழ் மொழி பெயர்ப்பு பைபிள் ஆகாரை வேலைக்காரி என சொல்கின்றது. ஆனாலும் மூல மொழியில் என்ன எழுதப்ப்ட்டதென நாம் ஆராய்ந்து தான் முடிவெடுக்க முடியும்.
ஆபிரகாமின் முதல் மனைவிக்கு இரண்டாவது மகனாக பிறந்த ஈஷாக் வம்சத்தவரே யூதர்கள் என்பவர்கள்.
திருமணமாகி பல வருடங்களாகியும் தமக்கு பிள்ளை இல்லை என நினைத்தும் இத்தனை வருடத்துக்கு பின் பிள்ளை கிடைக்காது என நம்பி ஆகாரை திருமணம் செய்ய வைத்து ஆகாருக்கு பிறந்தவர் இஸ்மவேல் வம்சத்தில் தொடரும் அராபியர்களான பலஸ்தீனியர்கள்.
இருவருக்கும் தகப்பன் ஒருவர். தாய் தான் இருவர்.
எதிர்காலத்தில் சொத்துப்பிரச்சனைகள் வரக்கூடாது,உரிமைப்போராட்டம் இருகக்கூடாது என தம் மகனுக்கே அனைத்து உரிமையும் வர வேண்டும் என ஆபிரகாமின் முதல் மனைவி சாராயால் ஆகார் குழந்தை இஸ்மவேலோடு விரட்டப்பட்டாள். விரட்டப்பட்ட அவள் குழந்தையுடன் ,வானந்தரத்தில் அலைந்து திரிந்து தாகத்துக்கு தவித்தபோது பாதுகாப்புக்காக கையில் வைத்திருந்த தடியால் தான் நின்ற இடத்தில் அடிக்கும் போது தோன்றியது தான் இன்றைக்கு அராபிய முஸ்லிம்களால் புனித நீரென கொள்ளப்படும் ஷம் ஷம் நீர் என பைபிள் சொல்கின்றது. அதே இடத்தில் ஆபிரகாமும் இஸ்மவேலும் இணைந்து அந்த நீரினை தோன்ற வைத்ததாக இஸ்லாமியர்கள் நம்புகின்றார்கள்.
எப்படியோ ஷம் ஷம் நீர் புனிதமான நீர் என இரு சாராரும் நம்புகின்றார்கள்.
கஃபா எனும் பெயரில் ஆபிரகாமும் இஸ்மவேலும் இணைந்து கட்டியதாக இவ்விடத்தை புனித இடமென இன்னமும் மதிக்கின்றார்கள்.
இஸ்மவேலை குறித்து 
உன் சந்ததியினரைக் கடவுள் ஏராளமாகப் பெருகச் செய்வார். நீ ஒரு மிகப் பெரிய குலத்தை அறிமுகம் செய்து வைத்த பெருமையைப் பெறுவாய்.. 'நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதியாகாமம் 17:20)

அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12)
ஆசிர்வாதமும், சாபமுமாய வாக்குக்கொடுக்கப்ப்ட்ட இனம் அராபியர் இனம்.
அதனால் தான் அவர்கள் உலகை ஆண்டுகொள்ளும் வளம் கொழிக்கும் ஆசிர்வாதத்தை தம் வசம் கொண்டிருந்தும் உலகளவில் எல்லோராலும் பகைக்கப்படுகின்றார்களோ எனும் ஆழமான் சிந்தனைக்குள் நான் செல்ல விரும்ப வில்லை.
ஆனாலும் துரத்தி அடிக்கப்பட்டதாக சொல்லப்ப்ட்ட இஸ்மவேல் ஆபிரகாம் மரித்து அடக்கம் செய்யப்பட்டபோது உடனிருந்ததாக அதே பைபிள் சொல்கின்றது.
ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும்,முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். (ஆதியாகமம் 25:7,8,9)
இரு குமாரர்களும் சேர்ந்து தான் ஆபிரகாமை அடக்கம் செய்தார்கள் எனும் போது ஆபிரகாமின் 100 வயதில் ஈஷாக் பிறந்த பின்னும் 75 வருட காலம் உயிரோடிந்த காலங்களில் நடந்தவை குறித்து வரலாறு சொல்வது என்ன?
ஆபிரகாமும், இஸ்மவேலும் ஈஷாக்கும் தொடர்பில் இருந்திருக்கின்றார்கள் என்பதை நாம் பைபிள் வசனங்களை வைத்தே அறிந்திட முடிகின்றது.
அது எப்படி இருந்தாலும்........ ?
இஸ்ரேலுக்கு சொந்தமானவர்களென சொல்லப்படும் யூதர்களுக்கு அவ்விடம் வழி வழியாய் தொடரும் சந்ததிகளுக்கு வாக்களிக்கப் பட்டதெனும் கூற்றை மெய்ப்பிக்கும் ப்டி இஸ்ரேலை சாலோமேன் காலம் வரை யுதர்கள் ஆண்டதாகத்தான் வரலாறு சொல்கின்றது. சாலொமோன் காலத்தின் பின் தான் சொந்த நாட்டை விட்டு நாற்புறமும் விரட்டி அடிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்கின்றது வரலாறு.
பாலஸ்தீனம் அப்படி அல்ல!
பாலஸ்தீனம் என்பது ஆக்கிரமிப்புக்குள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட்டது.
இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உயர் பீடமான பாலஸ்தீன தேசிய கவுன்சில் நவம்பர் 15, 1988 இல் அல்ஜீரியாவில் கூடி ஒருதலைப்பட்ச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டது. பாலஸ்தீன நாடு மேற்குக் கரை மற்றும் காசா ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் ஜெருசலேம் அதன் தலைநகராகவும் இப்பிரகடனம் அறிவித்தது!
பலஸ்தீன நாடு" அரபு லீக் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டாலும் ஐக்கிய நாடுகள் இதனை இதுவரையில் அங்கீகரிக்கவில்லை.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் நாள் ஐ.நா. 
பாலத்தீனத்தை "பார்வையாளர் நாடு" (observer state) என்னும் நிலைக்கு உயர்த்தியது.

ஐரோப்பிய ஒன்றியம் பாலத்தீனத்தை முழு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்காவிடினும், அது பலஸ்தீனத்துடன் தூதரக உறவைப் பேணி வருகிறது. இதுதான் பாலஸ்தீனத்தில் நிலை.
இஸ்ரேலியர் ஜெருசலேம் கானான் இறைவனால் தங்களுக்கு வாக்களிக்கப்ட்ட பூமி என நம்புகின்றனர். அந்த இடத்தினை தம் சொந்த் பூமியென பாலஸ்தீனர் சொல்கின்றனர். என்ன தான் நடக்கின்றது?
தொடர்வோம்.

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 1


Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் எனும் தலைப்பிலான இக்கட்டுரை இஸ்ரேலிய வரலாறென தொகுக்கப்பட்ட நீண்ட தொடர் ஒன்றிலிருந்து 2014 ம் ஆண்டில் என்னால் சுருக்கமாய் தொகுத்து அமைக்கப்பட்டது.

ஐந்து பகுதிகளாக இங்கே பகிர்கின்றேன். அனைத்தையும் படியுங்கள்.

கி.முன்னரான அரசர்களின் ஆட்சிகாலங்களின் ஆண்டுகள் தோராயமாய் எழுதப்பட்டது!

ஆல்ப்ஸ் தென்றல் நிஷா
நிஷாந்தி பிரபாகரன்

எந்த ஒரு பிரச்சனைக்கும் ஆரம்ப வரலாறு ஒன்றிருக்கும் அந்த வரலாறை திரித்து புரிந்து கொள்வதனால் தான் உலகில் இனக்கலவரங்கள் 
வெடித்து இரத்த ஆறுகள் ஓடுகின்றன. இதற்கு இஸ்ரேல். பலஸ்தீனமும் வேறு பட்டதாக இல்லை.

அன்றைய இஸ்ரேலியர் சூழலில் தான் இன்று இலங்கை தமிழர்களென சொல்லபட்டவர்களும் இருக்கின்றோம். இனக்லவரத்தால் நாட்டைவிட்டு வெறியேறி அன்னிய நாடுகளில் குடியேறி அங்கேயே நம் சந்ததிகளை பெருக்கி கொண்டிருக்கின்றோம். சொந்த தேசத்தைவிட்டு துரத்தப்ப்ட்டவர்களாய் அகதிகளாக அலைகின்றோம். எதிர்காலத்தில் நம் சொந்த தேசமென ஈழத்தில் உரிமை கோருவது தவறெனில் இஸ்ரேலியர்களின் உரிமைப்போராட்டமும் தவறுதான்.
சிந்திக்க சில கேள்விகள்
1.புலம் பெயர்ந்து நம் நாட்டை விட்டு வந்ததனால் நம் தேசத்தின் மீதான உரிமையை விட்டுக்கொண்டுக்க வேண்டுமென சொல்ல முடியுமா?
2.எதிர்காலத்தில் நாம் புலம்பெயர்ந்த நாடுகள் தான் நம் நாடு என நாம் சொல்லி உரிமை கொண்டாட முடியுமா?
3.உலகத்தில் பல பகுதிகளிலும் சிதறிக்கப்பட்டிருக்கும் நாங்கள் எங்களுக்கான அதாவது தமிழர்களுக்கான் தேசம் என எதை உரிமை கோர முடியும்?
4.நாங்கள் சொல்வது இருக்கட்டும். நம்மை அரவணைத்திருக்கும் நாடுகள் முழுமையாக நம்மை நாட்டு பிரஜைகள் தாம் நாங்கள் என ஏற்குமோ?
இஸ்ரேலியர்களின் தேச மீட்ப்பு போராட்டம் குறித்த அகிம்சை வாதிகள் கருத்தை பாருங்கள்.
பலஸ்தீன, இஸ்ரேல் பிரச்சனை குறித்து 
1938 ல் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் காந்தி எழுதிய கட்டுரையில் சில வரிகள் தான் இந்த கட்டுரைக்கான தேடலை எனக்குள் கொடுத்தது.

உலகில் ஏனையவர்கள் சொல்வதைப் போல, எங்கே அவர்கள் பிறந்து வளர்ந்தார்களோ அதனையே ஏன் தங்கள் சொந்த நாடாக ஏற்றுக் கொள்ள முடியாது என அப்போதே காந்தி கேட்டிருக்கின்றார் .
இதற்கான பதிலை கடந்து வந்த வரலாற்றை படித்த பின் சிந்திப்ப்போம்.

1938 ல் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் காந்தி எழுதிய கட்டுரையை படியுங்கள். 
பலஸ்தீனத்தில் அரபு-யூத பிரச்சனைப் பற்றிய எனது கருத்தைக் கேட்டு ஒரு சில கடிதங்கள் எனக்குக் கிடைத்தன. ஜெர்மனியில் நிகழ்த்தப்பட்ட யூத இனப் படுகொலைகள் பற்றியும் கேட்கிறார்கள்.
நான் தென்னாபிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் அவர்களை நெருக்கமாக அறிவேன். சில யூத நண்பர்கள் கூட எனக்கு இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் யூதர்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகள் பற்றி அறிந்திருக்கின்றேன்.
நீதி என்ற தேவை ஏற்படும்போது இந்த அனுதாபங்கள் எல்லாம் என் கண்களை மறைக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையும் யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி நாடு கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவர்களுடைய வேதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே யூதர்கள் பலஸ்தீனத்தை நோக்கி திரும்புகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உலகில் ஏனையவர்கள் சொல்வதைப் போல, எங்கே அவர்கள் பிறந்து வளர்ந்தார்களோ அதனையே ஏன் தங்கள் சொந்த நாடாக ஏற்றுக் கொள்ள முடியாது?.
இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்கு சொந்தமோ, பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்கார்களுக்கு சொந்தமோ அது போல பாலஸ்தீன் அரபுகளுக்கு சொந்தமானது. பிற நாடுகளில் வசிக்கும் யூதர்களைக் கொண்டு வந்து அங்கே குடியேற்றுவது மனிதாபிமானமற்ற செயலாகும்.
நான் ஒரு யூதனாக இருந்து, ஜெர்மனியில் பிறந்திருந்தால், ஜெர்மனிதான் என் தாய் நாடு என்று நினைப்பேன். அங்கே என்ன கொடுமை நடந்தாலும் எனது சொந்த நாட்டில் அது நடப்பதாக எடுத்துக்கொள்வேனே தவிர, பிற நாட்டை என் தாய்நாடாக நினைத்து ஓடிவிடமாட்டேன்.
சந்தேகமில்லாமல் சொல்கிறேன் யூதர்கள் தவறான பாதையிலேயே போய்க்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வேதத்தில் குறிப்பிடப்படும் பாலஸ்தீன் என்பது இன்றைய புவியியல் எல்லைகளுக்குள் தேடப்படவேண்டிய நிலப்பரப்பு அல்ல, மாறாக அவர்கள் இதயங்களுக்குள்ளே இருக்கவேண்டியது.
அப்படியே அது அவர்களின் தாயகப்பிரதேசம் என்றாலும், இங்கிலாந்து ராணுவத்தின் துப்பாக்கி நிழலின் கீழ் திருட்டுத்தனமாக ஒரு தேசத்தை அடைய விரும்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
Mahatma Gandhi on ! Palestine written in 1938
The Jews In Palestine
By Mahatma Gandhi
Published in the Harijan
26-11-1938.

தேடல் உதவிகளும் ஆதாரமும் 
Dr E.K. Victor Pearce, Evidence for Truth: Arhaeology
மற்றும் விக்கிமீட்டியாவின் ஆங்கில தளங்கள்.
தொடரும்.