வணக்கம் நண்பர்களே!
ஆல்ப்ஸ்மலைத்தென்றல் எனும் வலைப்பூ மூலம் இன்று முதல் உங்களுடன் உறவாட வந்திருக்கும் தென்றலாய் நான்! ஆல்ப்ஸ் அடிவாரத்தில் வளர்ந்ததும்,வளர்வதுமாய்..!
தமிழை கற்றதனால் அல்ல.. என்னை தமிழ் தொட்டதனால் தொட்டும் தொடாமலும் தொடரும் என் தமிழுறவு...!
அகிலனின் குறிஞ்சிப்பாட்டின் நாயகியை போல் கண்டதையும் கற்று பண்டிதனாக முயற்சிக்கும் என்னுள் இருப்பது அணுவளவே! பதினாறு வயதிலிருந்து அன்னிய நாட்டில் அன்னிய மொழி பேசும் நிர்பந்தத்துடன் தமிழை என் மூச்சாக கொண்டதனால் தமிழும் தமிழ் உறவுகளும் என்னுள் உயிர்ப்பை தந்து கொண்டே இருக்கின்றார்கள்.
முத்தமிழ் மன்றமெனும் முத்தில் கற்றவைகளும் பெற்றவைகளும் அனேகமே!
எனக்கேதெரியாமல்என்னுள்இருப்பதைவிளையச்செய்பவர்களில்.சேனைத்தமிழ்உலாநட்புக்கள்...நண்பன்,சம்ஸ்,ஹாசிம்முப்படையணியும்..சிறகை விரிக்கும் சிந்தனைவாசியான மனசு குமாரும் முக்கிய பங்காற்றுகின்றார்கள்.
எனக்கேதெரியாமல்என்னுள்இருப்பதைவிளையச்செய்பவர்களில்.சேனைத்தமிழ்உலாநட்புக்கள்...நண்பன்,சம்ஸ்,ஹாசிம்முப்படையணியும்..சிறகை விரிக்கும் சிந்தனைவாசியான மனசு குமாரும் முக்கிய பங்காற்றுகின்றார்கள்.
வலைப்பூ வேண்டும் அக்கா என ஆர்வத்தினை ஏற்படுத்த்தி எனக்கென வலைப்பூவை திறந்து கொடுத்த குமார்... நிஷாக்கா உங்க வலைப்பூ இப்படில்லாம் அழகா இருக்கணும் என சண்டை போட்டு தன் நண்பனுடன் பேசி அழகாய் லோகோ வடிவமைத்த முஸம்மில் .. நண்பனுக்காக அல்லாது இந்த தோழிக்காகவும் தானாய் முன்வந்து அழகான வடிவமைப்பை உருவாக்கிட முயற்சிக்கும் சம்ஸ்.... இன்னும் இன்னும்... கடந்த காலத்தில் என்னுடன் இணைந்தோர்... இருந்தோர். இருப்போர்...இனிவரும்காலத்தில் என்னுடன்பிறப்பாய் ஆக போகின்றவர்கள்
அனைவருக்கும் நன்றி நன்றி.
நண்பா உனக்குள் நட்பாயிருப்பேன்!
தப்பாயிருந்தால் திட்டித்தீர்ப்பேன்!
அப்பா உனக்கு துப்பாய் நானிருப்பேன்!
வெண்பா தெரியா பெண்பாவை நானப்பா.!
ஆல்ப்ஸ் தென்றலாய்
உங்கள் நிஷா