உலகவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஜனவரி 2020

நாடு பற்றி எரியும் போது பிடில் வாசித்தது நீரோ மட்டுமல்ல.!

நாடு பற்றி எரியும் போது பிடில் வாசித்தது நீரோ மன்னன் மட்டுமல்ல.
அவுஸ்ரேலிய நாட்டு பிரதமரும் பிடில் வாசிக்கின்றார்.
  

அவுஸ்ரேலியா காடுகள்  ஆண்டு தோறும் எரிவதும், எரிந்து பட்டுப்போன மரங்கள் துளிர்ப்பதும், எரியும் மரங்களின் வித்துக்கள் வெடித்து சிதறி விதையாக்குவதும், தன்னைத்தானே தற்காத்து கொள்ளும் இயற்கையின் மறு சுழற்சியாக இருக்க, இக்காலத்தில் மட்டும் பேரிடராய், பேரிழப்புகளோடு 5  மாதங்கள் கடந்தும் காடுகள் எரிவதற்கு காரணம் என்ன?

அவுஸ்ரேலியா காட்டுத்தீக்கு காரணம் தேடி காட்டின் வளத்தையும்  மரத்தையும் செடியையும் உயிரையும் தன உயிர் போல்  நேசித்து  பாதுகாக்கும்  ஆதிவாசி பழங்குடி மக்கள் மீதும், மின்னல் மீதும், வெப்பத்தின் மீதும், கழுகு போன்றஉயிரினங்கள் காலம் காலமாக தொடரும் வாழ்க்கை சுழற்சிகள் மீதும் பழி சொல்லி  ஊடகம் தன்னை தற்காத்து கொள்(ல்) கின்றது. சமூகம் கண்ணை முடி ஆமோதிக்கின்றது .
I
ஆனால் இது இயற்கையின் அழிவு அல்ல என்பதை தொடர்ந்த செயல்பாடுகள் நிரூபிக்கின்றன


பொதுவாகவே கோடை காலத்தில் பூமியின் வெப்பம் அதிகரிக்கும் போது காற்றில் ஈரப்பதம் குறைந்து, நிலமும் வறண்டு போய் விடும். இக்காலத்தில் நெருக்கமாக வளர்ந்து ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள்  ஒன்றோடொன்று உராய்ந்தோ,மின்னல் தாக்கியோ, வெடித்தோ, மனிதர்களின் தவறுகளினாலோ எரிய ஆரம்பிக்கும்.

எளிதில் எரியும் எண்ணெய் தன்மை கொண்ட
யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த அவுஸ்திரேலியக் காடுகளில் பூமியின் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி  வெடித்து, சிதறுவதும்  காடு தீப்பற்றி  எரிவதும்  ஆண்டு தோறும் நடந்து கொண்டிருக்கும் சம்பவம்.

காட்டுத்தீ என்பது அவுஸ்ரேலியாவுக்கு புதிதல்ல!

காடுகள் பற்றி எரிவதும், சாம்பலிலிருந்தும்  முளைப்பதும் காலம் காலமாக இயற்கையாக நடைப்பெறும் சுத்திகரிப்பு
சுழற்சியாகியாகும்!

மரங்கள் எரியும் போது வெடித்து சிதறும் விதைகள் பல பக்கமும் பரவி புது மரங்கள் முளைப்பதும்,எரிந்து பட்டுப்போன மரங்கள் துளிர்ப்பதும். பெரும் வனாந்தரங்களில் நடைப்பெறும்  இயற்கையின் அற்புதங்கள்!

காடுகள் தம்மை தாமே புதுப்பித்து கொண்டே இருக்கும்!

ஆஸ்திரேலியாவில் பெரும்பாலும் வருடா வருடம்  டிசம்பர்இறுதியில் அங்கங்கே   ஆரம்பிக்கும் காட்டுத்தீ  ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் தீவிரமடைந்து ஏப்ரல் மாதங்களில் நிதானமாகும்.

ஒரே நேரத்தில்  ஐந்தாறு  இடங்களில் எரிந்தாலும்  பழங்குடி மக்களின் Back Burning  பழைமையும், நவீனத்துவ  தீயணைப்பு நுட்பங்களையும்  இணைத்து  போதுமான பணியாளர்களும் தொடர்ந்து முன்னேற்பாடடோடு செயல்பட்டு  காட்டுத்தீ எனும் இயற்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள்.

பழங்குடி மக்கள்  அங்கங்கே குறிப்பிடட எல்லைகளுக்குள் திட்டமிட்டு தீயை வளர்த்து காட்டுத்தீயின் திசையையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவார்கள். காட்டை வசப்படுத்தி வாழும் அவர்கள் பகுதி, பகுதியாக  காடு வாழ் உயிரினங்களையும், பிராணிகளையும் தம்மையும்  காட்டுத்தீயிலிருந்து காப்பாற்றி இடம்பெயரச்செய்வார்கள்.

காலம் காலமாக தொடர்ந்து நடக்கும் சம்பவம் ஒன்று
பரபரப்பாகியதும், கட்டுப்படுத்த முடியாத படி பல மாதங்கள் தொடர்ந்து எரிவதும், பல நுறு இடங்களில் பற்றிபரவிக்கொண்டிருப்பதும்
முன்னெப்போதும் இல்லாத படி அதிக இழப்புக்களோடு  தொடர்வதும்
ஏன் எனும் கேள்வி எமக்குள்  தோன்றுகின்றதல்லவா?

காட்டுகின்றது.



 •
இக்கால சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி  இதனால் பரபரப்புக்கு காரணமாக இருந்தாலும்.......?

முன்னெச்சரிக்கை செய்தும் அதை அசடடை செய்த, தகுந்த தற்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிய அரசின் மெத்தனம்  இத்தனை இழப்புக்களின் பின்னனியில் இருக்கின்றதா?
எனும் ஐயம் எழும் காரணங்களை பார்க்கலாம்.

* 2019 / 2020  காட்டுத்தீயால மனித உயிரிழப்பு 200க்கும் அதிகமாகி  இருக்கின்றன.

 * காட்டு உயிரினங்கள், பறவைகள் ,கங்காரு இனங்கள் கோடிக்கணக்கில் அழிந்து போயிருக்கின்றது.

* இன்னமும் பல இடங்கள்ள மக்கள் வெளியேற்றம்  தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

* பல ஆயிரம் மில்லியன் டொலர் பொருளிழப பும்

* இனி எப்பேதும் சீர் செய்ய முடியாத இயற்கை அழிப்பும்

* காற்றின் மாசும் அதிகரித்திருக்கின்றன

இப்படியான ஆபத்துக்கள் நாடடை சூழ்ந்து கொண்டிருப்பதையும்,கடந்த காலங்களை விட இவ்வருடம் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதையும் ஆளும் மத்திய அரசுக்கு அதிகாரிகள் சில மாதங்கள் முன்பே அறிவித்திருக்கின்றார்கள்

அனைவரும்  கூடி பேசி பாதுகாக்கும் தீர்வுகளை குறித்து ஆராயலாம் எனும் தீயணைப்புப் படையினரும், விஞ்ஞானிகளும்  வைத்த கோரிக்கைகள், வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

முன்னெச்சரிக்கை செய்தும்
அவைகளை அசடடை செய்த
ஆஸ்திரேலியா அரசாங்கம் இத்தனை அழிவுக்கு பின்னும் தொடர்ந்து
பற்றி எரியும் நெருப்பை கட்டுப்படுத்த எந்த வழியும் இல்லாத கையறு நிலையில் தாமதமாகவே  விழித்து கொண்டு  நிற்பதாக போக்கு

❓காட்டுத்தீக்கு உலகத்தின் வெப்பமயமாக்குதலும் காரணம் என்றால் உலகம் வெப்பமயமாதலுக்கு முழு மூலக்காரணம் யார்?

பூமி வெப்ப மயமாக்குவதன் விளைவுகளாக கால நிலைகள் மாறி இயற்கை சீறிச்சினந்து
நாட்டின் வளங்களும், பொருளாதாரமும்,உயிர்களும் அழிகின்றது எனபதை  இக்கால ஆஸ்திரேலியா அரசாங்கம் ஒப்புக்கொள்ள  தயார் இல்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயம்.

பூமி வெப்பம் அடைவதை தடுக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக செயல் பட்ட காலங்களும் இருந்தது.

இன்றைய அரசாங்கம் பூமியை தோண்டி நிலக்கரிகளை எடுக்க அனுமதிப்பதன் மூலம் தாமும் சேர்ந்து  பூமியை வெப்பமாக்குகின்றது.

இவ்விடத்தில் தான்  இந்த காட்டுதீ இயற்கையை மீறிய செயற்கையாக திடடமிட்டு தீ வைக்கப்பட்டிடுக்குமோ எனும் ஐயம் எழுகின்றது

இந்த முறை கோடைக்கு முன்பே செபடம்பரில் நியூ சவுத் வேல் வடக்கில் ஆரம்பித்த  காட்டுத்தீயும் தென்கிழக்கில் தொடர்ந்து விக்ரோரியாவில் நடுக்காடு என  வழக்கமில்லாத புது முறையில் தீ பரவி  ஒன்றை கட்டுப்படுத்து முன் இன்னொரு இடம்  என்று நுறு இடங்களுக்கும் மேல் தொடர்ந்து எரிவதன் மர்மம்  என்ன?

பூமி பாதிக்கப்படுகின்றது, பூமியை தோண்டி ஆயில்கள் எடுக்கின்றோம் என பூமிக்குள் கிடக்கும்னு CO2  வெளிக்கிளப்புவது நல்லதல்ல, காற்றோடு  கலந்து வளி மண்டலத்தில் காபனீர் ஓட்ஸைட் அதிகரிப்பும் பூமி வெப்பமாக்குவதன் பிரதான வகிபாகம் பெறுகின்றது  என பூமி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தும். நிலக்கரி  தோண்ட அரசு கொடுக்கும் அனுமதிக்கும்,
எண்ணெய் வளம் கொண்ட யூகலிப்டஸ் காடுகளின் அழிவுக்கும்.........?

காடுகளும் அதன் உயிரினங்களும், மனித உயிர்களும் பாதுகாக்கப்படுவதை
விட அந்த நிலங்களிலிருந்து கிடைக்க போகும்  இலாபம் பேராசைக்கு பலியாகி போதுமான  தீயணைப்பு பணியாளர்கள், தீயணைப்பு கருவிகளைமுன் ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் தற்காப்பு உதவிகளும் செய்யாமல் வேடிக்கை பார்த்திருக்கின்றது

ஒரு பக்கம் காடெரிந்து உயிர்கள் அழிய  இன்னொரு பக்கம் புதுவருட கொண்டாடடங்களும்
காளியடடங்களும், ஹவாய் தீவில் உல்லாசமுமாக இந்த காட்டுத்தீயின் பின்னால் மறைந்திருக்கும்  அக்கிரமங்களை குறித்து மக்கள் முன் வெளிப்படுத்தாமல் பழங்குடி மக்கள் மீதும், இயற்கை மீதும் பழிகளை  தேடி அலைந்து காரணமாக்கி தன்னை சமாதானப்படுத்தி கொள்கின்றது  சமூகம்.

ஆண்டுகள் தோறும்  அதிகரித்து வரும் வெப்பம், அதனால் வரும் பின் விளைவுகள் குறித்து முன்னெச்சரிககை இல்லாமல்
Liberal Party of Australia 🇦🇺
ஆளும் அரசு ஆடசிக்கு வந்தவுடன் தீயணைப்பு பணியாளர்களை
எவ்வித தொலை நோக்கமும் இல்லாமல்
பணிநீக்கம் செய்திருக்கின்றது.

குறைந்த  இடங்களில் தீ எரிந்த கடந்த காலங்களில் நிறைந்த தீயணைப்பு பணியாளர்கள் விழிப்போடு செயல்படடார்கள். இன்று அதிக இடங்களில் பரவி எரியும் தீயை அணைக்க  போதுமான பணியாளர்களும் உபகாரணங்களும் தம்மிடம் இல்லை என பிரதமரை நோக்கி குற்றம் சாட்டுகின்றார் தீயணைப்பு துறை அதிகாரி.

அரசின் மெத்தனம் கடந்தும் நாடடையும் காடடையும் பாதுகாக்க தாமாக முன் வந்துஎவ்வித பொருளாதார எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணித்து  இணைத்து  காட்டுத்தீயோட போராடி 6 Fire fighters  உயிரிழந்து இருக்கின்றார்கள்.

தன்னார்வலர்களாக இணைந்த
பொதுமக்களின் ஆதரவு இல்லை எனில் இழப்பின் வீரியம் இன்னும் அதிகமாகி இருக்கும்.

மனிதர்கள்  தெரிந்தே செய்யும் தவறுகளால்  பூமி வெப்பமடைவதும் ‚, காடுகள் எரிவதும்,உயிர்கள் அழிவதும் தொடராமல் தடுக்கப்படவேண்டும்.

இயற்கையை வெல்ல மனிதனால் முடியாது போகட்டும்.இயற்கை தன்னை தானாகவே தற்காத்து கொள்ளும் வழிகளையும் அடைக்காது பாதுகாப்போம் 🙏

#Bush_Fires_in_Australia
#Donate_for_Australia

08 செப்டம்பர் 2019

சந்திரயான்-2

சந்திரயான்-2
தகவல் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் தரையிறங்கி இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் - 2 இன் சுற்றுக்கலன் ( ஆர்பிட்டர் ) தெர்மல் இமேஜிங் மூலம் விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ ( Indian Space Research Organisation ) அறிவித்திருக்கின்றார்கள்.
சந்திரயான் -2 Orbiter (சுற்றுக்கலன்) - ஒரு வருட ஆய்வுக்காலப் பயண சுற்றுப்பாதை.
சந்திரனின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் ( hard-landing ) தரையிறங்கி இருப்பதாகவும் அதனை தொடர்பு கொள்ள முயற்சித்து கொண்டிருப்பதாகவும் இஸ்ரோ தகவல் வெளியிட்டிருக்கின்றார்கள்.
எனினும் சந்திரயான் 2 இன் சுற்றுக்கலன் ( ஆர்பிட்டர் ) சுற்றுப் பாதையிலும், நிலவின் மேற்பரப்பிலும் நிலவைக்குறித்த தன் ஆய்வை அடுத்து ஒருவருடம் தொடர்ந்து கொண்டிருக்கும்.

 சந்திராயன் 2 இல் விக்ரம்  ரோவர் மற்றும் பிராக்யானின் இயக்கம் குறித்து  இஸ்ரோ வெளியிட்டிருந்த  பிரசன்ரேசன் இந்த லிங்கில் காண முடியும்/
https://www.isro.gov.in/sites/default/files/videos/ch2-eng-mp4-8mbps.mp4.mp4?fbclid=IwAR3u5D6C6nqB9QvgBEJmOi9wBB20h8KDoXqq8ktXv0zX9iqI69PNlzF8gsg


சந்திராயன் - 2
இந்திய விண்வெளியினால் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா விண்கலம் சந்திரயான்-1 2008 ஆம் ஆண்டில் அனுப்பட்டது. இரண்டாவது தடவையாக நிலவினுள் நுழைந்து ஆய்வு செய்யும் திட்டத்தோடு 22.07.2019 இல் சந்திரயான் - 2 விண்கலம் ஏவப்பட்டது.
சந்திராயன் - 2 இன்

ஒட்டு மொத்த இயக்கத்தை காட்டும் அசை படம்

சந்திரயான் -2 இன் நோக்கங்கள்
நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்கும் திறனை நிரூபிப்பது(soft-land) ரோபோ ரோவரை இயக்குவது. அதனூடாக நிலவினுள் நுழைந்து ஆய்வுகள் மேற்கொள்வது.

சந்திராயன் 2
Orbiter (சுற்றுக்கலன்) - ஆய்வுக்காலம் ஒரு வருடம் 
   Vikram lander எனும் தரையிறக்கி Pragyan rover எனும் உலாவியையும் இணைத்து உருவாக்கப்பட்ட விண்கலம்.

Vikramlander-(தரையிறக்கி) ஆய்வுக்காலம்  14நாட்கள்

 ➤(Pragyan rover நிலவின் மென்மையாக தரையிறக்கும் பணிக்கான செயல்பாட்டு க்கு திட்டமிடப்பட்ட சாதனம்.கமெரா மற்றும் உயர் தெளிவுத்திறன் வாய்ந்த தொழில் நுட்ப சாதனங்களுடன் பொருத்தப்பட்டது)ஆர்பிட்டருடன்

பயணித்துஅதன் சுற்றுப்பாதையிலிருந்து பிரிந்து Pragyan rover ஐ நிலவில் மேற்பரப்பில soft landing / ஷாப்ட் லாண்டிங்க செய்வது Vikram landerக்கான முக்கியமான பணி.
Pragyan rover (சில்லுகளுடனான உலாவி)
  Vikram lander இலிருந்து பிரியும் பிராக்யான் ரோவர் 6 சக்கரங்களுடன் சந்திர மேற்பரப்பில் வினாடிக்கு 1 செ.மீ என்ற விகிதத்தில் நகர்ந்து, ஆன்-சைட் வேதியியல் பகுப்பாய்வு செய்து கிடைக்கும் தகவல்களை லேண்டருக்கு அனுப்பும், விக்ரம் லேண்டர் அதை பூமியில் உள்ள மிஷன் கன்ட்ரோலுக்கு அனுப்பும்.
Vikram lander சந்திரனில் தரையிறங்கும் செயல்பாடு.

இலக்குகள்
விக்ரம் லேண்டரும்.பிராக்யான் ரோவரும் சந்திரனுக்கு அருகில், தென் துருவப் பகுதியில் சுமார் 70 ° தெற்கே அட்சரேகையில் ஏறக்குறைய 7 செப்டம்பர் 2019 அன்று அதிகாலை 1:50 மணிக்கு தரையிறங்கும். பிராக்யான் நிலாவினுள் ஊர்ந்து மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு (1 நிலா நாள்) மேற்கொள்ளும். ப்ரக்யான் திரட்டும் தகவல்கள் விகரம் மற்றும் சுற்றுக்கலனூடாக பூமிக்கு அனுப்பப்படும்.
சுற்றுக்கலன் - Orbiterஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 x 100 கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும்.

⧪ 22.07.2019 நிலவை நோக்கி ஏவப்பட்டது சந்திராயன் 2 எனும் பெயரிடப்பட்ட Orbiter.
⧪ 20.08 2019 இல் சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்து பிரிந்து செல்ல வேண்டிய தரையிறக்கியான விக்ரம் லேண்டரின் தரையிறக்கத்திற்கான சுற்றுப்பாதை பொருத்தும் பணிஆய்வுகளை மேற்கொண்டது.
⧪ 02. 09.2019 விக்ரம் லேண்டர் அதன் ஆர்பிட்டரிலிருந்து பிரிந்து பிராக்யானுடன் நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது.
⧪ 07.09.2019 அதிகாலை 1.50 க்கு விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க வேண்டும். எனினும் அதிகாலை 1:52 மணியளவில், தரையிறக்கியான விக்ரம் லேண்டர் அதன் பாதையிலிருந்து விலகி சுமார் 2.1 கிலோமீட்டர் (1.3 மைல்) தொலைவில் தகவல்தொடர்பை இழந்தது.
தற்பொழுது நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர், தெர்மல் இமேஜிங் மூலம் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்திருக்கின்றது.

படங்கள் அனைத்தும்  இஸ்ரோ  விக்கிமீடியா தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. 

24 ஆகஸ்ட் 2019

அமேசான் என்கிற ஆச்சரியம்!

அமேசான் என்கிற ஆச்சரியம்!
வருடமெல்லாம் கொட்டும் மழை! 
சூரிய வெளிச்சமே பார்க்காத தரை!
மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு!
அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்!!
இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்!
ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்.
இந்த காடுகள் ஆபத்தானவை.
இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது!
இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.
இச்சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்!!
இதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும்.
இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.
இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது.
முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
இந்த காடு மற்றும் நிதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள்.
அமேசான் நதி பிறக்கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக் கொண்டு கடலில் சென்று கலக்கிறது.
'இங்கு இருக்கும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை' என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்கு உணர்த்தும்.
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
அமேசான் ஆற்றின் எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை!
இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும்!
எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை.
1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை!
அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும்.
மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக வினாடிக்கு 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது.
ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது!
மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும்.
முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது.
பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் 'மனவுஸ்' வரை செல்லலாம்.
சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம்.
அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை.
பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும்.
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
''அமேசான் மழைக்காடுகள்''
அமேசான் காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லையகளாக கொண்டுள்ளது.
சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது.
பூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது.
பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான்.
மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது.
இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன.
உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் இருக்கின்றன.
3,000 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன.
உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன.
எண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள்.
அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உலகிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.
ஆகஸ்ட் 2012-க்கும், ஜூலை 2013-க்கும் இடையே அமேசான் வெப்பக் காடுகள் அழிக்கப்படும் வீதம் 28% அதிகரித்திருப்பதாக பிரேசில்அறிவித்திருக்கிறது.

⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்.
இங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள்.
கி.பி. 1500-ம் ஆண்டு 6,090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தார்கள்.
ஆனால் இப்போது, வெறும் 2.5 லட்சம் பேர் தான் உள்ளனர்.
இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்களை சேர்ந்த மக்கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர்!
இன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது.
காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல்.
ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.
ஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர்.
ஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர்.
அவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவை தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்.
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
உலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன.
பெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன.
இதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
இந்தப் பகுதியில் காணப்படும் ஈல் வகை மீன் ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது.
இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.
தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன.
அதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம்.
ராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு.
இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன.
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது!
இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இது 'வாலியா ஹம்சா' என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது.
அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது.
சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது!
நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்.
எனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
குளிரான அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது.
4 மைல் நீளமுடைய இந்த ஆறு பேரு நாட்டின் Mayantuyacu பகுதியில் Andrés Ruzo என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆற்றில் விழுபவர்கள் அனைவரும் தீயில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆற்றுக்கு பின்புறத்தில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது.
அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து பாறையில் விழும் நீர்தான் சூடாகிறது.
உடைந்த பாறை கற்களோடு ஆவி பறக்க அதன் கொதியாற்று படலம் ஆரம்பிக்கிறது.
இதன் அகலம் 25 மீட்டர் (82 அடி) இதன் ஆழம் 6 மீட்டர் (22 அடி) இதன் வெப்பம் ஆவி பறக்கும் அளவுக்கு Tea போடலாம் என Gizmodo ஆய்வு கூறுகிறது.
100 டிகிரிக்கான கொதிப்பும் ஆவியாதலும் இருக்கிறது.
விலங்குகள் மட்டுமல்ல நாம் தவறிவிழுந்தாலும் வெந்து இறப்பது உறுதி.
இது சிறிய ஆறு.
ஆனாலும், இதற்கு, மொத்த நீர்பரப்பும் கொதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மதிப்பிலான வெப்பம் பூமியிலிருந்து எப்படி கிடைக்கிறது என்பதுதான் வியப்பு.
ஆனால், இந்த ஆற்றுக்கு வெகுதூரத்தில்தான் உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன.
வெப்பத்திற்கு காரணமான பூமியின் வெப்ப ஊற்றுகள் ஓரிடத்தில் உள்ளதா இந்த ஆற்றுப்பாதையின் நெடுகிலும் உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
 நகலெடுத்த பதிர்வு
தொகுத்தவருக்கு நன்றி💗💗💗💗

அமேசான் காட்டுத்தீ

உலகம் தன் கவனத்தை அமேசானின் பக்கம் திருப்பியே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்,இயற்கையை நேசிக்கும் மக்களும் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள்.
ஆம்......! சர்வதேச அழுத்தங்களை தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை காட்டுத்தீயை அணைக்க இராணுவத்தை பயன் படுத்தும்படியான உத்தரவை பிரேசில் ஜனாதிபதி வழங்கி இருக்கின்றார்.
இன்று சனிக்கிழமை தொடக்கம் அடுத்த ஒரு மாதம் இராணுவம் அமேசான் பகுதிகளில் எரியும் காட்டுத்தீயை அணைக்கும் செயல்பாடுகளை தொடரும்.
⧪ அமேசான் காட்டுத்தீ கவனயீர்ப்பு மனிதச்சங்கிலிப்போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிடும் ஜப்பான்.
⧪ பிரேசிலில், 40 நகரங்களில்அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டன,
⧪ பல ஐரோப்பிய தலைநகரங்களில் பிரேசிலிய தூதரகங்கள் மற்றும் தூதரகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
⧪ காடழிக்கப்படுவது தொடருமானால் பிரேசில் நாட்டின் மீதி பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என எச்சரிக்கின்றார் பிரான்ஸின் அதிபர் மக்ரோன்
⧪ பிரேசில் தனது காடழிப்பு கொள்கைகளை மாற்ற வேண்டும் எனும் சர்வதேசக்கவனயீர்ப்பை வேகப்படுத்தும் முயற்சிகளாக அமேசான் காடழிப்பு தொடர்பாக பேச உலகின் முக்கிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் இந்த வார இறுதியில் அவசரப்பேச்சுவார்த்தைகக்காக ஒன்று கூடுகின்றார்கள்.
⧪ சனிக்கிழமையன்று பியாரிட்ஸில் உள்ள ஜி 7 க்கு மாநில மற்றும் அரசாங்கத் தலைவர்கள் வரவிருந்த நிலையில், பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் இடையிலான மெர்கோசூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைத் தடுப்பதாக அச்சுறுத்தி இருக்கின்றன.
------ போல்சனாரோ, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் காட்டுத்தீயை அணைக்க எடுக்கும் அவசர முயற்சிகள் தொடர்பாக தவறான தகவல்களை தந்ததாக பிரான்ஸ் குற்றம் சாட்டியது, எனவே பிரேசில்,அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகிய நாடுகளுடனான மெர்கோசூர் ஒப்பந்தத்தை பிரான்ஸ் ஆதரிக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தைக்கு இரண்டு தசாப்தங்கள் எடுத்துள்ளது, ஆனால் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை.
⧪ ஏனைய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களும் மெர்கோசூர் (தெற்கு பொது சந்தை) ஒப்பந்தத்திலிருந்து விலகிச் செல்ல நிர்பந்திக்கப்படுகின்றார்கள்..
⧪ முதல்முறையாக ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் Boris Johnson, அமேசான் விடயத்தில் தான் “ஆழ்ந்த அக்கறை” கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்,
⧪ தொழிலாளர் தலைவர்Jeremy Corbyn போல்சனாரோவுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைககளுக்காக அழுத்தம் கொடுத்திருக்கின்றார்.
⧪ பிரேசிலின் முன்னாள் சுற்றுச்சூழல் மந்திரி Marina Silva "இந்த நாடு அமேசானில் காடழிப்பைக் குறைக்க ஒரு கடுமையான முயற்சியை மேற்கொண்டது, இப்போது எல்லாவற்றையும் தவிர்த்து வருவதை நாங்கள் காண்கிறோம்"
இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த வேண்டும், ”என்று கூறி இருக்கின்றார்.

⧪ Angela Merkel, German "அமேசான் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து பிரேசிலுக்கும் பிற பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் அதிர்ச்சியையும் அச்சுறுத்தலையும் தருகிறது" என்று மேர்க்கெலின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் வெள்ளிக்கிழமை பேர்லினில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அமெரிக்கா அதிபர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. டிரெம்ப் காட்டுத்தீயை எதிர்த்து போராட நாங்கள் உதவுவோம் என தெரிவித்திருக்கின்றார்.
Wildfires in the South America including the Amazon rainforest of Brazil on 20 August. 
Photograph: VIIRS/Suomi NPP/Worldview/NASA

A Nasa images shows several fires burning in Brazilian states.
Photograph: HO/AFP/Getty Images 
Protesters march in Rio on Friday against the government of Brazilian president Jair Bolsonaro over the fires in the Amazon rainforest.
Photograph: Mauro Pimentel/AFP/Getty Images

அமேசான் மழைக்காடுகள் கற்றுத்தரும் பாடம்.
சமூகம் சார்ந்த அழிப்புக்களை எத்தனை மூடி மறைக்க நினைத்தாலும் அவை வெளி வரும் போது 
அப்பிரச்சனை சார்ந்து கையாளக்கூடியவர்கள் 
கவனத்தில் கொண்டு சேர்க்கப்படுமானால் அத்தனைக்கத்தனை விரைவாக பயனும் அடைவோம் என்பதை அமேசான் காட்டுத்தீக்கு பின்னரான மக்கள் குரல்கள் நிருபிக்கின்றன.

ஆம்......! அமேசான் காட்டுத்தீ பிரேசில் அரசின் மீதான சர்வதேச நெருக்கடியை உருவாக்கிக்கொண்டிருக்கின்றது.

23 ஆகஸ்ட் 2019

அமேசான் மழைக்காடுகள் எரிந்து கொண்டிருக்கிறன..

உலகத்தின் மிகக் குறைந்த கவனத்தைப் பெற்ற மற்றொரு பேரழிவு!
எங்கள் பூமி எரிந்து கொண்டிருக்கிறது!
நாம் வாழும் பூமிக்கு தேவையான சுவாசக்காற்றின்  20% வீத ஆக்ஸிஜனைக் கொடுக்கும் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள் எரிகின்றன.
உலகின் மிகப் பெரிய உயிர்ப் பெருந்திணிவும் பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான்_காடுகள்_பற்றி எரிகிறது.


ஆம் அமேசான் மலைக்காடுகள் .....!
உலகத்தின் சுவாசம் 
பூமிப்பந்தின் நூரையீரல் 
பூமியில் ஈரப்பதமான இடங்களில் முக்கியமானதுமாகும்.!
பிரேசில்,பொலிவியா மற்றும் பராகுவே: அமேசானின் பரந்த பகுதியை தம் வசம் வைத்திருக்கும் மூன்று நாடுகளிலுமிருக்கும் அமேசான் மழைக்காடுகள் மூன்று வாரங்களாக தொடர்ந்து எரிகின்றது.
பூமியின் குளிரான இடங்களில் ஒன்றான சைபீரியா தீப்பிடித்து எரிகிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகள் பல வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெட்ரோலிய மற்றும் கணிம வள நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அதில்  60% அமேசான் காடுகளை உள்ளடக்கிய பிரேசில் முக்கியத்துவம் பெறுகின்றது.
 பூமியில் தண்ணீர் வளமிக்க நாடுகள் பட்டியலில் முதலாவது இடத்தில் இருப்பது பிரேசில் 
 பூமியின் மனிதர்கள் சுவாசிக்க தேவையான பிராண வாயு / ஒட்சிசனில் 20% வீதம் அமேசான் காடுகளின் மூலமே கிடைக்கின்றது.
 மழைக்காடுகள் கார்பனை உறிஞ்சி  பிராணவாயுவான ஆட்சிசனை வெளியிடுகின்றன.
⧪ பூமியின் 10% விலங்கினங்கள், 
⧪ 40,000 மர செடி வகைகள்
 3000 பழ வகைகள் 
அரிய வகை தாவரங்கள், கனிமங்களை தன்னகத்தே மறைத்து அமேசான் காடுகளை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.
அரசியல் ஆளுமைகளின் அதிகார, பேராசையினால் ஏற்பட்ட வெறி காட்டுத்தீயாக எரிந்து கொண்டிருக்கின்றன. முழு வனத்திலும் 30 வீதம் முற்றாக  சாம்பலாகியும்  தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கின்றன.
அமேசன் காட்டின் வளங்களை நாட்டின் முன்னேற்றத்துக்காக பயன் படுத்துவதாக பிரோசிலிய அதிபர் பொல்சானாரோ தன் தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தார். அவரின் வாக்குறுதியை நிறைவேற்ற அங்கே வாழும் பழங்குடி மக்கள் தடையாக இருப்பதனால் அவர்களை காடுகளை விட்டு துரத்தி விட செயற்கையான முறையில் காட்டுத்தீ ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என அமேசான் Waorani  பழங்குடி மக்கள் குற்றம்சாட்டுகின்றார்கள்.
ExxonMobil,TotalSA,Shell போன்ற பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து அமேசான் காடுகளில் தங்குதடையின்றி பெட்ரோலிய வளத்தை சுரண்டுவதற்கு  தடையாக  அமேசான் பழங்குடிமக்கள் இருக்கின்றார்கள். 
சில மாதங்களுக்கு முன் அமேசான் காட்டுப்பகுதியின் பெற்றோலியம், போன்ற கனிம வளங்களை தோண்டி எடுக்க அரசின் ஆதரவுடன் திட்டமிட்ட பெற்றோலிய நிறுவனங்களை அமேசான் பழங்குடி மக்கள் நீதி மனற உத்தரவின் மூலம் தடுத்திருக்கின்றார்கள்.
அமேசான் காடுகளுக்கு அருகே வாழும் பழங்குடி மக்களை வெளியேற்ற முயற்சிப்பதும் அதனை எதிர்த்து வழக்கு தொடுத்து வெற்றி பெறும் போது காடுகளில் செயற்கை தீ விபத்துகளை ஏற்படுத்தி அவர்களை அச்சுறுத்தி வெளியேற்ற நினைப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
காட்டுப்பகுதியை அண்டி வாழும் கிராமத்து மகக்ளும் விவசாய நிலங்களை உருவாக்கும் திட்டத்தில் சட்டவிரோதமான முறையில்  செயற்கையாக காடுகளுக்கு தீவைத்து சாம்பலாக்குவதை அரசு அனுமதிக்கின்றது.
காட்டுத்தீ பரவிக்கொண்டிருக்கும் காலத்தில் அரசாங்கம் கூறிய அதிக வறட்சி, அதனால் உருவான காட்டுத்தீ எனும் நொண்டிச்சாக்குகளை சூற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மறுத்திருக்கின்றார்கள்.
கடும் வறட்சிக்காலங்களிலும். எல் நீனோ வருடங்களிலும் ஏற்படாத அழிவுகளை இவ்வருடம் இக்காட்டுத்தீ உருவாக்கி இருக்கின்றன. . முன்னெப்போதும் இல்லாத அழிவினை அமேசான் வனம் சந்தித்து கொண்டுள்ளன. 
அமேசான் காடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட்,அக்டோபர் மாதங்களில் தீ ப்பிடிப்பது வழமையானது தான் எனினும் அவை இவ்வருடம் போல் பாதிப்பை தரவில்லை எனவும். இவ்வருடம் அமேசானில் அதிக வறட்சி நிலவவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

2018 ஆம் ஆண்டில் 40000 இடங்களில் தீப்பிடித்ததாக பதிவாகி இருந்தன. 2019 ஆம் ஆண்டில் 73 ஆயிரம் இடங்களில் தீப்பிடித்ததாக பதிவாகி இருக்கின்றன. கடந்த வருடத்தை விட இவ்வருடம் 86% வீதம் 9500 infernos அதிகமாக காட்டுத்தீ அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 9000 தீப்பிழம்புகள் பதிவாகி இருக்கின்றது. 
இயற்கை தன்னை தானே புதுப்பித்து கொள்ளும் நிகழ்வாகவே கடந்த கால காட்டுத்தீ களும் கடந்து சென்றிருக்கின்றன. கடந்த வருடங்களை விட இவ்வருடம் அதிக அழிவை தரும் தீ மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவே குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
தீப்பிடித்ததே மனிதர்களின் தவறுகளினால் தான் எனும் குற்றச்சாட்டை அசட்டை செய்து அது குறித்த கவலையை நிராகரித்திருக்கின்றார் பிரேசில் அதிபர் பொல்சானாரோ. "நான் கேப்டன் செயின்சா என்று அழைக்கப்பட்டேன், இப்போது நான் நீரோ, அமேசானை எரிய வைக்கிறேன்" விவசாயிகள் நிலத்தை துடைக்க நெருப்பைப் பயன்படுத்தும் ஆண்டின் காலம் இது என்றும் கூறி இருக்கின்றார்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாக்கும் அரசாங்க நிறுவனங்களின் முயற்சிகளையும் போல்சனாரோ தடுத்துள்ளார்.
இந்த தீ 1.2 மில்லியன் சதுர மைல் அகலம் கொண்ட புகை அடுக்கை உருவாக்கியுள்ளதுடன் புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான காடுகளின் இழப்பு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் காடுகளின் அழிவினால் இனி வரும் காலத்தில் ஐரோப்பிய, ஆபிரிக்க கண்டங்களுக்கு மறைமுகமான பாதிப்பை அடுத்தடுத்த வாரங்களில் உணர்த்தலாம் என்பதோடு , உலகம் முழுவதும் கால நிலை மாற்றங்களில் கடும் பாதிப்பை உருவாக்கலாம் என சூழலியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றார்கள்.

எமது சிந்தனைக்கு....
கடந்த வருடம் பிரான்சின் "நோட்டி டாமே" தேவாலய தீ விபத்தின் போது பதறித்துடித்து தீயை அணைக்க உதவிய உலகத்தின் அக்கறையும், சர்வதேச தொலைக் காட்சிகளின் கவனயீர்ப்பும், மக்களின் வாழ்வாதாரங்களும், வளங்களும் சுரண்டப்படும் போது மௌனமாகிப்போகின்றன.
இந்த பூமி கொடூரமானவர்களின் ஆளுகையில் தனது இயல்பை இழந்து கொண்டே இருக்கின்றது.
உலகம் அமைதியாகி வேடிக்கை பார்க்கின்றது.
இயற்கை தன்னை புதுப்பித்து கொண்டே இருக்க. மனிதனோ அதை புரிந்திடாமல் தான் மீண்டு வர முடியாதென தெரிந்தும், அழிவுக்கே வித்திட்டுக்கொண்டே செல்கின்றான்.
நாங்களும் யாருக்கோ தானே என அமைதியாக கடக்கின்றோம்.
 
உலக வரை படத்தில் அமேசான்  மழைக்காடுகள
விண் வெளியிலிருந்து   
பற்றிஎரிகின்றது அமேசான் 
  பசுமையாய் அமேசான்
எரிகின்றது.  
அகோரமாக எரியும் தீயை இப்படியும் அணைக்கலாம். 
சம்பலாகியது வனங்கள் மட்டும் அல்ல. மனங்களும் தான். 


29 ஜூன் 2019

ஐரோப்பா முழுவதும் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு வெப்ப அனல்.

பிரான்ஸில் வரலாறு காணாத வெப்ப நிலை
ஐரோப்பா முழுவதும் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு வெப்ப அனல் பறக்கிறது. 
முதல்முறையாக 45.1°C எனும் ஆகக்கூடிய வெப்பம் இன்று பிரான்ஸைக் கடந்திருக்கிறது. Villevieille (le Gard) எனுமிடத்தில் இவ்வெப்ப அலை பதிவாகியுள்ளதாக 'Météo France' அறிவிக்கிறது. 
-
இதற்கு முன்னர் 13h48 மணியளவில் 44.3°C வெப்பம் Carpentras (Vaucluse) என்ற இடத்தில் பதிவானதெனவும் சிவப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களில் Vaucluse ஒன்று எனவும் கூறப்படுகிறது. நாட்டில் 76 மாவட்டங்கள் செம்மஞ்சள் (alerte orange) எச்சரிக்கையில் உள்ளன.
-
பரிஸுக்குள் கடுமையாக புகையை வெளியிடும் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் மக்களை மேலும் அச்சமூட்டுகிறதென பிரெஞ்சு அரசு மீது குற்றம் சுமர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2003ம் ஆண்டு நிகழ்ந்ததைப் போன்றதொரு உயிரிழப்பைத் தவிர்ப்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை என அரசு சொல்கிறது. 
-
இன்று வெள்ளிக்கிழமை(28ஜூன்), தெற்கு ஸ்பெயினிலுள்ள 'Andalousie' எனும் ஒரு கிராமத்தில் 17 வயதான இளைஞர் 'வெப்பத் தாக்கத்திற்கு' (coup de chaleur) உள்ளாகி இறந்துள்ளார்.
-
2003ல் ஆக க்கூடிய வெப்ப அலைக்குள் 
Allemagne, Belgique, Espagne, France, Italie, Luxembourg, Paysbas, Portugal, RoyaumeUnie, Suisse போன்ற நாடுகள் சிக்கிக்கொண்டன. அதிகூடிய வெப்பமான 47.8°C போர்த்துகல்லில் பதிவாகியிருந்தது. அக்காலப்பகுதியில் பிரான்சில் 44.1°C எனும் வெப்ப அலை Saint-Christol-lès-Alès et Conqueyrac (Gard) இல் பதிவாகியிருந்தது. 
-
2003ம் ஆண்டின் வெப்ப அலையானது ஓகஸ்ட் மாதம் 1ம் திகதியிலிருந்து 15 திகதி வரை நீடித்தது. பிரான்சில் 15,000க்கும் அதிகமான உயிரிழப்புக்களையும் ஐரோப்பிய நாடுகளில் சுமார் 70,000 உயிரிழப்புக்களையும் உருவாக்கியிருந்தது. 
-
இன்று பிரான்ஸும் ஸ்பெயினும் அசாதாரண வெப்பத்தை எதிர்கொண்டு நிற்கின்றன. ஜேர்மனி, போலந்து, செக்குடியரசு நாடுகளிலும் கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளது.
-
சகாராவிலிருந்து வீசும் 
அனல் காற்றே இங்கு அதிகரிக்கும் வெப்பத்திற்கு காரணமெனக் கூறப்பட்டாலும் பருவநிலை மாற்றமே இதற்கு காரணமென குற்றம் சாட்டப்படுவதோடு கவலை கொள்ளவும் செய்து வருகிறது.

28 ஜூன் 2019

'வருகின்றது நரகம்' (Hell is coming) / ஸ்விஸ்லே வெயிலா?

ஐரோப்பிய நாடுகளான போலந்து, லண்டன் சுவிஸ்,ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, செக் குடியரசு போன்ற நாடுகளில் என்றுமில்லாதவாறு இந்தமுறை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. 33பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இருந்து 40 பாகை செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உணரப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகப்பெரும் பாலைவனமாகிய ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத்தின் நிலப்பரப்பு அதிகரிப்பும் அதன் விளைவாக அங்கிருந்து வெளிக்கிளம்பும் வெப்ப அனல் காற்றுமே ஜரோப்பிய நாடுகளுக்கு இயற்கை உயர் வெப்ப அனர்த்தத்தை உருவாக்கியிருப்பதாக வானிலையாளர்கள் கூறுகின்றனர். 

இங்கிருந்து வீசும் வெப்பக்காற்றினை Hell is coming என்று பெயரும் இட்டுள்ளனர். இதன் தமிழ் அர்த்தம்
" நரகம் வருகிறது" என்பதாகும்.

28 பிப்ரவரி 2019

சத்தமாக சொல்லுவோம், யுத்தம் வேண்டாம்.



நாட்டினுள் நடந்து முடிந்த இரு இனங்களுக்கிடையிலான் யுத்தமும் இரு நாடுகளுக்கிடையிலான் யுத்தமும் ஒரே பாதிப்பை தரக்கூடியதா?
ஆசியாக்கண்டத்தின் இரு நாடுகளுக்குள் போர் பிரகடனப்படுத்தப்பட்டால் இலங்கையின் வாழும் மக்களில் நிலை என்ன?

அண்டை நாடுகளின் போர்ச்சூழல் நாம் கைகொட்டி கேலி பேசி, வன்மம் தீர்க்கும் நிலையிலா இருக்கின்றது?

இந்தியா / பாகிஸ்தான் யுத்தம் ஆரம்பித்தால் வட இந்திய மாநிலங்களை போல் தென் இந்திய மாநிலங்கள் அன்றாக வாழ்க்கை சூழல் மாற்றங்கள், பொருளாதார நெருக்கடிகளை கொண்டு வரலாம் என்றாலும் நேரடிப்பாதிப்பை உணர சற்று காலமெடுக்கலாம்.
உலக அமைப்பில் இலங்கையின் அமைவிடம் ஆசியாவின் ஏனைய நாடுகளை கண்காணிக்கும் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனால் இலங்கையும் அங்கே வாழும் மக்களும் யுத்தப்பிரதேச மக்களை போல் நேரடி பாதிப்பை அடைவார்கள்

இந்தியா/ பாகிஸ்தான் போர் என்பது 
இரு நாடு மட்டுமல்ல இரு மதங்களுக்கிடையிலான போராக உலக நாடுகளை இருகூறாக்கும்.
ரஷ்யாவும்,அமெரிக்காவும்,சமாதானம்,சமாதானம் எனும் வெள்ளை கொடியை ஆட்டிக்கொண்டே தங்கள் ஆயுதப்பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பார்கள்.அடி,வெட்டு,குத்து என இருபக்கமும் நின்று ஏற்றி,இறக்கியும் விடுவார்கள் அப்பாவிகள் பலியாக்கப்படுவார்கள். 
உயிர் உடமை சேதாரம் பல மடங்காக இருக்கும். உலகின் யுத்தத்துக்கான சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தும் மீறப்படும்.

இரண்டு நாடுகளும் தம் கட்டுப்பாட்டை விட்டு உலகத்தின் ம்ஃவியாக்கள் கைக்குள் சிக்கி விடுவார்கள். இதை தான் இம்ரான்கானும் தன் உரையில் சொல்லி இருக்கின்றார்.
ஐரோப்பிய நாடுகள் வேடிக்கை பார்க்க, சீனாவும் ஜப்பானும், கிடைத்த வரை இலாபம் என பிடுங்க பார்க்கும்.
ஈழத்தில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபோது பேச்சுவார்த்தை எனும் பெயரில் ஐ,நா எனும் பூனையை நடுவராக்கி அதன் கையில் சமாதானம் எனும் கேக் துண்டை கொடுத்து உனக்கு, எனக்கு என வேடிக்கை காட்டி,தட்டித்தடவி நம்பிக்கை தந்து நட்டாற்றில் இல்லை நடுக்கடலில் தள்ளி விட்டது போல இரு நாடுகளுக்கும் தூதுப்புறாக்களை அனுப்பி சமாதானப்பேச்சுவார்த்தையும், யுத்த தளபாடங்களின் விலைப்பேரங்களும் அடுத்தடுத்த மேசையில் விவாதிப்பர்கள்.
கடந்த முப்பதாண்டுகளாகவே மத்திய கிழக்கு நாடுகளில் போர் மூளும் அபாயச் சூழல் ஏற்படும் போதெல்லாம் உலகலாவிய ரிதியில் முக்கியமாக ஐரோப்பாவில் விமான சேவைகளை ரத்தாக்கும் காரணத்தை ஆராய்ந்துள்ளோமா? இனி அறிந்து கொள்ளலாம்.. விமானப்போக்குவரத்துகள் தடைப்பட்டால் கப்பல் போக்குவரத்துக்களுக்கான இலகு தளமாக இலங்கை இருக்கும்.
🔘யுத்தம் வந்தால் இராணுவம் எங்கோ சண்டை பிடிக்கின்றது,செத்து மடிகின்றது என பேஸ்புக் ஸ்டேட் பார்த்து ஆங்கிரி ரியாக்‌ஷனை தட்டி விட்டு சினிமா பார்க்க முடியாது.
🔘யுத்தம் வந்தால் அது மனிதர்கள் நேருக்கு நேர் மோதிடும் யுத்தமாக இராது. உலகின் சட்டங்களிலிருந்து மறைத்தும், ஒளித்தும் வைத்திருக்கும் அணு ஆயுதங்களுடனான யுத்தமாகவே இருக்கும்.
🔘வானம் சண்டை போடும், மேகம் அழுது வடியும். 
நம்ம தலைக்கு மேல் எந்த நொடியும் குண்டு விழும் எனும் நடுக்கத்தோடு வாழும் படி அணு ஆயுதங்களை பயன் படுத்தும் யுத்தமாகவே இருக்கும். அக்கினி பற்றி எரியும்.

நாட்டின் தலைவர்களும், முக்கியமானவர்களும், செல்வந்தர்களும் தம்மை பாதுகாத்து கொள்வார். இலங்கையில் கூட பல சிங்கள அரசியல் வாதிகள் தம் வீடுகளுக்கு கீழ் பாதுகாப்பான நிலவறைகளை முன்னேற்பாடாக கட்டி வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
🔘அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கபப்டுவார்கள். கொத்துகொத்தாய் செத்து வீழ்வார்கள். அங்கவீனர் ஆவார்கள். 40 வீரர்களுக்காக தேசபக்தி எனும் பெயரில் போரினை நியாயப்படுத்துவோர் எனவெல்லாம் பாகுபாடு பார்க்காது அனைவர் மேலும் குண்டு விழும். இனம் மதம், ஜாதி பேதமெல்லாம் பார்த்து அணுகுண்டு வீசப்படாது. மேலிருந்து விழும் குண்டுக்கு பேதமெல்லாம் இல்லை. மொழியும் இல்லை.
இந்தியா வானிலிருந்து குண்டு வீசி 300 பேரை கொன்றதாக சொன்னதை கேட்டு கெக்கலிக்காதீர்கள். அதே குண்டு உங்கள் மேல் அதே வானிலிருந்தும் போடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
⁉️ஆசியாவில் யுத்தம் மூண்டால் முழு இலங்கையும் ஆயுதக்களஞ்சியமாகிப்போகும்.
இலங்கையின் பல பாகங்களையும் வல்லரசு நாடுகள் சடுதியில் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும். ஏற்கனவே அமெரிக்காவும், சைனாவும் இலங்கையில் தம் இருப்பை ஸ்திரமாக்கி வீட்டார்கள். கடலோரப்பிரதேசங்களை விட்டு இனி அவர்கள் அசையப்போவதே இல்லை.இந்தியாவும் அபிவிருத்தி எனும் பெயரில் தானம் வார்த்து தன் இருப்பை தக்க வைக்க முயற்சிக்கின்றது. கண் மூடி கண் திறக்க முன் நாம் அனைத்தையும் இழந்திருப்போம்.
முதலாம், இரண்டாம், உலக மகா யுத்த காலத்தில் எந்த பக்கமும் சாராமல் இருந்தும் சுவிஸ் நாடு எப்படி அனைத்து நாடுகளாலும் பாதிக்கப்பட்டதோ அதை விட 100 மடங்கு மோசமாக இலங்கையும் இலங்கை மககளும் ஆசியாவில் போர் ஏற்பட்டால் பாதிக்கப்படுவார்கள். இன்றிருக்கும் பாதுகாப்பு சூழல் கூட கேள்விக்குறி ஆகும், நிம்மதி பறி போகும். பதட்டம் நிலைக்கும்.
முள்ளி வாய்க்கால் யுத்தத்தில் வன்னிவாழ் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள் என்றாலும் முழு இலங்கையும் பொருளாதார ரிதியிலான பின்னோட்டத்தையும், 40 ஆண்டுகள் தொடர்ந்த யுத்தத்தின் விளைவுகளையும் அனுபவித்து கொண்டு தான் இருக்கின்றது.
மீண்டும் நம் மக்களை அடிமைப்படுத்தும் யுத்தம் தேவையா?
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பது போல் 
கலை,கல்வி மட்டுமலல் அன்றாட வாழ்வில் மாற்றங்கள் அனைத்தும் தமிழ நாட்டினூடாகவே நாம் பின்பற்றுகின்றோம். இல்லை என சொல்லி நம்மை நாம் ஏமாற்றுகின்றோம்.

இந்தியாவின் வீழ்ச்சியும் எழுச்சியும் இலங்கையை அசைக்கும்.
இனி ஒரு யுத்தம் தேவையா? சிந்திப்போம்.
தயவு செய்து சமூக ஆர்வலர்களும்,ஆன்றோர்களும் தம் கருத்தினை பகிருங்கள்.
இளையோருக்கு உணர்த்தும் படியாக கருத்துக்களை முன் வையுங்கள். 
வழி நடத்துங்கள்.


ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்
இனி ஒரு போர் வேண்டாம்.