ஈழமும் இலக்கும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழமும் இலக்கும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 டிசம்பர் 2020

Sustainable Development Goal - 2 நிலையான அபிவிருத்தி இலக்கு

Awareness, pre-warning

விழிப்புணர்வு,முன் எச்சரிக்கை 

மூன்று சம்பவம் 

ஒன்று : 2015  எங்கள் பக்கம் நூறு வருடங்களுக்கு பின் கடும் வெள்ளம். ஆறுகள் நிரம்பி, வீடுகளின் நிலவறைக்குள் எல்லாம் தண்ணீர். பாலங்கள்  நிறைந்து பலமிழந்து வாகனங்கள் தடை  செய்யப்படடன. பல கோடி மில்லியன் Fr அழிவு. 

அம்மா நம்ம வீட்டுக்குள் சுனாமி வருது எங்கள் வீட்டு பால்கனி கதவுகளை இழுத்து முடுங்கோ என்று அன்றைய  மழைக்கு என் மகன்  வர்ணனை  செய்தான். 2004 டிசம்பர் சுனாமி அத்தனை ஆழமாக அவனுள் பதிவாகி இருந்தது. 

மலையிலிருந்து தொடர்ந்து மழை எப்போதும் அணை உடையும். பாலம் உடையும் என ஊடகங்கள், பத்திரிக்கை வானொலிகள் எச்சரித்து  கொண்டிருந்தன. 

நாங்கள் வேலை செய்யும் நண்பர்கள்  20 பேர்  ஒரு தோழி வீட்டில் விருந்து. பாதி விருந்தில் அணை உடைந்தது என பக்கத்து  வீட்டிலிருந்து சொல்ல .. அப்படியே போட்டது போட்டபடி ... ஓட்டம். 

எனக்கு பிள்ளைகளை விட்டு விட்டு  வந்த பதட்டம் ( 4 & 7 வயதுகள் ) பாலங்கள் கடந்து மேட்டில் என் வீடு. எப்படி வீட்டுக்கு போவது என்று அழுது கொண்டிருந்த என்னை  இழுத்து கொண்டு  ரோட்டுக்கு வந்து சிக்னலுக்கு நின்ற காரின் சொந்தக்காரரிடம் கேட்காமல் ஏறி  உட்கார்ந்து விட்டாள் தோழி. பாதி வழி கார்.. மீது நடை என்று வீட்டுக்கு போனேன்.

அன்று அணை உடையவில்லை. அது உடையவே இல்லை.  நீர்  நிறைந்து விட்டால் என்ன நடக்கும் என்று எங்களுக்கு உணர்த்தப்பட்ட்து. ஆனால் அதிக நீர் அழுத்தம் பாலங்களை பலமற்றதாக்கி இருந்தது. மழை தொடர்ந்தால் எதுவும் நடக்கலாம் எனும் நிலை இருந்தது. கடைகளுக்கு சரக்கு கொண்டு வரும்  கனரக வாகனங்கள் தடை செய்தார்கள். 

அடுத்து வந்த  மாதங்கள் முழுதும் பகுதி பகுதியாக வடிகான்கள், பாலங்கள், பாதைகள் விரிவு படுத்தப்பட்டு வெள்ளம் தேங்காதபடி நீர் ஓடும் வழிகளை செம்மை படுத்தினார்கள். ஆறு மாதங்களுக்கும் மேல் பாதைகளை அடைத்து  வாகனத்தில் ஒரு நிமிடத்தில் கடக்க வேண்டிய பாலம் தடை  செய்து  மூன்று கிலோ மீற்றர்கள்  சுத்தி வந்தோம். 

இது மக்களுக்கானது..! 

இரண்டு : பிரான்ஸ் நீஸ் தீவிர வாத தாக்குதல் தொடர்ந்து சுவிஸில் சில இடங்களில் முக்கியமாக  பிரதான புகையிரத நிலையத்தில் தீவிரவாதிகள் நுழைவு, குண்டு வெடிப்பு ..  நள்ளிரவில் வாகனங்கள் கடும் சோதனை 

மூன்று: ஆறுமணிக்கு மேல்  தனியே வெளியில் திரியும் சிறுவர்களை கடத்தி செல்கின்றார்கள் என்று  பள்ளிகளில் பரப்பப்பட்டு  யார் அந்த மர்ம மனிதர் என  பதட்டப்படுத்தி ஒரு தற்காப்பு பயிற்சி.முதல் ஒரு வாரம் பயத்தில் ஆறு மணிக்கு முன் வீட்டுக்குள் வந்த பிள்ளைகள் அடுத்த வாரம் நான்கைந்து பேர் வெளியில் செல்ல யாரோ  முகமூடிஸோடு  அவர்களில் ஒருவரை பிடிக்க வர இவர்கள் பயப்படாமல் அவனை துரத்த ...

மிகைப்படுத்தல் ..  தான்..! 

அந்தந்த நேரம் மக்களுக்கு  விழிப்புணர்வு,தற்பாதுகாப்பு, முன்னேற்பாட்டுக்கு  நல்லது செய்யும் என்றால் 

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்  „“ 

 சந்தர்ப்பம் சூழ்நிலைகள் சரியானதை தவறு என்பது போல் தவறொன்றை சரியென நம்ப  வைக்கும். எமது சமூகத்தின் மனநிலை அப்படி..! சில சம்பவங்களுக்கு  மிகைப்படுத்தல் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விழிப்புணர்வு உருவாக்குகின்றது. 

நடக்காதவைகளை நடந்தது, நடக்கவில்லை எனும்   நிறுவுவதை விட நிரூபிக்க எடுக்கும் நேரத்தை  இப்படி ஒரு சம்பவம் எமக்கும் நடக்கலாம்.. எச்சரிக்கை உணர்வு...தனி நபர்  சிந்தனைக்குள் சிறந்த  விழிப்புணர்வை உருவாக்கும். 

ஒரு கொலை, தற்கொலை நடந்தால் அது எப்படி நடந்திருக்கும் எனும் கற்பனைகளும், விபரங்களும் மிகைப்படுத்தப்படுவது  ஆபத்தான பின் விளைவுகளை உருவாக்கும் என்பதால்  சுவிஸ்  போன்ற வளர்ந்த நாடுகளில் இவ்வாறான செய்திகளை பகிர்வதற்கு  ஊடகங்களும்  கட்டுப்பாட்டுடன் செயல் படும். பல சம்பவங்கள் பக்கத்து வீட்டுக்கும் தெரியாமல் இருக்கும். காவல் துறை,குற்றப்புலனாய்வு நிர்வாகம்  உட்பட சம்மந்தப்பட்ட அனைவரும்  அடக்கி ஆளுகை.செய்வார்கள். காரணம் மனிதர்களில் உளவியல் சார்ந்தது. 

எங்கள் சமூகத்தில்  நடப்பது என்ன? 

மிகைப்படுத்த  வேண்டியவைகளை  அரசியல் அதிகார விருப்பு வெறுப்பு டன்  அணுகுவதும், அடக்கி ஒடுக்க வேண்டியதை சமூகத்துக்கு தீமைகளை பகிர்ந்து பரபரப்பு உருவாக்கி தவறுகளுக்கு துணை செய்கின்றோம்.

உலகத்தில் எல்லா நாடுகளிலும் இயற்கை கால நிலை மாறுகின்றது. ஆனாலும் சில பகுதிகளில் வெள்ளம் புயல் அதிக அழிவு தருகின்றது. சில பகுதிகளில் தகுந்த முன்னேற்பாடு உயிர் பொருள் இழப்புகளை தடுக்கின்றது. 

எங்கள் பகுதியில் சில நேரம்  பெரிய  அலாரம் அடிக்கும். இராணுவ முகாம், தீயணைப்பு என்று மக்கள் எவ்வாறு ஆயத்தமாக இருக்கின்றார்கள் என்றும் சில சோதனைகள் ...  குடி நீர் நிறுத்துவார்கள், (  திருத்த வேலை முன் அறிவித்து செய்தாலும் )  மின்சாரம் நிறுத்தி  

எதுவும் நடக்காது  எனும் நம்பிக்கை தருவதை விட இப்படியும்  நடக்கலாம் எனும் உணர்த்தல் பல நன்மைகளை உருவாக்குகின்றது.

மக்கள் சமூக விழிப்புணர்வுக்கு பிழைப்படுத்தலும் , மக்கள் சமூக நலன்கள் சார்ந்து கட்டுப்பாடுகளும் மக்கள் சமூக செயல்பாடுகளில் நெகட்டிவ் விமர்சனங்களை அல்ட்சியப்படுத்தவும் பக்குவப்பட்ட சமூகம் நோக்கி முன் செல்லுகின்றது.

💥💥

வெள்ளம் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளில் சமூக ஆயத்தத்தின் தாக்கம் 

தொழில்நுட்ப முன்கணிப்பு மற்றும் எச்சரிக்கை திறன்கள் குறைவாக இருக்கும் சூழ்நிலைகளில். மேலும், சமூக தயார்நிலையை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் முயற்சிகள் பேரழிவால் தூண்டப்படும் இழப்புகளை கிட்டத்தட்ட ஒரு பாதியில் குறைக்க உதவும்.

சமூக தயார்நிலை, குறிப்பாக, ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, வெள்ள அனுபவத்தின் பின்னடைவு memory நினைவகம் தொடர்பானது. அதிகாரிகள் மீதான நம்பிக்கை, அல்லது சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான தொடர்புகள் போன்ற மனித நடத்தை பண்புகளால் வலுவாக பாதிக்கப்படுகிறது

கூடுதலாக, திறமையான இடர் குறைப்பு சேவைகள் இருக்கும்போது சமூக விலகல், பொறுப்புகள், செயல்திறன் குறைப்பு நடவடிக்கைகளின் செலவுகள், அல்லது ஊடகங்கள்,அபாயகரமான தன்மை மற்றும் தனிப்பட்ட மறுப்பு ஆகியவை வெள்ள தணிப்பு நடத்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆய்வு அறிக்கை யில்   

 சுவிஸ் சூரிச் யுனிவசிட்டி குறிப்பிடுகின்றது.

முதல் நிலையான அபிவிருத்தி இலக்கு - வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல். 

First Sustainable Development Goal - End Poverty. 

பேசுவோம்..!

Nishanthi

12.12.2020

https://www.facebook.com/100000786292216/posts/3482293218473520/?d=n 





08 செப்டம்பர் 2019

நூலகம் அமைக்கும் பணிக்கான உதவிக்கோரிக்கை.

எமது எதிர்கால சமூகத்தினை கட்டமைத்திடும் நீண்ட கால திட்டமிடலோடு....!
கடந்த வருடம்  நான் இட்ட பதிவில்  நூல்களை தந்து உதவுவதாக கூறிய  நட்புக்களே... !
கலாச்சாரம், சமூகச் சீர் திருத்தம், சமூக மேம்பாட்டுக்கான கருத்தியல்களை பயிற்றுவித்து உடன் பயணித்திட...!
அடுத்த புத்தாண்டிலிருந்து சமூக முன்னேற்றத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுடனும் ஊர்ப்பெரியவர்களின் ஒத்துழைப்போடு,மாதிரி மீட்சித்திட்டமொன்றை முன்னெடுக்கும் பணியில்....
நூலகத்துக்கு தேவையான நூல்களை அடுத்து வரும் இரு மாதங்களுக்குள் சேகரித்து தரக்கூடிய ஆர்வமுள்ளவர்கள் இணையுங்கள்.
கட்டாயம் தேவையான நூல்கள்
1.சிறுவர் இலக்கியங்கள்.
2. பாலர், சிறுவர் பாடல்கள் / தமிழ் ஆங்கிலம் சிங்களம்
3. பாலர், சிறுவர் கதைகள் / தமிழ் ஆங்கிலம் சிங்களம்
4.சரித்திர,வரலாற்று நூல்கள்
5.பாடசம்பந்தமான புத்தகங்கள்.
6.நாவல்கள்
7.சங்ககால இலக்கியங்கள்
8. விஞ்ஞான, சமூகவியல் நூல்கள்,
9.தொழில் நுட்பம் சார்ந்த நூல்கள்
10. சுய சரிதைகள் கவிதைகள் கட்டுரைகள் அனைத்தையும் கொண்ட நூலகம் அமைத்திடும் பணியில் இணையுங்கள் நண்பர்களே..!

எம்மால் முன்னெடுக்கபட இருக்கும் திட்டங்கள் 
01. Kinder Garden
02. Library,
03. Free Classes,
04 Free Exam Practice,
05. Motivation & Counseling Classes
06. Sports Activities
07. Youth Development Programs
08. Cultural Activities
09. Study & Reading Corner, Etc

தமிழ் நாட்டிலிருந்து நூல்களை சேகரித்து தர கூடியவர்கள். விபரம் தந்தாலும் நான் அனைத்தையும் ஒருங்கிணைத்து இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்வேன்.
தேவைகள் அனேகமுண்டெனினும் நூல்களுக்காக மட்டுமே இங்கே கோரிக்கை விட்டிருக்கின்றேன்.
திட்டமிட்ட காரியங்கள் பூர்த்தியான பின் இடம், காலம் அனைத்தும் பகிரப்படும்.

அது வரை... !
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

என்றுணர்ந்தே கரம் இணையுங்கள்...!


21 ஜூலை 2019

கறுப்பு யூலை (Black July,) இனக்கலவரமா (Riot)?

 இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகள் 12, 13 மற்றும் 14&ன்படி இலங்கையின் பிரஜைகளுக்கு அந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வசிப்பதற்கான உரிமையென்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வழங்கப்பட்டுள்ளது.
👩‍⚖️
கறுப்பு யூலை (Black July,) 
ஜூலை 23, 1983

இலங்கை சிங்கள இனவாதிகளால் தென்னிலங்கையில் தமிழன் என அடையாளம் காணப்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 
இரண்டு வாரங்களுக்கும் மேலாக தென்னிலங்கையிலும்,மலையகத்திலும் தொடர்ச்சியான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

தமிழர் கடைகள், இருப்பிடங்கள் என அடையாளம் காணப்பட்டவைகள் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் கொடுமைகள் நடத்தப்பட்டன.
தமிழர்களுக்கு உதவிய சிங்கள்,முஸ்லிம் மக்களும் தாக்கப்பட்டார்கள்.அவர்கள் சொத்துக்கள் பறிக்கப்பட்டன.

பல முதலாளிகள் ஒரே இரவில் அனைத்தையும் இழந்தார்கள். திட்டமிட்ட படி தமிழர் வர்த்தகம் முடக்கப்பட்டது. பொருளாதாரம் சிதைவுற்றது. அதிகாரங்கள் பறிக்கப்பட்டது. உயிர்ப்பயம் உரித்தாக்கப்பட்டது. தமிழர்கள் தம் சொந்த நாட்டினுள் அகதிகளாக்கப்பட்டார்கள்.
சிறைச்சாலையின் திறவு கோல் வன்முனையாறர்கள் வசம் கை மாறியது. உரிமைக்குரல் கொடுத்தோரின் குரல்கள் நசுக்கப்பட்டது. வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதிகளக அடைக்கப்பட்டிருந்தவர்கள் உட்பட 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்டார்கள்.
கறுப்பு யூலை (Black July,)
இனச்சுத்திகரிப்பா (Ethnic cleansing) ?
இனப்படுகொலையா (Genocide) ? 
இனக்கலவரமா (Riot)?

 
புகைப்படங்கள் இணையத்தில் இருந்தே எடுத்தேன். 

இனக்கலவரம்(Riot) என்றால் என்ன ?
கலவரம் அல்லது Riot என்றால் இரு இனங்கள் அல்லது குழுவினர் மோதிக்கொள்வது.சமூகத்தின் சீரழிவை , இழப்புக்களை உருவாக்குவது.

83 ல் நடந்தது இனக்கலவரமா? இரு இனம் அல்லது குழுக்கள் மோதிக்கொள்வது தான் இனக்கலவரம் எனும் வரையறைக்குள் வருமாயின் அன்றைய நாட்களில் இரு இனங்கள் மோதிக்கொண்டனவா?
எங்கள் மீதான நீதிகளும், நியாயங்களும் ஏன் தூரமாகின்றன?
சிந்திப்போம்.
வெலிக்கடை சிறைச்சாலையில் எமதுரிமைக்காக குரல் கொடுத்தோர் உட்பட கொடூரமாக கொல்லப்பட்ட 56 பேரின் உயிருக்கான நீதி விசாரனைகள் இன்று வரை கிடைக்கவும் இல்லை. எவரும் தண்டிக்க, கண்டிக்கப்படவும் இல்லை.
தமிழர்கள் மீதான அத்தூமீறல்களுக்கு அன்று துணை போன அரசையும் ஆட்சியாளர்களையும்,அதிகாரத்தையும் இன்று நல்லாட்சி என எமது அரசியல் வாதிகளே தாங்கிக்கொண்டுள்ளார்கள்.
.😭


மேலதிக விளக்கம் தேடி...
*********************************

இனச்சுத்திகரிப்பு என்றால் என்ன? 
Ethnic cleansing

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் தவிர வேறு எவரும் இருக்கக்கூடாது’ என்ற எண்ணத்தோடு மற்ற இனத்தவரைப் பலவந்தமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையே ‘இன சுத்திகரிப்பு’ என்று அழைப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விதிகளின்படி இது மனித குலத்துக்கு எதிரான குற்றமாகும். ஐ.நா. சபையும் இதை இன அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு இணையான குற்றமென்று
வகைப்படுத்தியிருக்கிறது.

Ethnic cleansing is the systematic forced removal of ethnic, racial and/or religious groups from a given territory by a more powerful ethnic group, often with the intent of making it ethnically homogeneous.[1][page needed] The forces applied may be various forms of forced migration (deportation, population transfer), intimidation, as well as genocide and genocidal rape.
Ethnic cleansing is usually accompanied with efforts to remove physical and cultural evidence of the targeted group in the territory through the destruction of homes, social centers, farms, and infrastructure, and by the desecration of monuments, cemeteries, and places of worship.

புகைப்படங்கள் இணையத்தில் இருந்தே எடுத்தேன். 
இனப்படுகொலை (Genocide)
ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்.

25 ஜூன் 2019

முப்பதாண்டுகளாக கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தலை தடைசெய்வதன் காரணங்கள்?

கல்முனை- வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக....
முப்பதாண்டுகளாக பிரதேச செயலகம் தரமுயர்த்தலை தடைசெய்வதன் காரணங்கள்?
தேடலில்...
கல்முனை (Kalmunai) 
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரம்.
கிழக்கே வங்காள விரிகுடாவையும் வடக்கே பெரியநீலாவணையையும் தெற்கே காரைதீவையும் எல்லையாகக் கொண்டது.

வரலாறு
கல்முனையின் பூர்வீகம் தமிழர்களுக்குரியது. 
17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் இலங்கையை ஆண்ட போது கொழும்பிலிருந்து துரத்தப்பட்ட சோனகர்கள். கண்டி மன்னன் ராஜசிங்கனிடம் தஞ்சமடைந்தனர். மன்னன் ராஜ சிங்கன் அவர்களில் (4000) பேரை காத்தான் குடிக்கும் (8000) பேரை கல்முனையிலும் அகதிகளாக குடி அமர்த்தினார் என்கின்றது வரலாறு.

தற்காலத்தில் கல்முனையில் முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர், பறங்கியர் என நான்கு இன மக்களும் வாழ்கின்றனர்.
நிலப்பரப்பு 
3/5 வீதம் தமிழருக்கும் 
2/5 வீதம் முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாக இருக்கின்றது.

70 வீத‌மான முஸ்லிம்க‌ளுக்கும் 29 கிராம‌ சேவை பிரிவுக‌ள் 30 வீத‌மான‌ த‌மிழ‌ருக்கும் 29 கிராம‌ சேவ‌க‌ர் பிரிவுக‌ள் என மொத்தம் 58 கிராம சேவகர் பிரிவுகள் இயங்குகின்றன.
மக்கள்தொகை  
முஸ்லிம்கள் 74432 
தமிழர் 26647 பேர்
சிங்களவர் 360
பறங்கியர் 498
இந்தியதமிழர்கள் 58

2011 ஆண்டின் சென்சஷ் கணக்கெடுப்பில் மொதத மக்கள் தொகை 1,06,780 ஆக இருந்திருக்கின்றது.


கல்முனை பிரதேசங்கள் பிரதானமான நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
1.கல்முனை மாநகரம் (தளவட்டுவான் சந்தி தொடக்கம் சாஹிராக்கல்லூரி வீதி வரை),
2.கல்முனை வடக்கு (பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை),
3.கல்முனை தெற்கு (சாய்ந்தமருது)
4.கல்முனைமேற்கு (நற்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு,
சவளக்கடை,மணல்சேனை )

1989 ல் 13ஆவது திருத்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை திட்டத்தின் கீழ் 
உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்கள் தரமுயர்த்தப்பட்டு நிர்வாகம் பரவலாக்கப்பட்டு பிரதேச செயலகங்களாக பிரிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் 1989 ல் 20 பிரதேச செயலக பிரிவுகள் அமைக்கப்பட்டன.அதில் ஒன்றாக உருவாக்கப்பட்ட கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தை தர முயர்த்துவதற்கு 
1993 ல் அமைச்சரவையில் அனுமதி அளிக்க்கப்பட்டிருந்தாலும்,முஸ்லீம் அரசியல்வாதிகளின் தலையீட்டால் தடை செய்யப்பட்டிருக்கின்றது.

கடந்த 30 ஆண்டுகளாக அப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் கோரிக்கையோடு கல்முனை வாழ் தமிழ் மக்கள் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.
கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுகள்
---சாய்ந்தமருது பிரதேச செயலகம் 
---கல்முனை தமிழ் உப-பிரதேச செயலகப் பிரிவு 
---சாய்ந்தமருது பிரதேச செயலகம்




சகல அதிகாரங்களும் கொண்ட நிர்வாக பிரிவாக பிரிக்கப்பட்டாலும் 1989 தொடக்கம் கல்முனை முஸ்லீம் பிரிவு பிரதேச செயலகத்துக்கு மட்டுமே முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டு இயங்கி வருகின்றது.
காணி மற்றும் நிதி அதிகாரங்கள் முழுமையாக முஸ்லிம் பிரதேச செயலகத்தினூடாகவே என்பதனால் தமிழர் பகுதிகளுக்கான் சமூக முன்னேற்ற திட்டங்கள் மறுதலிக்கப்படுவதாகவும், நிதி ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் தொடர்வதாகவும், தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
கல்முனை தமிழ் உப-பிரதேச செயலகப் பிரிவு 
(கல்முனை வடக்கு) தரமுயர்த்துவதற்கு தடை செய்வதற்கான காரணங்கள் 

கல்முனை Mubarak Abdul Majeeth அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்.

1.தமிழர் எல்லைக்குள் 3000ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வாழ்விடங்கள் உள்வாக்கப்பட்டுள்ளன.
2. ஐந்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் இரண்டு மதரஸாக்கள் மூன்று மையவாடிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
3.கல்முனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைப் பள்ளிவாசல் கூட அந்த எல்லைக்குள்தான் வருகிறது.
4.கல்முனை பொதுச் சந்தை
5.கல்முனை பஸார்
6.கல்முனை கடைத் தொகுதிகளும் வர்த்தக நிலையங்களும்
7.கல்முனை பஸ் தரிப்பு நிலையம்
8.கல்முனை பொலி்ஸ் நிலையம்
9.கல்முனை நூலகம்
10.கல்முனை பிரதேச செயலகம்
11.கல்முனை மாநகர சபை
12.சகல வங்கிகள்
13.சகல அரச காரியாலயங்கள்

14. கல்முனை பிரதேசத்தில் காணப்படும் கல்முனைக் கண்டம் ,இறைவெளிக்கண்டம், நற்பிட்டிமுனை மேல்,கீழ் கண்டங்கள் மேட்டுவட்டை வயல் காணிகள் , கரவாகு வட்டைக் காணிகள் என அனைத்து வயல் காணிகளும் அவர்கள் கோரும் எல்லைக்குள்ளே வருகின்றன.
15. நீர் நிலைகளான பட்டிப்பளை ஆற்றுப் படுக்கை,கல்லடிக்குளம்,பாண்டிருப்பு பெரிய குளம், சிறிய குளம்,நவியான் குளம், கரச்சைக் குளம் என அனைத்து நீர் நிலைகளும் அந்தப் பிரதேசத்திற்குள் உள்வாக்கப்பட்டுள்ளன
எங்க‌ள் நில‌ங்க‌ளையும் வ‌ர்த்த‌க‌ங்க‌ளையும் கைய‌க‌ப்ப‌டுத்திக்கொண்டு அத‌னை த‌ங்க‌ளுக்கென‌ பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்தினால் இதை முஸ்லிம்க‌ள் அனும‌திக்க‌ முடியுமா?
Mubarak Abdul Majeeth
leader.Muslim ulama party

இங்கே குறிக்கப்பட்டிருக்கும் கல்முனை பொதுச் சந்தை, பஜார், வியாபார ஸ்தலங்கள் அனைத்துமே முன்னொரு காலத்தில் தமிழ் வியாபாரிகள் தமிழருக்கு சொந்தமானதாகவே இருந்தது என்பதை 
நினைவூட்ட விரும்புகின்றேன்.

விட்டுக்கொடுப்பதை விட்டுக்கொடுத்து பெற்றுக்கொள்வதை பேறாக்கி தன்னை உயர்த்திட முடியாதவர்களாக இலங்கை சிறுபான்மை இனங்கள் ஆப்பத்தை பீய்த்து பங்கிட்டு தரும் என நம்பி குரங்கு கை பூமாலைகளாகி கொண்டிருக்கின்றன .
கல்முனையின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் சோனாகர்கள் இன்றியமையாதவைகளாக இருந்தவர்கள் என்பதை உணர்ந்திருக்கும் தமிழர்களுடன் தமக்கான பிரச்சனைகளை உணர்த்தாமல், இலகுவாக தீர்த்து கொண்டிருக்க கூடிய பிரச்சனையை சிங்களம் கொடுத்த அதிகார மமதையில் தமிழரை துச்சமாக்கி, தமிழரை அடக்கி ஆழ்வதும் அவர்தம் நிலங்களை அபகரித்து அதிகாரம் செய்தும தமக்கு தாமே வினை வார்த்து கொண்டார்கள்.தமது மொழி தமிழ என்பதை மறுதலிக்கவும் கற்பிக்கப்பட்டார்கள்.
விட்டுக்கொடுத்தே அனைத்தையும் இழந்து, 
தம் சுய உரிமைக்காக போராடிய ஓரினம் வெறும் பிரதேச செயலகம் ஒன்றின் தரத்தை உயர்த்தும் கோரிக்கையோடு எங்களை அழித்தவர்களிடமே தீர்வை வேண்டி மண்டி இட்டிருக்கின்றதெனில்... எம்மன நெருக்கடியை யார் உணர்வது?

அவரவர் பார்வையில் நியாயங்கள் எனும் அநியாயங்களே பேசு பொருளாக்கப்பட்ட்டிருக்கின்றன.
கல்முனை பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் பகுதிகள் படத்தில் தெளிவாக குறிக்கப்பட்டிருக்கின்றன. இதனுள் காணப்படும் முரண்களை அவதானிக்கவும்.
நீதியை தேடுவோம்.....?

21 ஜூன் 2019

அம்னீசியா எனும் .மறதி நோய் தமிழர் பரம்பரைக்கானதோ?

எனக்கொரு சந்தேகம்
யாராச்சும் தீர்த்து வையுங்கப்பனே..... 
🤓🤓🧐🧐🧐🧐

தமிழர் பிரதேசங்களில் புத்த சிலைகள் தெருவுக்கு தெரு முளைத்தாலும் விக்கினமில்லை, 
சிங்களவர் எங்கட பகுதிகளையெல்லாம் சுவிகரித்துகொண்டாலும் குற்றமில்லை 
முள்ளிவாய்க்காலில் செத்ததுகளுக்கு பால் சோறு பொங்கி தின்பதை ஆண்டு திவசத்தில் சேர்த்துக்குவோம். 
வெடி கொழுத்தி கொண்டாடியதை துக்க வீட்டு பறை மேளமாகவும், சாவுக்கு முன் வெடிக்கும் வெடியாகவும் மாத்தி யோசிப்போம்.

ஏன் எண்டால் சிங்களவரும், தமிழரும் சகோதரர் இனமுங்க........ எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்,, நாங்க அண்ணன் தம்பிங்க.. நேத்து அடிச்சிக்கிட்டோம், இன்னிக்கும் சேர்ந்துக்குவோம், நாளை திரும்ப அடிச்சிப்போமுங்க. 
எங்கட சாமியும், அவங்கட சாமியும் ஒண்டுங்க. புராணங்கள் கூட அதை சொல்லுதுங்க. நாங்க ஆயிரம் வருடத்துக்கு முந்திய தோஸ்துக்களாக்கும்.

ஆனால் பாருங்க......
சோனகர் தான் எங்கட ஜென்ம விரோதிகள், 
வந்தான் வரத்தான்களுக்கு எங்கட உரிமையை விட்டுக்கொடுக்க ஏலாதுங்க .... எங்களுக்காக தீர்வு சிங்கள தேரர் மூலம் தான் சாத்தியம் என கலமுனை வடக்கு பிரதேச சபைக்கான தரமுயர்த்த கோரி சிங்கள தேரரை தெய்வமாக்கி, அவரை கும்பிடுவதெல்லாம் வேறே ரகமுங்க..

ஒருத்தர் வந்து சொல்றார்... பழய கதை எல்லாம் பேசக்கூடாதாம்,, இப்ப இருக்கும் நிலையில் முஸ்லிம்களிடமிருந்து எங்கட உரிமையை காப்பாத்தணுமாம்.... இல்லாங்காட்டில் கிழக்கையே முஸ்லிம்கள் தங்களுக்கென பிரிச்செடுத்திருவாங்களாம்..
அவர் சொல்வதும் சரி தான் போல கிடக்குது.
ஏன் எனில் வடக்கு வடக்கு என வடக்கின் செழிப்பு,அறிவு, வீரம், வளமெல்லாம் நாசமாக்கி,எங்கட பிள்ளைகளையும் கலாச்சார சீழழிவுக்கும் திணிச்சி, உலகம் போற்றிய தமிழ அறிஞர்களை உருவாக்கிய யாழ்ப்பாணத்தை நாசமாக்கி முடிச்சாச்சுங்க. இனி அங்கே கிண்டிக்கிளற ஒண்டுமில்லையுங்க..
வடக்கும் நாசமாச்சு.... சிங்களவன் ஆண்டாலும் அவன் பிரதேசங்களும் ஒன்னும் சொல்லிக்கொள்ளும் படி முன்னேற முடியல்ல. பெரும்பான்மை இனமென்பதை தக்க வைக்க வதவதவென பிள்ளைகுட்டிகளும் பெருகிப்போனார்கள்.
நாங்கல்லாம் நக்கித்தின்ன வழியில்லாமல் திரிய.... சோனகர் மட்டும் மாட மாளிகை கட்டுவதும், கல்வியில் முன்னேறுவதும், பொருளாதாரத்தில் உயர விடுவதும் தப்பாச்சே? அதனால் நாடும், நாட்டு மக்களும் உயர்ந்து விடுவார்களே? கிழக்கு மாகாணமும் முன்னேறி விடுமே... விட்டு வைக்கலாமா?
எங்களுக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்ககூடாது. எல்லாரும் எங்கட அடிமையாக கிடக்கணும். அதுக்கு மிரட்டிகிட்டே இருக்கணும். அப்புடியே மட்டக்களப்பில் இருக்கும் எச்ச சொச்ச தமிழரையும் நாட்டை விட்டு ஓட விரட்டணும் எதிர்கால திட்டத்தோடு கிளம்பி இருக்கும் சிங்கள இனவாதிகளுக்கு ஒரு கை கொடுக்கத்தான் வேண்டும். பழசு எல்லாம் கிண்டி நினைவு படுத்தக்கூடாது. தப்பித்தவறி நினைவுக்கு வந்திட்டால் எங்கட தமிழனுக்கு ரோசம் வந்திடும்,. உப்புப்போட்டு சோத்தை தின்னுவதும் நினைவுக்கு வந்திரும். அதனால் தேரரை தெய்வமாக்குவதை வேடிக்கை பார்க்கணும்.
அந்த தேரரை ஒருக்கா எங்கட அரசியல் கைதிகளுக்கா உண்ணாவிரதம் இருக்க சொல்லுங்களேன்பா... அந்த கோப்புலாவ காணிகளையும் விடுதலையாக்கி தர சொல்லி கேளுங்க.. ... அவர் மட்டும் அப்படி செய்திட்டால் எண்ட சாமியும், அவரு தான் என 100 அடி சிலை வைச்சு கும்பிட்டுக்குவேன்.
இப்பவும் எனக்கு ஒன்னும் புரியல்ல.
தமிழ்,தமிழர் உரிமை, தனி ஆட்சி என போராடுவோர் தமக்கான சந்தர்ப்பங்களை எப்படி பயன் படுத்தி இருக்கின்றார்கள்? தமிழரிட்ட பொறுப்பு கொடுத்த எதில் நாங்க சாதித்து காட்டி இருக்கின்றோம் என ஒருக்கா எனக்கும் சொல்லுங்க் தம்பி, ஐயாமாரே?
கிழக்கில்,தமிழர் வசமிருக்கும் பகுதிகளின் பிரதேச சபைகளினால் ஆரம்பிக்கபப்ட்ட, அபிவிருத்திகளை, திட்டமிட்டிருக்கும் மக்கள் செயல் திட்டங்களை ஒருக்கா சொல்ல முடியுமா?
அவனிவன்,எவன் என சாக்கு போக்குகளை சொல்லாமல் இண்டைக்கு கல்முனையில் நிற்கும் எந்த தமிழ் அரசியல் வாதி உங்கட நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கின்றான்? 
சும்மா பூச்சாண்டி காட்டாமல், தானும் செய்யாமல, செய்பவர்களையும் மிரட்டி உருட்டி தடுக்காமல் தமிழர் பிரதேசங்களை முன்னேற்ற செயல்படுவோர் ஆரேனும் இருந்தால் சொல்லுங்க.

ஒவ்வொரு முஸ்லிமும் தன் கடமை உணர்ந்து,தன் இனத்தின், சமூகத்தின், பிரதேசத்தின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்போடு செயல் படுவதை பார்த்து உங்களுக்கு பொறாமை வந்தால்.... நீங்களும் அவர்களை போல் உங்கள இன, சனத்துக்காக அர்ப்பணிப்போட வாழ்ந்து காட்டுங்க.. உங்களை நம்பி வரும் மக்கள் முன்னேற்றத்தை குறித்து அக்கறை காட்டுங்க...முஸ்லிம்களின் இனப்பற்றை, மதப்பற்றை பாராட்ட வேண்டாம். பாடமாக எடுத்துக்கலாம் .
சோனகர் சார்பான அரசியல் வாதிகள் அரபி நாடுகளிடம் போய் பேசி தங்கட பகுதிகளை அபிவிருத்தி செய்தால் நீங்களும் உங்களுக்கு உதவும் நாடுகள், புலம் பெயர் தமிழ் மக்களோட பேசி தமிழர் பகுதிகளின் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாமே? உங்களுக்கும் அபாரமான் வாய்ப்புக்கள் கொட்டிக்கிடந்தது தானே?
எப்பவும் உருட்டல்,மிரட்டல், அலட்டல் கடையடைப்பு,கதவடைப்பு ......... ஏன் எதுக்கு என எதிர்த்து கேள்வி கேட்டால் உயிரடைப்பு..... இதை தவிர நீங்கல்லாம் என்ன தான் செய்திங்க?
எல்லாத்துக்கும் அரசை நம்பாமல் தமக்கான் தன்னிறைவில் ஒரு சமூகம் முன்னேறுவதை பார்த்து பொறாமைப்பட்டு, நீயா, நானா எனும் ஈகோவில் சேரக்கூடாத இடம் சேர்ந்து, சேற்றில் புரண்டு தான் ஆகனும் என்பதெல்லாம் நியாயமாப்படுதாங்க?
ஊரில,உலகில எனக்கு தெரியாதது அண்டம் அளவு கிடக்குதுங்க... நான் ஒரு ஓரமா புறு புறுத்து கிடந்தாலும், நம்மட பேச்சை, ஏச்சை பொருட்டா மதிக்கும் தம்பி, தங்கைச்சி மார் எதிர்காலம் நினைச்சால் பயம்ம்ம்ம்மா இருக்குதுங்களே..?
அம்னீசியா எனும் .மறதி நோய் தமிழர் பரம்பரைக்கானதோ? எண்ட ஆதங்கம் தப்புன்னால் ஒரு வார்த்தை சொல்லிருங்க..

20 ஜூன் 2019

எள்ளு காய்வது எண்ணைக்கு, ஆனால் கல்முனையில் எலிப்புழுக்கை i எதுக்காக காய்கிறது ?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதம் இருக்கும் புத்த பிக்குக்கள் குறித்து
எள்ளு காய்வது எண்ணைக்கு, ஆனால் கல்முனையில் எலிப்புழுக்கு எதுக்காக காய்கிறது ?
எனும் இம்போர்ட் மீரர் செய்தியாளரின் பதிவில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது?
தமிழ் பேசும் சைவர்கள்,கிறிஸ்தவர்களையும் , தமிழ் பேசும் சோனகர் சமூகத்தவர்களையும் பிரித்தே ஆக வேண்டும் எனும் திட்டமிட்ட செயல் பாடுகள் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் இறுக்கமான சூழலில் செய்தியாளர் தமிழர்கள் சார்பாக நியாயமாக கேள்விகளை தான் கேட்டிருக்கின்றார். அதற்காக இம்போர்ட் மீரருக்கும், அதன் செய்தியாளருக்கும் பாராட்டுகளை தெரிவிக்கின்றேன். சரியான நேரத்தில் தகுந்த கேள்விகளோடு பதிவொன்றை இட்டு சிந்திக்க செய்தமைக்கு நன்றி.
அதே நேரம் கல்முனை வாழ் முஸ்லிம் சமுகம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூடாது என சத்யாக்கிரக போராட்டம் நடத்துவதும், தொடர்ந்து எதிர்ப்பதற்குமான பின்னனி காரணத்தை இம்போர்ட் மீரர் நிர்வாகிMunas Mps, முன்னாள் பொறுப்பாளர் Nisamudeen Risly Samsadபோன்றோர்கள் விளக்கம் தர முடியுமா?
தமிழர்கள் பகுதியான வடக்கு பக்கம் நிலப்பரப்பு அதிகமாகவும், மக்கள் செறிவு குறைந்தும், முஸ்லிம் சமூகத்தவர் வாழும் பக்கம் மக்கள் செறிவு அடத்தியாகவும், நிலப்பரப்பு குறுகியும் காணப்படுவதனால் தான் முஸ்லிம் சமூகம். 
தமிழர்களுக்காக பகுதி தரமுயர்த்துவதை எதிர்க்கின்றார்கள் என நான் கேள்விப்பட்டிருப்பது சரியான தகவலா?

காலத்தில் தேவை கருதி இதற்காக பதிலை நேர்மையான முறையில் எதிர்பார்க்கின்றேன்.

இரு பதிவுகள் சம்பந்தமாகவும், முழுச்செய்தியும் படிக்க முதல் பின்னூட்டத்தில் இணைக்கும் லிங்க கிளிக் செய்யுங்கள்.



கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்தல் தொடர்பாக........

கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்தல் தொடர்பாக........
எந்த நிலத் தொடர்புமில்லாத வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று கூறிக்கொண்டு ஒரு சிறிய பிரதேசமாக இருக்கும் குறைந்தளவான மக்கள் வாழும் ஒரு மாநகர எல்லையைப் பிரித்து தமிழர்களை வேறாகவும் முஸ்லீம்களை வேறாகவும் ஆக்கிவிடுங்கள் என்று கேட்பதில் உள்ள நியாயங்களை தெரிவியுங்கள்..
(தமிழர்களை வேறாகவும் முஸ்லீமகாளை வேறாக்கவும் கூறவில்லை என்று யாரும் கூறவந்தால் அது அறியாமையான கூச்சல் என்பதே பதிலாகும்)
இக்கூற்று நியாயமானதா..? இதுதான் இனநல்லுறவா..? இப்படியிருக்கும் போது வடக்கும் கிழக்கும் இணைந்தால் யார் யாரை ஆள்வது பதில் சொல்லுங்கள்.

நியாயமான கேள்வி தான்.
அதே நேரம் தமிழர்கள் தரப்பில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும் முஸ்லிம் சமூகம் பதில்; தரும் கடமைக்குள் இருக்கின்றது Munas Mps
வரலாற்றை பார்ப்போம்.
***
1989ம் ஆண்டு கல்முனை முஸ்லிம் பிரதேச சபையும், கல்முனை தமிழ் பிரதேச சபையும் உருவாக்கப்பட்டன... இவற்றில் கல்முனை முஸ்லிம் பிரதேச சபை தரமுயர்த்தப்பட்டு காணி, நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதும்... தமிழ் பிரதேச சபையை தரமுயர்த்தப்படவில்லை....
தமிழ் மக்கள் தரமுயர்த்துமாறு கோரிக்கை விடப்பட - அது அரசாங்கத்தினால் ஏற்கப்பட்டு - 1993இல் அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதும் - முஸ்லிம் அரசியல்வாதிகளின் எதிர்ப்பால் இன்று வரை அது கைவிடப்பட்டு, அதிகாரங்கள் முஸ்லிம் பிரதேச செயலகத்தின் கீழேயே உள்ளது.....
இதனால் தமிழர்களின் கிராமங்கள் சரியான முறையில் நிதி பங்களிப்பு செய்யப்படாமல் அபிவிருத்தி செய்யப்படவில்லை...
தமிழப் பெயர் கொண்ட வீதிகள் பெயர்மாற்றம் செய்யப்படுகின்றன..
அபிவிருத்திகள், சந்தை ஒதுக்கீடு, வாடகை வாகனத் தரிப்பிடம் போன்றவற்றில் முஸ்லிம் கிராமங்களுக்கு கிடைக்கும் சலுகைகளில் 10% கூட தமிழ்க் கிராமங்களுக்கு கிடைப்பதில்லை... தமிழ்ப் பிரதேசங்களில் வீதி மின்விளக்குகள் கூட ஒழுங்கான முறையில் போடப்படாமல் இருக்கின்றன...
******
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலகத்துடன் இணைந்திருந்த ஓட்டமாவடி முஸ்லீம் பிரதேசத்தை பிரித்து தனியான பிரதேச செயலகம்
செங்கலடி பிரதேச செயலகத்திலிருந்து சில கிராம சேவகர் பிரிவை பிரித்து தனியான ஏறாவூர் பிரதேச செயலகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர் ஒட்டமாவடி பிரதேசங்களை இணைத்து மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் எனும் பெயரில் முஸ்லீம்களுக்கு தனியான கல்வி வலயம் என உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
முஸ்லிம் சமூகத்துக்கான தனிப்பிரிவுகள் உருவாக தமிழர் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 
அப்போதெல்லாம் வடக்கும் கிழக்கு இணைப்பை குறித்து கேள்விகள் வந்ததில்லை அல்லவா Munas Mps?

கல்முனை வாழ் தமிழர்கள் - தமக்கு நியாயமாக கிடைக்க கூடிய அடிப்படை வசதிகளை பெற பிரதேச சபையை தரமுயர்த்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விட்டுக்கொண்டே இருப்பதும், அதற்கு முஸ்லிம் சமூகம் முட்டுக்கட்டை இடுவதும் எவ்வகையில் நியாயமாகும்?
இன்றைய சூழலில் தமிழர் தரப்பு சிங்கள பேரின வாதிகளுடன் இணைந்து கல்முனையில் உண்ணாவிரதம் இருந்தேனும் தமக்கான உரிமையை பெற்றிட வேண்டும் என எதிரியிடம் மண்டியிடும் சூழலுக்குள் தள்ளி விடப்பட்டிருக்கின்றார்கள் எனில்....?
நியாயத்தராசு இருபக்கமும் சமமாக இருக்கட்டும்.
கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்த 
எதிர்ப்பதற்கான நியாயமான காரணம் இல்லாமல் தமிழர் கோரிக்கைகளுக்கான எதிர்ப்பு சத்தியாக்கிரகம் நடத்துவதனால் பிளவுகள் மட்டுமே அதிகமாகும் என்பதை முஸ்லிம் சமூகம் உணர வேண்டும். எரியும் நெருப்பில் எண்ண்ய் வார்க்கும் செயல்பாடுகளை தொடர்வதனால் யாருக்கு பயன் கிடைக்கும் என சிந்தியுங்கள்.

🙏🙏🙏🙏
இவ்விவாதங்கள் , கடந்த கால வரலாறுகள் அறியாமல ஒரு பக்க கருத்துக்களை மட்டும் உள்வாங்கி உணர்ச்சிகர அரசியலில் சிக்கி எமது இளையோர்கள் தம் வாழ்க்கையை பாழாக்காமல் தமிழ் பேசும் சிறுபானையினரான எம் இரு சமூகத்தினுள் புரையோடி இருக்கும் கசப்புக்களை நீக்கப்பட வேண்டும். இரு சமூகமும் தாம் விடும் தவறுகளை உணர வேண்டும் எனும் நோக்கத்தில் தொடரப்படுகின்றது.
ஆதலால் ஆனறோர்கள் எமது இளையோருக்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழி நடத்தும் கடமைகளிலிருந்து விலகி வேடிகை பார்க்காமல் தங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
காலத்தில் அவசியத்தை உணருங்கள். மௌனமாக வேடிக்கை பார்க்கும் தருணம் இது அல்ல.
மட்டக்களப்பு மாணவர் சமுதாயம் சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைக்கப்படுகின்றதெனும் ஐயம் தோன்றுகின்றது😭.
ஆடுரா ராமா ஆடு எனும் சிங்கள பேரினவாதத்தின் ஏவல்களுக்கும், கட்டளைக்கும் ஆடும் குரங்குகளாக தமிழர்களும், சோனகர்களும் ஆகி போனோமா?

சோளியன் குடுமி சும்மா ஆடாது -கல்முனை பிரதேச செயலகம்

கல்முனையில் பதட்டம்
ஆயிரம் பேர் மெழுகுவர்த்திகளுடன் அணிவகுப்பு.
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி புத்த பிக்கு உண்ணாவிரதம்.
கல்முனையில் சிங்கள பேரினவாதிகளின் சார்பானவரான,இனவாதியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட புத்த பிக்குவின் உண்ணாவிரதம் சொல்லும் செய்தி என்ன?
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரும் படியாக தமிழர்கள் சார்பான கோரிக்கை பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் சிங்கள தேரர் ஒருவருக்கு எங்கள் தமிழ் மக்கள் மேல் அக்கறை சுனாமி அலைகள் போல பெருக்கெடுத்து பெருகி இருக்கின்றது.
சுனாமி அலைகளால் எவருக்கும் நல்லது நடப்பதில்லை என்பதும் அழிவுகளே எஞ்சும் என்பது நாம் அனுபவித்து உணர்ந்தவைகளாக இருந்தாலும் எமக்கு எத்தனை பட்டாலும் புத்தி வருவதே இல்லை என மெய்பித்து கொண்டே இருக்கின்றோம்.
மட்டக்களப்பு தமிழர்கள் 
முழு முட்டாள்கள்.
மூடர்கள். 
பைத்தியக்காரர்கள் 
அறிவீலிகள்,
எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுபவர்கள்.
சூடு சொரனை இல்லாதவர்கள்
எத்தனை அடித்தாலும் தாங்குவார்கள்.

ஆம்... இப்படித்தான் அவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
ஏற்கனவே முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையிலான முறுகல் நிலையும், பதட்டமும் தொடரும் சூழலில் தேரர்கள் இருவர் தமிழர்களுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கின்றார்கள். பிக்குகளுடன் இணைந்து உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக தமிழ் பேசும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சார்பான முக்கியஸ்தர்களும் இணைந்திருப்பது தமிழர்களை குறித்த சிங்களவர்களின் புரித்துணர்வு மேற்சொன்ன படியே என்பதை நிருபித்திருக்கின்றன.
இலங்கை அரசின் ஆட்சி அமைப்பே பௌத்த பிக்குகளின் காலடியில் என்பதை பண்டாரனாயக்கா காலம் முதல் உணர்ந்து தான் இருக்கின்றோம்.
சிங்கள பௌத்த பிக்குகள் இலங்கை அரசினை ஆட்டிப்படைக்கும் வல்லமை வாய்ந்தவர்கள் என்பதை கடந்த மாத உண்ணாவிரத நாடகமும், ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமாவும் மெய்ப்பித்திருக்கின்றார்கள்.

சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை. வடகிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்,வடகிழக்கு இணைப்புக்குறித்த எமது நியாயமான கோரிக்கைளினை இப்பிக்குகள் எப்படி கையாண்டார்கள்?
இதே தேரர்கள் எந்த விடயத்தில் எங்களுக்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என முன்னெடுத்திருக்கின்றார்கள்?
முள்ளிவாய்க்கால் அழிவினை தங்கள் யுத்த வெற்றியாக கொண்டாடியவர்கள். எங்களை அடக்கியாள்வதை இலக்காக கொண்டவர்கள் எப்படி எங்களுக்கு சார்பான தீர்வுகளை பெற்றுத்தருவார்கள்?
இப்போது எதிராக இருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் நாளை அவர்கள் செல்லப்பிள்ளைகளாகலாம்.
அப்போதும் இன்றைய இருப்பை விடவும் மட்டக்களப்பு வாழ் தமிழர்கள் நிலை மிகவும் கடுமையானதாக மட்டுமல்ல பரிதாபமானதாகவும், இருக்கும்.
மட்டக்களப்பு தமிழர்கள் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது. சோளியன் குடுமி சும்மா ஆடாது என புரிந்திடவும் வேண்டும்.
எதிரிக்கு எதிரி நண்பன் கதையெல்லாம் சிங்கள பேரின வாதிகள், பௌத்த இன வாதிகளுடன் எடுபடாது கண்டியளோ?

27 மே 2019

ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோராய் ........2.?

இரண்டு நாட்கள் முன் நான் இட்ட பதிவு எழுத்து மாறி வாசிக்க முடியாமல் இருப்பதாக பலரும் சொல்வதனால் அப்பதிவை திருத்தி இரு பதிவாக இங்கே இடுகின்றேன்.
பதிவின் நோக்கம் எவரையும் குற்றப்படுத்தல் இல்லை. 1990 செப்டம்பர் மாதம் வரை இலங்கையில் வாழ்ந்த நான் அங்கே வாழ்ந்த காலத்தில் கண்டது, கேட்டதுமான சம்பவங்களின் சொந்த அனுபவத்துடன்.அககாலங்களில் அங்கே வாழ்ந்த பலரின் அனுபவங்களையும் கேட்டு உள் வாங்கி எழுதி இருக்கின்றேன்.
இச்சம்பவங்கள் அனைத்தும் உண்மையாகவே நடந்தது. இதில் குறிக்கப்பட்ட படுகொலை தாக்குதல்களை விட பல சம்பவங்கள் வெளியுலகம் அறியாமலே மண்ணோடு மண்ணாகி போனது. கைது செய்து காணாமல் போனோர் காணாமலேயே போய் விட்டார்கள்.
ஒரு விடயத்தை மிகத்தெளிவாக குறிப்பிட விரும்புகின்றேன். கடந்த காலம் நடந்தவைகளை பேசி ஒருவரைஒருவர் குற்றப்படுத்தி, தற்கால சம்பவங்களை நியாயப்படுத்துவோருக்கு ஆதரவு தருவது கண்டிப்புக்குரியது. விடுதலைப்புலிகள் மேல் குற்றம் சாட்டுவதை ரசிப்பதும்,அவர்கள் செய்தது, செய்யாதது என அனைத்தையும் அவர்கள் மேல் பழியாக இட்டு வன்மம் வளர்ப்பதும் எமது கண்களை நாங்களே குத்தி குருடாக்குவதுக்கு நிகரான செயல்பாடு.
ஒரிரு சம்பவங்களை மட்டும் பேசிப்பேசி வன்மம் வளர்க்கப்படுவதை விட ஒட்டு மொத்தமாக நடந்தது அனைத்தையும் எடுத்து சொல்லி புரிய வைப்பதே இச்சூழலில் அவசியமானதாக இருக்கின்றது.
மாறி மாறி குற்றம் சாட்டுவதையும், நியாயப்படுத்துவதையும், சமூகம் சார்ந்து மீட்சி திட்டங்களில் ஈடுபடும் எம் போன்றோரும் வேடிக்கை பார்ப்பது எமக்கான தீர்வுகளை தூரமாக்கி கொண்டே செல்கின்றன்.
1985 - 1990 களில் அனைத்து தமிழ் கிராமங்களுக்குள்ளும் சோதனை எனும் பெயரில் அத்துமீறி நுழைந்து உள்ளூர் மக்களை கைது செய்ததும், காணாமல போனதும் சாம்பலானதும், ஆவணப்படுத்தப்படாமலே அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன.இதோ விட்டு விடுவோம் என சொல்லி கூட்டி சென்றவர்களை திரும்பி சந்திக்க வாய்ப்பை தரவே இல்லை.
1990 ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான் குடி பள்ளிவாசலில் நடந்த சம்பவத்தை கடந்த 30 வருடங்களாகவே அதன் வடுக்களும், வன்மமும் மாறாமல் கடத்தி வருவோருக்கு தங்கள் சமூகம் தமிழ் பேசிய இந்துக்கள், கிறிஸ்தவர்களை குறி வைத்து நடத்திய தாக்குதல் விபரங்களும் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகம் விட்ட தவறுகளை அவர்களுக்கு உணர்த்தாமல் விடுதலைப்புலிகள் செய்த தவறுகளை மட்டும் மீண்டும் நினைவு படுத்துவது ஒரு பக்க சார்பானதாகவே இருக்கின்றது.
எங்கள் உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதம், தீவிரவாதிகள் எனும் பதிவுகளும், அதை ஆதரிக்கும் எம்மவர் ரியாக்சன்களும், இரு சமூகத்தினருக்கிடையில் ஏற்கனவே இருக்கும் சிக்கல்களை இடியாப்ப சிக்கலகளாக்கி கொண்டே செல்கின்றன.
 ஈஸ்டர் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களின் பின்னனியில் ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாதசக்திகளின் ஊடுருவலும், சர்வதேச மேலாதிக்க வாதமும் இலங்கையை ஆக்ரமிக்க ஆரம்பித்திருக்கின்றன.
 40 க்கும் மேற்பட்ட வருடங்கள் உள் நாட்டுக்குள் நடந்த உரிமை போராட்டத்தினூடான தாக்குதல் சம்பவங்களை தற்கால குண்டுவெடுப்பு நிகழ்வுகளை ஒப்பீடு செய்கின்றார்கள்.
 தமிழரிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப்பெறவென ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப்புலிகளுடன், ஐ,எஸ் தீவிரவாதிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நியாயப்படுத்த முனைந்த பலரை காண முடிகின்றது.
எங்கள் உரிமைக்காக போராடியவர்களை உலகம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தலாம், தடை செய்யலாம். தமிழர்களாகிய எங்களுக்கு தெரிய வேண்டும். அவர்கள் எங்கள் உரிமைக்காக ஆயுதமேந்தினார்கள். சர்வதேசமே இணைந்து எங்கள் உரிமை போராட்டத்தை நசுக்கியது.
ஈஸ்டர் கால தற்கொலை குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எந்த உரிமைக்காக மக்களை கொன்றழித்தார்கள் என அவர்களை எங்கள் உரிமைப்போராட்டத்துடன் ஒப்பீடு செய்கின்றார்கள்?
அப்போது நீ செய்தாய் தானே? இப்போது நான் செய்தால் தப்பா என எதிர் விவாதம் செய்து ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோர் நாட்டின் பாதுகாபபை கேள்விக்குறியாக்கி, அன்னியர் எம் நாட்டை அடிமைப்படுத்த இடம் கொடுப்பதை உணராதோராய் இருக்கின்றார்கள்.
நாடென்ன செய்தது எனக்கு என வினாவுவதை விட என் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என சிந்திப்பதே இன்றைய நிலையில் சிறப்பு.
கடந்ததெல்லாம் மறந்து புதியதோர் உலகம் காண நினைப்பது நல்லது தான். அதற்கு முன் அவரவர் மனட்சாட்சியின் நிமித்தம் தாமும் விட்ட தவறுகளை உணர்ந்து கொள்ள வேண்டும். எம்மை நீதிமானாக்கி, எதிராளியை குற்றப்படுத்திக் கொள்வோமானால் எம்மால் ஒரு அடி கூட முன்னோக்கி நகர முடியாது. 
இனியேனும் எம்மிரு சமூகத்துக்குமான நல்லெண்ணம்,சமுதாய நலன் சார்ந்து நீண்டகால மீட்சித்திட்டங்களை நோக்கிப்பயணிக்க வேண்டுமானால் அவரவர் தவறுகள் உணர்த்தப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக்க நீட்டப்படும் விரல்கள் தம்மை பரிசுத்தமானவர்களாக நியாயப்படுத்த எடுக்கும் முயற்சிகளால் எந்த பயனும் இல்லை.
இங்கே நான் பகிர்ந்திருக்கும் தகவல்கள். திகதிகளின் அடிப்படையில் அவரவர் சொந்த புத்தியை சரியாக கூர் தீட்டி தம்மை தாம் ஆராய்ந்தறிந்த பினஅவரவர் செயல்பாடுகளை நியாயப்படுத்தவும்.
நான் தமிழ் பேசும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கின்றேன். போராளிகள்+ இராணுவ மோதல்கள் குறித்து குறிப்பிடவில்லை.
விடுதலைப்புலிகள் + ராஜிவ் காந்தி கொலையுடன் நிகழ் கால சம்பவங்களை ஒப்பிடுவோருக்கு,அறிந்தோ அறியாமலோ அன்னிய,அண்டை நாட்டு அரசியல் சதிக்குள் சிக்கியதனால் எங்கள் உரிமைகளை நாங்கள் இழந்ததுடன், இருப்புக்களையும், இழந்து, உயிர்களையும்,உடமைகளையும் பறிகொடுத்து நாடற்றவர்களாக அகதி வாழ்க்கையின் வலிகள் என்றேனும் புரியுமோ என்னமோ?
காலம் அவர்களுக்கும் பலதை உணர்த்தும்.
முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழ பேசும் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் இராணுவத்துடன் இணைந்தும் தனித்தும் நடத்திய தாக்குதல்கள், படுகொலையானோர் விபரங்கள் குத்துமதிப்பாகவே கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.
இதை விடவும் அதிகமான இழப்புக்களை நாங்கள் சந்தித்தோம். 


 *
1990 ல் முஸ்லிம் ஊர்காவல் படை எனும் துணை இராணுவப்படையினரும், இலங்கை இராணுவமும் இணைந்தும் தனித்தும் பொது மக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் என பதிவு செய்யப்பட்டிருப்பவை. 
🔘 1.கல்முனைப் படுகொலைகள் - 250 / 12.06.1990
🔘 2.திராய்க்கேணிப் படுகொலைகள்- 47 / 06.08.1990
🔘 3.வீரமுனைப் படுகொலைகள்- 400 / 12.08.1990
🔘 4.கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்-158 / 05.09.1990 
🔘 5.சவுக்கடி படுகொலைகள் 20.09.1990
🔘 6.கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள்-152 / 11.06.1991

விடுதலைப்புலிகள் முஸ்லிம் பொது மக்கள் மேல் நடத்திய தாக்குதல்கள் என பதிவு பெற்றிருப்பவை. 
🔘 1.காத்தான் குடி 103 பேர் படுகொலை ஆகஸ்ட் 3 1990 
🔘 2.பல்லியகொடல்லை 166 -171 பேர் படுகொலை அக்ரோபர் 1991

அடுத்த பதிவில் தொடரும்.

ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோராய்.........?

அப்போது நீ செய்தாய் தானே? 
இப்போது நான் செய்தால் தப்பா?

ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோராய்.........?
நாட்டின் பாதுகாபபை கேள்விக்குறியாக்கி, அன்னியர் எம் நாட்டை அடிமைப்படுத்த இடம் கொடுப்பதை உணராதோராய்...?
கடந்த காலம் நடந்ததென ஆளுக்காள் குற்றம் குறைகள் சொல்லி விமர்சிப்போருக்கும், எங்கள் உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதம், தீவிரவாதிகள் எனும் பதிவுகளும், அதை ஆதரிக்கும் எம்மவர் ரியாக்சன்களும், இரு சமூகத்தினருக்கிடையில் ஏற்கனவே இருக்கும் சிக்கல்களை இடியாப்ப சிக்கலகளாக்கி கொண்டே செல்கின்றன.
கடந்த கதை பேசி குற்றம் சாட்டி எமது முன்னேற்றம், தீர்வுகளை தூரமாக்குவதை விட புற்றாய் வளர்ந்து சீள் பிடித்த காயத்தை வெட்டி சீளை வெளியேற்றி விட்டு கட்டுப்போடுவது நல்லதென நான் நினைக்கின்றேன்.
நாடென்ன செய்தது எனக்கு என வினாவுவதை விட என் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என சிந்திப்பதே இன்றைய நிலையில் சிறப்பு.
கடந்ததெல்லாம் மறந்து புதியதோர் உலகம் காண நினைப்பது நல்லது தான். அதற்கு முன் அவரவர் மனட்சாட்சியின் நிமித்தம் தாமும் விட்ட தவறுகளை உணர்ந்து கொள்ள வேண்டும். எம்மை நீதிமானாக்கி, எதிராளியை குற்றப்படுத்திக் கொள்வோமானால் எம்மால் ஒரு அடி கூட முன்னோக்கி நகர முடியாது. 
இனியேனும் எம்மிரு சமூகத்துக்குமான நல்லெண்ணம்,சமுதாய நலன் சார்ந்து நீண்டகால மீட்சித்திட்டங்களை நோக்கிப்பயணிக்க வேண்டுமானால் அவரவர் தவறுகள் உணர்த்தப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக்க நீட்டப்படும் விரல்கள் தம்மை பரிசுத்தமானவர்களாக நியாயப்படுத்த எடுக்கும் முயற்சிகளால் எந்த பயனும் இலை.
விடுதலைப்புலிகள் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் திகதி காத்தான் குடி பள்ளிவாசலுக்குள் நுழைந்து தாக்கியதாக சொல்லி சஹரான் குழுவினரின் ஈஸ்டர் கால குண்டு வெடிப்புக்களை நியாயப்படுத்துவோருக்கு விடுதலைப்புலிகள் 
காத்தான் குடி பள்ளிவாசலில் ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என தெரியாமல் இருக்கலாம்.

தெரிந்தவர்கள் உள்ளதை உள்ளபடி வெளியே சொல்லாத வரை தமிழ்ச்சமூகம் வீழ்ச்சியை நோக்கியே பயணிக்கும்.
இங்கே நான் பகிர்ந்திருக்கும் தகவல்கள். திகதிகளின் அடிப்படையில் அவரவர் சொந்த புத்தியை சரியாக கூர் தீட்டி தம்மை தாம் ஆராய்ந்தறிந்த பினஅவரவர் செயல்பாடுகளை நியாயப்படுத்தவும்.
நான் இங்கே தமிழ் பேசும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கின்றேன்.
விடுதலைப்புலிகள் + ராஜிவ் காந்தி கொலையுடன் நிகழ் கால சம்பவங்களை ஒப்பிடுவோருக்கு,அறிந்தோ அறியாமலோ அன்னிய,அண்டை நாட்டு அரசியல் சதிக்குள் சிக்கியதனால் எங்கள் உரிமைகளை நாங்கள் இழந்ததுடன், இருப்புக்களையும், இழந்து, உயிர்களையும்,உடமைகளையும் பறிகொடுத்து நாடற்றவர்களாக அகதி வாழ்க்கையின் வலிகள் என்றேனும் புரியுமோ என்னமோ?
காலம் அவர்களுக்கும் பலதை உணர்த்தும்.
 30.10.1990.முஸ்லிம்களை யாழிலிருந்து வெளியேற்றியதில் ஒட்டு மொத்த இலங்கை தமிழ் பேசும் இனத்தினரிடமிருந்தும் பறிக்கப்பட்ட உரிமைகளை இலங்கை அரசிடமிருந்து பெற்றிடவென போராளிகளான விடுதலைப்புலிகள் தவறு செய்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆயிரம் நியாயங்கள் கூறினாலும், தமிழ் பேசும் சக சகோதர இனம் எனும் புரிதலை கடந்து ஓரிருவர் அல்லது குழுவின் செயல்பாட்டிற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் தண்டித்தது தவறு தான். அவர்கள் அதை செய்திருக்க கூடாது. மன்னிப்பு எனும் வார்த்தையினால் ஈடு கட்டி விட முடியாத தவறு தான்.
அவர்கள் விட்ட ஆரம்ப தவறுகளின் பலனை அவர்களே அறுவடை செய்தும் கொண்டார்கள்😭.
அதற்காக.........?
அவர்கள் தவறு செய்தார்கள் என விரல் நீட்டி குற்றம் சாட்ட நீங்கள் குற்றமற்றவர்களாக இருந்தீர்களோ? 
நீங்கள் உங்கள் சார்பில் எந்த தவறும் செய்யவே இல்லையா? எனும் ஆழ் மன ஆராய்தல் அவசியம்.

காத்தான் குடி படுகொலை
***********************************

⁉️1990.ஆகஸ்ட் 3ம் திகதி காத்தான் குடி பள்ளிவாசலில் ஆயுதம் தாங்கிய குழுவினர் தாக்கினார்கள். அத்தாக்குதலில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

👩‍⚖️காத்தான் குடி பள்ளி வாசல் சம்பவத்தின் பின்னனிகள் என்ன? 

👩‍⚖️இந்த சம்பவத்துக்கு முன்னும் பின்னும் நடந்தவை என்ன? 
👩‍⚖️அவ்வாறான முடிவுக்கு நிர்பந்தித்தது எது அல்லது யார்?

காத்தான் குடி படுகொலையை மட்டுமே இங்கே பெரும் குற்றமாக்கி எனைய குற்றங்களை மறைத்து, முக்கியமாக முஸ்லிம் சமூகம் செய்த, செய்து கொண்டிருக்கின்ற தவறுகளை உணராமல் சாக்குப்போக்கு சொல்லி இடி சோறு தின்றாலும் சிங்கள அரசுக்கே சேவகர்களாக வாழ்வதை ஆதரிப்பதும், நியாயப்படுத்துவதும் தம் தவறுகளை அவர்கள் உண்ரும் தருணத்தை 
தரப்போவதே இல்லை.

தவறுகள் கண்டிப்பாக இடிந்துரைக்கப்பட வேண்டும். ஆதரவு செய்கின்றோம் எனும் பெயரில் பூசி மெழுகல்கள் தவிர்க்கப்பட வேண்டும். 
நட்பு வேறு. சமூகம் சார்ந்த எதிர்காலம் வேறு எனும் அறிவு பூர்வ சிந்தனை எமக்குள் வேண்டும். நட்பையும், சமூகத்தையும் ஒன்று சேர்த்து குழப்பி எமது சமூகத்துக்கு தீங்கு செய்வோர் பட்டியலில் இடம் பெற வேண்டாம். .

ஆம்....?
எங்கள் உரிமைப்போராட்டம் நசுக்கப்படடபோதும் வேடிக்கை பார்த்தீர்கள். போதாக்குறைக்கு உங்கள் அரசியல் ஆளுமைகள் எங்கள் மக்களையும் நிலங்களையும் அபகரிக்கும் செயல்பாடுகளில் ஈடு படும் போது ஆதரவும் தந்தீர்கள். அதற்கு யாழிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதையும், காத்தான் குடி சம்பவத்தையும் காரணம் காட்டினீர்கள்.
நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி யாகும் போதும் உங்கள் சமூகம் விடும் தவறுகளை உணராமல, நியாயப்படுத்துகின்றீர்கள்?
கிழக்கில் என்ன தான் நடந்தது? நடக்கின்றது? அங்கே தமிழர்களுக்கு பாதுகாப்பிலலத சூழல் ஏன்? கிழக்கு தமிழர்கள் பேசாமடந்தைகளாக, எவன் ஆண்டால் எமக்கென்னெ நான் என் குடும்பம் எனும் சுய நலவாதிகளாக முதுகெலும்பில்லாத கோழைகளாக மாறிப்போனது ஏன்?
கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது.
1990 ஆகஸ்ட் 3 காத்தான் குடி பள்ளி வாசலில்
தொழுகை நேரம் 103 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடுக்களை சுமப்போர்,வன்மம் வளர்ப்போர் அக்காலத்தில் தங்கள் சமூகம் விட்ட பிழைகளை உணர மறுப்பது எமக்குள் பல கேள்விகளை தந்திருக்க வேண்டுமல்லவா.....?

ஒன்றுக்கு நூறாய் இச்சம்பவம் நடந்த அடுத்த வாரமே பழிக்கு பழி வாங்கி உங்கள் இரத்த வெறியை தீத்து கொண்ட பின்னும் இலங்கை தேசத்தில் தமிழ் பேசும் இனத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை கூட பெறத்தகுதி அற்றவர்களாக்கி ,பால் சோறும் பொங்கி தின்ற பின்னும் எதை தான் எதிர்பார்க்கின்றீர்கள்?
காத்தான்குடியில் ஆக்ஸ்ட் 3 ல் 103 பேர் படுகொலையானதன் எதிரொலியாக நாங்கள் இழந்தவைகளுக்கு எங்கே நியாயம் கேட்க வேண்டும்?
திராய்க்கேணி படுகொலைகள் 
****************************************
1990 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 6 ம் திகதி இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது.இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.
வீரமுனைப்படுகொலை
*******************************

⁉️1990 ஆம் ஆண்டில் யூன்,யூலை மாதம் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் அப்பகுதி கிராம தமிழ்பேசும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் வீரமுனை பிள்ளையார் கோயில் வளவிலும், இராம கிருஷ்ன மிஷன் பள்ளியிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தார்கள்.

அவ்விடத்தில் ஆகஸ்ட் எட்டில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் உள் நுழைந்து 400 க்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டும் வெட்டியும் தாக்கினார்கள். வீரமுனை பிள்ளையார் கோயில் தாக்குதல் சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்.
1990 யூன் மாதமிருந்து காணாமல் போனோர், கைது செய்யப்பட்டோர் குறித்து இது வரை எந்த தகவலும் இல்லை என்பதை விட கைது எனும் பெயரில் கொண்டு செல்லப்பட்டவர்களை உயிரோடு அடுக்கி, டயர் போட்டு எரித்து எரிந்தும், எரியாமாலும், மட்டக்களப்பு வாவியில் எறிந்த உண்மைகள் பிணங்கள் எழுந்து வந்து சொல்லவா போகின்றன?
சத்துருக்கொண்டான் படுகொலை
********************************************

⁉️1990ம் ஆண்டு ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சோதனை எனும் பெயரில் நடத்திய கைதுகள் செயல்பாடுகளுக்கு அஞ்சி தமது இருப்பிடங்களை விட்டு சிதறியோடி பாதுகாப்புத்தேடி, பாடசாலைகள், ஆலயங்கள், பொதுக்கட்டடங்கள் என்பனவற்றில் கூட்டமாக தஞ்சமடைந்தவர்களை 

ஒரே இடத்தில் கொன்ற படுகொலைதான் சத்துருக்கொண்டான் படுகொலையாகும்.

செப்டம்பர் 9. இராணுவத்தினருடன்,தமிழ் ஒட்டுக்குழுக்களும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் சேர்ந்து மட்டக்களப்பு சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் 186 பேரை ஒன்றாகக் குவித்து அடையாளம் தெரியாமல் கொன்றழித்தார்கள்.குற்றுயிரும், குறைஉயிருமாக ஒன்றாக குவித்து டயர்களை போட்டு எரித்தார்கள்.
இதற்கெல்லாம் சாட்சி யார் என்கின்றீர்களா? 
பிணங்கள் வந்து சொல்லாது தான். 
எங்கள் மனங்கள் என்றேனும் ஒரு நாள் பேசும்.

ஆகஸ்ட் 3 காத்தான் குடி தாக்குதலுக்கு முன்னர் நடந்தது என்ன?
கிழக்கில்.அதிலும் மட்டக்களப்பு, அம்மாறையில் பூவும் நாரும், புட்டும் பூவும் ஏன் உதிர்ந்து போனது?
1990 களில் மட்டக்களப்பு, அம்பாறையில் யூன் மாதம் தொடக்கம் இராணுவத்துடன் இணைந்து, துணைப்படை எனும் பெயரில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் தமிழ்க்கிராமங்களுக்குள் நுழைந்து நடத்திய கொடுமைகளுக்கு யார் நியாயம் தீர்க்க முடியும்?
கல்முனைப்படுகொலை
********************************

⁉️1990 யூன் கல்முனையில் 200 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதும். உயிரோடு எரிக்கப்பட்டதும் அதற்கு முஸ்லிம் ஊர்காவல் படையினர் துணை போனதும், மசூதிகளில் ஆயுதங்கள் சேகரிக்கும் இட்ங்களானதும்......அன்று வரை தாயாக பிள்ளையா பழகி வந்த இரு சமூகமும் எதிரெதிராக,ஒருவரிலொருவர் நம்பிக்கைஅற்று, அச்சமும், அவ நம்பிக்கையும் நுழைத்தவர்கள் யார்?

விடுதலை போராட்ட செயல் பாடுகளை காட்டிக்கொடுத்ததும், விலை போனதும்.. பெரும்பான்மை சமூகத்தினை சார்ந்தே வெளிப்படுவதும் தான் உங்கள் நீதியா?
உங்களுக்கு வந்தால் இரத்தம்? அடுத்தவர் உயிர் என்ன தக்காளி சட்னியா?
நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. எமது பக்கம் குற்றம் சாட்டப்பட்டோர் தமது தவறுகளுக்கான பலனை அடைந்த பின்னும் அதையே பேசி தப்பிக்க முனைவோர் சிந்தியுங்கள்.
எமது விடுதலைப்போராட்டத்தையும், எமக்காக போராடிய விடுதலைப்புலிகளையும், அவர்களின் உயிர்த்தியாகத்தையும் விமர்சிக்கும் தகுதி உடையோராக இங்கே எவரும் இல்லை.
இலங்கை தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற தமிழ் பேசும் இந்துக்கள்,முஸ்லிம்கள்,கிறிஸ்தவர், பறங்கியர் என அனைத்து இனங்களின் ஒற்றுமையும் அவசியம் என்பதை போலவே எமது விடுதலைப்போராட்ட தியாகங்களுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.
அவர்கள் கடந்து வந்த போராட்ட பாதைகளில் கறைகள் இருக்கலாம், வடுக்கள் இருக்கலாம். அதற்காக அவர்கள் போராட்டமும், தியாகமும் கறைப்படுத்தப்படுமானால், அவர்கள் அர்ப்பணிப்பை புறம் தள்ளி சமூகம் சார்ந்த மீட்சிகளை முன்னெடுத்து செல்வது என்பது சாத்தியமே இல்லை.
அன்று நடந்தவைகளை பேச மறுப்பதும், மறப்பதும், மறைப்பதும் நியாயமாகவே படவில்லை.
குற்றம் சாட்டி ஒருவரிலொருவர் பழி போட்டு எமது தவறுகளை மறைப்பதை விட,வெளிப்படையாக பேசி தெளிவை பெறுவதே எமது சமூகத்துக்கு இன்றைய நிலையில் செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும்.
அனைவரும் இணைந்தே தீர்வுகளை தேடுவோம்.
இலங்கை எங்கள் தேசம். அதை பாதுகாப்பது எம் ஒவ்வொருவர் கடமையுமாகும்.
ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோராய்.........?
🔘