உங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் நரியார் தான் ஏமாந்தாராம்.
எப்படி?
ஒரு பாடலில்
படம் இணையத்திருந்து
வள்ளியம்மைப்பாட்டி
வடை சுட்டு விற்பாள்
பாட்டிசுட்ட வடையை
தினம் ருசித்துத்தின்னும் காகம்!
பாட்டி தந்த வடையொன்றை
தின்னச்சென்ற காகத்தை
குள்ள நரியும் கண்டது
தந்திரமொன்று செய்தது!
காக்கை அக்கா நீ பாடு
காது குளிர நான் கேட்பேன்
இனிமையான உன் குரலோசை
கேட்டு ரெம்ப நாளாச்சே!
என்றே நரியும் சொன்னதனால்
நன்றே நினைத்த காக்கையது
வடையைக்காலில் வைத்துக்கொண்டே
கா...கா வென்றே பாடியது!
ஏய்க்க நினைத்த நரியாரோ
ஏமாறித்தான் போனாராம்
புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம்!
