பொன்னான என் மொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொன்னான என் மொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 அக்டோபர் 2018

வெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.

முதல் முறையாக பூமியிலிருந்து சந்திரனுக்கு சென்ற மூவரில் இருவருக்கிருந்த ஒரு நொடி தயக்கமே சந்திரனில் முதலில் கால் பதித்தவராக நீல் ஆம்ஸ்ரோங்கை வரலாற்றில் இடம் பிடிக்க வைத்தது.
வாய்ப்புக்கள் நம்மை நோக்கி வரும் போது நம் மனதில் தோன்றும் ஒரு நொடி தயக்கமும், கலக்கமும் நமது முன்னேற்றத்துக்கு தடையாக மாறி விடுகின்றது.


20 ஜூன் 2018

தினகரனும் தீர்க்கதரிசனமும்!

எரே 14:14. தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால் .......!
ஒன்றும் தரிசியாதிருந்தும் தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!
நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும் போது.... பொய்க் குறியைச் சொல்லுகிறீர்கள். ஆகையால் நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். எசே 13:2,3,7.
எரே 14:14. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பியதுமில்லை அவர்களுக்கு கற்பித்ததுமில்லை! அவர்களோடே பேசினதுமில்லை..... அவர்கள் தங்கள் இருதயத்தின் கபடத்தை உங்களுக்கு தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.
மனதில் தோன்றுகின்றதை கூறும் இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று கர்த்தர் நம்மை எச்சரிக்கிறார்.
நியாயத்தீர்ப்பு நாளில் 
ஆண்டவரே! ஆண்டவரே! 
உம்முடைய (இயேசு) என்னும் நாமத்தில்தீர்க்கதரிசனம் உரைத்தோமல்லவா ? பிசாசுகளை துரத்தினோம் அல்லவா? அற்புதங்களை செய்தோம் அல்லவா? என்பார்கள்
ஆனால் இயேசுவோ இவர்களைப் பார்த்து அக்கிரம செய்கைக்காரர்களே என்னைவிட்டு அகன்று போங்கள், உங்களை நான் ஒருகாலும் அறியேன் என்று அவர்களுக்கு சொல்லுவேன் என்கின்றார்.
மத் 7:22,23.

2 பேதுரு 2:1-3 
1.கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2.அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
3.பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதல்ல தேவனுடைய வசனம் உங்களுக்கு சொல்வது எதுவென மட்டும் நிதானித்து கொள்ளுங்கள்.
தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம், அன்பு ஒருக்காலும் ஒழியாது. என 1 கொரிந்தியர் 13 ல் சொல்லப்படுவது போல் அழியாமல் நிலைப்பது அன்பும், நம் மனதில் நான் உருவக்குத்திக்கொள்ளும் தேவ வசனமும் தான்.

உங்கள் சொந்த புத்தியினாலும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கும் ஞானத்தினாலும் வசனம் சொல்வதை ஆராய்ந்து, நிதானித்து , தியானித்து சரியானதை பற்றிக்கொள்ளுங்கள்.
ஆமேன்

12 ஆகஸ்ட் 2017

நிஷாவின் அனுபவ மொழிகள்.

 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. (சங்கீதம் 118:22,23).
உண்மையான வார்த்தை.
நம்மால் வேண்டாம், தேவையில்லை என ஒதுக்கப்பட்டவர்களே நமக்கு முக்கியமானவர்களாக போகும் காலமும் வரும்.
நமக்கு தேவையில்லை என நம்மால் ஒதுக்கப்பட்டவர்கள் நம் மரணத்தின் இழப்பை எண்ணி துடிப்பவர்களாக இருப்பார்கள்.
நம்மால் உயர்த்தப்படுகின்றவர்களினாலேயே நாங்கள் தாழ்த்தப்படுவோம். அழிக்கவும் படுவோம்
நாம் வாழும் காலத்தில் நமக்கு முக்கியமானவர்கள் என மதித்து நடக்கும் எவரும் நாம் தாழும் காலத்தில் எம்முடன் துணை வருவதில்லை.
நாம் வளமாய் வாழ்ந்த காலத்தில் நாம் வேண்டாம் என ஒதுக்கி நடத்துபவர்களே நம் துயர நேரத்தில் துணை வருகின்றார்கள்.
நாம் யாரையெல்லாம் வேண்டாம் என ஒதுக்குகின்றோமோ அவர்கள் நமக்காக கண்ணீர் சிந்துகின்றவர்களாகவும், உதவி செய்பவர்களாகும் இருப்பார்கள்.
நாம் தாழ்த்துகின்றவர்கள் நம்மை உயர்த்துகின்றவர்களாக இருப்பார்கள்.
ஒருவரை திருப்திப்படுத்த இன்னொருவரை பகைப்பதும், வெறுப்பதும், ஒதுக்குவதும் நமக்கு நாமே வைக்கும் கொள்ளி.
மக்கள் கூடி இருக்கும் சபையில் ஒருவரை கனப்படுத்தும் போது அவர்கள் அதற்கு தகுதியானவரா என்பதை ஆராய்ந்து எவரையும் புகழாமலும் இகழாமலும் எல்லோருடனும் ஒரே சம மன நிலையில் நடப்பது எக்காலத்திலும் சிறந்தது.
 

24 நவம்பர் 2016

நீதிமொழிகளும் நிஷாவும்

  நீதிமொழிகளும் நிஷாவும்
****************************** 

1.மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும்  வெளிப்படையான 
கடிந்துகொள்ளுதல்  நல்லது.
தன்நாவினால்  முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்து
 கொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். 
💃💃💃உண்மையான அன்பு கொண்டவர்கள் தாம் நேசிக்கும் மனிதர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாது செல்ல மாட்டார்கள். நல்லது கண்டால் தட்டிக்கொடுத்து பாராட்டுவது போல் தவறு கண்டு கண்டிப்பதும், செய்யும் பிழை உணர்த்துவதுமே நல்ல நட்பூக்கு அடிப்படை. நண்பன் செய்யும் தவறுகளை முகதாட்சன்யம் பார்த்து கண்டும் காணாது செல்வது நட்புக்கு நாம் செய்யும் துரோகமே! 
நல்ல நட்புக்கு நிஷா தான் பெஸ்டாம்!💙💙💙💙

2.முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான்.💃💃💃எத்தனை உண்மை!
முகத்துக்கு நேரே பாராட்டி முதுகில் குத்தும் நண்பர்களை இனம் கண்டு விலக வேண்டும், நண்பன் செல்வது தவறான பாதை என தெரிந்தும் அவன் செய்யும் தவறை உணர்த்தாமல் கவலைப்படுவான், கலங்குவான், கோபிப்பான் என நினைத்து கண்டுக்காணாமல் செல்பவரை இனம் கண்டு நாமே ஒதுங்கிச்செல்ல வேண்டும், அவர்கள் நமக்கு எதிரிகளும்,துரோகிகளும் ஆவார்கள்.

3.வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். 
💃💃💃துஷ்டரைக்கண்டால் தூர விலகு என்பார்கள். சமுதாயத்தில் நல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆரோக்கியமான் விவாதங்களை விதாண்டாவாதங்களாக்கி சண்டைகள் வைராக்கியங்கள் கோபங்கள் வருமானால் அவ்விடம் விட்டு அகல்வது நமக்கு மேன்மையே!

4.ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.💃💃💃நல்லது நடக்குமானால் நல் ஆலோசனை செய்து விவாதம் செய்வதும், தீமையை விட்டு விலக்கி நன்மையை விதைப்பதும் நல்லதே! உண்மையை உள்ளபடி பேச என்றுமே தயங்கக்கூடாது.
மூன்றாவது வசனத்துக்கும் நான்காவதுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகவனித்து பாருங்கள்.

5.மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். 
💃💃💃கருத்தாடலின் போது அக்கருத்தினை திசை திருப்புவோருக்கும், முயலுக்கு மூன்றே கால் என தான் சொல்வதே சரியென சொல்லி தங்கள்வாதங்களையே  தாறுமாறாக்கி பதிலளித்து விதண்டாவாதம்செய்வோருக்கும்அகக்கண்களை 
குருடாக்கி அந்தகார இருளில் இருப்போருக்கும் விதண்டாவாதமாய் சம்பந்தமில்லாமல்கேள்விகள்கேட்போருக்கும்நாம்பதில்சொல்லத்தேவையில்லை.

6.மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
💃💃💃ஐந்தாவதில் சொல்லப்பட்ட வசனத்தினை வாசித்து விட்டு ஆறாவதுக்கு வந்தால்!!!!!!!!!!!!!!! 
விவாதங்களுக்கு பதில் சொல்லாது விலகி மௌனமாய் செல்வோரும், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தராமல் அசட்டை செய்வோரும் மௌனம் சம்மதம் என்பதன் மூலம் நம் கருத்தினைஏற்றுக்கொள்கின்றார்கள் 
என புரிந்து கொள்ளவும் வேண்டும்.
குறிப்பிட்ட விவாதம் அல்லது கலந்துரையாடலை திசை திருப்புவது போல் அதற்கு சம்பந்தமில்லாமல் வரும் கருத்துக்களை த்தான் நாம் அசட்டை செய்ய வேண்டுமே தவிர ஒரு விவாதத்தில் ஈடுபட்டால் முடிவு வரை நம் கருத்தில் உறுதியாய் இருக்க வேண்டும்.
மாறி மாறி பேசுவதும், விவாதத்தை திசை திருப்புவதும் அவர்கள் கருத்துக்கு நமக்கு பதில் தெரியாது எனும் இயலாமையில் மொத்த வெளிப்பாடே அன்றி ஞானமான காரியமல்ல !
வேண்டாத விவாதம் என தோன்றி நாம் மௌனமாய் செல்வது தாம் சொல்லும் கருத்து சரிஎன நாம் ஏற்றுக்கொண்டதாய் அவனுக்கு புரிய வைத்து தன்னை மேதை என எண்ணும் படியும் செய்கின்றதே!
முட்டாள்தனமாக விவாதம் செய்பவர்களின் முன் நான் என் கருத்தில் உறுதியாய் இருந்து ஞானியாக இருக்கவே விரும்புகின்றேன்!

7.தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்
💃💃💃ஆமாம், தனக்கு இலாபமும் நன்மையும் கிடைக்க தன்னை நம்புபவர்களுக்கு தவறான பாதை காட்டி உணர்வுகளை உசுப்பேற்றி காரியம் சாதிக்க நினைப்போரை நாம் இனம் காண வேண்டும்.
தன் காரியம் முடிந்தபின் நான் சும்மா பகடிக்கு செய்தேன் என சொல்லி கையை தட்டிக்கொண்டே செல்பவர்கள் தான் அனேகர்.

8. கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். 
💃💃💃இப்படியானவர்கள் ஈரைப்போனாக்கி பேனைப் பெருமாளாக்கி ஊரென்ன உலகத்தையே உருட்டி உரலுக்குள் போட்டு இடிப்பார்கள். வதந்தியை தந்தியாக்கி எரியும் நெருப்பை இன்னும் திகு திகு என எரியை வைப்பார்கள்.
தங்கள் ரேட்டிங்க எகிறி வியாபாரம் பெருக கடைப்பிடிக்கும் பத்திரிகை, மற்றும் செய்திச்சேனல்களை நடத்துவோருக்கு இதை விட வேறென்ன வேலை?

9.விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
💃💃💃கோள் மூட்டுகின்றவர்கள் நல்லதை சொல்ல மாட்டார்கள்! நல்லவர்கள் ஒருவர் சொன்னதை ஒன்பதாக்கி அடுத்தவரிடம் சொல்ல மாட்டார்கள். ஒன்றைப்பத்தாக்கி சின்ன விடயத்தையும் பெரிய சண்டை யாக்கும் திறமையை இந்த கோள் மூட்டுவோர் கொண்டிருப்பதனாலும் அவர்கள் வார்த்தைகள் சட்டென இதயத்தினுள் புகுந்து மனதை கலங்கடித்து காயப்படுத்துவதனால் உண்ர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுப்பதனாலும் விரோதங்கள் அதிகமாகும். அப்படியானவர்களிடம் நாம் நம் இரகசியங்களை பகிரவும் கூடாது. நம்மை நம்பி அடுத்தவர் சொல்லும் விடயங்களை நாம் இன்னொருவருக்கும் சொல்லவும் கூடாது.
நம்பிக்கை தான் எமது தும்பிக்கை!

10.நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்
பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
பகையை வஞ்சகமாய் மறைத்துவைக்கிறவனெவனோ அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். 
 💃💃💃அன்பாய், ஆதரவாய், பாசமாய், அக்கறையாய் இருப்பது போல் நடித்து பாசம் காட்டி காரியம் சாதிப்போரை இனம் காண்பது மிகக்கடினம் தான். அவர்கள் உள்ளத்தில் உள்ளதை மறைத்து கபட வேடம் போடுவதில் வல்லவர்கள்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போலவே 
தனக்குள் இருக்கும் பகை உணர்வை மறைத்து பாசமாய் நடிப்பவர்கள்வேசம் ஒரு நாள் வெளிப்படும்,

அடுத்தவனுக்கு தீங்கு செய்ய நினைத்து குழியை வெட்டி காத்திருப்பவன் கடைசியில் அவனே விழும் நிலையும் உருவாகும்,
********************************************************************************************************
மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?
💃💃💃எனக்குப்புரியவே இல்லை! உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்! 
ஊரைச்சுற்றிப்பார்த்தேன் .......மாயை
உலகைச்சுற்றிப்பார்த்தேன்.... மாயை
வானத்தை பார்த்தேன்...... மாயை
பூமியில் நான் காண்பதெல்லாமே மாயையாகத்தான்  இருக்கின்றது!

நீதிமொழிகள் என்பது பைபிளின் இருக்கும் வேதமொழிகளாகும்! அதனோடு என் மொழிகளையும் கலந்தேன்.