08 பிப்ரவரி 2020

இதற்கா இத்தனை பாடுபட்டாய் ஈழத்தமிழா?

இளையோர் எதிர்காலத்தை நாசமாக்கி, நரகத்தில் உழன்று  நாறிப்போக
தூண்டி விடுவோருக்கு கடும் கண்டனங்கள் 🔥🔥🔥🔥

எடுத்தேன் கவிழ்த்தேன் என்றால் பல்கலைக்கழகத்தை முடக்கு...!

உன் கல்வியை பகிஸ்கரி ....!

இழுத்து மூடிவிட்டு யாரை எதிர்த்து யாருக்கான தீர்வை, யாரிடம் கேட்டு பெறுவீர்கள்?
நீங்கள் உங்கள் கல்வியை முடக்குவதனால் யாருக்கு நஷ்டம்?

இதற்கா இத்தனை பாடுபட்டாய்  ஈழத்தமிழா?

எமது மாணவர் சமூகத்தைபோராடடத்தினுள் நுழைத்து
எம்அறிவையும் ஆற்றலையும் முடக்குவது தான்  இலக்கென்றால்...?

உணர்வுகளை தொலைத்து,உயிர்களை அழித்து,உடைமையும் இழந்து,உறவுகள் உலகெல்லாம்  பிரிந்து,அனாதையாக, சொந்தபந்தம் சோகமாக ஆளுக்கொரு  திசையில்  பிரிந்து  அகதியென நாடின்றி  அலைந்திருக்கவே வேண்டாம்.

அடிமடட கூலிவேலைகளும், உணவு விடுதிகளிலும் சமையலறைகளிலும்
சுத்தப்படுத்தும், பாத்திரம் கழுவும் பணிக்கு பணியிலும் வெயிலிலும் இரவு பகல் ஓய்வின்றி உழைத்து  நாற்பதுக்கு முன்  மாரடைப்பும், சக்கரை நோயும் உடன் இலவச இணைப்பாக மனஅழுத்தமும்  பரிசளிக்கும் புலம்பெயர் வாழ்க்கை தரும் வலிகளை எங்கள் பிள்ளைகளும் உணர வேண்டாம்.

எமது பிள்ளைகள் குறித்தும் அவர்கள் எதிர்காலம் குறித்தும் பெற்றோராய், சமூகவியலாளராய் அக்கறை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும்எமது எதிர்கால சமூகத்தை  சீராக கட்டமைக்க வேண்டுமானால் அவரவர் தனிப்படட கடமையை உணர வேண்டும்.

கல்விக்குள் அரசியலை நுழைத்து, எமக்கான தீர்வுகளை துரமாக்கிய கடந்த கால தவறுகள் தொடர்ந்து கொண்டிருப்பதுடன்
எமது இளையோரின்  கல்வியையும் சிதைத்து சிதிலப்படுத்த  திடடமிடுவோரையும், ஆதரிப்போரையும் இனம் கண்டு ஒதுக்க வேண்டியது  அவசியமாகின்றது.

எங்கள் இளம் சமூகத்தினை தவறாக வழி நடத்தவும், சீரழிப்புக்கு துணை செய்தும்,இளையோர் அறியாமல் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த முயற்சிக்காமல் தன்னை யோக்கியனாக காட்டிக்கொண்டுஉத்தமர் வேடம் போடும் அதிகாரிகளும்,அரசியல்வாதிகளும்,ஆசிரியர்களும் இவர்களுக்கு ஜால்ரா தட்டும் அணைத்து புண்ணியவான்களும் மல்லாக்க படுத்து கொண்டே தன் மேல் தானே  துப்பும் எச்சில் அவர்களையும்  நாறடிக்கும்  எனும் உண்மையையும் புரிந்திடவேண்டும்


எங்கள் நம்பிக்கை கல்வியில் தான்.
பாகுபாடற்ற கற்றலுக்காக தான் அத்தனையும் இழந்தோம். கல்வி தான் எமது சமூகத்தின் மாபெரும் மூலதனம். எமக்கான கல்வி எங்கள் உயிர் மூச்சாக இருக்கின்றது.

எமது அஸ்திபாரம்  அசைக்கப்படுகின்றது..!

குற்றம் சாடடப்படுவதும்,பாதிப்புக்குள்ளாவதும் எமது இளம் சமூகமே என்பதை மிகவும் கவனமாக அணுகுவதுடன் இதுவும் இனஅழிப்பின் ஒரு வகை யுக்தி என்பதை புரிந்து ( வேரோடு கருவறுத்தல் என்பர்) உயர்தரம் கற்கும், பலகைலைக்கழகம் செல்லும் மாணவர் சமூகம் குறித்து தொடர்ந்து வெளிவரும் செய்திகள்,பயமுறத்தல்கள், பின்னடைவுகள் குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

நான்,நீ,அவன் என எமது குற்றச்சாட்டுக்களை, விமர்சனங்களை, சாபங்களை முன் வைக்கும் முன்னர் எமது சொந்த விரலை கொண்டே எமது கண்களை குத்தி குருடாக்க நினைக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை  இனம் கண்டு கொள்ளவும் வேண்டும்.

எமது இளம் சமூகத்தினை உளவியல் ரீதியாகவும், கல்வி, பொருளாதார தாக்கங்களினுடாகவும்  அடிவேரில் கரையான் புற்றை உருவாக்கி  எஞ்சி இருக்கும் நம்பிக்கைகளை சிதைத்திட எடுக்கும் முயற்சிகளை தடுக்கும் தீர்வுத்திட்டங்கள், கருத்தாய்வுகளை முன்னெடுக்காமல் வடகிழக்கு கல்வி மேம்பாடு குறித்த திட்டங்களை  தொடர்வதனால் எமது முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகவே போகும்.

இனியேனும் சுதாகரிப்போம்

Fake I’d யில்

சிலர் சிலருடன் சாட்டிங் செய்ததாக கூறி Fake I’d  பெயரில் பெண்களை  மிரட்டுவதான ஸ்கிரீன் ஷாட் பகிர்வுகளை போட்டு பகிரும் சிலர் பதிவுகளை பார்க்கும் போது குறிப்பிடட சிலருக்கும், சில ஊடகங்களுக்கும் மட்டும் இவ்வாறான செய்திகள் எப்படி கிடைக்கின்றது எனும் கேள்விகளை எமக்குள் உருவாக்கி இருக்க வேண்டும்.

1. Fake  I’d யில் உரையாடியதாக பகிரப்படட Screen சாட்டின் தொலைபேசி இலக்கங்களை வைத்து அந்த ID க்குரியோர் விபரங்களை காவல் துறை அனுமதி இன்றி தொலைபேசித்துறை  தருகின்றதா?

2.Fake  I’d களை எப்படிஇன்னார் தான் என உறுதிப்படுத்தி கொண்டார்கள்?

3.தெரிந்தே குற்றமொன்றை செய்பவன் அதற்கான ஆதாரங்களை இந்தா பிடி என கிடைக்கும் படியா தப்பு செய்வான்?

4. பாதிக்கப்படும் பெண் அல்லது ஆண் இவர்களை தொடர்பு கொண்டு அவன் அல்லது அவள் ஏமாற்றி விட்டாள் அல்லது மிரட்டுகின்றார் என ஆதரவும் பாதுகாப்பும் கேட்கும்  படி இந்த ஊடகங்கள் அல்லது சில தனி நபர்கள் எவ்வகையில் நம்பிக்கை தருகின்றார்கள்?

5. பல்கலைக்கழக ராகிங்பிரச்சனை மட்டும் என்றில்லை இன்னும்  பல சம்பவங்களின் பின்னணி குறித்து குறிப்பிடட சிலருக்கும் பிரபலமாகாத சின்ன     ஊடகங்களுக்கும் மட்டும் எப்படி ஆதாரங்கள் கிடைக்கின்றன?

இரு நபர் அல்லது குழுவுக்குள் பேசப்படுவதான தொலைபேசித்தொடர்புகளை,  சேட்டிங், வாய்ஸ் செய்திகளை  குறிப்பிடட சில ஊடகங்கள் ( அத்தனை பிரபல்யமாகதவை ) ஒரே நாளில், இரவில் வெளியிடுகின்றன.அருகில் இருந்து அனைத்தையும் கண்காணித்து போல் ஆதாரங்களை அள்ளி வீசுகின்றன. ( பிரபலங்களை அல்லது சில விடயங்களை அம்பலப்படுத்த திடடமிட்டு ஆதாரங்களை சேகரிப்பது வேறு விடயம். இது அப்ப்டியானதல்ல)

திடடமிட்டு உண்மையாக நடத்தும் ஒன்றை ( நாடகம்) பகிர்வது போல் அனைத்து ஆதாரங்களோடும் பகிருங்கள் என குறிப்பிடட ஊடகங்களுக்கு தந்து  விட்டு ( செய்வது தவறென உணராமல் செயல் பட்டிருப்பார்கள் என்பதை நம்ப முடியாது ) தைரியமாக குற்றம் செய்திருக்கின்றார்கள் எனில்

• இலகுவாக தொலைபேசி, மெயில், கடித தொடர்புகள் வெளிப்படுத்தபெற்றுக்கொள்ளத்தக்கதாக பாதுகாப்பில்லாத  தொடர்பாடல்களை குறித்த பயமோ பதடடமோ, குற்ற உணர்வோ இல்லாமல் கட்டுப்பாடில்லாத அறியாமை கொண்டவர்களா?

• உயர்தரம் கற்ற, பல்கலைக்கழகம் அனுமதி பெற்ற இளையோர் உலக அறிவில்லாது, குறுகிய சிந்தனையோடு வளர்ந்திருக்கின்றார்களா?

• தற்காப்பு, சுய பாதுகாப்பு சிறிதும் இல்லாத அறிவற்ற மூடர்களா எம் இளையோர்?

ஏழை, படிப்பில்லை எனும் நொண்டிசாக்கை சொல்லி எங்கள் சமூகத்தின் அறிவையும் ஆற்றலையும் குறைத்து மதிப்பிடாமல் சிந்தித்து பார்க்க வேண்டும்

சம்பந்தப்பட்ட பெண் தொலைபேசியினுடாக குறிப்பிடட உரையாடல் வெளி வந்தது என்றாலும் குறிப்பாக இந்த ஊடகத்தை தேடி அத்தனை ஆதாரங்களையும் எப்படி பகிர முடியும் எனும் சாதாரண கேள்வி வரவில்லையா?

 நடந்த சம்பவங்கள், பாதிப்புக்கள் உண்மை தான்  என்பதில் மாற்று கருத்து இல்லை என்ற போதும், அவை உண்மையில் நடத்தப்பட்டு எமக்கான கல்வியை தூரமாக்கி எமது இளையோரை குறிவைக்க பட்டிருக்கும் துப்பாக்கியின் கூர்முனை
யூதர்களை தேடித்தேடி விசவாயுவால் அழித்த ஹிட்லரின் சாடிசத்துக்கு நிகரானது.

அழிக்கப்படுவதும் பாதிக்கப்படுவதும் எவனோ எவளோ அல்ல.
எம்மவன், தமிழன்...!

ஈஸ்ரர் குண்டு வெடிப்பில் குற்றம் சாடடபடட போது இஸ்லாமியர்கள் எத்துணை ஒற்றுமையாக அப்பிரச்சனையை எதிர் கொண்டார்கள்?

அவர்கள் சார்ந்த ஊடகங்கள் தங்கள் சுயத்தை விட்டுக்கொடுக்காது குற்றவாளிகள் என இனம் காடட ப்பட்டவர்கள் குறித்து தெளிவாக முடிவுகளை வெளிப்படுத்தினார்கள்.
அவர்கள் மீதான அடக்குமுறையை முறியடித்தார்கள் என்பதை உணர்ந்த பின்னும் ........
.
யாருக்கோ எங்கோ நடக்கும் ஒன்றேனும் வரை அது செய்தியாக இருக்கும்.
அது நம்மைக்குறித்தேனும் போது சம்பவமாகி பேசு பொருளாக நாமும் இருப்போம்.

வெளி நாடுகளில் இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது பொதுவெளியில் பகிர்ந்து சக மாணவர்கள் மன நிலையை குழப்பி பதடடப்படுத்த மாடடார்கள்.

போலித்தன ஊடகங்கள்சு, யநலஅரசியல் வாதிகளை போல் சமூகப்பொறுப்பு மிக்க கல்விமான்களும் ஆய்வுகள் இன்றி சம்பவங்களின் உண்மை தன்மை ஆராயாமல் செய்திகளை காவுவது கவலைக்குரியது🔥


19 ஜனவரி 2020

முதுமை கொடுமை எனும் Suya பச்சாதாபம் தேவை இல்லை!

எப்போதும் எங்கள் கலாசாரம் வேற, பண்பாடு வேற.  நாடு வேற. சூழல் வேற என சொல்லி  எமக்கு வேண்டாதவர்களை மேலை நாட்டினரிடமிருந்து பழகிக்கொள்ளும் நாங்கள் அவர்களிடம் காணப்படும் தனி மனிதசுதந்திரம், உரிமைகளை தக்க வைத்து கொள்ள திடடமிடும் வாழ்வியல் நெறியையும் கவனத்தில் கொள்வோமானால்
இந்த மாதிரி காதில் விழும்
வார்த்தைகளை உருவாக்கும் சுழலை நாம் தவிர்க்க முடியும்.

முதியோர் பேணல் எனும் வறட்டு கௌரவம், ஊர் உலகத்துக்கு பயந்து பெற்றோரை
வீட்டுவேலைக்கும், குழந்தை பராமரிப்புக்கும் பயன் படுத்தும் பாசவலைகள், வயதான காலத்தில் அப்பா உன்னிடம், அம்மா என்னிடம் என அவர்கள் அனுமதி இல்லாமல் அங்கும் இங்கும் அல்லாட விடாமல் ஓரிடத்தில் நிம்மதியாக வாழும் வாழ்க்கையை திடடமிடும் படி விழிப்புணர்வு அவசியம்.

மாறி வரும் காலம்,வேகம், உறவுகளுக்கு தக்க நாமும் மாறனும்.

பழங்கால வாழ்க்கை நியதிகளை   பேசி எஞ்சி கிடக்கும் அன்பும் வற்றி போக வைக்க கூடாது.

சுயமாக தம் தேவையை  பூர்த்தி செய்ய முடியாதோருக்கு
முதியோர்இல்லங்கள்  தரும் அன்பும் ஆதரவும் பாதுகாப்பும் சிறந்தது .

பிள்ளை பாசத்தில்   அடங்கி பயந்து இடி சோறு தின்பதை விட முதியோர் இல்லங்களில் தங்கள் சம வயதுடையோருடன் பேசி சிரித்து இஷடம் போல் வாழ்ந்து கொள்ள திடடமிட்டு  சுயத்தை தக்க வைத்து  கொள்வோருக்கு அவர்கள் பிள்ளைகள் அன்பும் நிரந்தரமாக தொடரும் .

முதுமை காலத்தில் பிள்ளைகள் தன்னை தாங்கும் சுமை தாங்கிகள் எனும் எதிர்பார்ப்பை பெற்றோராக நாம் வளர்த்து கொள்ளாமல் எங்கள் கடமை முடித்து எங்கள் முதுமைக்காலத்துக்கு திடடமிடுவதே சிறந்த வழி

முதுமை கொடுமை எனும் Suya பச்சாதாபம் தேவை இல்லை

குழந்தைகள் பெற்றுக்கொள்வது நமது கடைசி காலபாதுகாப்புக்கு  இல்லை, வயது போனால் படுக்கையில் வைத்து பராமரிக்கணும் எனும் எதிர்பார்ப்பில்  பிள்ளை பெற்று கொள்ள கூடாது.

• எங்கள் பிள்ளைகள் எங்கள் சுமை தாங்கிகள் அல்ல.
• பிள்ளைகளை எங்கள் சந்தோஷத்துக்காக பெற்று கொள்கின்றோம்.
• எந்த பிள்ளையும் என்னை நீ பெற்று எடு என கேட்பதில்லை .
• குழந்தை  பிறப்பு எங்கள் பெருமை .
• மனித சந்ததி வளருக்கிறது.
• குழந்தைகளை பெற்று எங்கள் பரம்பரை பெயரை தக்க வைக்கின்றோம்.

இப்படி எங்கள் சுய நலத்துக்கு பெற்று விட்டு அவர்கள் மேல் பாரம் சுமத்தும் உரிமையும் எமக்க்கல்லை என உணரணும்.

தென்னை வைத்தால் இளநி கிடைக்கும்
பிள்ளை பெத்தால்........?
எனும் எதிர்பார்ப்பே அடிப்படை
தவறு.

இந்த பரந்து விரிந்த உலகில் அன்பை பெற கொடுக்க பெற்ற பிள்ளைகளால் மட்டுமே முடியும் என்பது எங்கள் மக்களின் குறுகிய மன நிலை பாடு.

அன்பை பெறவும் கொடுக்கவும் தயாராக வாழ்க்கையை திடடமிடுவோருக்கு முதுமை சொர்க்கம்.

வாயில்லா மிருகங்களிடம் அன்பை பெற அதில் நிறைவு பெற முடிவது சாதாரண விடயம் அல்ல .

உலகின் விலை மதிப்பில்லாதது தாய் அன்பெனில் அதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்க கூடாது.

நான் பெற்று  வளர்த்தேன்
எனக்கு நீ கடைசி காலத்தில் அன்பை கொடு எனும் எதிர்பார்ப்பு   சுய நலமானது.

பெற்று வளர்ந்து நல் மனிதனாக
உருவாக்கி பிழைக்கும் வழி
காட்டி  அவன் வளர்வில் வாழ்வில்  நிறைந்து தமக்கும் தன் முதிய காலத்துக்கும் போதிய சேமிப்பை, வருமானத்தை திடடமிடுவோருக்கு அவர்கள் பிள்ளைகள் அன்பும் நிரந்தரமாக கிடைக்கும்.

உழைக்கும் காலத்தில் கண்முடித்தனமான பிள்ளை பாசத்தில் அதீத நம்பிக்கை வைத்து சேமிப்பில்லாமல் நிர்க்கதியாக பிள்ளைகளை சார்ந்து வாழும் வாழ்க்கை முறை தவறு எனும் விழிப்புணர்வு முக்கியமே தவிர  அன்பை சடடம் போட்டு பெற முடியாது.

அன்பு நிலைக்க வேண்டும் எனில் எவரும் எவருக்கும் சுமையாக வாழ கூடாது.
எதிர்பார்ப்பும் இருக்க கூடாது

ஆணும் பெண்ணும் உழைக்கும் காலத்தில் தம் எதிர்காலம் குறித்து திடடமிடும் விழிப்புணர்வை உருவாகாமல் முதுமை சுமையானது
தனிமை துயரானது எனும்
சுய பச்சாதாபம், தன்னிரக்கம்
போன்ற எதிர்மறை சிந்தனையை தவிர்த்து,

முதுமையில் தனிமையை இனிமையாக ்கும் வழிகளை உருவாக்க முடியும்.

ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து மனங்கள் விரிச்சலடைந்து வெறுப்பை வளர்ப்பதை விட அவரவர் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து தேவைப்படும்
போது அன்பையும், ஆதரவையும் , மதிப்பையும்  தக்க  வைக்கும்  சூழலை  குறித்து திடடமிட வேண்டும்

நான் வாழும் சுவிஸ் நாட்டில் தங்கள் முதுமை காலம் குறித்து. 30 - 40  வயதுகளில் திடடமிடும் பலரை காண்கின்றேன்

தம் வயோதிக காலத்தில் எங்கே வாசிக்க வேண்டும், எப்படி வள வேண்டும் என திட்டமிட்டு  தம் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்காமல். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அன்பை முழுமையாக பெற்று   அவர்களின் விசேச நாள், திருமண நாள். களில்  தமது பெற்றோர், தாத்தா பாட்டி விருப்பம் கேட்டு அதை நிறைவேற்றும் இளையோரை  இங்கே காணலாம்

முதியோர் இல்ல பராமரிப்பில் உடல்கள்  பிரிந்து உள்ளங்கள்  நெருங்கி வாழ்வார்கள்

உடலால் நெருங்கி உள்ளங்களை கொல்லும்
எம்மவர் கடைப்பிடிக்கும் நம்பிக்கைகளும் கடடாயம் மாற்றம் பெற வேண்டும்.

15 ஜனவரி 2020

உழவன் நாள், அறுவடை நாள் ,தைத்திரு நாள் வாழ்த்துகள்

உழவன் நாள்
                        அறுவடை நாள் 
          தைத்திரு நாள்  வாழ்த்துகள்    

எனது அம்மா வழி தாத்தா ஓர் உழவன்!
இதில் எனக்கு பெருமை❤️💃

இலங்கையில் கிழக்கு மாகாணம், திருகோணமலையில், தம்பலகாமம் எனும் வேளாண்மை கிராமத்தின் வயலும் வாழ்வுமாக நெல், வாழை, தென்னந்தோட்டங்களில் தங்கள் உயிர்ப்பை உணர்த்திய

பராம்பரியம், பழமை
பண்பாடடை,பாதுகாக்கும்
உழவன் மகனாய்
மேன்மை மிகு மாமனும்,
அவர் தம் மக்களும்

ஓலைக்குடிலும்
மாட்டுசாண தரை மெழுகலும்
திருக்கோணேஸ்வரத்திலிருந்து
கதிர்காமம் போகும் முருகனை
சுமந்து செல்லும் மயில் உதிர்த்த
மயிலிறகும்... 😍
ஏழ்மையிலும் எளிமையாக
நெல்லவித்து குத்தி வரும் உடன் தவிட்டு சிவப்பு அரிசிக்கோறுடன்
மாமி சமைத்த முருங்கை இல்ல சுண்டலும்
அமிர்தமான காலங்கள்.

மலை உச்சியில் மகாவலியாய்
உயிர்த்து கடலில் சங்கமிக்க
பயணிக்கும்  நதி,
கரையோடும், ஊரோடும்
வாய்க்காலாகி
நெல்லுக்கும் புல்லுக்கும் பொசிந்து
குளிக்க துவைக்க
கூடிக் கும்மாளமிட
குன்றுகளாய் கரும் எருமை
இளைப்பாற
சேற்றில் புரண்டு
சோற்றை அள்ளி உண்ண
வயலும் வாழ்வுமாக
மண்ணை பதப்படுத்தி
எம்மை உயிர்ப்பித்த
                     உழவன் நாள்!
                அறுவடைப்பெரு நாள் !

நெற்பல பொலிக!
பொன்பெரிது சிறக்க!"
விளைக வயலே! அருக இரவலர்!"
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!"
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
பசிஇல் லாகுக! பிணி சேண் நீங்குக!
நன்று பெரிதுசிறக்க! தீதில் லாகுக!!
மாரி வாய்க்க! வளம்நனி சிறக்க!
நண்பர்கள் 
அன்பர்கள்
உறவுகள் 
அனைவருக்கும்
              தைத்திரு நாள்  வாழ்த்துகள்     

புகைப்படத்தில் மாமனும், மாமன் மகனும் Shankar Mari and   Thiyani Shankar
அவர் தம் சுற்றமும் ( Trincomale , Tambalakamam)