26 செப்டம்பர் 2018

பெண் என்றால் பேய் இரங்கட்டும் நீங்கள் இரக்கம் காட்டாதீர்கள்.

 பெண் என்றால் பேய் இரங்கட்டும் 
நீங்கள் இரக்கம் காட்டாதீர்கள்.
பெண் என்பவள் ஆண்களை விடவும் பலம் வாய்ந்தவள் என்பதை அவள் உணராமல் இருக்கின்றாள் என்பதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்?
சமூகம், கட்டுப்பாடு, அன்பு, பாசம், கடமை கண்ணியம், குழந்தை எனும் கட்டுக்கள் எல்லாம் அவளாக தன்னை அடக்கும் வரை தான்.
அவள் தனனைத்தானே அடக்கி விட்டுக்கொடுப்பது அவளின் இயலாமை இல்லை. அது தான் அவளின் பெலன்.
இதை அவள் உணர்வதில்லை. அவளைச்சார்ந்தோரும் உனர்வதில்லை. இந்த உணர்தல் அவளுக்குள் இருந்தால் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடி ஒளிய மாட்டாள்.
இன்றைய நிலையில் பெண்கள் தங்கள் கட்டுக்களை மீறியும் சம படிப்பு, சம தொழில் வாய்ப்பு பொருளாதார நிலை என ஆண்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.
குடும்பத்தில் மட்டுமலல் நாட்டின் முன்னேற்றத்திலும் பெண் கல்வியும், அறிவும் ஆணுக்கு நிகராக முக்கிய அச்சாணியாக இருக்கின்றது என்பதை ஒவ்வொரு தனி மனுசியும் உணர வேண்டும், உணர்த்தப்படவும் வேண்டும். உணர்த்தப்படும் போது போலிப்பசப்புக்களுக்கு அவள் மயங்கி தன்னை அழிக்கும் நிலைக்கு வர மாட்டாள்.
போலிப்பசப்புக்குக்களும் சமூகத்தின் கட்டுப்பாடும், ,பரிதாபப்பார்வையும் அவளை தன்னிரக்கத்தில் தள்ள வைக்கின்றது. அவள் தன் தவறுகளை உணரும் வாய்ப்பை இந்த சமூகம் வழங்குவதே இல்லை.
எந்த பிரச்சனை வந்தாலும் அதுபெண் எனில் ஐயோ பாவம், அப்பாவி, ஒன்றும் தெரியாதவள் என அனுதாபம் கொள்வதை விட்டு அவள் செய்யும் தவறுகளையும் உணர்த்த வேண்டும். .
பெண்களுக்கு பிரச்சனை எனில் அது ஆணாதிக்கம் என பொங்குவதை விட அப்பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்பதைக்குறித்தும் ஆராய வேண்டும்.
பெண்களுக்கு இயல்பாகவே ஆறாம் அறிவோடு இன்னொரு உள்ளுணர்வாக ஏழாம் அறிவும் இருக்கின்றது என்பார்கள். கிட்ட வரும் துஷ்டனை இனம் கண்டு எட்ட வைக்கும் படி உள்ளுணர்வு உணர்த்தும் உணர்வும் உண் டென்பர். நம முன்னோர்களும் பெண்கள் பின் நடப்பதை முன் உணர்வதனால் தான் பெண் புத்தி பின் புத்தி என்றார்கள்.
ஆனால் இன்றைய பெண்கள் பிரச்சனைகளை தாங்களே தேடிக்கொள்கின்றார்கள்.
பெரும்பாலான பெண் ஏய்ப்புக்குற்றப் பின்னனியில் போலியான பாராட்டுதல்களுக்கு மயங்கி கண்மூடித்தனமாக நம்பும் பெண்களே பலியாகின்றார்கள்.
ஆலோசனைகளை அசட்டை செய்து,அக்கறை
யோடு நல்வார்த்தை சொல்வோரை எட்ட வைத்து துரோகிகளை அருகில் வைத்து தங்கள் மனம் சொல்வதை மட்டும் ஏற்று அறிவுக்கு இடம் கொடுக்காமல் தங்கள் மேல் தாமே மண் வாரி அள்ளி போட்டுக்கொள்கின்றார்கள்.

அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் பெண்களின் இளகிய மன நிலையில் இலக்கியமெனும் பெயரில் எழுதப்படும் போலியான வார்த்தைகளை காதல், அன்பு, பாசம் என நம்பி கன்வுலகில் மிதக்கின்றார்கள்.
உலகமே இணைந்து துரோகம் செய்த ஒருவனுக்கு தாங்கள் நியாயம் செய்வதாக நினைத்து தங்களை தாங்களே அழிக்கும் நிலைக்கும் செல்கின்றார்கள். அல்லது அழிக்கப்படுகின்றார்கள்.
கானல் நீரை காதல் என நம்பி தம வாழ்க்கையை அழிக்கும் பெண்கள் பொய்யான வாக்குறுதிகளை நம்பி, இனக்கவர்ச்சியையும், இலக்கிய வார்த்தைகளாலும் கவரப்பட்டு அன்பு, ஆறுதலெனும் பெயரில் அடிமைப்படுத்தபப்டும் நிலையை உணர வேண்டும்.
பெண் என்றால் பேயும் இரங்குமாம். நீங்கள் பேய்க்கு இரங்குங்கள். பாதிக்கப்பட்டவள் பெண் என்பதனால் மட்டும் இரங்காமல் அவள் தப்பையும் அவளுக்கு உணர்த்த வேண்டும். .
பிரச்சனைகள் நடந்த பின் குற்றவாளி யார் என துப்பு துலக்கி தண்டனை வழங்குவது அவசியமெனில் ,பிரச்சனைகுரிய காரணங்களை தேடி ஆராய்ந்து அவைகளை களை எடுப்பதும் முக்கியமானது.
பிரச்சனைகளுக்குரிய காரணங்கள் அலசி ஆராயப்படாவிட்டால் அதற்கான தீர்வுகளும் சாத்தியமில்லை.
செத்துப் போனாள் என்பதுக்காக அவள் விட்ட பிழைகளை பேசக்கூடாது என்பதில்லை.
பேசப்படனும். அப்போதுதான் அதை பார்த்த ஏனைய பெண்கள் திருந்துவார்கள். இனிவரும் காலத்தில் தாங்கள் இப்படி தவறு செய்தால் தமக்கும் இந்த நிலையே என உணர்வார்கள்.

ஐயோ ஒன்றுமறியா பெண்ணாச்சே என நீங்கள் கொடுக்கும் ஆதரவும், பரிதாபமும் அவள் செய்வதும் தவறென அவளுக்குள் உணர்த்தப்படுவதில்லை.
அவளால் மட்டுமே எல்லாம் எனும் குற்றச்சாட்டுக்களை அவள் மேல் போட்டு தங்களை நீதிமானகளாக காட்டும் இச்சமுகத்தின் முக்மூடியை அவள் புரிந்து கொள்ளாத வரை அவளுக்கான தீர்வுகளும் சாத்தியப்படப்
போவதில்லை.

தவறுகளுக்கு தீர்வை தேடும் முன்
பிரச்சனைகளுக்கான் காரணங்களை கண்டறிந்து களைய வேண்டும் என்பதே இப்போதைய நிலையில் முக்கியமானதாக இருக்கின்றது.

3 கருத்துகள்:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!