18 செப்டம்பர் 2018

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 1


Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் எனும் தலைப்பிலான இக்கட்டுரை இஸ்ரேலிய வரலாறென தொகுக்கப்பட்ட நீண்ட தொடர் ஒன்றிலிருந்து 2014 ம் ஆண்டில் என்னால் சுருக்கமாய் தொகுத்து அமைக்கப்பட்டது.

ஐந்து பகுதிகளாக இங்கே பகிர்கின்றேன். அனைத்தையும் படியுங்கள்.

கி.முன்னரான அரசர்களின் ஆட்சிகாலங்களின் ஆண்டுகள் தோராயமாய் எழுதப்பட்டது!

ஆல்ப்ஸ் தென்றல் நிஷா
நிஷாந்தி பிரபாகரன்

எந்த ஒரு பிரச்சனைக்கும் ஆரம்ப வரலாறு ஒன்றிருக்கும் அந்த வரலாறை திரித்து புரிந்து கொள்வதனால் தான் உலகில் இனக்கலவரங்கள் 
வெடித்து இரத்த ஆறுகள் ஓடுகின்றன. இதற்கு இஸ்ரேல். பலஸ்தீனமும் வேறு பட்டதாக இல்லை.

அன்றைய இஸ்ரேலியர் சூழலில் தான் இன்று இலங்கை தமிழர்களென சொல்லபட்டவர்களும் இருக்கின்றோம். இனக்லவரத்தால் நாட்டைவிட்டு வெறியேறி அன்னிய நாடுகளில் குடியேறி அங்கேயே நம் சந்ததிகளை பெருக்கி கொண்டிருக்கின்றோம். சொந்த தேசத்தைவிட்டு துரத்தப்ப்ட்டவர்களாய் அகதிகளாக அலைகின்றோம். எதிர்காலத்தில் நம் சொந்த தேசமென ஈழத்தில் உரிமை கோருவது தவறெனில் இஸ்ரேலியர்களின் உரிமைப்போராட்டமும் தவறுதான்.
சிந்திக்க சில கேள்விகள்
1.புலம் பெயர்ந்து நம் நாட்டை விட்டு வந்ததனால் நம் தேசத்தின் மீதான உரிமையை விட்டுக்கொண்டுக்க வேண்டுமென சொல்ல முடியுமா?
2.எதிர்காலத்தில் நாம் புலம்பெயர்ந்த நாடுகள் தான் நம் நாடு என நாம் சொல்லி உரிமை கொண்டாட முடியுமா?
3.உலகத்தில் பல பகுதிகளிலும் சிதறிக்கப்பட்டிருக்கும் நாங்கள் எங்களுக்கான அதாவது தமிழர்களுக்கான் தேசம் என எதை உரிமை கோர முடியும்?
4.நாங்கள் சொல்வது இருக்கட்டும். நம்மை அரவணைத்திருக்கும் நாடுகள் முழுமையாக நம்மை நாட்டு பிரஜைகள் தாம் நாங்கள் என ஏற்குமோ?
இஸ்ரேலியர்களின் தேச மீட்ப்பு போராட்டம் குறித்த அகிம்சை வாதிகள் கருத்தை பாருங்கள்.
பலஸ்தீன, இஸ்ரேல் பிரச்சனை குறித்து 
1938 ல் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் காந்தி எழுதிய கட்டுரையில் சில வரிகள் தான் இந்த கட்டுரைக்கான தேடலை எனக்குள் கொடுத்தது.

உலகில் ஏனையவர்கள் சொல்வதைப் போல, எங்கே அவர்கள் பிறந்து வளர்ந்தார்களோ அதனையே ஏன் தங்கள் சொந்த நாடாக ஏற்றுக் கொள்ள முடியாது என அப்போதே காந்தி கேட்டிருக்கின்றார் .
இதற்கான பதிலை கடந்து வந்த வரலாற்றை படித்த பின் சிந்திப்ப்போம்.

1938 ல் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் காந்தி எழுதிய கட்டுரையை படியுங்கள். 
பலஸ்தீனத்தில் அரபு-யூத பிரச்சனைப் பற்றிய எனது கருத்தைக் கேட்டு ஒரு சில கடிதங்கள் எனக்குக் கிடைத்தன. ஜெர்மனியில் நிகழ்த்தப்பட்ட யூத இனப் படுகொலைகள் பற்றியும் கேட்கிறார்கள்.
நான் தென்னாபிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் அவர்களை நெருக்கமாக அறிவேன். சில யூத நண்பர்கள் கூட எனக்கு இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் யூதர்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகள் பற்றி அறிந்திருக்கின்றேன்.
நீதி என்ற தேவை ஏற்படும்போது இந்த அனுதாபங்கள் எல்லாம் என் கண்களை மறைக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையும் யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி நாடு கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவர்களுடைய வேதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே யூதர்கள் பலஸ்தீனத்தை நோக்கி திரும்புகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உலகில் ஏனையவர்கள் சொல்வதைப் போல, எங்கே அவர்கள் பிறந்து வளர்ந்தார்களோ அதனையே ஏன் தங்கள் சொந்த நாடாக ஏற்றுக் கொள்ள முடியாது?.
இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்கு சொந்தமோ, பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்கார்களுக்கு சொந்தமோ அது போல பாலஸ்தீன் அரபுகளுக்கு சொந்தமானது. பிற நாடுகளில் வசிக்கும் யூதர்களைக் கொண்டு வந்து அங்கே குடியேற்றுவது மனிதாபிமானமற்ற செயலாகும்.
நான் ஒரு யூதனாக இருந்து, ஜெர்மனியில் பிறந்திருந்தால், ஜெர்மனிதான் என் தாய் நாடு என்று நினைப்பேன். அங்கே என்ன கொடுமை நடந்தாலும் எனது சொந்த நாட்டில் அது நடப்பதாக எடுத்துக்கொள்வேனே தவிர, பிற நாட்டை என் தாய்நாடாக நினைத்து ஓடிவிடமாட்டேன்.
சந்தேகமில்லாமல் சொல்கிறேன் யூதர்கள் தவறான பாதையிலேயே போய்க்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வேதத்தில் குறிப்பிடப்படும் பாலஸ்தீன் என்பது இன்றைய புவியியல் எல்லைகளுக்குள் தேடப்படவேண்டிய நிலப்பரப்பு அல்ல, மாறாக அவர்கள் இதயங்களுக்குள்ளே இருக்கவேண்டியது.
அப்படியே அது அவர்களின் தாயகப்பிரதேசம் என்றாலும், இங்கிலாந்து ராணுவத்தின் துப்பாக்கி நிழலின் கீழ் திருட்டுத்தனமாக ஒரு தேசத்தை அடைய விரும்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
Mahatma Gandhi on ! Palestine written in 1938
The Jews In Palestine
By Mahatma Gandhi
Published in the Harijan
26-11-1938.

தேடல் உதவிகளும் ஆதாரமும் 
Dr E.K. Victor Pearce, Evidence for Truth: Arhaeology
மற்றும் விக்கிமீட்டியாவின் ஆங்கில தளங்கள்.
தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!