19 செப்டம்பர் 2018

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 6

பலஸ்தீனப் பிரச்சினையை நம் காலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றாராம் நெல்சன் மண்டேலா

யூதர்கள், இஸ்ரவேலர்கள், எப்ரேயர்கள் என அழைக்கப்பட்டு யூத மதத்தினை பின் பற்றும் கானானிய தேச மக்கள் பல நூறாண்டுகளுக்கு முன் உலகத்தின் பல பாகங்களுக்கும் சிதறிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இன ரிதியான அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டவர்கள்.
யூத மதம் ஒரே கடவுள் கொள்கை கொண்ட உலகின் பழமையான் மதமாகும்.
இன்றைய கிறிஸ்தவத்தின் மூல மதம் யூத மதம் எனில் அது மிகைப்படுத்தல் இல்லை.

யூதர்களின் மதனூல்களை தொடர்ந்தே கிறிஸ்தவ, இஸ்லாமிய, பகாய், ஆபிரகாமிய மதங்கள் உருவானது.
யூதர்கள் வம்ச வரலாற்றை அறிய எனது Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி இரண்டினை படிக்கவும்..
1933 ஆம் ஆண்டு ஹிட்லரின் காலம் தொடங்கியது. ஹிட்லரின் நாசிக்கொள்கைகளால் யூதர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
1941ல் ஐரோப்பாவின் சகல நாடுக்ளையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஹிட்லர் யூத மக்களை தேடி அழித்தான்.யூதர்கள் மீதான ஹிட்லரின் அழிப்பு உலகத்தின் பெரும் இன அழிப்பாகியது.
மூன்று மில்லியன் மகக்ளை விஷ வாய் செலுத்தி கொன்றான்.1939ல் ஆரம்பித்து 1941 வரையான உலகப்போர் காலத்தில் கிட்டத்தட ஆறு மில்லியன் யூத மக்களை தேடி தேடி கொன்று குவித்தான் ஹிட்லர்.
ஹிடலரிடமிருந்து தப்பி அகதிகளான யூதர்கள் ஸியோனிஸ்டுகள் எனும் விடுதலை இயக்கத்தினரால் ஐரோப்பாவிற்குள் இடம் பெயராமல், பலஸ்தீனத்திற்குச் செல்ல வற்புறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அக்டோபர், 1918ல் ஜெருசலேம் நகரை பிரிட்டிஸ் படைகள் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை ஜெருசலேம் பிரிட்டிஷ் வசம இருந்தது.
முதலில் இக் குடியேற்றத்தை ஆரம்பத்தில் பலஸ்தீனியர்கள் கண்டு கொள்ளவில்லை. தமக்கென ஒரு நாடு அமைக்கும் நோக்கத்துடன் மேலும் மேலும் யூதக் குடியிருப்புகள் உருவானபோது தான் இரு பகுதியினருக்கு
மிடையில் முரண்பாடுகளும் மோதல்களும், வன்முறைகளும் வெடித்தன.

யூதர்களின் செல்வாக்கு அதிகமாகி அவர்களின் பண்ணைகளில் வேலைசெய்யும் நிலைக்கு அராபியர்கள் தள்ளப்பட அன்றைய உலகின் பொருளாதார மந்தம் காரணமாகியது!
பாலஸ்தினத்திலிருந்த ஆராபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை வளர்ந்தது.
யூதர்களிடம் ஆராபியர்கள் வேலை செய்வதும் யூதர்களின் செல்வாக்கும் ஆராபியரிடையே பகை உணர்வை தோற்றுவித்து யூதர்களை தாக்க ஆரம்பித்தோடு ஆராபியர்கள் யூதர்களுக்கு எதிராக கிளர்ச்சிகளும் செய்ய ஆரம்பித்தார்கள்.
சீயோனிசம் போல் அரபி தேசியமும் வேண்டும் எனும் எழுச்சி ஏற்பட்டது.
1936 முதல் 1939 வரை இம்முறுகல் நிலை நீடித்தாலும் அராபியர்களின் அழுத்தத்தால் பிரிட்டன் மீள குடியேறும் யூதர்களின் எண்ணிக்கையை மட்டுபடுத்த ஆரம்பித்ததும் யூதர்கள் சட்டவிரோதமாக குடியேற ஆரம்பித்தார்கள்!
1947ல் ஐ.நா இதில் தலையிட முடிவு செய்த போது அங்கு குடியிருப்பை அமைத்திருந்த யூதர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 30 வீதமாக உயர்ந்திருந்தது. 7 வீதமான் நிலத்தை தங்கள் வசப்படுத்தி இருந்தார்கள்.
அக்டோபர், 1918ல் ஜெருசலேம் நகரை பிரிட்டிஸ் படைகள் கைப்பற்றியதிலிருந்து.1948 வரை 
இஸ்ரேல் பிரிட்டன் வசம் இருந்த காலத்தில் தான் இவ்வனைத்து பிரகடனமும் ஏற்படுத்தப்பட்டது.

ஏறக்குறைய 1940 களில் ஆரம்பித்த பலஸ்தீன அராபிய, இஸ்ரவேல் யூதர்களுக்கான பிரச்சனையை சமாளிக்க திணறி பிரிட்டன் ஐ, நாவிடம் தீர்வுக்கான ஆலோசனை வேண்டியதும் 1947,மே 15 ல் ஐ.நா. UUNSCOP கமிட்டியை உருவாக்கியது.
இக்கமிட்டியில் வல்லரசு நாடுகள் சேர்க்க்ப்படவில்லை!
ஐந்து வாரங்கள் ஆராய்ந்து. பாலஸ்தீனம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி யூதருக்கும் இன்னொரு பகுதி அராபியருக்கும் எனும் தீர்மானித்தது. இந்த தீர்மானம் நவம்பர் 1947 ஆம் ஆண்டில் ஐ,நாவால் ஏற்கப்பட்டது!
இதற்கு 35 நாடுகள் ஆதரவும், 13 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தண! அரபு லீக்கை சேர்ந்த அரபு நாடுகள் எதிர்ப்பாகவே வாக்களித்தது! பத்து நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை!
ஐ, நாவால் இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டாலும் அன்றிலிருந்து இன்று வரை ஆராபியர்களுக்கும் யூதர்களுக்கும் பாலஸ்தினிய பகுதிகளை பிடிப்பதில் மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது..
1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி இஸ்ரேல் சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்ட மறு தினமே அரபு நாடுகள் இஸ்ரேலை நோக்கி படை யெடுத்தன!
இன்று வரை இந்த மோதல்கள் முடிவுக்கு வரவில்லை.
இஸ்ரேல் நாடு மே மாதம் 14 ம் திகதி 1948 ல் சுந்ததிர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டபின் 3 ஆண்டுகளில்
லேயே அதன் தொகை இரட்டிப்பாகியது!

சாலமோன் காலத்தின் பின் கானானிய தேசமானது பிளவு பட்டு இஸ்ரவேல் , யூதேயா என பிரிக்கப்பட்டு கி.முன் 722 ல் ஆசீரியர்களால் இஸ்ரவேல் நாடு அழிக்கப்பட்டது. அதன் மக்கள் அகதிகளாக சிதறிக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு முதல் அலியா காலமான 1882 முதல் 1903 வரை ரஷ்யாவிலிருந்து மீளவும் குடி யேறினார்கள். 
கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு மேல் சிதறிடிக்கப்பட்டிருந்த யூதர்கள் 
ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.

உலக ஜனத்தொகையில் யூதர்கள் மிகச் சொற்பமானவர்களான போதிலும் 20_ம் நூற்றாண்டில் வேதியல், பொருளாதாரம், இலக்கியம், சமாதானம், பௌதீகம், மருந்து போன்ற துறைகளுக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் கால்பகுதியை யூதர்களே பெற்றிருக்கிறார்கள்! ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உடபட பல யூதர்களின் கண்டு பிடிப்புக்கள் உலகை நவீனப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
ஆனாலுல் யூதர்கள் மிகவும் தாழ்வாக சக மனிதர்களோடு ஒன்றி வார இயலாதவர்களாக, பிரச்சனைக்குரியவர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள்.


 

இக்கட்டுரை இஸ்ரேலிய வரலாறென தொகுக்கப்பட்ட நீண்ட கட்டுரை ஒன்றிலிருந்து சுருக்கமாய் தொகுத்து அமைக்கப்பட்டது.
கி.முன்னரான அரசர்களின் ஆட்சிகாலங்கள் அண்ணளவான ஊகத்தின் அடிப்படையில் ஆண்டுகள் எழுதப்பட்டிருக்கின்றது. !
தகவல் நன்றி
Dr E.K. Victor Pearce, Evidence for Truth: Arhaeology,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!