18 செப்டம்பர் 2018

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 2

இப்பகுதியில் பைபிள் மற்றும் குரான் வேதங்கள் சொல்லும் வரலாறுகளும் சேர்ந்து வருவதனால் மத நம்பிக்கையை மட்டும் நுழைத்து இதை வாசிக்காமல் வரலாற்றை மட்டும் கருத்தில் கொள்ளவும்.
வேதம் போதிக்கின்றேன் என்பவர்கள் கடந்து செல்லுங்கள். 
புரிதலுக்கு நன்றி 
நிஷா

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை எதனால் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது?
எருசலேம் எனும் இடத்தை தமக்கான புனித இடம என பலஸ்தீன அராபியரும், இஸ்ரேலிய யூதரும் சொந்தம் கொண்டாடி அவ்வுரிமையை விட்டுக்கொடுக்காமல் போராடுகின்றார்கள்.

பலஸ்தீனிய அராபியர்களும் இஸ்ரேலிய யூதர்களும் யார்? காலம் காலமாக இவர்களுக்குள் போராட்டம் தொடர்வது ஏன்?
இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.
தமிழ் மொழி பெயர்ப்பு பைபிள் ஆகாரை வேலைக்காரி என சொல்கின்றது. ஆனாலும் மூல மொழியில் என்ன எழுதப்ப்ட்டதென நாம் ஆராய்ந்து தான் முடிவெடுக்க முடியும்.
ஆபிரகாமின் முதல் மனைவிக்கு இரண்டாவது மகனாக பிறந்த ஈஷாக் வம்சத்தவரே யூதர்கள் என்பவர்கள்.
திருமணமாகி பல வருடங்களாகியும் தமக்கு பிள்ளை இல்லை என நினைத்தும் இத்தனை வருடத்துக்கு பின் பிள்ளை கிடைக்காது என நம்பி ஆகாரை திருமணம் செய்ய வைத்து ஆகாருக்கு பிறந்தவர் இஸ்மவேல் வம்சத்தில் தொடரும் அராபியர்களான பலஸ்தீனியர்கள்.
இருவருக்கும் தகப்பன் ஒருவர். தாய் தான் இருவர்.
எதிர்காலத்தில் சொத்துப்பிரச்சனைகள் வரக்கூடாது,உரிமைப்போராட்டம் இருகக்கூடாது என தம் மகனுக்கே அனைத்து உரிமையும் வர வேண்டும் என ஆபிரகாமின் முதல் மனைவி சாராயால் ஆகார் குழந்தை இஸ்மவேலோடு விரட்டப்பட்டாள். விரட்டப்பட்ட அவள் குழந்தையுடன் ,வானந்தரத்தில் அலைந்து திரிந்து தாகத்துக்கு தவித்தபோது பாதுகாப்புக்காக கையில் வைத்திருந்த தடியால் தான் நின்ற இடத்தில் அடிக்கும் போது தோன்றியது தான் இன்றைக்கு அராபிய முஸ்லிம்களால் புனித நீரென கொள்ளப்படும் ஷம் ஷம் நீர் என பைபிள் சொல்கின்றது. அதே இடத்தில் ஆபிரகாமும் இஸ்மவேலும் இணைந்து அந்த நீரினை தோன்ற வைத்ததாக இஸ்லாமியர்கள் நம்புகின்றார்கள்.
எப்படியோ ஷம் ஷம் நீர் புனிதமான நீர் என இரு சாராரும் நம்புகின்றார்கள்.
கஃபா எனும் பெயரில் ஆபிரகாமும் இஸ்மவேலும் இணைந்து கட்டியதாக இவ்விடத்தை புனித இடமென இன்னமும் மதிக்கின்றார்கள்.
இஸ்மவேலை குறித்து 
உன் சந்ததியினரைக் கடவுள் ஏராளமாகப் பெருகச் செய்வார். நீ ஒரு மிகப் பெரிய குலத்தை அறிமுகம் செய்து வைத்த பெருமையைப் பெறுவாய்.. 'நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதியாகாமம் 17:20)

அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12)
ஆசிர்வாதமும், சாபமுமாய வாக்குக்கொடுக்கப்ப்ட்ட இனம் அராபியர் இனம்.
அதனால் தான் அவர்கள் உலகை ஆண்டுகொள்ளும் வளம் கொழிக்கும் ஆசிர்வாதத்தை தம் வசம் கொண்டிருந்தும் உலகளவில் எல்லோராலும் பகைக்கப்படுகின்றார்களோ எனும் ஆழமான் சிந்தனைக்குள் நான் செல்ல விரும்ப வில்லை.
ஆனாலும் துரத்தி அடிக்கப்பட்டதாக சொல்லப்ப்ட்ட இஸ்மவேல் ஆபிரகாம் மரித்து அடக்கம் செய்யப்பட்டபோது உடனிருந்ததாக அதே பைபிள் சொல்கின்றது.
ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும்,முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். (ஆதியாகமம் 25:7,8,9)
இரு குமாரர்களும் சேர்ந்து தான் ஆபிரகாமை அடக்கம் செய்தார்கள் எனும் போது ஆபிரகாமின் 100 வயதில் ஈஷாக் பிறந்த பின்னும் 75 வருட காலம் உயிரோடிந்த காலங்களில் நடந்தவை குறித்து வரலாறு சொல்வது என்ன?
ஆபிரகாமும், இஸ்மவேலும் ஈஷாக்கும் தொடர்பில் இருந்திருக்கின்றார்கள் என்பதை நாம் பைபிள் வசனங்களை வைத்தே அறிந்திட முடிகின்றது.
அது எப்படி இருந்தாலும்........ ?
இஸ்ரேலுக்கு சொந்தமானவர்களென சொல்லப்படும் யூதர்களுக்கு அவ்விடம் வழி வழியாய் தொடரும் சந்ததிகளுக்கு வாக்களிக்கப் பட்டதெனும் கூற்றை மெய்ப்பிக்கும் ப்டி இஸ்ரேலை சாலோமேன் காலம் வரை யுதர்கள் ஆண்டதாகத்தான் வரலாறு சொல்கின்றது. சாலொமோன் காலத்தின் பின் தான் சொந்த நாட்டை விட்டு நாற்புறமும் விரட்டி அடிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்கின்றது வரலாறு.
பாலஸ்தீனம் அப்படி அல்ல!
பாலஸ்தீனம் என்பது ஆக்கிரமிப்புக்குள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட்டது.
இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உயர் பீடமான பாலஸ்தீன தேசிய கவுன்சில் நவம்பர் 15, 1988 இல் அல்ஜீரியாவில் கூடி ஒருதலைப்பட்ச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டது. பாலஸ்தீன நாடு மேற்குக் கரை மற்றும் காசா ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் ஜெருசலேம் அதன் தலைநகராகவும் இப்பிரகடனம் அறிவித்தது!
பலஸ்தீன நாடு" அரபு லீக் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டாலும் ஐக்கிய நாடுகள் இதனை இதுவரையில் அங்கீகரிக்கவில்லை.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் நாள் ஐ.நா. 
பாலத்தீனத்தை "பார்வையாளர் நாடு" (observer state) என்னும் நிலைக்கு உயர்த்தியது.

ஐரோப்பிய ஒன்றியம் பாலத்தீனத்தை முழு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்காவிடினும், அது பலஸ்தீனத்துடன் தூதரக உறவைப் பேணி வருகிறது. இதுதான் பாலஸ்தீனத்தில் நிலை.
இஸ்ரேலியர் ஜெருசலேம் கானான் இறைவனால் தங்களுக்கு வாக்களிக்கப்ட்ட பூமி என நம்புகின்றனர். அந்த இடத்தினை தம் சொந்த் பூமியென பாலஸ்தீனர் சொல்கின்றனர். என்ன தான் நடக்கின்றது?
தொடர்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!