04 அக்டோபர் 2016

அனைவருக்கும் வணக்கம்!

அன்புள்ளங்கள் அனைவரும் நலமா?
விருந்துக்கு வருவோருக்கு வாசலில் வைத்து பரிமாறப்படும் குளிர்பானங்கள் வரிசையில்  ஆரஞ்சுயூஸ், விட்டமின் யூஸ், ஒய்ட் வைன், மினரல் வாட்டர், கூடவே டீ காப்பியும் உண்டு  

நான் வரவில்லை எனினும் பேஸ்புக்கில் காணும் போதெல்லாம் நலம் விசாரித்து பதிவுகள் இடுங்கள் என வேண்டுவதோடு என் வாசிக்கும், எழுதும் ஆர்வத்தினையும் விட்டு விலகி விடாமல்  இருக்க  என்னை ஊக்கப்படுத்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி! 

கடந்த  பத்து வருடமாய்  சுவிஸ் நாட்டில் ஈவன்ஸ் களுக்கு உணவு மற்றும் மேடை, மேசை சோடனை முதல் இதர அனைத்து ஒழுங்குகளையும் செய்து வந்தாலும் ஐந்து வருடம் முன்னால் தான் எமக்கென நிலையாக  ஹோட்டல் ஒன்றோடு இணைந்த  விழா மணடபஙக்ள் இரண்டினையும்  திறந்ந்திருந்து படிப்படி்யாய் வளர்ந்து சுவிஸிலிருக்கும் எம்மக்கள் மத்தியில் எமக்கென நிலையான நல்லதொரு இடத்தினை பெற்றிருக்கின்றோம். 


 உள் நுழைந்ததும்  சிற்றுண்டிகள்,
 நான்கு வகையான பிரெட் சாண்ட் விச் 
மட்டன் மற்றும் உருளைக்கிழந்து சேர்த்த ரோல்ஸ் 
வெஜ் சமோசா, மீன் சேர்த்த கட்லெட் 
ஸ்விட் சில்லி சாஸ்
 மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்,  மிக்சர்
தக்காளி, வெள்ளரி, மெசெரெல்லா ஸ்ரிக் 

இந்த வருடத்தில் வந்த ஆர்டர்களும், பொறுப்புக்களும் எமக்கான வளர்ச்சியை மட்டுமல்ல எமது நிர்வாகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் புரிந்திடும் படி   இருந்தது.    கடந்த பங்குனி மாதத்தில் ஆரம்பித்த ஓட்டம் கடந்த வாரத்தில் தான் சற்று ஓய்வைத்தந்தது. இந்த ஒரு வாரமும் சற்று ரிலாக்ஸாய் ..........! 
இங்கே பாடசாலைகளுக்கு  யூலை முதல் ஆகஸ்ட் முதலிரு வாரங்களுமாய் ஆறுவாரங்கள் கோடைகாலவிடுமுறை ஆகவும்,செப்டம்பர் கடைசியிலிருந்
து அக்ரோபர் நடுப்பகுதி வரையான மூன்று வாரங்கள் இலை உதிர் கால விடுமுறையாகவும்  இருபப்தனால் கோசை விடுமுறையில் இந்தியா, இலங்கைக்கு செல்லலாம் என திட்டமிட்டு  முடியாமல் போனது.

சொந்த தொழில் என்பது புலிவாலை பிடித்த கதையாய்.... பணம் கொட்டினாலும் அதை பெற நாம் நம் சுயத்தினை இழக்க வேண்டி இருக்கின்றது. தொழில் வளர்ச்சி என்பது மட்டுமே கண்முன் இலக்காக தெரிகின்றது. ஏனையவை களை பின்னர் பார்க்கலாம் என தட்டிக்கழிக்கும் படியும் செய்கின்றது. 

சுடச்சுட பூரி, பிரைட் ரைஸ், 
சிவப்புக்குத்தரிசி சாதம் 

மட்டன் குழம்பு, 
இறாலுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்த பொரியல்  தந்தூரி சிக்கன்


வெள்ளரி சேர்த்த தயிர் ரைதா
கத்தரிக்காய் வத்தக்குழம்பு
பருப்பு
உருளைக்கிழங்கு பிரட்டல் 
அப்பளம்,மோர் மிளகாய் 

ஹோட்டல் நிர்வாகமும், ஈவன்ஸ் ஓழுங்குகளும் எனது தலைமையின் கீழ் மட்டுமே என்பதனால் நான் இல்லாத சூழலில் எந்த விருந்து ஒழுங்குகளையும் ஒழுங்காய் செய்ய முடியாது என்பதனால் பயணத்திட்டம் இட முடியவில்லை.  பல நட்புக்கள் என் வருகையை எதிர்பார்த்து இன்னும்ஆர்வமுடன் இருப்பதை நான் அறிந்தாலும்  நாம் சந்திக்கும் காலம் நிச்சயம் வரும் எனும் கடவுள் நம்பிக்கையில் இருக்கின்றேன்.


ஊஞ்சலாடும் கேக்
கடந்த வாரத்தில் எம்மால் நடத்தப்பட்ட விருந்துகளிலிருந்து உங்கள் பார்வைக்காக சில படங்களை இடையிடையே பகிர்ந்துள்ளேன். 

மேசை அலங்காரம் 


மேலும் படங்கள் பார்க்க...
.https://www.facebook.com/hegas.prabha/media_set?set=a.1085077021528497.1073741839.100000786292216&type=3

22 மே 2016

இலங்கை தேசத்திற்காய் இறைவா! நீர் வர வேண்டும்

இலங்கைக்கான வேண்டுதல்களை செவி கொடுத்து கேட்க இறைவனுக்கும் மனமில்லை போலும்! அழிவுகளும் அழிப்புக்களும் தொடர்ந்து கொண்டெ இருக்கின்றது. அம்மக்களும் சாம்பலிலிருந்து மீளும் பீனிக்ஸ்களாய்தம்மை தாமேகட்டி எழுப்பினாலும் மீண்டும்மீண்டும் அழிவுக்குள் இரையாவதுமாய் தான்  இருக்கின்றார்கள்!
சின்னஞ்சிறிய தேசம், யுத்தம், சுனாமி, யுத்தம், வெள்ளம், புயல், என எத்தனை தான் தாங்கும்? கடந்த சில வாரங்கள் இயற்கையின் கால் மாற்றத்தினால் கடும் வெயில், வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் புற்றுக்களின் குடியிருக்கும் சகல ஜீவராசிகளும் குடியிருப்புக்கள் நோக்கி குடிபுகுந்து மக்கள் தூக்கத்தினையும் நிம்மதியையும் பறித்தன!முக்கியமாக பாம்பினங்கள்
இலங்கையின் கிழக்குப்பகுதியின் இருக்கும் எங்கள் வீட்டுக்குளேயே தினம் நான்கைந்து பாம்புகள் வந்தும் அடித்துகொல்வதுமாய் பதட்டமான சூழலில்இருந்தார்களாம்! நீர்நிலைகளில் நீர் வற்றிப்போக குடிநீர் தட்டுப்பாட்டுடன் வெயில்க்கொடுமையில் மக்கள் மயங்கி விழுவதும் மரணமடைவதும் செய்திகளாகின!வெயிலின் அகோரத்தினால் வீட்டினுள் நிறுத்தியிருந்த மோட்டார் வண்டி வெடித்து வீடொன்று எரிந்த சம்பவமும் இலங்கை வடக்குப்பகுதியில் நடந்தது!
இவ்வாரமோ காற்றழுத்த வேகம் புயலையும் மழையையும் உருவாக்க நள்ளிரவின் வீட்டின் கூரைகள் பறந்தோட, வீதியெங்கும் மரங்கள் ஒடிந்து விழ போக்குவரத்துப்பாதிக்கப்பட்டு,மின் தடைகள் தொடர இலங்கையின் பிரதான நதியான களனி ஆறும் இதர நீர் நிலைகளிலும் நீர் மட்டம் உயர்ந்து கொழும்பும் அதை அண்டிய மத்திய பிரதேசங்களும் வெள்ளத்தினுள் மூழ்கியது.
மழையினால் நீர் மட்டம் உயர நீர்வாழ் உயிரினங்களும் விடுகள் தேடி வர எங்கும் எதற்கும் வித்தியாசமில்லாத சூழலில் மின் தடையும் சேர்ந்து இலங்கையே அழுகின்றது! வெள்ளம் எனில் சாதாரண வெள்ளம் இல்லாமல் மூன்று இலட்சம் மக்களை இடம் பெயர வைத்து கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்துச்சென்று கொண்டிருந்தாலும் இன்ஞும் அதன் அகோரம் தொடர்கின்றது.இதற்கிடையில் தொடர் மழையினால் மலையக கிராமங்களில் மண் சரிவுகள் ஏறட்ட கிராமமே மண்ணுக்குள் புதைந்து போனாலும் இதுவரையான் இழப்பின் எண்ணீக்கை தெளிவில்லாத நிலையில் இருக்கின்றது!
மக்கள் இழப்புக்களை சந்திக்க இன்னும் சிலரோ அன்று எங்கள் மேல் குண்டு போட்டதால் இன்று இயற்கை உங்களை கொல்கின்றதென பேச பாதிக்கப்பட்டமலையகதமிழர்கள் ஏழைகளும் தமிழர்களுமாயிருப்பதால் அரசின் நிவாரணமும் மந்தகதியில் செயல்பட மக்கள் உயிருடன் உணர்வுடன் பரிதவிக்கின்றார்கள்!வெள்ளத்துக்கு தெரியுமா? தமிழன், சிங்களவன், முஸ்லிம் எனும் இனமத வேற்றுமை? அது நிறம், மணம், குணம் பார்த்தா தேடித்தேடி அழிக்கின்றது?
இனியும் நிலஅதிர்வுகளும் மண் சரிவுகளும் கடல் கொந்தளிப்புக்களும் தொடரும் என வானிலைமையம் எச்சரித்திருக்கின்றது! அங்கே எம் உறவுகளும் உயிரோடும் உணர்வோடும் வாழ்கின்றார்கள் என்பதையும் அவர்கள்ளையும் இவை அனைத்தும் பாதிக்கும் என்பதையும் நாம் ஏன் உணராமல் போனோம்?
என்ன செய்வோம்? ஏது செய்\வோம்? எங்கே தான் செல்வோம்?

இலங்கை தேசத்திற்காய் இறைவா! நீர் வர வேண்டும் என் தேச மக்களுக்கே விடுதலை தரவேண்டும் அழிவில் வாழும் மக்கள் அமைதி வழி வாழ அருள் நீர் தர வேண்டும் இருளையெல்லாம் அகற்றி பெரு வெளிச்சம் காண இறைவா! நீர் வர வேண்டும் கண்ணீர்கள்,கவலைகள்,கஷ்டங்கள் போக்க கருணை நீர் காட்ட வேண்டும் காணாமல் போகும் உறவுகளை மீண்டும் கண்டு மனம் குளிர இறைவா!நீர் வர வேண்டும் நாதியற்று தவிக்கும் என் தேச மக்களுக்கு நாடொன்று அமைத்து தர இறைவா!நீர் வர வேண்டும் நாளெல்லாம்கேட்கும் கதறலின் சத்தம் காணாமல் போக இறைவா!நீர் வர வேண்டும் நோய் நொடிகள் அகற்றி கடலலைகள் காத்த என்னருமை உறவுகள் காலனோடு போராடி,காலத்தை வென்று பல வருஷம் வாழ இறைவா!நீர் வர வேண்டும் இறைவா!நீர் வர வேண்டும்
அழிவிலிருந்து காத்து அமைதி தர
இறைவா!சீக்கிரம் நீர் வர வேண்டும்!
*********************************************
2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழீழப்போரின் இறுதி நேரம் மனம் கதறி வேண்டியது! இன்றும் பொருந்தும்!

இதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ?


கடந்த கால  கறைகளைகளெல்லாம் 
களனியாற்றில் கலந்தோடி
கசந்து விட்ட கண்ணீர்க் கசடுகளை நீங்கிடுமா?
காலம் செய்த கோலம் கண்டு 
இயற்கையவள் இடிமுழங்க 
இதயங்களோ படபடக்க
இனியெங்கே செல்வோம் எனும் 
ஏக்கங்கள் அதிகரிக்க
அனைத்தையும் இழப்பதற்கு 
முடிவென்பதேயில்லையா?
இலங்கையனாய் பிறந்ததனால் 
இயற்கை கூட வஞ்சித்திட
இதயங்களும் இறுகி விட
இழப்புக்கள்  இறப்புக்களாய்
எதிர்காலம் சூனியமாய் 
தொடர்கின்றது அகதி வாழ்க்கை!

ஏறிச்செல்லும் நீரின் மட்டம் 
ஏழைப்பணக்காரர் பார்ப்பதுண்டா?
இன பேதம் பிரித்தெடுத்தா
இயற்கையவள் பொங்குகின்றாள ?

இனி வரும் கால மாற்றம் 
இதயங்களை திறந்திடுமா?
இன பேதம் இல்லையெனும் 
உணர்வுகள் உயிர்ப்பெறுமா? 



இது வரை இரத்தம் ஆறாய் ஓடிய சிறு நாட்டில் இரத்தக்கறைகளை கழுவவோ என்னமோ வெயிலும் மழையுமாய் ஆவேசத்தோடு அரவணைத்துகொண்டு வெள்ளம் பெருக்கெடுக்க... மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோ அதிகளாகி தன் இடங்களை விட்டு இடம் பெயர்ந்து கோடிக்காணக்கான பொருட்சேதங்களுடன் உயிர் வாழ போராடிக்கொண்டிருக்கின்றார்கள்!?

இலங்கையில் வரும் இழப்புக்கள்,பாதிப்புகள்  இனமதபேதமின்றி அனைத்து மக்களையுமே பாதிக்கும் எனும் நிஜம் புரியாதோராய் அன்று நாங்கள் அழுதபோது எள்ளி நகையாடினீர்களே? இன்று நீங்கள் அனுபவியுங்கள் எனச்சொல்லி அன்றவர்கள் செய்\த தவறினையே இன்று செய்யும் என் இன மக்களின் செயல் பாடுகள் கண்டு என்ன சொல்வது?

இலங்கை தேசத்துக்காய் 
இறைவா நீ வர வேண்டும்
*************************

03 மே 2016

எல்லோரும் நலம் தானே?

 எல்லோரும் நலம் தானே?

நான் முதல்வரானால் எனும் தலைப்பில்  கவிதைபோட்டி ஒன்றுக்காக  மார்ச் மாதம் எழுதிய எனது பதிவை இங்கும் பகிர்கின்றேன்.

நாளெல்லாம் பாடுபடும் நல்லவர்கள் சொல்கேட்பேன்
நாய் போல் வாலைக்குலைக்கும் வஞ்சகர்க்கஞ்சேன் நாளை நமதாகவே கற்றோர் கரமிணைவேன் கல்லாதோர் வாழிவியலை வரமாய் எடுத்தாள்வேன்! வாலிபர் வளம் தனையே வசமாயாக்கிடுவேன் காயம்தனை துடைக்கும் கரமும் நானாவேன் காணும் இடமெல்லாம் காட்சிப் பொருளாகேன்- எனை தேடும் போதினிலே கண்முன்னே வருவேன்! ஜாதீ,மதம்தனையே தீயில் பொசிக்கிடுவேன் மதுவால் மதமாகும் இழிநிலை அகற்றிடுவேன் பசியெனும் கொடியவனை இல்லாதொ ழித்திடுவேன் யாவரும் ஒன்றே என சட்டம் இயற்றிடுவேன்! கல்வியின் மேன்மைதனை அகமுணர்த்தி விடும் அடியேனாய் நானிருந்தே கற்றலை எளிதாக்குவேன்!  இலவசமெனும் அரக்க இயலாமைதனை நிறுத்தி இல்லாமை ஒழித்திடவே உழைக்கும் வழிகாட்டுவேன்! நாளை நாளையென நாளைக் கடத்தாது . நானல்லஎவரோ என எவரிலும் நாமம் சுமத்தாது தேக்கம் தருவோரை தூரமாய் நிறுத்தி - சொல் வாக்கை நிறைவேற்றிட பாங்காய் பணி புரிவேன்! பேரிடர் வரும் நேரம் பிரிந்தே நிற்காது யாரிடம் செல்வோமென தவிக்க வைக்காது- கால் வாரிடும் துஷ்டரையும் தூணிவாய்ய் துரத்திடுவேன் மனமேவிடும் புதலவனாக உனக்கென நானிருப்பேன்!