16 மார்ச் 2019

மேலை நாட்டுக்கல்வித்திட்டங்களின் சிறப்பம்சம் என்ன?

ஐரோப்பா, பிரிட்டன்,அமெரிக்கா, கனடாவின் கல்வித்திட்டங்களுக்கும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் கல்வித்திட்டங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகள் என்ன? ஏன்? எனும் தலைப்பில்   நீண்ட விவாதம் ஒன்று பேஸ்புக்கில் நடந்தது. அப்பதிவை இந்த லிங்கில் காணலாம்
தமிழ் நாட்டு நட்புக்கள் ஐந்தாம், எட்டாம் வகுப்பில் தேர்வு வைப்பதை ஏன் எதிர்க்கின்றீர்கள் என பகிர முடியுமா?
இலங்கை, இந்தியா சம்பந்தமான விடயங்களை ஆழமாக உள்வாங்கும் போது பல கருத்துக்கள் என் வாழ்வியலிலிருந்து மாறுபட்டு நெகடிவ்வாகவே இருக்கின்றது.
எனக்கு பாசிடிவ் உங்களுக்கு நெகடிவ் ஆகின்றது. உங்கள் பாசிடிவ் எனக்கு நெகடிவ் ஆகின்றது என குறை சொல்லி கடந்து செல்வது சமுகத்துக்கு நான் செய்யும் நன்மையாகுமா?
அதெப்படி எல்லாமே நெகடிவ்வாகவே எனக்குள் தோன்றுகின்றது?
பல நேரம் நான் கடந்து வந்த வாழ்க்கை அனுபவத்தை பகிரும் போது ஏற்றுக்கொள்ள சிரமப்படுவதோடு, எதிர் கருத்து சொன்னால் என் நட்பு பாதிக்கப்படும் அல்லது மனம் வருத்தமடையும் என நினைத்து ஒதுங்கி செல்கின்றீர்கள்./ அல்லது எனக்கு அப்படி தோன்றுகின்றதா? .
சும்மா பெயரளவில் நட்புப்பட்டியலில் இருக்கவேண்டுமானால் நாம் ஏன் நட்பாக வேண்டும்? தொடர வேண்டும்?
தமக்கு பிரியமானவர்கள் என்பதனால் தவறென்றுணர்ந்ததை, தட்டிக்கேட்காமல் 
தட்டிக்கொடுத்தும் ஆதரித்தும் சமூகத்தில் இனம் காட்டப்படுவதை விட குட்டி உணர்த்தி திருத்துவது சமூகத்துக்கு செய்யக்கூடிய கடமை என்பேன்

முகஸ்துதி செய்பவர்களால் நாம் வளர்ச்சி யடையப்போவதே இல்லை. அவர்கள் நம் நலன் விரும்பிகளாக இருக்கவும் முடியாது. .
செய்யும் தவறை சொன்னால் பலரால் உடனடியாக புரிந்து கொள்ள முடியாமல் போகலாம், ஆனால் காலம் அவர்களுக்கு உணர்த்தும் போது அவர்களே நம்மை தேடி வருவார்கள். தம் தவறுகளை உணர்வார்கள். அப்போதும் நாம் நிமிர்ந்து தான் நிற்போம். இதுவும் நான் கடந்து வந்த அனுபவம் தான்.
அதிருக்கட்டும்.
சுவிஸில் ஐந்தாம் ஆறாம், வகுப்பில் படிக்கும் போது வைக்கப்படும் தேர்வுகளில் கிடைக்கும் புள்ளிகள் தான் மாணவர்களுக்கான் உயர் கல்வி, மற்றும் வேலை வாய்ப்பை தீர்மானிக்கின்றது. அதனால் நான்காம் வகுப்பிலிருந்து பாடங்கள் இறுக்கமாகும், ஐந்தாம் வகுப்பில் முழு மதிப்பெண் எடுக்கா விட்டாலும் ஆறாம் வகுப்பில் அதை சீராக்க வேண்டும். ஏழாம் வகுப்பில் அவர்கள் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு தொழிற்படிப்பு, மேற்படிப்பு என இருவழிகளில் பிரிக்கப்பட்டு விடுவார்கள். அதாவது ஒரு பிள்ளையின் எதிர்கால இலக்குகள் அவன் 16 வயதுக்கு முன் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. ஐந்து வயதில் தொடங்கும் கிண்டர்கார்டன் பாலர் பள்ளி, ஏழாம் வகுப்பில் அவன் இலக்குகளை தீர்மானிக்க வைக்கின்றது.
நீங்கள் பத்தாம் வகுப்பு வரை தேர்வே வேண்டாம் என்கின்றீர்கள். என்ன காரணம்?
சுவிஸ் நாட்டின் கல்வி குறித்து விரிவான பதிலை நாளை பதிவாக்குகின்றேன். அதற்கு முன் ஏனைய நாட்டு நட்புக்கள் தங்கள் கருத்துக்களை பகிருங்களேன்.

ராஜாஜியின் அரை நாள் கல்வி இலங்கையில் வெற்றி பெற்றிருக்கின்றதா?

இப்பபடியான பதிவை சுருக்கமாக எழுத முடியாது. மன்னித்து விட்டு படியுங்கள். சேறிறைத்தாலும் சந்தனம் தெளித்தாலும் சிந்தனைகள் சிறகடிக்கட்டும். சுய விருப்பு, வெறுப்புக்களை களைந்து சமுதாய நலன் சார்ந்து சிந்திப்போம்.🙏
நான ஆரம்ப பள்ளிப்படிப்பை படிக்கும் காலத்தில் எங்கள் ஊரில் பலவிதமாக தொழில் செய்வோரை கவனித்திருக்கின்றேன்.
தொழில்களால் சாதி எனும் பிரிவினை இருக்கின்றதென்பதெல்லாம் அக்காலத்தில் எனக்கு தெரியாது. அம்மாவோடு சைவ கோயிலுக்கும் போவோம், அம்மா சொல்லி அப்பா வழி வேதப்பாடம் தான் பள்ளிப்பாடமாக எடுத்தோம். 
ஞாயிறு சர்ச் போவேன். மீதி நாளில் காலை ஐந்து மணிக்கு பக்கத்து பிள்ளையார் கோயில் சுப்ரபாதமும், மாலை ஐந்துக்கு கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன் பாடலும் கேட்டு இப்பவும் அது மனதில் அழுத்தமாக் பதிந்திருக்கின்றது.

எங்கள் பள்ளிகாலத்தில் அதாவது 30 வருடம் முன்பும் கல்வியை தவிர்த்து குலத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தோர் உண்டு. குலத்தொழில் எனும் வார்த்தையே இணையம் வந்த பின் தான் அறிந்தேன்.
நகைத்தொழில் செய்தவர்கள் வீட்டு ஆண்களை ஏழெட்டு வயதிலேயே பட்டறைகளில் வேலைக்கு அனுப்புவார்கள். நகைத்தொழிலில் மட்டுமலல் பல தொழில்களிலும் அப்படித்தான் இருந்தது. 
அப்படியானவர்கள் வீட்டு பெண்களும் வயதுக்கு வரும் வரை தான் ஆரம்ப பள்ளிக்கு வருவார்கள். அதன் பின் நகைத்தொழிலில் ஈடுபடுவார்கள். எங்கள் வீட்டுக்கு நேரெதிர் வீட்டில் இப்படி பலரை கண்டுள்ளேன். ஐந்தாம் வகுப்பு 10 /12 வயது வரை என்னுடன் ஆரம்ப பள்ளிகளில் படித்தோர் அதற்கடுத்த உயர் பள்ளிக்கு வந்ததில்லை.

அடுத்தாண்டுகளில் காலம் மாற ஆரம்பித்தது.
அக்காலத்தில் என் பள்ளி அதிபராக இருந்தவர். ஜெயானந்தம் சேர் இம்மாதிரி பிள்ளைகளை இனம் கண்டு காலையில் பள்ளிக்கு வந்தால் மதிய உணவு, பள்ளி யூனிவோர்ம் முதல் பாட நூல்கள் வரைவாங்கி கொடுத்து பள்ளிக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் என சொல்லி பள்ளிக்கு வர வைத்ததை நான் அறிவேன்.பள்ளி நோட்டுகளுக்கு அட்டை போடகூட வீட்டில் உதவி இல்லை என தன் வீட்டுக்கு அழைத்து தன் பிள்ளைகளின் ஆடைகளை கொடுத்து படிப்பு உதவிகள் தொடர்ந்து செய்ததை நேரில் கண்டுணர்ந்திருக்கின்றேன்.
செருப்பு தைத்தவர் மகன் அத்தொழிலோடு கல்வியையும் கற்க ஆரம்பித்தான், கள் இறக்கியவர் மகன் கள்ளும் இறக்கினால் படிப்பிலும் ஆர்வம் காட்டினான்,சலவை தொழில் செய்தோர் பிள்ளைகள் எம்முடன் இணைந்து படித்தார்கள். தோழிகள் ஆனார்கள். மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் அவர்கள் அப்பாவோடு அழுக்கு துணி மூட்டை எடுக்க எங்கள் வீடுகளுக்கு வந்தால், சந்தோஷமாக வீட்டுப்பாட நோட்டோடு பள்ளி கதை பேசியதும் நினைவில் இருக்கின்றது.
மீன்வர் மகன் விடுமுறை நாட்களில் கடலுக்கு போவான்.பள்ளி நாட்களில் பள்ளிக்கும் வருவான். கோயில் பூசாரி மகனும் இப்படித்தான் வாழ்ந்தான். பள்ளி நாளில் பள்ளி. வெள்ளி மாலை வேட்டி கட்டி ருத்ராட்சம் அணிந்து மேலாடை இல்லாமல் கோயிலுக்கு போவான், நாங்கள் சிரிப்போம், வெட்கப்பட்டு ஓடுவான்.
மற்றவர்கள் எப்படி வாழ்ந்தார்கள். ஒதுங்கினார்கள், ஒதுக்கினார்கள் என்பது எனக்கு தெரியாது. என் அப்பா,அம்மா வேதம் சைவம் என இரு மதம் உண்டு இயேசு பிள்ளையார், முருகன் என விரும்பியவரை கும்பிடலாம். கோயிலுக்கு போகலாம் சர்ச்சுக்கும் போகலாம் என வளர்த்தார்கள். மனிதர்களுக்குள் இருக்கும் ஏற்ற தாழ்வை சொல்லி தரவில்லை.
அப்பாவின் நட்பு களிள் பக்கத்தூர் கல்முனையிலிருந்து இஸ்லாமிய தாத்தா, மாமாக்கள் , அப்பாவின் பள்ளி தோழர்கள் என சிங்களவர்கள் வீட்டுக்கு வரபோக இருந்தார்கள். மனசில எந்த கசடும் சிறுவயதில் நுழைக்கப்படவில்லை.

சமூக வலைத்தளத்தில் அறியும் வரை இரட்டை ரம்ளர் முறை எனில் என்னவென தெரியாது. ஆனால் அதை அம்மம்மா வீட்டில் நான் கண்டுணர்ந்துள்ளேன். கூலித்தொழில், சலவை தொழில் இன்னும் பலருக்கு அம்மம்மா தனி கிளாஸ் வைத்து அவர்களை கொண்டே கழுவியும் வைப்பா, எங்களை தொடவும் விட மாட்டார். அப்போது எனக்கு இதுவெல்லாம் தெரியாது. அம்மம்மா ஏன் அப்படி செய்தார் என கேட்டதில்லை. அவ அப்படித்தான், நிரம்ப விரதம் இருப்பா. செவ்வாய், வெள்ளி , ஞாயிறு மரக்கறி சாப்பாடு, காலையில் தலைக்கு முழுகினால் அவவை நாங்க தொடக்கூடாது தொட்டால் திட்டுவா, திரும்ப குளிப்பா. திட்டி திட்டி குளிப்பா🤣 அதனால் அவ வோட அதிகம பேச்சு வைப்பதில்லை. ஆனால் நல்ல சுவையா சமைப்பா. அவவும் சாதி பற்றி பேசி நினைவில் இல்லை.
தினமும் வாளிகளோடு டாய்லட் எடுக்க வரும் வரும் மாமாக்களிலிருந்து வாராவாரம் அழுக்கு துணி எடுக்க வருவோரெல்லாம் மாமாக்கள் தான். விஷேச நாட்களின் வந்தால் கைவிஷேடம் அமமம்மா கொடுப்பா, அப்பா அவங்களுக்கு என வேட்டி சேலை கொடுப்பார், காசு கொடுப்பார். எங்களுக்கு கஷ்டம் என்றாலும் இதில் குறை வைக்க மாட்டார். யார் வந்தாலும் கைவிசேடம் என் கையால் கொடுக்க சொல்வார்கள். ராசியாம். இப்ப இவர்கள் யாரும் இல்லை. தொழிலும் இல்லை. அவர்கள் உயர்ந்த பதவிகளில் செல்வாக்கோடு வாழ்கின்றார்கள். இப்படியெல்லாம் தொழில் ரிதியாக மக்கள் ஒடுக்கபட்டார்கள் என்பதை அறியாத தலைமுறையும் எங்களுக்குள் உருவாகி விட்டது.
கடந்த மாதம் தமிழ்மக்கள் கல்வி குறித்த பதிவொன்றை பகிர்ந்து விவாதமாக்கிய போது ஒருவர் ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை தேடி வாசிங்க என்றார். அன்று வரை ராஜாஜி அக்கால சூழலுக்கு ஏற்றபடி எல்லோருக்கும் கல்வி எனும் திட்டத்தில் அரை நாள் பள்ளிக்கு எல்லோரும் கட்டாயம் வர வேண்டும் ஒரு திட்டம் கொண்டு வர முயன்றதோ, அதை எதிர்த்ததோ எனக்கு தெரியாது. காமராஜரால் இலவசக்கல்வி என இன்று வரை பாராட்டப்படும் திட்டத்துக்கு முன் இப்படி ஒரு திட்டம் இருந்திருக்கும் என்பதெல்லாம் தெரியாது.
ஆனால் காலையில் பள்ளிக்கூடம் மாலையில் அம்மா, அப்பாவுக்கு உதவி எனும் திட்டத்தை இலங்கையில் படித்த தமிழர்கள் அனுபவித்திருப்பீர்கள். எட்டு முதல் ஒரு மணி வரைக்குமே பாடசாலை இயங்கிய காலமும் உண்டு.
இன்று எங்கள் கிராமங்கள் 100 வித கல்வி தேர்ச்சியடைந்திருக்கின்றது. எந்த போராட்டமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த அரை நாள் கல்வி திட்டத்தால் குலத்தொழில்களை ஒழித்திருக்கின்றோம். அது அரை நாள் கல்வி திட்டம் என்றே தெரியாமல் காலையில் பள்ளி மதியத்துக்கு பின் பெற்றோருக்கு உதவி என படித்தே கடந்த 20 வருடங்களில் எங்கள் ஊரில் சலவைதொழிலாளர்கள் முதல் பல தொழில்களுக்கு ஆட்கள் இல்லை.அவ்வீட்டு பிள்ளைகள் டாக்டர் எஞ்ஞினியர்களாக இருக்கின்றார்கள். ஆசிரியர்களாக பதவிகளை பெற்று தாங்கள் குலத்தொழிலை முற்றாக அழித்திருக்கின்றார்கள். 
பொருளதாரத்தில் தம்மை உயர்த்தி இருக்கின்றார்கள். அதிகாரங்கள், பதவிகளை பெற்றிருக்கின்றார்கள்.

இதற்கு எதிர்மறையாக தாம் உயர்வெனும் குலப்பெருமை, குடிப்பெருமை பேசியோர் தலைமுறையில் சிலர் கட்டாக்காலிகளாகி சமூகத்துக்கும் தமக்கும் பாரமாகவும் மாறி இருக்கின்றார்கள்.தம்மால் ஒதுக்கபபட்டவர்களில் கீழ் பணி புரியும் நிலையிலும் இருக்கின்றார்கள். 
.
எந்த போராட்டம்,ஆர்ப்பார்ட்டமும் இல்லாமல், அமைதியாக,அவர்கள் அறியாமலே அவர்கள் உயர இந்த அரை நாள் கல்வி திட்டம் உதவி இருக்கின்றது. 
வேண்டாம், கூடாது, நல்லதில்லை என
மறுக்கப்பட்டு,ஒதுக்கப்பட்ட ஒரு சட்டம் வெற்றியடைந்திருக்கின்றது என்பதை நன்கு சிந்திக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இது மட்டுமா? 
இலவசக்கல்வி,பாடப்புத்தகம், மதிய உணவு என காமராஜரால் கொண்டு வரப்பட்ட திட்டமும் இன்று வரை இலங்கையில் தொடர்கின்றன.

ஆசியாவில் கல்வியில் " தெற்கு ஆசிய வலயத்தில் உள்ள நாடுகளின் மத்தியில் இலங்கையின் கல்வி முக்கிய இடத்தை வகிக்கின்றது என யுனெஸ்கோ அறிவித்திருக்கின்றது. இலங்கை, யுத்த சூழலிலும் கல்வியை தக்க வைத்திருக்கின்றது
என்பதன் எவ்வித பக்க சார்புமில்லாமல் சிந்திப்பீர்கள் எனில் புரிந்து கொள்வீர்கள்.

வெளி நாடுகளில் பிள்ளைகள் தங்கள் பெற்றோர் செய்யும் தொழிலை, ஹோட்டலை, கடைகளை வணிகஸ்தலங்கலை, தொடர்ந்து நடத்த மேற்படிப்பை படிப்போரும் உண்டு. தொழிலில் பாகுபாடு பார்க்காமல் அனைத்து தொழிலும் வாழ்வியலோடு கலந்ததெனும் உள்ளத்து உணர்வை பெறுவதே முக்கியம்.
தமிழ் நாட்டில் இந்த சூழலை எப்படி எதிர்கொண்டார்கள் என எனக்கு தெரியாது. இந்த திட்டம் ஏன் வெற்றி பெறமுடியாது போனது என்பதும் தெரியாது.
அரசியல் சதுரங்கத்தில் மக்கள் பகடைகளாகி தமக்கான வாய்ப்புக்களை தவற விடுகின்றார்கள் எனும் கவலை மட்டுமே எஞ்சி நிற்கின்றது.
ஒரே நாளில் மாற்றங்களை எதிர்பார்க்கின்றார்கள். சட்டங்களால் அனைத்தும் சாத்தியம் என நம்புகின்றார்கள்.
மாற்றங்கள் என்பது படிப்படியாகவே நுழைக்கப்பட வேண்டும் என்பதை மறுதலிக்கின்றார்கள்.
இன்னொர் வகையில் யோசித்தால். ஐம்பது வருடம் முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழ் நாட்டில் கையெழுத்து கூட இட தெரியாதவகையில் எவரும் இருந்திருக்க மாட்டார்கள்.அரை நாள் கட்டாயக்கல்வி இன்னும் பலருக்கு கல்வி வாய்ப்பை தந்திருக்கும், குலத்தொழில்களும் மறைந்திருக்கும், அவர்களும் ஓரளவு ஆரம்ப கல்வியறிவை அடைந்திருப்பார்கள் எனும் உண்மையும் உறைக்கும்.
அரசியல் தவிர்த்து சமூகம் சார்ந்து மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் விவாதிப்போம்.
மற்றப்படி சிந்திக்கலாம். நிரம்ப சிந்திக்கணும்.

15 மார்ச் 2019

அரசியல் எனும் சதுரங்கத்தில் பகடைகளாக்கப்படும் பெண்கள். 1

நிரம்ப விடயம் பேசப்படுகின்றது. பொள்ளச்சி விடயமா ஏன்கா நீங்க பதிவு போடல்ல எனும் ஆதங்கமும் இன்பாக்சில் வருகின்றது.
என்ன எழுத வேண்டும்? பெப்ரவரி 22 ம் திகதி ,பேஸ்புக் நட்பை தவறாக பயன் படுத்தி ஏமாற்றம், மிரட்டல், மானபங்கப்படுத்தி புகைப்படம் எடுக்கப்பட்டதென சாதாரணமாக கடந்து சென்ற செய்தி ஒன்று மார்ச் 12 ம் திகதி அன்று தான் நடந்ததென்பதை போல் ஐயோ அண்ணா எனும் கதறலுடன் வரும் காணொளியின் மூலம் பரவலாகின்றது. அதை பகிர்ந்து நியாயம் கேட்கும் பதிவுகளில் பின் பெண்களின் பாதுகாப்பும், அக்கறையும் மறைந்திருக்கின்றதா?
🔴எமது செயல்பாடுகள் தவறு உணர்த்துகின்றதா? அல்லது இப்படியெல்லாம் சமூகத்தை சீரழிக்கலாம் எனும் புதிய வழிகளை காண்பிக்கின்றதா?
🔴 நியாயம் கேட்கின்றோம் என நாற்சந்தியில் ஸ்பீக்கர் கட்டி, எங்கள் பெண்களில் அறிவீனத்தை, பலவீனத்தை வேடிக்கை பொருளாக்கத்தான் வேண்டுமா?
🔴நிர்வாணம் தப்பில்லை என எழுதுவோர் தங்கள்முழு நிர்வாண புகைப்படம் பகிர வேண்டாம். முக்கால்நிர்வாண புகைப்படத்தை பொதுவில் பகிர்ந்தால் கடந்து செல்வார்களா? அது சமூகத்துக்கும், தனி நபருக்கும் உலகத்தின் பார்வையில் நல் மதிப்பை தருமா?
என் பெண்ணிடம் இந்த பொள்ளச்சி விபரத்தை சொல்லி கலந்துரையாடினேன்.ஏன்மா மூளையில்லையாம்மா இவங்களுக்கு? நமக்கு தெரிந்தவர்களையே நம்மால் நம்ப முடியாத போது எப்படிம்மா தெரியாத இன்ரர் நெட் பிரெண்டைநம்பி போக முடியும் என்கின்றாள்?
காதல்,காமம்,நிர்வாணம் தப்பில்லை என ஊருக்கு பாசாங்காக பகிர்ந்தாலும் அடி மனதில் முன் பின் தெரியாதவனை நம்பி இவள் ஏன் போனாள் எனும் கேள்விக்கு முன் அனைத்தும் அடங்கி போவதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
🔴 நம் வீட்டு பெண்ணை பொத்தி வைச்சிட்டு அடுத்த வீட்டு பெண்ணுக்கு ஒன்றென்றால் ஆயிரமாயிரம் ஆலோசனை தர நம்மவரால் மட்டும் தான் முடியும்.
பெண்களின் மீட்சி எனும் பெயரில் அவளுக்குள் ஆண்,பெண் சமத்துவம் எனும் பெண்ணியத்தை புகுத்த நினைக்காமல ஆணுக்கு பெண் எதிரி எனும் புரிதலை உருவாக்குவது நன்மை பயக்குமா?
உணர்வுக்கு இடம் கொடுக்காமல் அறிவுக்கு இடம் கொடுத்து சிந்திக்க ஆரம்பித்தால் பொள்ளச்சி எனும் பெயரில் வெளி வந்திருப்பது வெறும் ஐந்து சத வீத அவலங்கள் தான் என்பதை நாம் அறிய முடியும்.
இன்னமும் வெளிவராத 90 வீத பிரச்சனைகள் உண்டு. இது பெரும் வலைப்பின்னலாய், இது தான் பெண்ணியம், இதுவே பெண் விடுதலை, சுதந்திரம் எனும் பெயரில் சிலந்தி வலைபோல் பெண்களை சுற்றி பின்னப்பட்டிருக்கின்றது. இது ஒரிரு நாட்கள் நடந்தவை அல்ல. பல்லாண்டு தொடர்பவை.
என் பார்வைக்கு அடிக்கடி இம்மாதிரி செய்திகள் கொண்டு வரப்படும்.போதெல்லாம் நட்பில் இருக்கும்,இல்லாத பெண்களை எச்சரிக்க தயங்குவதில்லை. நமக்கேன் வம்பு என கடந்தும் செல்வதில்லை. அதை பொதுவில் சொல்லி அவளை சங்கடப்படுத்துவதும் இல்லை.
இந்த வலைப்பின்னலிலிருந்து எப்படி எமது பெண்களை வெளிக்கொண்டு வரலாமென்பதே இன்றைய எமது இலக்காக இருக்கும் போது, பெண்களையும் அவர்தம் பிரச்சனைகளையும் ஆரசியல் ஆதாயங்களுக்காக பயன் படுத்துவோரின் செயல்பாடுகளை எப்படி ஆதரிக்க முடியும்?
பெண்கள் முன்னேற்றமானது இம்மாதிரி பிரச்சனைகள் நேரம் தடைப்பட்டு நிற்பதை இன்னமும் உணராதிருப்பது கவலைக்குரிய விஷயம்.தயவு செய்து இவ்விடத்தில் உங்களை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள்.
1.பெண்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க அரசியல்,ஆதாயங்கள்,லாப நஷ்டங்கள் தேவைப்படுமானால் நமது சமூகத்தில் பெண்களுக்கான மதிப்பீடு எத்தகையது?
2.பெண்கள் எனும் துருப்புச்சீட்டு அவள் முன்னேற்றம் சார்ந்து குரல் கொடுக்கப்பட்டதில்லை என்பதை அவதானித்திருக்கின்றீர்களா?
3.எங்கேனும் சறுக்கி விழுந்தால் ஓடிவரும் கூட்டம். பரிதாபப்படும் கூட்டம் அவள் உயர எத்தகையை வழிவகைகளை உருவாக்கி தருகின்றது?
பாதிக்கப்பட்ட பெண், தன் பிரச்சனைகளை நம்பி சொல்லும் போது அதை எச்சூழலிலும் வெளியில் பகிரக்கூடாது, அனுபவ பாடமாக கூட பகிரக்கூடாது. அவசியமானாலும் அவள் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே எவரிடமும் பெயர் சொல்லாமல் கூட பகிரக்கூடாது எனும் சுய கட்டுப்பாடு எனக்குள் உண்டு. .அப்படி பகிரும் போது அப்பெண் அதை படிக்கும் சூழலில் தன் வாழ்க்கை இப்படி பொதுவில் பகிரப்பட்டிருக்கின்றதே என மனம் உடைவதுடன், தனக்கு நம்பிக்கையானவர்கள் என நம்பியவர்களையும் சந்தேகித்து, தன் மனதை இறுக்கமாக்கி கொள்வாள்.
இந்த பிரச்சனைகளின் பின்னிருக்கும் விசாரனைகள் எனும் பெயரில் தோண்ட தோண்ட பூதமாக புதைகுழிகளிலிருந்து வரும் நாற்றம் போல், வெளிப்படும் உண்மைகள் தமிழ்ப்பெண்கள் மீதே சேற்றை வாரி இறைக்கும் எனும் உண்மை தெரிந்த பின் எதை எழுத முடியும்?
எம் பெண்களின் ஆளுமையை முடக்கி, கேலிச்சித்திரங்களாக்கி போடும் அரசியல் ஆதாயங்களுக்கு பின்னிருக்கும் கயமைத்தனம் கொடுமையானது. பெண்ணின் ஆளுமையை உடைத்து போடும் சதிவலை இதன் பின்னால் இருக்கின்றதென அறிந்த பின் எதை எழுத முடியும்?
பேசிப்பேசியே பேரவலங்களை உருவாக்கி கொண்டு செல்கின்றோம். தீமைகள் வேர் பிடிக்கின்றன. தீர்வுகள் எட்டவே செல்கின்றன.
அனுபவப்பாடங்கள் என பல எழுதப்பட்டு அவற்றை சக பெண்களே புரிந்து கொள்ளாமல், எழுதப்படும் விடயங்கள் தமக்கான நன்மைக்கும் தான் எனும் உணர்தலை பெறாத வரை சமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக உபயோகப்படுத்துங்கள் எனும் பதிவுகள் பயனற்று தான் போகின்றது.
நாங்கள் எங்கள் அறிவினை வளர்க்க, உலகில் நடைபெறும் நன்மை,தீமைகளை உடனுக்குடன் அறிய, உலகின் எங்கோ ஒரு மூலையிலிருந்தாலும் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ள,பயன் படுத்த, சமூகம் சார்ந்த பல சீர்திருத்தங்கள், உதவிகளை பரவலாக்க என எத்தனையோ நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன.கல்வி, இயற்கை,முன்னேற்றம்,சமூகம் சார்ந்த கண்டவை, கேட்டவை, உணர்ந்தவை எனும் பாசிடிவ், நெகடிவ் வாழ்க்கைக்கான பாடங்களை பகிரும் போது அதை எத்தனை பேர் படித்து பயன் பெறுகின்றார்கள்?
ஒவ்வொரு பதிவின் பின்னாலும் புகைப்படங்கள் விதவிதமாக பதிவிட்டு அதன் மூலம் கிடைக்கும் லைக்ஸ் எனும் மாயைக்குள் தம்மை அறியாது சிக்கி தம்மை வழிகாட்டியாக பின் பற்றும் இளையோரையும் அதே பாதைக்கு திசை திருப்பி விடுகின்றார்கள்?
களிமண்ணை அழகு சிலையாக்குவதும், அழகுச்சிலைகளை களிமண்ணாக்கி பிசைந்து போடுவதும்,முடக்கி போடுவதும் அவரவர தம்மை வெளிப்படுத்தும்,பயன் படுத்தும் விதத்தில் தான்.
நிஜ வாழ்க்கையை மறந்ததொரு நிழல் வாழ்க்கை தேடுவோரை நாம் இனம் காண முடியுமா?
நிர்வாணம் தப்பில்லை என பெணணை சொல்லும் ஆணால் அவள் நிர்வாணத்தை கண்டு இலகுவாக கடந்து செல்ல முடியுமா?
அடுத்த பகிர்வில் பார்க்கலாம். பெண்கள் அரசியல் பகடைகளா 1

07 மார்ச் 2019

எங்கட தமிழரிட்ட இருக்கின்ற நல்ல பழக்கம் என்ன தெரியுமா?

எங்கட தமிழரிட்ட இருக்கின்ற நல்ல பழக்கம் என்ன தெரியுமா?
எந்த பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனைக்கான சமகால சூழல், நமது சமூகத்தின் மேம்பாட்டை நிம்மதியை குறித்து சிந்திக்க மாட்டார்கள்.
மூன்று நான்கு தலைமுறைகள் அல்லது நூறுவருடம், ஆயிரம் வருடப் பாராம்பரியம், பெருமை பேசுவது. எதை எதையெதுடனோ முடிச்சிப்போட்டு இருக்கும் சிக்கலை பெரிசாக்குவது. அல்லது கம்முன்னு உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது.
ஆயிரம் ஆண்டு காலம் இல்லை அதுக்கு முன் பூமி தோன்றிய காலம் முதல் இலங்கை இருக்கு. அதில் மனிதரும் இருக்கினம். அங்கே வாழ்ந்தது ஆறறிவு மனித இனமா என்பது தான் எண்ட மண்டைக்குள் இருக்கும் கேள்வி?
எம்பூட்டு பெருமை பேசிட்டிருக்கோம். இருப்பதையும் இழக்க வைக்கும் பெருமை.
ஆதித்தொன்மை மிக்க தமிழனுக்கென சுயமான ஆளுமையோட ஒரு சிறு துண்டு பரப்பில் இது எண்ட நாடு எண்டு சொல்ல ஒண்டுமில்லை.
அவன் செய்தான், அப்ப செய்தான், 
இப்ப நான் செய்யக்கூடாதா, செய்தால் என்ன இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்பது. அப்ப அவன் செய்திருந்தால் அக்கால சூழல் எப்படி இருந்தது?என்ன நடந்தது என எவருக்கும் தெரியாது.

கேட்டு கேட்டு தான் இருந்ததை இழந்து இன்னமும் பழம் பெருமை பேசிட்டு நடு ரோட்டில் நிற்கின்றம்.
என்னமோ இவங்க நேரில் பார்த்து வந்தது போல் எழுதுவாங்க, தமிழர் எனும் உணர்வும் வீரமும் எழுத்தில் மட்டும் அனல் பறக்கும்.
தென்னிந்திய திருச்சபைகளைகள்,கிறிஸ்தவ மதம் பரப்ப வந்த மிஷனரிகள் , பௌத்த மரம் பரப்ப அரச மரக்கிளையோட வந்த சங்கமித்தை, விஜயனும் தோழர்களும், வியாபார நிமித்தம் வந்த அராபியர்கள், யவனர்கள் என காலத்துக்கு காலம் எவனென்வனோ வந்தான். போனான்.
அவன் வந்த காலத்தில் தமிழர்கள் மேன்மை அடைந்திருந்தார்கள்.ஆட்சி அதிகாரங்களோட வாழ்ந்தார்கள் வந்தவனை வா வா என இரு கை கூப்பி வரவேற்று, உட்கார வைச்சு விருந்தளித்தார்கள். வீட்டுக்குள் வாசலோடு அனுப்ப வேண்டியவனெல்லாம் உப்பும் உறைப்புமா சமைச்சத திண்டு போட்டு /உப்ப தூவி அவிச்சி திண்டவனுக்கு நமம் மசாலாவெல்லாம் போட்டு சமைச்சால் சும்மாவா இருக்கும், ஆஹா , ஓஹோ விருந்தோம்பலில் சிறந்தவன் தமிழன் எண்டதும், நம்மாளுங்களும் அப்படியே ம்யங்கி போய் வீட்டுக்குள் கூட்டி வைச்சு படுக்கையும் போட்டு விசிறியும் விட்டாங்க.
நெடு நெடுவென உயரமா வெள்ளையா இருந்தவனை பார்ததும் வெள்ளை தோல் எண்டால் கடவுள் எனும் ரேஞ்சுக்கு கூனி குறுகி கும்பிடு போட்டு காலடியில் உட்கார்ந்தும் இருப்பாங்க. 
இப்படித்தான் எல்லாரையும், நல்லவன் என நம்பி கடைசில தனக்கும் போக்கிடம் இலலாமல் இருப்பை எல்லாம் இழந்து கை கட்டி வாய் பொத்தி நிண்டான். கூழை கும்பிடு போட்ட தமிழனின் பண்பும்,பணிவும்,அவனை ஏமாளி என புரிய வைச்சிருச்சி.

அப்ப இருந்த சனமும் ஏன் எண்டு கேட்கல்ல. கேட்டாங்களா என எனக்கு தெரியல்ல. ஏன் எண்டால் எல்லாரும் தொன்மை பேசினமே தவிர ஆதாரங்கள் என்பது அரிதாகவே ஆவண[ப்படுத்தி இருக்கினம். அப்ப அவன் செய்த தப்புத்தான் நம்ம தலையில் விடிந்திருக்கு.
இப்ப எல்லாத்தையும் இழந்து போட்டு கேவலப்பட்டு நிற்கின்றம். உங்களுக்கு வெட்கமா இல்லையோ என்னமோ எனக்கு வெட்கமா இருக்கு.
ஏன் தெரியுமா.? ஏண்ட மூண்டு தலைமுறைக்கு முந்திய தலைமுறை அதாகப்பட்டது 150 / 200 வருடம் முந்தி என்னோட முப்பாட்டனுக்கு முந்திய தலை முறையும் இந்த தப்பை செய்திருக்கு.
எங்கூரில் பிள்ளையார் கோயிலும், அம்மன் கோயிலும் இருக்கும் நிலம் எங்க குடும்பத்தின் தானமாம், அதனால் எங்க குடும்பத்துக்கு என இன்னமும் முதல் பூஜையும் மரியாதையும் இருக்கு எண்டு என் அம்மாம்மா முதல் அம்மா வரை சொல்வாங்க. ஆதாரம் இருக்கா என இனி நானும் தோண்ட போறேன். எண்ட உரிமையை கேட்க போறேன். 😍
அதான் அப்படி எண்டால் 
வேதக்காரர் கதை இன்னொரு பக்கம். 
பைபிளில் நூதனம் பார்த்து மனிதரை ஒதுக்கி வைக்க சொல்லவும், இல்லை. தெரிந்து தின்னாதே. தெரியாமல் திண்டால் அது உன் தப்பில்லை. எதை திண்டாலும் ஜெபிச்சிப்போட்டு திண்ணு

உன் ஒரு கண்ணால் உன் சகோதரனுக்கு கேடு உண்டாகும் என நினைச்சால்,உன் கண்னை பிடுங்கி போடு எண்டு தான் பைபிள் சொல்லுது .
படைச்சதை திண்டால் என்ன தின்னாட்டில் என்ன?
எவன் எதை தின்னனும் என நீங்கள் ஏன் நிர்பந்திக்கின்றீர்கள்? நீங்கள் செய்தால் அதை எல்லாரும் செய்யணும் எண்ட எதிர்பார்ப்பு ஏன்? 
அவனவன் அவனவனுக்கு பிடிச்ச மாதிரி வாழுறான்.

உரிமையை காப்பாத்துதுவதில் தனி மனித விருப்பு வெறுப்புக்கு இடமில்லங்க.
அன்னியனுக்கு இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான் எண்ட பட்டறிவு அனுபவம் ஏற்கனவே இருக்கில்ல. அப்புறம் என்ன மண்ணுக்கு உள்ளூட்டு பிரச்சனைக்கு அடுத்தாத்து காரனை பந்தி விசாரிக்க கூப்பிடுறியள் என்கின்றேன். அங்கயும் பிச்சி இங்கயும் பிச்சி மொத்தமா எல்ல்லாத்தையும் பிச்சி எடுக்க திட்டம் போடுறியளோ?
உங்கட வீட்டில் நடக்கும் பிரச்சனைக்குரிய தீர்வை உள்ளூட்டுக்குள் நிண்டு கொண்டு, கேட்டு பெறணும், எந்த உரிமைக்க்கு போராடுறியளோ அதை முதல்ல பெறணும். ஒன்றில் ஆரம்பிச்சு பத்தில் நிறுத்தி, பத்துக்கு முன்னால் இருகும் ஒன்றை விட்டு ஒட்டுமொத்தமா பூஜ்ஜியத்தில் எங்கட சனத்தை கொண்டு வந்து விட்டிருக்கியள்.
இன்னுமா புத்தி வரலல். 
எண்ட வீட்டு பிரச்சனையை நானே தீர்த்துப்பேன், நாட்டாமை செய்ய எவனும் வர வேண்டாம். அண்டை அயலில் இருக்கவுகளோட சமாதானமா இருக்கிறது. ஆபத்து நேரம், அவசர உதவிக்கு தான். வீட்டுக்குள் வநது படுக்க சொல்லி கேட்க தேவைல்ல.

வீட்டு சாவியை கொடுத்து காவல் காரனாக்கி வீட்டுக்குள் பூந்து வீட்டு பிரச்சனையை தீர்த்து வைக்கணும் என ஒரு தடவை அல்ல பல தடவை பட்டும் புத்தி கொள்முதலில் தான் இருக்கியள்.
ஆளாளுக்கு பதிவு போட்டு மதம் காக்க மதம் பிடிச்சி மதவெறியை ஊட்டி பிரிவினை வளர்த்து நாட்டாமைக்கு எவனை நுழைக்கலாம் என தான் யோசிக்கிறியளே தவிர இந்த பிரச்சனைக்கு தற்கால தீர்வை தேடவும், அந்த மகக்ளின் அமைதியையும் நிம்மதியையும் நீங்கல்லாம் விரும்பல்லல்.
உங்களுக்கு தமிழ் மக்கள் எப்பவும் ஏதோ ஒரு பிரச்சனையில் எரிந்திட்டே இருக்கணும், அதில் நீங்கள் குளிர் காயணும்.
ஈழத்து வாழ்மக்களே, இவங்க வெளி நாட்டில் பத்திரமா, பாதுகாப்பா இருந்து கொண்டு நல்லா ஏத்தி ஊத்தி விடுவாங்க. இவங்கட போலிபேச்சை நம்பி நாம் இழந்தது போதும்.
உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்துது இனியும் உங்கள் நிம்மதியை இழக்காதிங்க போயிட்டு உங்கட புள்ள குட்டிகளை பாருங்க படிப்பிக்க என்ன செய்யலாம் என யோசிங்க. இப்போதைய இருப்பை இழக்காமல் இருக்கணும். அவ்வளவ தான் நான் சொல்வன்.