31 ஜனவரி 2019

சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்பட்டிருந்தார்களா? 1

சங்க இலக்கியங்கள் மற்றும் காலத்தால் முற்பட்ட தமிழ் இலக்கியங்கள் எதிலாவது , பெண்கள் பாலியல் துனபுறுத்தல்கள், செய்யபட்டமை தொடர்பாகவோ, பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கப பட்டது தொடர்பாகவோ , அத்தகைய குற்ற சம்பவங்களுக்கு அரசர்களால் வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாகவோ எங்காவது குறிப்பிட பட்டுள்ளதா? எனும் கேள்வியை Yoga Valavan Thiya ஐயா அவர்கள்  பேஸ்புக்கில் கேட்டிருக்கின்றார். அவருக்காக கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் பதில் பின்னூட்டமிட்டிருக்கின்றார்.
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்டப்பட்டிருந்தார்களா? என நாம் ஆராய்ந்தாலே பாலியல் ரிதியான அத்துமீறல்கள் நடந்திருக்குமா எனும் தெளிவும் கிடைக்கலாம்.
சங்க காலம் என்றால் எக்காலம்?
கி.மு நான்காம் நூற்றாண்டு தொடக்கம், கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை சங்க காலம் எனப்படுகின்றன.
தொல்காப்பியம், புற நானுறுப்பாடல்கள், பத்துப்பாட்டு,எட்டு தொகை. சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சீவக சிந்தாமணி எல்லாமே இக்காலத்தில் எழுதப்பட்டன.
இக்காலங்களில் தான் சேர,சோழ,பாண்டியர்கள் பேரரசுகளாக அரசாண்டார்கள்.
சிலப்பதிகாரம்,மணி மேகலை போன்ற காப்பியங்களில் கண்ணகி, மணிமேகலை எனும் பெண்களின் ஆளுமையையும், சீவக சிந்தாமணி சீவகன் எனும் ஆணையும், குறித்து பாடப்பட்டிருக்கின்றது.
பெரும்பாலோனோர் புராணங்கள், காப்பியங்களில் வரும் மணி மேகலை, கண்ணகியை விட சங்ககால மாந்தர் எனில் சீதை தீக்குளித்தாள், இராமன் சந்தேகப்பட்டான், பாஞ்சாலியை துகிலுரித்தார் என்றே பெண் அடிமைத்தனத்தின் சான்றாக விவாதத்தில் எடுத்தாள்கின்றார்கள். .
அதனால் இராமாயணம், மகாபாரதம் உடபட புராணங்கள் பெண்களை அடிமைப்படுத்தியதா என முதலில் ஆராய்ந்து தெளிவுக்கு வருவோம்.
புராணங்கள்,காப்பியங்கள் என்ன சொல்கின்றன.
பெண்களை அடிமைப்படுத்தினார்களா? 
பாலியல் ரிதிரில் பெண் உடல் ஆக்கிரமிப்புக்குள்ளானதா? பெண்களை போகப்பொருளாக பயன் படுத்தினார்களா?

இராமாயணம்
*******************
கூனி, கையேயி எனும் பெணகளின் சூழ்ச்சியும், சீதை எனும் பெண்ணின் விருப்பமுமே முக்கியத்துவம் பெற்றதாக இருந்திருக்கின்றன.

தசரதன் எனும் நாடாளும் அரசன் மனைவிக்கு கொடுத்த வரத்துக்கு கட்டுப்படுபவனாக காட்டப்பட்டிருக்கின்றான்.
சீதை தனக்கான மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவளாக மட்டுமல்ல,தன் வாழ்க்கையை முடிவெடுக்கும் சுயாதீன வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றாள்.
சீதைக்காக சுயம் வரம் நடத்தப்படுகின்றது. இராமன் போட்டியில் கலந்து வில்லை வளைத்து வென்றே சீதையை கரம் பிடிக்கின்றான்.
காட்டுக்கு செல்வதா அரண்மனையில் வாழ்வதா என முடிவெடுக்கும் அதிகாரம் சீதைக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. சீதை ஆசைப்பட்டு கேட்கும் பொருளை கொடுக்க வேண்டும் எனும் கட்டாயம் இராமனாகிய ஆணுக்கு இருந்திருக்கின்றது.
சீதையின் தந்தையும் சீதையின் விருப்பத்தையே புரிந்து நடத்தி இருக்கின்றார்.
சீதை மேல் ஆசை கொண்ட இராவணனும், சீதையை கடத்தி சென்ற போதினிலும் அவள் விருப்பமில்லாமல் அவளை வன்புணர்வு செய்யும் உரிமை அற்றவனாக காட்டப்படுகின்றான். அவள் மன விருப்பம் வேண்டி காத்திருக்கின்றான்.
சீதைக்காகவே இலங்கை அழிக்கப்படுகின்றது.
சீதை எனும் பெண் பெண் இங்கே மேன்மைப்படுத்தப்பட்டே இருக்கின்றாள்.
தன்னை நிருபிக்க சீதை நெருப்பில் இறங்கியதான சம்பவத்தில் மூலம் நெருப்பையும் கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் பெற்ற பெண்ணாக சீதை உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றாள். சந்தேகப்பட்டு சீதை தீக்குளித்து தன்னை நிருபித்தாள் எனும் வாதத்தை விட சீதைக்கு நெருப்பும் கட்டுப்பட்டிருந்தது என்பதே இங்கே கவனத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும், நெருப்பாலும் பெண்ணின் உறுதியை அழிக்க முடியாது என்பதாகவும் சொல்லலாம். நெருப்பாற்றை கடந்தவள் எனும் போதே அவள் பேராற்றல் எல்லைகள் அற்றதாகின்றன.
இலக்கியப்படைப்புக்களை எழுதியவர்கள் பெண்ணுக்கான தனித்துவத்தை மட்டுப்படுத்தி அவளின் பேராற்றலை கட்டுப்படுத்தி, அவளின் சிறகினை உடைப்பதில் பெரும்பங்காற்றி இருப்பதை மறுப்பதற்கில்லை.
மகாபாரதம்
***************
மகா பாரதத்தில் ஐவருக்கு ஒரு பெண் மனையியாகின்றாள்.பாஞ்சாலி என்பது அவள் பெயர்.

பஞ்ச பாண்டவர்களாய் உலகின் பஞ்ச பூதங்களாக நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று அனைத்தையும் ஆளும் சக்தியாகின்றாள்.
தன் கணவர்கள் தன்னை வைத்து சூதாடி தோற்று விட்டார்கள் என்றறிந்தும் அடங்கி, ஒடுங்கி, கதறவில்லை அவள். எல்லாம் இழந்த பின் என்னை வைத்து சூதாடும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது என அரச சபையில் சிலிர்த்தெழும்புகின்றாள்.
நியாயம் கேட்கின்றாள். தான் செய்யாத தவறுக்கு எப்படி தன்னை தண்டிக்க முடியும் என நீதி 
கேட்டு நிற்கின்றாள். துச்சாதனன் எனும் எதிரி அவள் துகில் உரிய வரும் போது கிருஷ்ணன் எனும் நம்பிக்கை அவளை காக்கின்றது.

அசாத்திய பெலனடைந்தவளாக அனைத்தினையும் சுக்கு நூறாக்கும் வல்லமை பெற்றவள் பெண் என்பதே மகாபாரதம் நமக்கு பாஞ்சாலி மூலம் உருவகப்படுத்துகின்றது.
சீதையும் பாஞ்சாலியும் நமக்குணர்த்துவது என்ன?
சங்க காலத்தில் ஆண்கள், பெண்களுக்குள் அடங்கி வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை ஏறு தழுவுதல், காளையை அடக்குதல், படற்பனை ஏறுதல் என பல வீர விளையாட்டுக்களின் வென்று பெண்ணை கைப்ப்டித்த கதைகள் சொல்கின்றன.
பெண்ணின் அனுமதி இல்லாமல் அவள் சுண்டு விரலைக்கூட தொடும் அனுமதி ஆணுக்கிருக்கவில்லை எனவும் அதே சங்க கால சம்பவங்கள் சொல்கின்றன.
சங்க கால மகளிர் வீரமுடைய பெண்மணிகளாகவே இலக்கியங்களில் சித்திரிக்கபபட்டிருக்கின்றார்கள்.
தலைவனை சந்தித்தல், புனைகாத்தல்,ஒழுக்கம் பேணுதல் என தனது எல்லைகளை மீறாதவளாக வர்ணிக்க்கப்படுகின்றாள்.
பெண்கள் முறத்தால் அடித்து புலியை விரட்டினாள் எனவும், அரசனுக்கே ஆலோசனை சொல்பவர்களாகவும்,
தூதுவராகவும் புலமை வாய்ந்தவர்களாக விளங்கினார்கள் என காப்பியங்கள் சொல்கின்றன.

வீரத்தில் புறமுதுகு காட்டாதவளாக வீரக்கிளர்த்திகளாக தம்மை பெண்கள் வெளிப்படுத்தினார்கள். போரில் புறமுதுகிட்டு ஓடிய மகனுக்கு பால் கொடுத்த என் முலையை அறித்தெறிவேன் என சொன்ன வீரத்தாய்ப்பரம்பரையாக பெண் விளங்கினாள்.
போர்ப்பறை கேட்டால் தம் பிள்ளையை வீட்டுக்குள் ஒளித்து வைக்கும் ஈனத்தனம் பெண்களுக்குள் இருக்கவில்லை. போர் என்றால் கையில் வேலைக்கொடுத்து சென்று, வென்று வா மகனே என்றதோடு கருவிலேயே வீரத்தையும், ஊட்டி வளர்க்கப்பட்ட . புறநானுற்று மா வீரர்களைப் பற்றியும் சங்ககால இலக்கியங்கள் சொல்லி இருக்கின்றன.
பெண்மைக்கான குண நலன்கலாக அச்சம்,நாணம், மடம்,பயிர்ப்பு எடுத்து காட்டப்பட்டிருக்கின்றது.
எச்சூழலில் இவை வெளிப்பட வேண்டும் எனவும் சொல்லப்படுகின்றன.

தலைவியானவள் காதல் கொண்ட நேரமும், தலைவன் அருகில் இருக்கும் போதும் , நீண்ட பிரிவுகளின் நேரமும் அவனைக்குறித்த அச்சம், பயிர்ப்பு, நாணம், மடம் போன்ற குணாதியசங்களை வெளிப்படுத்துபவளாக அவள் வாழ்ந்தாள் என்கின்றது .
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” என்றும்
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலன”

என்று தொல்காப்பியம் சொல்கின்றது. அச்சம், நாணம் , மடம், பயிர்ப்பு தேவைப்படும் இடத்தில் பெண்ணுக்கான குணங்கள் வெளிப்படுவதும், வீரமும் விவேகமும் தேவைப்பட்ட இடத்தில் முறத்தால் புலியை அடித்து விரட்டிய வீரத்தமிழச்சியாக பெண் வாழ்ந்ததாகவும், காலம் சூழலுக்கு ஏற்ப அவள் தன்னை தற்காத்து கொள்ளும் சக்தியாக, பயமற்றவளாக வாழ்ந்தாள் என்பதையே புராணங்கள் நமக்கு சொல்கின்றன.
அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களுக்குள்: இருக்கும் திறமையை எழுத்தில் படைத்தவர்கள் பெண்ணுக்கான தனித்துவத்தை வெளிப்படுத்தாமல் , பெண்ணின் உண்மையான ஆளுமையை மறைத்து ஆணை சார்ந்தே பெண் வாழ்ந்தாள் என தாம் வாழ்ந்த சூழலுக்கேற்ப தன் கற்பனைவளத்தை கையாண்டிருக்கின்றார்கள்.
ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஆண்களால் எழுதப்பட்ட வரலாறுகள் வேறு எப்படி இருக்கும்?
சங்க காலத்தில் பெண்கள் ஆக்கும் அழிக்கும் சக்தியை கொண்டவளாகவே எழுத்தாளப்பட்டிருக்கின்றாள் என்பதாகவே வரலாறுகள் நமக்கு சொல்கின்றன. சிலப்பதிகாரத்து கண்ணகி மதுரையை எரித்ததும் அந்த சக்தியினால் தான்.
பெண்ணுக்குள் இத்தனை சிறப்பிருக்க அவள் தன்னை தானே தாழ்த்தி, பாலியல் வன்புணர்வெனும் பெயரில் அவள் அனுமதி இன்றி நடக்கும், அக்கிரமங்களை கண்டு கூனிக்குறுகி, தன்னை தாசி எனவும், தான் ஆண்களுக்கு அடிமை எனவும் சித்தம் கலங்கும் படி உளவியல் பாதிப்பை உருவாக்கி அவளை ஒடுக்கி அடக்குவது ஏன்?
சங்ககாலத்தில் காதலும், களவொழுக்கமும், கந்தர்வ மணமும் அனுமதிக்கபப்ட்டிருந்தது,ஆண் பெண் நட்பு அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்துமீறி அவளை ஆக்கிரமிக்கும் கயமைத்தனம், பெண்ணை போகப்பொருளாக நடத்தும் நிலை அன்றில்லை.
வீட்டுக்குள் வாழ்ந்தாலும், நாட்டை ஆளும் வல்லமை கொண்டவளாக அனைத்தையும் அடங்கி ஆண்ட போது இந்த சமுதாயத்தில் அவள் பேசு பொருளாகவே இல்லை. அவளை ஒரு பொருட்டாக உலகம் கவனிக்கவே இல்லை.
அவளை அடக்கி வீட்டினுள் முடக்கி, உரிமைகளை பறித்து கொண்ட சமூகம். வீட்டினுள் அடங்கி கிடந்த வரை கண்டு கொள்ளாத சமூகம் அவள் தன் உரிமைக்காக போராட ஆரம்பித்த போதே அவளை தண்டிக்கும் வடிகாலாக அவள் உடல் மீதான வன்புணர்வை ஆரம்பித்திருக்க வேண்டும்.
பிற்காலத்தில் பெண்ணுக்குள் மறைந்திருக்கும் சக்தி மேன்மை பெறுவதை விரும்பாத, பெண்ணுக்குள் அடங்கி வாழ்ந்த ஆண்கள் தாங்கள் இல்லாமல் அவளால் சந்ததி பெருக்க முடியாதென்பதை உணர்ந்து கொண்ட போதே தங்கள் சர்வாதிகாரத்தை பெண்ணுக்குள் திணிக்க முற்பட்டிருக்க வேண்டும்.
ஆண்,பெண் உறவின் மூலமான சந்ததி உருவாக்குதல் எனும் பெயரில் பெண்ணுக்கான பலமே பலவீனமானது.
பெண்ணுக்கான உரிமைகளை தட்டிப்பறித்து, இழந்ததை மீட்க போராடுகின்றோம் எனும் பெயரில் பெண்ணுக்கான ஆற்றலும், அறிவும், விவேகமும் வீணாக்கப்படுவதை அவள் உணர முடியாத படி அறியாமையினால் அடக்கப்பட்டிருக்கின்றாள்.
அவள் அனுமதி இன்றி அவள் உடல் மீது அத்துமீறி ஆக்கிரமிப்பது மட்டுமல்லாமல் அவளை குற்ற உணர்வில் ஒடுக்கி அடக்கி ஆள நினைக்கின்றார்கள்.
தீர்வு தான் என்ன?
பாலியல் வன்புணர்வினை தன் விரலில் சிறு காயம் பட்டால் எப்படி உணர்வார்களோ அப்படியான உணர்வோடு அணுகி, பெரும் குற்றமிழைத்ததாக, எதையோ பறி கொடுத்து விட்டதாக சொல்லியும் நீதி நியாயம் கேட்டு குரலெழுப்பியும்,உளவியல் பாதிப்பை திணிக்காமல் கடந்து,நிமிர்ந்து நில் என வாழ்ந்து காட்டவே எங்கள் சங்ககால சரித்திரங்கள் எங்களுக்கு பாடம் போதித்திருக்கின்றன.
சீதையால் நெருப்பை அடக்கி ஆள முடியும் என்பதனால் அவள் நெருப்பை கடந்தாள். பாஞ்சாலியால் அரசனையும் தட்டிக்கேட்கும் அதிகாரமும், பஞ்ச பாண்டவர்களை அடக்கி ஆளும் வல்லமையும் இருந்ததனால் நீதிக்கு போராடினாள், தவறை தட்டிக்கேட்கும் விவேகம் பெற்றவளாய் கண்ணகி நிமிர்ந்து வாழ்ந்தாள். அவர்களை போல் வரலாற்றில் அனைத்தையும் அடக்கி ஆளும் வல்லமை மிக்கவர்களாக பெண்கள் மாற வேண்டும்.
காப்பியங்களும், புராணங்களும் பெண் பெருமையும், வீரமும், துணிச்சலையும் கூறி உயர்த்தி நிற்க பிற்கால உரையாசிரியர்கள் தம் கற்பனைக்கேறப் அரசனையும் தாசிகளையும், கோயிலுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட தேவதாசி பெண்களையும் முன் நிறுத்தி பெண்மையை சிறுமைப்படுத்தி பெண் எனில் அடிமையானவள் எனும் உணர்வை திணித்து வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள்.
90 வீத பெருமை கொண்ட பெண் சமூகமானது 10 வீத சிறுபான்மை அடிமைப்பட்ட பெண்கள் செயல்பாடுகளை கொண்டு தம் சக்தியை தாமே அழித்து கொண்டுள்ளார்கள். .
பெண்ணை கொண்டே பெண் பெருமை அழித்து சிறுமை படுத்துவதை தான் 'மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்று ஏன் பாரதி கூறி இருப்பாரோ?
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்த்தப்பட்டார்களா ? 2 

பேஸ்புக்கில்
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்த்தப்பட்டார்களா ? 1 
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா ? 2 

17 டிசம்பர் 2018

சோலைவனம் பாலைவனம் ஆகின்றதா?

கஜா பேரிடர் இத்தனை பாதிப்புக்களை தந்தும் அரசும், மீடியாக்களும் அதை அண்டை மாநிலங்கள் உட்பட வெளி உலகமே தெரியாமல் மறைத்தொழித்தது ஏன் ?
இதன் பின்னனி என்ன?
டெல்டா மாவட்டங்களில் நடந்தது என்ன?
நடபப்து என்ன? 
எட்டுவழி சாலைக்காக எதிர்ப்பு போராட்டம் மட்டும் தானே நடந்தது என்கின்றீர்களா?

நகரம் தொழில் மயமாக்கப்படும் போது இதுவெல்லாம் சகஜம் என கடந்து சென்றீர்களா?
அதே நேரம் எமன் உங்கள் தலை மேல் வட்ட மிட்டு கடந்ததை உணர்ந்தீர்களா?
உங்கள் குழந்தைகள் குறித்தும் அவர்கள் எதிர்காலம் குறித்தும் எத்தனையோ திட்டங்கள் தீட்டும் நீங்கள் அவர்களுக்கான் ஆரோக்கியமான, வளமான சூழல் ஒன்றை உருவாக்கி தருவதே கல்வி செல்வத்தினை விடவும் அவர்கள் வாழ் நாட்களை நிம்மதியாக வாழவும், அதிகரிக்கவும் செய்யும் என அறிந்திருக்கின்றீர்களா?
பட்டமும், பதவியும், சொத்தும் , வைரமும், வைடூரியமும் சேமித்து கொடுப்பதே உங்கள் இலக்கென கொண்டு நாளைய சந்ததிக்காக அர்ப்பணிப்பதனாக் சொல்லி செல்லும் பாதை மாயை உலகை வழி காட்டி நிற்பதை குறித்தேனும் சிந்தித்திருக்கின்றீர்களா?
ஒரு பக்கம் பசுமைத்தேடல் எனும் விளம்பரம், அதற்காக பற்பல் யுக்திகளும் செலவுகளுமாக 
நானும் சமூக ஆர்வலர், இயற்கை விவசாயி என 
பதிவுகள் இட காட்டும் ஆர்வத்தினை 
அதே பசுமையை அழித்தொழிக்கப்படும் போது கண்டும் காணாது கடந்து போவது ஏன்?

வளங்கள் பறி போகக்கூடாது எனும் நல்லெண்ணத்தில் உண்மைகளை எழுதி வெளியிட்டதற்காக பொலிஸ் கஸ்டடியில் கொண்டு சென்று வதை பட்ட சமுகத்து ஆர்வலர்கள் மீதான உங்கள் அக்கறை என்ன?
நடப்பது என்ன? ஏன்? கேள்விகள் மட்டுமே உங்கள் முன் இருக்கின்றது. அதற்கான விடைகளை தேடுங்கள்.
நடந்தது என்ன என்பதை பார்ப்போம். இந்த வருடம் நடுப்பகுதியில் வந்த கட்டுரை ஒன்றை இங்கே பகிர்கின்றேன்.
டெல்டாவின் கடைமடை பகுதியில் அடுத்தடுத்த புதிய ongc கிணறுகள். தாங்குமா திருவாரூர்?
பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, சுற்றிலும் லேசர் வளையங்கள் பாதுகாப்பில் இயங்கி கொண்டிருக்கும் கரையங்காடு ongc நிறுவனத்தின் எண்ணை கிணற்றிற்கு அருகே சுமார் 1000 மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில் உள்ள விளாங்காடு கிராமத்தில் புதிய எண்ணை கிணறுகள் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது ongc நிறுவனம்.
இடும்பாவனம்,கற்பகநாதர்குளம் துளசியாப்பட்டினம் பகுதியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையின் இடது புறத்தில் இந்த பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றது. கடந்த இரு வருடங்களாக சிரமைக்கப்படாத சாலைகள் அவசர அவசரமாக சரிசெய்யப்பட்டதை சில முகநூல் போராளிகள் எங்களுக்கு கிடைத்த வெற்றி என மார்தட்டி கொண்டார்கள் ஆனால் இப்பொழுதுதான் அதற்கான வெற்றி யாருக்கென்பது தெரிகிறது என்கிறார்கள் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
உலக புகழ்பெற்ற கற்பகநாதர்குளம்,இடும்பாவம் கோவில் பகுதிகளை சுற்றி பல எண்ணை கிணறுகள் அமைக்கப்படுவதால் அதன் தொன்மையும் அதன் இயற்கை மரபும் மாறிவிடுகிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
இடும்பாவனம் பகுதியை சுற்றி பல கிணறுகள் அமைக்கப்படும் சூழல் தென்படுவதாகவும் இதுபோன்று கிணறுகள் அமைக்கப்படுவதற்கு முன் மக்களை ஏன் அந்த நிறுவனம் கருத்து கேட்கவில்லை என ஆதங்க படுகிறார் அப்பகுதி குமார் .
நெடுவாசல் கதிரமங்களம், பக்கத்து ஊர் கரையங்க்காடு தொண்டியக்காடு பகுதிகளில் மக்கள் தங்கள் எதிர்ப்பை அனுதினம் தெரிவித்து வரும் நிலையில். இடும்பாவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விளாங்காட்டில் நிலங்களை விவசாயிகள் தாரை வார்த்தது ஏன் ? என கண்ணீர்மல்க கேள்வி எழுப்பினார். சிலர் வாழ பலரை கெடுப்பது சரியா ?
இது கடந்து போன நிஜங்கள்
கஜா எனும் பேரிடரின் பின் அரசும், மீடியாக்களும் நடந்து கொண்டிருக்கும் விதம் உண்மைதனை உணர்த்தவில்லையா?

அரசும் மீடியாவும் விளை நிலங்களையும், வளங்களையும் அழிக்க துணை செல்கின்றதா?
இயற்கையின் பேரிடரையும் தமக்கு சாதகமாக்கி கொண்ட அரசின் சூழ்ச்சி தனை புரிந்து கொள்ளாமல் எதிர்காலத்தில் இன்னொரு சோமாலியாவாக , சூடானாக தமிழ் நாட்டை அலங்கோலமாக்கும் திட்டமிடல்களை நீங்கள் புரிந்து கொள்ள சோமாலியா,சூடான் நாடுகளின் வரலாறுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேற்குலக நாடுகளின் பேராசைக்கு பலியான ஆபிரிக்க நாடுகளின் வரிசையில் தமிழ் நாடும் சேரராமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என சிந்தியுங்கள்.
தகவல்  நிஷாந்தன் 


வேதாரண்யம்,கோடியக்கரை பறவைகள் சரணாலய தோற்றம்.கஜா புயலுக்கு முன்னும் பின்னும்...இராமர் பாதம் .



புகைப்படம் நன்றி  Seen Mani

15 டிசம்பர் 2018

உலகத்தின் நீர்த்தேவைகள்

எதிர்காலத்தில்  மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாக உலகின் வெப்பமாதலும், தீவிரவாதமும் இருக்கின்றது. 

பூமி வெப்பமயமாகுதல் என்பது  பூமியில்  சுற்றுப்புiறம் மற்றூம் கடற்பகுதியில் ஏற்பட்டிருக்கும் வெப்ப நிலை உயர்வைக்கொண்டே கணக்கிடப்படுகின்றது. அவ்வகையில்  பல காரணங்களால் நாம் வாழும் பூமியானது நாளுக்கு நாள் வெப்பமாகிக்கொண்டே செல்கின்றது.

ஒரு பக்கம் அதிக வெப்பமயமாவதனால் ஆட்டிக், அண்டாட்டிக் பிரதேச பனிப்பிரதேசங்களும், மலைகளும்  உருகி  கடல் நீர் மட்டத்தினை உயர்த்தி நிலமட்டம் தாழ்ந்து  வெள்ளப்பெருக்கு  முதல் நீர் சூழ்ந்த பேர்டர்களை உருவாக்க இன்னொரு பகுதியில்  கடும் வரட்சியும், பஞ்சமுமான நேரெதிர் சூழ் நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது. பூமித்தகடானது தன் குளிர்ச்சியை இழந்து வெப்ப நிலையில் அதிகரிக்கும் போது  கஜா புயல் போன்ற  இயற்கைப்பேரிடர்களின் அழிவுகள்  அதிகரிக்கின்றன.

தொழிற்புரட்சி எனும் பெயரிலும் நகரமயமாக்கல் எனும் பெயரிலும் கிராமங்கள் அழிக்கப்பட்டு  இயல்பான இயற்கையோடு இணைந்து வாழும் மக்களின்  வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு   விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டு காங்கிரிட் கூடாரங்களாக்கி பூமியை எலும்புக்கூடாக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கபப்டுகின்றன.

அடுத்த பத்தாண்டுகளுக்குள் முழு உலகமுமே மாபெரும்   நல்ல நீருக்காக  தவிக்க போவதாக அனைத்து நாடுகளும் மக்களை எச்சரிக்க ஆரம்பித்டிருக்கின்றன. நீரை சேமியுங்கள் வீண் விரயம் செய்ய வேண்டாம்  எனும் பிரச்சாரங்கள் தொடர்ந்தாலும் மக்கள் அதைக்குறித்து அக்கறை இல்லாதவர்களாகவே வாழ்கின்றார்கள்.

உலகளாவிய  ரிதியில் நீர்ப்பங்கீட்டுக்காக  பல மோதல்களும், வழக்குகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. 

மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது கண்டிப்பாகத் தண்ணீருக்காகத்தான் வரும் என்று உலக வல்லுனர்கள்   கூறுகின்றனர்.

நாடுகளுக்கிடையில் மட்டுமல்லாது நாட்டு மக்களுக்குள்ளும் விரோதங்களை உருவாக்கி மா பெரும் அழிவுகளை  பஞ்சங்களை  அனுபவிக்கும் சூழலையும் உருவாக்குகின்றது.  
  
ஐ.நாவின் கணக்கெடுப்பின் படி உலகத்தில் 1.1 பில்லியன் மக்கள் தங்கள் அத்தியாவசியத்தேவைகளுக்கான நீரும், 2.6 பில்லியன் மக்கள் தங்களை சுத்தமாக வைத்திருக்க தேவையான நீரும் இல்லாமல் தவிக்கின்றார்கள். 

உலகத்தில்  பல பாகங்களிலும் 5000 குழந்தைகள்  நீரின்றி ஆரோக்கிய க்குறைபாட்டால் இறக்கின்றார்கள். இத்தரவுகள் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் மட்டுமே... பதிவு செய்யப்படாமல் இன்னும் பல்லாயிரம் மக்கள் அரசுகளின் மெத்தனத்தினால் மூடி மறைக்கப்படலாம்.  

பூமியைசுற்றி சுமார் 1.4 பில்லியன் கன மீட்டர் தூரம் நீர் இருக்கின்றது. அதில் பயன் படுத்தக்கூடிய நல்ல நீர் வளம் என்பது  2.5 சதவீதம் வரை உள்ளது. நன்னீர் சுமார் 70 சதவீதம் polar caps  அல்லது மலைகளின் மீது நிரந்தர பனிக்கட்டி வடிவில் உறைந்திருக்கின்றது. மீதமுள்ள 30 சதவீதத்தில் 97 சத வீத நீர் நிலத்தடி நீராக சேமிக்கபப்ட்டு மனிதர்களின் அத்தியாவசியத்தேவைகளுக்கு பயன் பட  எஞ்சிய  3 வீத நீர் தான்  ஆறுகள், குளங்கள் மூலம் கிடைக்கின்றது.  

தற்காலத்தில் தண்ணீரின் முக்கியத்தேவைகளை இருவகையாக பிரிக்கலாம்

1.குடிநீர், ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும்  அத்தியாவசிய, அடிப்படை  விவசாயத்தேவைகளுக்கானது. 
2. தொழில் துறை சம்பந்தமான பயன் பாடுகள். கண்டுபிடிப்ப்புக்கள், சோதனைகள் இன்ன பிற அவசியமானவை,அனாவசியத்தேவைகள் என இருவகையில் பிரிக்கலாம். 

மனிதர்களின் குறைந்தபட்ச ஆரோக்கியத்துக்காக  ஒரு நாளைக்கு ஒருவருக்கு கிட்டத்தட்ட ஐந்து லீட்டர்  குடி நீரும்   அவனின் அடிப்படை சுத்தப்படுத்தல் சுகாதார தேவைகளுக்கு 20 லீற்றர் நீரும்  தேவைப்படுகின்றது. அஃதே விவசாயம் மற்றும் அத்தியாவசியத்தேவைகளுக்காக  அதாவது மனிதத்தேவைகளுக்காக  உலகின் மொத்த நீரின்  93 சத வீதம் அவசியமாகின்றது.

மனிதன் உண்ணும் ஒரு ஆப்பிள் பழத்தினை விளைவிக்க 70 லீற்றர்  நீரும் காலை எழுந்ததும் புத்துணர்ச்சி தரும் காப்பியை  பருக .. அதாவது ஒரு கிலோ காப்பிக்கொட்டையை விளைவிக்க  21,000 லீற்றர் நீரும் அவசியமாகின்றது.

ஒரு கிலோ சர்க்கரைக்குரிய கரும்பையோ, அரிசியையோ விளைவிக்க 5000 லீற்றர் நீரும், சிறு தானியங்களை உற்பத்தி செய்ய  200 தொடக்கம் 300 லீற்றர் நீரும் அவசியமாகின்றது. 

மனிதன்  அணிய பருத்திச்செடியில் ஒரு சட்டை தயாரிக்க  2,700 லீற்றர் நீர் தேவைப்படுகின்றது.

ஒரு லீற்றர் பயோ டீசல் தயாரிக்கவோ 9000 லீற்றர்  நீர்  பயன் படுத்தப்படுகின்றது ..

இதனிடையே அதிக விளைச்சல் விரும்பி இரசாயன உரங்களை  தொடர்ந்து நிலத்தில் கொட்டி விளை நிலத்தினையும் மலடாக்கும் அரும் பெரும் பணி இன்னொரு புறம் அமோகமாக நடந்தேறிக்கொண்டுள்ளது. 

புதிய எரிபொருட்களின் பயன் பாடு,   சுற்றுச்சூழல் பராமரிப்பு, நகரமயமாக்கல் கொள்கை, தொழில் புரட்சி, இயற்கை வளங்கள் அழிப்பு, மோசமான கால நிலை, வரட்சி,பூமி வெப்பமயமாதல்  என ஆயிரம் காரணங்கள் இருக்கட்டும்.

மழைகாலத்திலேனும்  நிலத்தடி நீரை   சேமிக்க என்ன நடவடிக்கை எடுக்க போகின்றோம் ⁉️⁉️

இது தான்  இன்று  நம்  முன்  இருக்கும் கேள்வி.

இணையத்தில் கிடைத்த ஆய்வுகட்டுரைகளிலிருந்தும் சில தரவுகளை பெற்றேன்.
நிஷாந்தி பிரபாகரன்







16 நவம்பர் 2018

கஜா புயல் எச்சரிக்கையும், சேதங்களும்,

🌴🌴🌴🌎🌎🌎🌎🌴🌴🌴
காற்றும், புயலும், மழையும் கொன்று கொண்டதும்
மனிதர் தானாய் கொன்று தின்பதும்
 1977,1994 ஆம் ஆண்டுகளின் புயல்களை அசரடித்ததாம் 2018 கஜா புயல்.
வீழ்ந்த மரங்களை மீண்டும் வாழ வைக்க முடியுமா?
இயற்கையும், செயற்கையுமாய்
இணைந்திங்கே செய்யும் சதி
இடி போலே விழும் போது 
இனி எங்கே சென்றிடுவோம்?

உலகில் எங்கேனும் ஒரு மரம் தன் உயிரை விடுகின்றதெனும் போது மூச்சுக்காற்று தடைப்படுவதான உணர்வும், வலியும் எனக்குள் மட்டும் தானா?