25 நவம்பர் 2016

மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3

 தீர்வு  என்ன? 

 நம் சந்ததிக்கேனும்   உள்ளதை உள்ளபடி உணர்த்தி வளர்த்தெடுப்போம் என  உணர்வு பூர்வமாக அணுகாமல் உள்ளப்பூர்வமாக சிந்தித்தாலே பாதி விடுதலை கிடைத்து விடும்.


விடுதலைப்போராட்டம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?
பள்ளிகளில் தரப்படுத்தல் என்றொன்றில்லா விட்டால் இந்த விடுதலைப்போராட்டம் அவசியமாகி இருக்குமா?
எதற்காக இத்தனை உயிர்களை நாம் இழந்தோம்?
நாம் இழந்தது உயிர்கள் மட்டும் தானா?
அக்காலத்தில்  யாழ்ப்பாணத்தில் பிறந்த சான்றோர்கள் உலகத்தமிழர்கல் தலை நிமிர்ந்து வணங்கும் இடத்தில் இருந்தார்கள். தமிழ்மொழி என்றாலே யாழ்ப்பாணம் நினைவுக்கு வரும்படி தம்மை உயர்த்திக்கொண்டார்கள். சாதனையாளர்களாக, செல்வத்தில் சிறந்தோராக போற்றுமிடத்தில் இருந்தார்கள்.

இன்றைய நிலை என்ன?
90கள்வரை இலங்கையின் பெரும்பான்மையான வைத்திய சாலைகளில் எம்மின வைத்தியர்கள் தான் அதிகமாய் கடமையாற்றினார்கள் கடமை உணர்வும், ஆர்வமும், விருந்தோம்பும் மாண்பும் கல்ந்து செல்லுமிடமெல்லாம் எம் கற்றோர் தம்மை உயர்த்தினார்கள். கொழும்பு போன்ற பெரிய வைத்திய சாலைகளிலேயே பத்து தமிழ் வைத்தியருக்கு ஒரு சிங்கள வைத்தியர் எனும் நிலை இருந்த காலம் அது,
இலங்கையில் பல பகுதிகளிலும் பல உயர் பதவிகளை வகித்தார்கள்.
தமிழன் அறிவில் மேலோங்குவதை கண்டு பொறாமைப்பட்ட சிங்கள அரசு அவனை குட்டிக்குனிய வைக்க ஆரம்பித்தது தான் தரப்படுத்தல்...!
இந்த தரப்படுத்தல் என்பதே என்ன என இன்றைய தலைமுறைக்கு தெரியுமோ என்னமோ?
இன்றைக்கு என்ன நடக்கின்றது?
இலங்கை அரசு எதை நினைத்ததோ.அது நன்றாகவே நடக்கின்றது.
அறிவை அகற்றி அகந்தையை புகுத்தி சிந்தனையை தாறுமாறாக்கி நாடு விட்டு நாடு கடத்தி,, எஞ்சியோர் சிந்தனையையும் எச்சில் இலைக்கு பறக்கவைத்து...எடுத்ததுக்கெல்லாம் பலகலைக்கழக மாணவர்கள் போராட்டம் என கல்வியை நிறுத்தி தெருவுக்கு போராட இறங்கு முன் கொஞ்சமேனும் சிந்தியுங்களேன்பா!
உங்கள்கல்வியை பகிஷ்கரித்து உங்கள் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கி அனாதிகளாய் அல்லலுற்று எங்கோ ஒரு நாட்டில் டாய்லட் கிளின் செய்ய, பாத்திரங்கள் கழுவவா இத்தனையையும் நாம் இழந்தோம்?
என்ன தான் செய்யலாம்? எங்கே செல்லும் இந்த ப்பாதை?

மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 2


ஈழப்போராட்டம் குறித்த வரலாற்று சம்பவங்கள்பலர் எழுதி இருக்கின்றார்கள்!

அவரவர் பார்வையில் அவர்களுக்கு சாதகமானபடி எழுதி  ஒருவரை உயர்த்தி இன்னொருவரை தாழ்த்தி...அவர்கள் செயதது சரி, மற்றவர்கள் தேசத்துரோகிகள் இப்படி பல குழுக்களை குறித்தும் அதன் வரலாறு குறித்தும்... அவர்களுக்குள்ளான போட்டுக்கொடுத்தல் காட்டிக்கொடுத்தல் குறித்தும் எழுதுவது தான் வரலாறென நினைத்து தாமும் குழம்பி வாசிப்போரையும் குழப்பிகொண்டிருக்கின்றார்கள்..
அனைத்திலும் அடிப்படையாக தமிழின அழிப்பெனும் பெயரில்விதைக்கப்பட்ட அறிவை மழுங்கடிக்கும் பணிக்கு இந்த கருத்து வேற்றுமைகள் தான் அடித்தளம், நம் கை கொண்டே நம் கண் குத்தப்படும் அழகியல் யுத்த தர்மம், எது புரிய வைக்க ப்பட வேண்டும் என்பது தான் இப்போதைய முக்கியம். நம் இலக்கு எதுவாயிருக்க வேண்டும் என்பது தான் நம் கவனம் செல்ல வேண்டும், நடந்தவை கடந்தே போகட்டும், நல்லதை நினைப்போம்.


ஈழ மக்களுக்கான் விடுதலை யுத்தத்தில் விடுதலைப்புலிகளுக்கான பங்கும் மேதகு பிரபாகரன் அவர்களின் வழி நடத்தலும் மகத்துவமானது.
பிரபாகரன் அவர்களை போல் ஒருவர் இனி எமக்குள் பிறக்க போவதும் இல்லை, பிறந்ததும் இல்லை, ஆரம்ப காலத்தில் அவரால் சில பல தவறுகள் நடத்தப்பட்டிருக்கலாம். அப்படியான தவறுகளை நடத்த அவர் வழி நடத்தப்பட்டிருக்கலாம்.
எம்மை அடிமைப்படுத்த நினைத்தவர்களை அலற வைத்து தன்னை மட்டுமல்ல தன் முழு குடும்பத்தினையும் எமக்காக அர்ப்பணித்தவர் அவர்!
நம்மால் இன விரோதிகள் என சொல்லப்படும் சிங்கள் மக்களின் ரியல் ஹீரோ அவர், அவர்களாலும் நேசிக்கப்பட்டவர், என்னுடைய பல சிங்கள் நட்பூக்கள் அவரை நேசிப்பவர்கள். பகைவனையும் அந்தரங்கத்தில் நண்பனாக்கிடும் மாண்பு அவரிடம் இருந்தது.
ஈழத்தமிழன் எனும் இன உணர்வில் எம்மை முழு உலகுக்குள் அடையாளம் காட்டி தலை நிமிரச்செய்து பலருக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் அவர். விடுதலைப்போருக்காக தன்னை மட்டுமலல் தன் குடும்பத்தையே அர்ப்பணித்த அவரின் தனிப்பட்ட குணாதியங்களை, ஆரம்ப கால தவறுகளை பேசுவது நம் கை கொண்டு நமது கண்ணையே குத்துவதற்கு நிகரானது!
விடுதலை போராட்டத்தில் ஆரம்ப கால தவறுகளை சுட்டிக்காட்டி நமக்குள் நாமே நம்மை தாழ்த்தி கொள்வதை நிறுத்தினாலே விடுதலை அடைந்து விடுவோம்.
நாளை நாம் விடுதலையை அறுவடை செய்வோம் என நம்பிக்கையோடு தம் உயிரை விதைத்தோரை நாம் போற்றும் அதே நேரம் நம் சின்னத்தனமான செய்கைகள், பேச்சுக்களினால் அவர்கள் நமக்கென உருவாக்கிச்சென்ற வரலாற்றின் மகத்துவத்தினை திசை திருப்பி நம் வரலாற்றை கேலிக்கூத்தாகாதிருந்தாலே விடுதலை தான்.
நாம் விடுதலை பெற வேண்டியது சிங்கள அரசிடமிருந்தல்ல நம்மிலிருக்கும் பெருமை, பொறாமை, ஈகோ போன்றவற்றிலிருந்தும் ஜாதி, மதம்,பிரதேசவாதம் யார் பெரியவன் , அனைத்திலும் நானே இப்படியான பல சிந்தனைகளிலிருந்து விடுபட்டு நம் சமுதாயத்தை கட்டு எழுப்ப வேண்டும் எனும் ஒரே பொது நோக்கம் வந்தாலே நமக்குள் விடுதலை சாத்தியமாகும்.
இஸ்லாமிய மக்கள் தமக்குள் பலவாறு அடி படுவார்கள். பொது விடயம் என வரும் போது மார்க்கம் எனும் விடயத்தில் கட்டுப்பட்டு ஒன்றாகுவார்கள்.
அவர்களை பார்த்தேனும் நாம் நமக்குள் ஒன்று பட்டு விடுதலை வேண்டி எம் மக்கள் செய்த தியாகத்தினை போற்றுவோம், கடந்து போன காலத்தில் அவர்கள் செய்த தவறுகளை பேசி பேசி நம்மை நாம் தாழ்த்திக்கொள்ளாது, ஈழ மக்கள் எனும் ஒரே சிந்தையில் மட்டும் சிந்திக்கும் போது தான் நமக்கு விடுதலை சாத்தியம் !
சிந்திப்போம்.. !

இன்னும் வரும்!


மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 1


வரலாறு  விடுதலையைப்பெற்றுத்தருமா?

மாவீரர் நாளெனில் மௌனமாயிருப்பதும் இழந்தைவைகள் குறித்து கவிதை எழுதி தானும் மாவீரர் நாளை கொண்டாடுவதாய் காட்டிக்கொள்வதும் தான் நிஜமான தேசப்பற்று என நினைக்கும் சமுகத்தில் வாழ்கின்றோம், 

1983 ல் என்ன நடந்து மக்கள் புலம்பெயர ஆரம்பித்தார்கள்.1990 களில் என்ன நடந்தது? அதனால் எத்துணை பாதிப்பு அடைந்தோம்? நாம் இழந்தைவை என்ன? எதற்கான இந்தபோராட்டம்? உயிரிழப்புக்கள்? இன்றைக்கு நாம் செல்லும் பாதை என்ன?

சிந்திக்க வேண்டிய காலமும் இதுவென புரியாதோராய் இருக்கின்றோம்.  

நான் அறிந்த பலருக்கு அதாவது ஈழ யுத்தம் எனில் 2009 ல் நடந்த முள்ளிவாய்க்கால்,முல்லைத்தீவு தான் தெரிந்திருக்கின்றது. அந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் , மீதி எல்லோரும் சொகுசு வாசிகள். இப்படித்தான் இன்றைய பெரும்பாலான இளம் தலைமுறையில் ஒரு குருப் சிந்திக்கின்றது. 

அதற்கு முன் என்ன நடந்தது? ஏன் நடந்தது என கேட்டால் அப்படியா தெரியாதே என சொல்லிக்கொண்டு இன்னொரு பகுதி தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் செல்கின்றது..

அதிலும் 90 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்த பலருக்கு எமது   போராட்டத்தின் ஆரம்பமும் வளர்ச்சியும் தெரியவே இல்லை. இதில் எந்த வரலாறு நம்மை விடுதலை செய்யும்? 

இதற்கு தீர்வு என்ன? 

இன்னும் வரும்!

Hegas Catering Services ஐந்தாம் ஆண்டின்விசேஷ அறிவிப்பு !!!!

ஐந்தாம் ஆண்டின்!
விசேஷ அறிவிப்பு 
***************************

Hegas Catering Services நிறுவனம் ஆரம்பித்து ஐந்தாம் ஆண்டில் வெற்றிகரமாக நுழையும் இவ்வேளையில் எஙகளுக்கு ஆதரவு தந்த எமது வாடிக்கையாளர்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத்தெர்ரிவிக்கின்றோம்.

அடுத்து வரும் புதிய வருடத்துக்கான விருந்துகள் வைபவங்கள் விழாக்களை திட்டமிடுகின்றீர்களா?
உங்கள் வீட்டு விருந்து என்றும் நினைவில் நிலைக்க 
வட இந்திய செட்டி நாட்டு உணவுகளோடு 
தென் இந்திய, இலங்கை உணவுகளைவும் 
சுவையாகவும், சூடாகவும், தரமாகவும் 
அழகுடன் மட்டுமல்ல மலிவாகவும் சுவிஸின் எப்பாகத்துக்கும் வந்து செய்து தர காத்திருக்கின்றோம்.

சைவ, அசைவ உணவுகள் 

பன்னீர் டிக்கா
பன்னீர் பட்டர் மசாலா 
ஆலுபர்தா
சென்னா மசாலா
கோபி மஞ்சூரியன்

பட்டர் சிக்கன் 
குருமா வகைகள்
டெவலட் சிக்கன் 
பீவ் டிக்கா

பூரி
பட்டூரா
இட்லி 
தோசை
இடியாப்பம் 
புட்டு
கொத்துப் பரோட்டா
தயிர்சாதம் 
புளிசாதம் 
லெமன் சாதம் 
முதல் அனைத்து சாத வகைகளும்

பிரியாணி வகைகளும்

ரோல்ஸ், வடை. கட்லெட், சமோசா, பற்றிஸ் என சிற்றுண்டிகளும்
அழகும் சுவையுமான இந்திய, இலங்கை, சுவிஸ் டெசட் வகைகளும்

இன்னும் உங்களுக்கு விருப்பமான் உணவுத்தேர்வுகளுக்கு ஏற்ப 

பார்வைக்கு அழகான பவ்வே மேசை அலங்காரங்களுமாய்
உங்கள் வீட்டு விசேசத்தினை அசத்திட காத்த்திருக்கின்றோம்.


எட்டு சுவிஸ் பிராங்கிலிருந்து !! 💃💃💃

*

*

*
மறவாதீர்கள்! எமது நிறுவனத்தினூடாக விருந்து ஒழுங்குகளை ஆயத்தம் செய்யும் போது வியாபர நோக்கம் மட்டும் எம்மில் இருப்பதில்லை.

அந்த நாளில் பதட்டம், சுமைகளை தவிர்ப்பதனால் உங்கள் வீட்டு விழா எங்கள் வீட்டு விழா எனும் கடமை உணர்வோடு நடத்தி சிறப்பாக்கி தருவோம் என்பது நிச்சயம்.


இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்து சுவிட்சர்லாந்து  சுற்றுலாவுக்கு வரும் உல்லாசப்பயணிக்களுக்கான சைவ, அசைவ,உணவுகள்,
ஜெய்ன்உணவுகள்உட்பட.... !!!!!!!!!!!!!!!❤
தேர்ந்த வட இந்தியச்சமையல் வல்லுனர்களினால் தயார் செய்தும் தரப்படும், ஹிந்தி , ஆங்கிலம் பேசும் ஊழியர்கள் சேவையும் உண்டு.

முன் கூட்டியே  ஆர்டர் செய்தால் தங்குமிடம் பயண ஒழுங்குகளயும் செய்து தரக்காத்திருக்கின்றோம். 

தொடர்பு கொள்ளுங்கள்..
hegasevents@gmail.com