29 ஜூன் 2019

ஐரோப்பா முழுவதும் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு வெப்ப அனல்.

பிரான்ஸில் வரலாறு காணாத வெப்ப நிலை
ஐரோப்பா முழுவதும் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு வெப்ப அனல் பறக்கிறது. 
முதல்முறையாக 45.1°C எனும் ஆகக்கூடிய வெப்பம் இன்று பிரான்ஸைக் கடந்திருக்கிறது. Villevieille (le Gard) எனுமிடத்தில் இவ்வெப்ப அலை பதிவாகியுள்ளதாக 'Météo France' அறிவிக்கிறது. 
-
இதற்கு முன்னர் 13h48 மணியளவில் 44.3°C வெப்பம் Carpentras (Vaucluse) என்ற இடத்தில் பதிவானதெனவும் சிவப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களில் Vaucluse ஒன்று எனவும் கூறப்படுகிறது. நாட்டில் 76 மாவட்டங்கள் செம்மஞ்சள் (alerte orange) எச்சரிக்கையில் உள்ளன.
-
பரிஸுக்குள் கடுமையாக புகையை வெளியிடும் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் மக்களை மேலும் அச்சமூட்டுகிறதென பிரெஞ்சு அரசு மீது குற்றம் சுமர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2003ம் ஆண்டு நிகழ்ந்ததைப் போன்றதொரு உயிரிழப்பைத் தவிர்ப்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை என அரசு சொல்கிறது. 
-
இன்று வெள்ளிக்கிழமை(28ஜூன்), தெற்கு ஸ்பெயினிலுள்ள 'Andalousie' எனும் ஒரு கிராமத்தில் 17 வயதான இளைஞர் 'வெப்பத் தாக்கத்திற்கு' (coup de chaleur) உள்ளாகி இறந்துள்ளார்.
-
2003ல் ஆக க்கூடிய வெப்ப அலைக்குள் 
Allemagne, Belgique, Espagne, France, Italie, Luxembourg, Paysbas, Portugal, RoyaumeUnie, Suisse போன்ற நாடுகள் சிக்கிக்கொண்டன. அதிகூடிய வெப்பமான 47.8°C போர்த்துகல்லில் பதிவாகியிருந்தது. அக்காலப்பகுதியில் பிரான்சில் 44.1°C எனும் வெப்ப அலை Saint-Christol-lès-Alès et Conqueyrac (Gard) இல் பதிவாகியிருந்தது. 
-
2003ம் ஆண்டின் வெப்ப அலையானது ஓகஸ்ட் மாதம் 1ம் திகதியிலிருந்து 15 திகதி வரை நீடித்தது. பிரான்சில் 15,000க்கும் அதிகமான உயிரிழப்புக்களையும் ஐரோப்பிய நாடுகளில் சுமார் 70,000 உயிரிழப்புக்களையும் உருவாக்கியிருந்தது. 
-
இன்று பிரான்ஸும் ஸ்பெயினும் அசாதாரண வெப்பத்தை எதிர்கொண்டு நிற்கின்றன. ஜேர்மனி, போலந்து, செக்குடியரசு நாடுகளிலும் கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளது.
-
சகாராவிலிருந்து வீசும் 
அனல் காற்றே இங்கு அதிகரிக்கும் வெப்பத்திற்கு காரணமெனக் கூறப்பட்டாலும் பருவநிலை மாற்றமே இதற்கு காரணமென குற்றம் சாட்டப்படுவதோடு கவலை கொள்ளவும் செய்து வருகிறது.

28 ஜூன் 2019

'வருகின்றது நரகம்' (Hell is coming) / ஸ்விஸ்லே வெயிலா?

ஐரோப்பிய நாடுகளான போலந்து, லண்டன் சுவிஸ்,ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, செக் குடியரசு போன்ற நாடுகளில் என்றுமில்லாதவாறு இந்தமுறை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. 33பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இருந்து 40 பாகை செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உணரப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகப்பெரும் பாலைவனமாகிய ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத்தின் நிலப்பரப்பு அதிகரிப்பும் அதன் விளைவாக அங்கிருந்து வெளிக்கிளம்பும் வெப்ப அனல் காற்றுமே ஜரோப்பிய நாடுகளுக்கு இயற்கை உயர் வெப்ப அனர்த்தத்தை உருவாக்கியிருப்பதாக வானிலையாளர்கள் கூறுகின்றனர். 

இங்கிருந்து வீசும் வெப்பக்காற்றினை Hell is coming என்று பெயரும் இட்டுள்ளனர். இதன் தமிழ் அர்த்தம்
" நரகம் வருகிறது" என்பதாகும்.

முருங்கை இலையும்,தேங்காய்பூவும் / வெயில் என்றால் வெயில்.

வெயில் என்றால் வெயில்.
மேனி உருகி வியர்வையில் குளிக்க வைக்கும் வெய்யில். தரையில் தார் உருகும் வெய்யில்..



ஆனாலும் நம்ம வேலை நம்ம பாட்டில் நடக்கத் தான் வேண்டும்.
ஏழு கடலும், மலையும் கடந்து வந்த முருங்கை இலையும்,தேங்காய்பூவும் /சேர்ந்த சுண்டல், கத்தரிக்காயும் கருவாடும் சேர்த்த தேங்காய்ப்பால் கறி.சமைத்து சாப்பிட்டு சட்டி பானையெல்லாம் கழுவி வைத்தும்விட்டேன். 
பங்கு கேட்டு வந்திராதிங்கப்பா...😍😍




கொய்யாப்பழம் சாப்பிட்டாச்சு😛
அன்ன மின்னா பழம் பழுக்கட்டும் என வைத்திருக்கேன். 

அதுவும் பங்கு கிடைக்காதுப்பா..😻😻
                                  

அன்னபின்னா பழம்,, நான் குடியிருந்த கோயில் வீட்டில் தினம் திணட பழமாக்கும். லாவுட் பழ மரமும், அன்னமின்னாவும் பசிக்கு கொறித்த காலம் அது.

25 ஜூன் 2019

முப்பதாண்டுகளாக கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தலை தடைசெய்வதன் காரணங்கள்?

கல்முனை- வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக....
முப்பதாண்டுகளாக பிரதேச செயலகம் தரமுயர்த்தலை தடைசெய்வதன் காரணங்கள்?
தேடலில்...
கல்முனை (Kalmunai) 
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரம்.
கிழக்கே வங்காள விரிகுடாவையும் வடக்கே பெரியநீலாவணையையும் தெற்கே காரைதீவையும் எல்லையாகக் கொண்டது.

வரலாறு
கல்முனையின் பூர்வீகம் தமிழர்களுக்குரியது. 
17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் இலங்கையை ஆண்ட போது கொழும்பிலிருந்து துரத்தப்பட்ட சோனகர்கள். கண்டி மன்னன் ராஜசிங்கனிடம் தஞ்சமடைந்தனர். மன்னன் ராஜ சிங்கன் அவர்களில் (4000) பேரை காத்தான் குடிக்கும் (8000) பேரை கல்முனையிலும் அகதிகளாக குடி அமர்த்தினார் என்கின்றது வரலாறு.

தற்காலத்தில் கல்முனையில் முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர், பறங்கியர் என நான்கு இன மக்களும் வாழ்கின்றனர்.
நிலப்பரப்பு 
3/5 வீதம் தமிழருக்கும் 
2/5 வீதம் முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாக இருக்கின்றது.

70 வீத‌மான முஸ்லிம்க‌ளுக்கும் 29 கிராம‌ சேவை பிரிவுக‌ள் 30 வீத‌மான‌ த‌மிழ‌ருக்கும் 29 கிராம‌ சேவ‌க‌ர் பிரிவுக‌ள் என மொத்தம் 58 கிராம சேவகர் பிரிவுகள் இயங்குகின்றன.
மக்கள்தொகை  
முஸ்லிம்கள் 74432 
தமிழர் 26647 பேர்
சிங்களவர் 360
பறங்கியர் 498
இந்தியதமிழர்கள் 58

2011 ஆண்டின் சென்சஷ் கணக்கெடுப்பில் மொதத மக்கள் தொகை 1,06,780 ஆக இருந்திருக்கின்றது.


கல்முனை பிரதேசங்கள் பிரதானமான நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
1.கல்முனை மாநகரம் (தளவட்டுவான் சந்தி தொடக்கம் சாஹிராக்கல்லூரி வீதி வரை),
2.கல்முனை வடக்கு (பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை),
3.கல்முனை தெற்கு (சாய்ந்தமருது)
4.கல்முனைமேற்கு (நற்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு,
சவளக்கடை,மணல்சேனை )

1989 ல் 13ஆவது திருத்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை திட்டத்தின் கீழ் 
உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்கள் தரமுயர்த்தப்பட்டு நிர்வாகம் பரவலாக்கப்பட்டு பிரதேச செயலகங்களாக பிரிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் 1989 ல் 20 பிரதேச செயலக பிரிவுகள் அமைக்கப்பட்டன.அதில் ஒன்றாக உருவாக்கப்பட்ட கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தை தர முயர்த்துவதற்கு 
1993 ல் அமைச்சரவையில் அனுமதி அளிக்க்கப்பட்டிருந்தாலும்,முஸ்லீம் அரசியல்வாதிகளின் தலையீட்டால் தடை செய்யப்பட்டிருக்கின்றது.

கடந்த 30 ஆண்டுகளாக அப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் கோரிக்கையோடு கல்முனை வாழ் தமிழ் மக்கள் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.
கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுகள்
---சாய்ந்தமருது பிரதேச செயலகம் 
---கல்முனை தமிழ் உப-பிரதேச செயலகப் பிரிவு 
---சாய்ந்தமருது பிரதேச செயலகம்




சகல அதிகாரங்களும் கொண்ட நிர்வாக பிரிவாக பிரிக்கப்பட்டாலும் 1989 தொடக்கம் கல்முனை முஸ்லீம் பிரிவு பிரதேச செயலகத்துக்கு மட்டுமே முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டு இயங்கி வருகின்றது.
காணி மற்றும் நிதி அதிகாரங்கள் முழுமையாக முஸ்லிம் பிரதேச செயலகத்தினூடாகவே என்பதனால் தமிழர் பகுதிகளுக்கான் சமூக முன்னேற்ற திட்டங்கள் மறுதலிக்கப்படுவதாகவும், நிதி ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் தொடர்வதாகவும், தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
கல்முனை தமிழ் உப-பிரதேச செயலகப் பிரிவு 
(கல்முனை வடக்கு) தரமுயர்த்துவதற்கு தடை செய்வதற்கான காரணங்கள் 

கல்முனை Mubarak Abdul Majeeth அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்.

1.தமிழர் எல்லைக்குள் 3000ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வாழ்விடங்கள் உள்வாக்கப்பட்டுள்ளன.
2. ஐந்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் இரண்டு மதரஸாக்கள் மூன்று மையவாடிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
3.கல்முனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைப் பள்ளிவாசல் கூட அந்த எல்லைக்குள்தான் வருகிறது.
4.கல்முனை பொதுச் சந்தை
5.கல்முனை பஸார்
6.கல்முனை கடைத் தொகுதிகளும் வர்த்தக நிலையங்களும்
7.கல்முனை பஸ் தரிப்பு நிலையம்
8.கல்முனை பொலி்ஸ் நிலையம்
9.கல்முனை நூலகம்
10.கல்முனை பிரதேச செயலகம்
11.கல்முனை மாநகர சபை
12.சகல வங்கிகள்
13.சகல அரச காரியாலயங்கள்

14. கல்முனை பிரதேசத்தில் காணப்படும் கல்முனைக் கண்டம் ,இறைவெளிக்கண்டம், நற்பிட்டிமுனை மேல்,கீழ் கண்டங்கள் மேட்டுவட்டை வயல் காணிகள் , கரவாகு வட்டைக் காணிகள் என அனைத்து வயல் காணிகளும் அவர்கள் கோரும் எல்லைக்குள்ளே வருகின்றன.
15. நீர் நிலைகளான பட்டிப்பளை ஆற்றுப் படுக்கை,கல்லடிக்குளம்,பாண்டிருப்பு பெரிய குளம், சிறிய குளம்,நவியான் குளம், கரச்சைக் குளம் என அனைத்து நீர் நிலைகளும் அந்தப் பிரதேசத்திற்குள் உள்வாக்கப்பட்டுள்ளன
எங்க‌ள் நில‌ங்க‌ளையும் வ‌ர்த்த‌க‌ங்க‌ளையும் கைய‌க‌ப்ப‌டுத்திக்கொண்டு அத‌னை த‌ங்க‌ளுக்கென‌ பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்தினால் இதை முஸ்லிம்க‌ள் அனும‌திக்க‌ முடியுமா?
Mubarak Abdul Majeeth
leader.Muslim ulama party

இங்கே குறிக்கப்பட்டிருக்கும் கல்முனை பொதுச் சந்தை, பஜார், வியாபார ஸ்தலங்கள் அனைத்துமே முன்னொரு காலத்தில் தமிழ் வியாபாரிகள் தமிழருக்கு சொந்தமானதாகவே இருந்தது என்பதை 
நினைவூட்ட விரும்புகின்றேன்.

விட்டுக்கொடுப்பதை விட்டுக்கொடுத்து பெற்றுக்கொள்வதை பேறாக்கி தன்னை உயர்த்திட முடியாதவர்களாக இலங்கை சிறுபான்மை இனங்கள் ஆப்பத்தை பீய்த்து பங்கிட்டு தரும் என நம்பி குரங்கு கை பூமாலைகளாகி கொண்டிருக்கின்றன .
கல்முனையின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் சோனாகர்கள் இன்றியமையாதவைகளாக இருந்தவர்கள் என்பதை உணர்ந்திருக்கும் தமிழர்களுடன் தமக்கான பிரச்சனைகளை உணர்த்தாமல், இலகுவாக தீர்த்து கொண்டிருக்க கூடிய பிரச்சனையை சிங்களம் கொடுத்த அதிகார மமதையில் தமிழரை துச்சமாக்கி, தமிழரை அடக்கி ஆழ்வதும் அவர்தம் நிலங்களை அபகரித்து அதிகாரம் செய்தும தமக்கு தாமே வினை வார்த்து கொண்டார்கள்.தமது மொழி தமிழ என்பதை மறுதலிக்கவும் கற்பிக்கப்பட்டார்கள்.
விட்டுக்கொடுத்தே அனைத்தையும் இழந்து, 
தம் சுய உரிமைக்காக போராடிய ஓரினம் வெறும் பிரதேச செயலகம் ஒன்றின் தரத்தை உயர்த்தும் கோரிக்கையோடு எங்களை அழித்தவர்களிடமே தீர்வை வேண்டி மண்டி இட்டிருக்கின்றதெனில்... எம்மன நெருக்கடியை யார் உணர்வது?

அவரவர் பார்வையில் நியாயங்கள் எனும் அநியாயங்களே பேசு பொருளாக்கப்பட்ட்டிருக்கின்றன.
கல்முனை பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் பகுதிகள் படத்தில் தெளிவாக குறிக்கப்பட்டிருக்கின்றன. இதனுள் காணப்படும் முரண்களை அவதானிக்கவும்.
நீதியை தேடுவோம்.....?