20 ஜூன் 2019

நாங்கள் எதை நோக்கி பயணிக்கின்றோம்?

இன்றைய இருப்பை தக்க வைத்து கொள்ள முடியாமல் வக்கத்து போயிருக்கும் எமக்கு என்னிக்கோ செத்துப்போன ராஜராஜனை குறித்து பேச என்ன அருகதை இருக்கின்றது?
எவனவனோ சம்பந்தமில்லாதவன் ஊருக்குள் வந்து எம் நிலத்தை ஆக்ரமிக்கின்றான். கையாலாகா தனத்துடன் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றோம்.
ஆனால் பாருங்க...😭😭😭
ராஜராஜன் மேல் குற்றம் சாட்டி இருக்கும் ரஞ்சித்துக்கு ஆதரவாக Change.org மூலம் கருத்து சேகரிக்கின்றார்களாம்? இது வரை 5000 க்கும் அதிகமானோர் ஆதரவு வாக்களித்தும் இருக்கின்றார்கள்.
Change.org, எனும் தளம் காப்ரேட்டுகள் சார்ந்ததாக இருந்தாலும் நாட்டுக்குள், ஊருக்குள், சமூகத்துக்குள்
எனும் சிறுவட்டத்தினுள் சுழலும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நியாயமாக பெறும் வாய்ப்பை உருவாக்கி தருகின்றது. உலகத்துக்கு மக்களுக்கு எங்கள் பிரச்சனைகளை கொண்டு சேர்ப்பதோடு அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்கின்றது.

Change.org இனூடாக விண்ணப்பங்கள் மக்கள் பிரச்சனைகள், தனி நபர் பிரச்சனைகளுக்கான நீதி வேண்டி விணப்பிக்கின்றது. ஆதரவாளர்களை திரட்டுகின்றது. தேவைப்பட்டால் வழக்காடவும், அது சம்பந்தமான் நிதி சேகரிப்பு மற்றும் நீதிக்காவும் உதவி செய்கின்றது.
நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் இத்தளத்தினூடான பிரச்சாரங்களுக்கு ஆதரவளித்திருந்தேன்.
உலகத்தின் இயற்கைப்பாதுகாப்பு, சுற்றுச்சுழல் பாதிப்பு பிரச்சனைகளுக்காக குரல் இந்தளத்தினூடாக உலகமெங்கும் எதிரொலிக்கின்றது.
உதாரணமாக மரங்களை வெட்டி சாலை அமைக்கும் போது, அம்மரங்களை குறித்த முழுமையான தகவல்களை, வெட்டப்படும் மரங்களை குறித்த முழு விபரங்களை நாம் இத்தளத்தினூடாக கொண்டு சேர்த்தால் சேவ் கிரின்அமைப்பும், உலக இயற்கை பாதுகாப்பு அமைப்பின் பார்வைக்கும் மரங்களின் பாதுகாப்பினை குறித்த கவனமெடுத்தலுக்கு கொண்டு செல்வதோடு,மாற்று வழிகளை குறித்து ஆராய்ந்து. மக்கள் குரல்களை ஒன்று திரட்டுகின்றது. அம்மரங்களை பாதுகாக்க போராடுகின்றது.
கஜா புயல். 
டெல்டா மாவட்டங்கள் எதிர் நோக்கும் வளமிழப்பு பிரச்சனை நேரமெல்லாம் இத்தளம் குறித்து நான் பல பதிவுகள் இட்டு நினைவூட்டினேன், இங்கே கற்றோரென சொல்லிக்கொள்வோர் கண் மூடி கடந்தார்கள். சிலர் காது கொடுக்க கூட தயாரில்லை. டெல்டா என ஒரு புயல் அடிச்சு அதனால் ஏற்பட்ட இழப்புக்கள், மித்தோன் கிணறுகளின் ஆக்ரமிப்புக்கள் குறித்து ஆங்கிலத்தில் எந்த ஆவணமும் பதிவாக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

போன மாசம் ஒரிசாவில் புயல் அடிச்ச அன்றிரவே சுடச்சுட அத்தனையும் பதிவாச்சு.
ஆனால் தமிழ் நாட்டில்...? புளிச்ச மாவை டிரெண்ட் ஆக்க துடிக்கும் எமக்கு எமது சந்ததிகள் எதிர்காலம் குறிச்சு சிந்திக்க நேரமில்லை.
மக்களுக்கு எது தேவை என குரல் கொடுப்போர் குரல்வளை தான் நெரிக்கப்படுகின்றது.
கருத்து சுதந்திரம் எனும் பெயரில் ரஞ்சித்து போன்றவர்களின் காலத்துக்கு உதவாத, மக்கள் பிரச்சனைகளை திசை திருப்பி விடுவோரின் தனிப்பட்ட, ஆதரமில்லாத கருத்துக்களை டிரெண்ட் ஆக்கி அதற்கு ஆதரவு பிரச்சாரமும் செய்வோரை எவ்வகையில் சேர்ப்பது?
நாங்கள் எதை நோக்கி பயணிக்கின்றோம்?
எனக்கு புரியத்தான் இல்லை. உங்களுக்கேனும் புரிகின்றதா?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!