20 ஜூன் 2019

கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்தல் தொடர்பாக........

கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்தல் தொடர்பாக........
எந்த நிலத் தொடர்புமில்லாத வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று கூறிக்கொண்டு ஒரு சிறிய பிரதேசமாக இருக்கும் குறைந்தளவான மக்கள் வாழும் ஒரு மாநகர எல்லையைப் பிரித்து தமிழர்களை வேறாகவும் முஸ்லீம்களை வேறாகவும் ஆக்கிவிடுங்கள் என்று கேட்பதில் உள்ள நியாயங்களை தெரிவியுங்கள்..
(தமிழர்களை வேறாகவும் முஸ்லீமகாளை வேறாக்கவும் கூறவில்லை என்று யாரும் கூறவந்தால் அது அறியாமையான கூச்சல் என்பதே பதிலாகும்)
இக்கூற்று நியாயமானதா..? இதுதான் இனநல்லுறவா..? இப்படியிருக்கும் போது வடக்கும் கிழக்கும் இணைந்தால் யார் யாரை ஆள்வது பதில் சொல்லுங்கள்.

நியாயமான கேள்வி தான்.
அதே நேரம் தமிழர்கள் தரப்பில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும் முஸ்லிம் சமூகம் பதில்; தரும் கடமைக்குள் இருக்கின்றது Munas Mps
வரலாற்றை பார்ப்போம்.
***
1989ம் ஆண்டு கல்முனை முஸ்லிம் பிரதேச சபையும், கல்முனை தமிழ் பிரதேச சபையும் உருவாக்கப்பட்டன... இவற்றில் கல்முனை முஸ்லிம் பிரதேச சபை தரமுயர்த்தப்பட்டு காணி, நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதும்... தமிழ் பிரதேச சபையை தரமுயர்த்தப்படவில்லை....
தமிழ் மக்கள் தரமுயர்த்துமாறு கோரிக்கை விடப்பட - அது அரசாங்கத்தினால் ஏற்கப்பட்டு - 1993இல் அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதும் - முஸ்லிம் அரசியல்வாதிகளின் எதிர்ப்பால் இன்று வரை அது கைவிடப்பட்டு, அதிகாரங்கள் முஸ்லிம் பிரதேச செயலகத்தின் கீழேயே உள்ளது.....
இதனால் தமிழர்களின் கிராமங்கள் சரியான முறையில் நிதி பங்களிப்பு செய்யப்படாமல் அபிவிருத்தி செய்யப்படவில்லை...
தமிழப் பெயர் கொண்ட வீதிகள் பெயர்மாற்றம் செய்யப்படுகின்றன..
அபிவிருத்திகள், சந்தை ஒதுக்கீடு, வாடகை வாகனத் தரிப்பிடம் போன்றவற்றில் முஸ்லிம் கிராமங்களுக்கு கிடைக்கும் சலுகைகளில் 10% கூட தமிழ்க் கிராமங்களுக்கு கிடைப்பதில்லை... தமிழ்ப் பிரதேசங்களில் வீதி மின்விளக்குகள் கூட ஒழுங்கான முறையில் போடப்படாமல் இருக்கின்றன...
******
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலகத்துடன் இணைந்திருந்த ஓட்டமாவடி முஸ்லீம் பிரதேசத்தை பிரித்து தனியான பிரதேச செயலகம்
செங்கலடி பிரதேச செயலகத்திலிருந்து சில கிராம சேவகர் பிரிவை பிரித்து தனியான ஏறாவூர் பிரதேச செயலகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர் ஒட்டமாவடி பிரதேசங்களை இணைத்து மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் எனும் பெயரில் முஸ்லீம்களுக்கு தனியான கல்வி வலயம் என உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
முஸ்லிம் சமூகத்துக்கான தனிப்பிரிவுகள் உருவாக தமிழர் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 
அப்போதெல்லாம் வடக்கும் கிழக்கு இணைப்பை குறித்து கேள்விகள் வந்ததில்லை அல்லவா Munas Mps?

கல்முனை வாழ் தமிழர்கள் - தமக்கு நியாயமாக கிடைக்க கூடிய அடிப்படை வசதிகளை பெற பிரதேச சபையை தரமுயர்த்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விட்டுக்கொண்டே இருப்பதும், அதற்கு முஸ்லிம் சமூகம் முட்டுக்கட்டை இடுவதும் எவ்வகையில் நியாயமாகும்?
இன்றைய சூழலில் தமிழர் தரப்பு சிங்கள பேரின வாதிகளுடன் இணைந்து கல்முனையில் உண்ணாவிரதம் இருந்தேனும் தமக்கான உரிமையை பெற்றிட வேண்டும் என எதிரியிடம் மண்டியிடும் சூழலுக்குள் தள்ளி விடப்பட்டிருக்கின்றார்கள் எனில்....?
நியாயத்தராசு இருபக்கமும் சமமாக இருக்கட்டும்.
கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்த 
எதிர்ப்பதற்கான நியாயமான காரணம் இல்லாமல் தமிழர் கோரிக்கைகளுக்கான எதிர்ப்பு சத்தியாக்கிரகம் நடத்துவதனால் பிளவுகள் மட்டுமே அதிகமாகும் என்பதை முஸ்லிம் சமூகம் உணர வேண்டும். எரியும் நெருப்பில் எண்ண்ய் வார்க்கும் செயல்பாடுகளை தொடர்வதனால் யாருக்கு பயன் கிடைக்கும் என சிந்தியுங்கள்.

🙏🙏🙏🙏
இவ்விவாதங்கள் , கடந்த கால வரலாறுகள் அறியாமல ஒரு பக்க கருத்துக்களை மட்டும் உள்வாங்கி உணர்ச்சிகர அரசியலில் சிக்கி எமது இளையோர்கள் தம் வாழ்க்கையை பாழாக்காமல் தமிழ் பேசும் சிறுபானையினரான எம் இரு சமூகத்தினுள் புரையோடி இருக்கும் கசப்புக்களை நீக்கப்பட வேண்டும். இரு சமூகமும் தாம் விடும் தவறுகளை உணர வேண்டும் எனும் நோக்கத்தில் தொடரப்படுகின்றது.
ஆதலால் ஆனறோர்கள் எமது இளையோருக்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழி நடத்தும் கடமைகளிலிருந்து விலகி வேடிகை பார்க்காமல் தங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
காலத்தில் அவசியத்தை உணருங்கள். மௌனமாக வேடிக்கை பார்க்கும் தருணம் இது அல்ல.
மட்டக்களப்பு மாணவர் சமுதாயம் சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைக்கப்படுகின்றதெனும் ஐயம் தோன்றுகின்றது😭.
ஆடுரா ராமா ஆடு எனும் சிங்கள பேரினவாதத்தின் ஏவல்களுக்கும், கட்டளைக்கும் ஆடும் குரங்குகளாக தமிழர்களும், சோனகர்களும் ஆகி போனோமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!