07 பிப்ரவரி 2017

சிறுவர் பாடல்கள்.. புலி வருது

ஆடு மேய்க்கும் ஆனந்தன்
ஆட்களை ஏய்ப்பதில் வல்லவனாம்.
பொய்கள் பலவும் தினம் சொல்லி
போக்குக்காட்டி சிரிப்பானாம்.
புலி வருது, புலி வருது என்றே
தினமும் கத்துவானாம்
கேட்டு பயந்த மக்களெல்லாம்
பதறி ஓடி ஒளிவதனை.
கையைக்கொட்டி ஆனந்தன்
தினமும் பார்த்து சிரிப்பானாம்.
திடுக்கிடும் பொய்யதை கூறியதானால்
திட்டித்தீர்த்தனர் பொது மக்கள்
தினமும் சொன்ன பொய்யதனால்
தீங்கானவனாய் தெரிந்தானாம்.
ஒரு நாள் புலியொன்று நிஜமாக
புதரில் ஒளிந்ததைக்கண்டானாம்.
ஐயோ புலி புலி என்றானாம்.
யாரும் அவன் சொல் கேட்கல்லையாம்.
தினமும் பொய் பல பேசியதால்
இதுவும் பொய் என்றே நம்பினராம்.
பொய்யே நாளும்பேசியதால்
மெய்யும் ஒரு நாள் பொய்யாச்சே
இனி மேலும் நாமும் பொய் பேசோம்.
தினமும் மெய்யே பேசிடுவோம்.
நிஷா

10 கருத்துகள்:

  1. அரசியலில் பொய்தானே இப்போது கோலாட்சுகின்றது புலிக்கதை பேசி)))

    பதிலளிநீக்கு
  2. உண்மைகள் இப்போது உறங்கு நிலையில்.

    பதிலளிநீக்கு
  3. நானும் பாடி ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
  4. மிகவும் நன்றாக இருக்கிறது சகோ/நிஷா!!! உண்மையும் இதுதான்!!!

    பதிலளிநீக்கு
  5. அட எங்கக்கா சிறுவர் பாடல் சிறப்பாக எழுதியிருக்காங்க...
    வாழ்த்துக்கள்...
    அடிக்கடி வலம் வரட்டும் சிறுவ்ர் பாடலகள்.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் எளிய வரிகளாலும் சந்த அழகுடனும் நீதியுடனும் சிறுவர் பாடல் அருமையாக உள்ளது. பாராட்டுகள்மா. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. மகளிர் தினத்தன்று மகளிர் ஆண்களுக்கு கிப்டு தரணும் என்ற வழக்கம் உண்டு என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறன் மீ வெயிட்டிங்க

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!