27 அக்டோபர் 2020

COVID 19 - சீனாவில் வெற்றிகரமான கட்டுப்படுத்த பட்டிருக்கின்றது.-2

 பகுதி 2 

COVID-19 ஐ கட்டுப்படுத்த உலகம் போராடி வரும் நிலையில், சீனா தொற்றுநோயை விரைவாகவும் திறமையாகவும் கட்டுப்படுத்த முடிந்தது. அது எப்படி சாத்தியமானது?

தற்கால நடப்பு நிலை COVID-19  in 🇨🇳 

               • 24.10  முதல் நபர் Virus positive 

               • 25-10 -  26.10  PCR Test .. Test 

               • 27.10  முழு நகரும் உடனடி lockdown. 

சின்ஜியாங்கின் ( Xinjiang ) வடமேற்கு பிராந்தியத்தில் இருக்கும் காஷ்கரில்  ( Kashgar ) ஒரு நபர் (17 வயது garment factory worker) 24 ம் திகதி சனிக்கிழமை  கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பிறகு. 25 அக்டோபர்  ஞாயிற்றுக்கிழமை 138 புதிய அறிகுறி இல்லாத கொரோனா வைரஸ் தொற்றுகள் கண்டறிந்துள்ளதாக ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. அறிகுறியற்ற தொற்றாளர்களை  சீனா ‘உறுதிப்படுத்தப்பட்ட  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  ’என வகைப்படுத்தவில்லை,  அவ்விடங்களில் இதுவரை அறிகுறிகள் உள்ளவர்களின்  வைரஸ் positive  எதுவும் பதிவாகவில்லை.

சீனாவின் பிரதான நிலப்பரப்பில் 10 நாட்களில் இது முதல் புதிய உள்ளூர் நோய் தொற்றாளர்கள் (Shandong  மாகாணத்தில் கிங்டாவோ  Qingdao நோய் பரவலுக்கு பின்) ஆகஸ்ட் மாதத்தில் மற்றொரு உள்ளூர் COVID கிளஸ்டரின் தளமாக ஜின்ஜியாங் இருந்தது, இதன் விளைவாக தலைநகர் உரும்கி முழுமையாக பூட்டப்பட்டது; இருப்பினும், ஆகஸ்ட் 15 முதல் இப்பகுதியில் புதிய தொற்றாளர்கள்  எதுவும் பதிவாகவில்லை.

எனினும் கஷ்கர், சின்ஜியாங்கில் (Kashgar, க்ஸிஞ்சிங்) அதிகாரிகள் சனிக்கிழமை இரவு ஒரு சோதனைத் திட்டத்தைத் தொடங்கினர், இது அந்த பிராந்தியத்தின் 4.75 மில்லியன் மக்களை உள்ளடக்கி இருந்தது. அதாவது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 24.10- 25.10 ஒரே நாளில் 2.84 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமைக்குள் மீதமுள்ள மக்கள் சோதிக்கப்படுவார்கள் என்று ( அரசாங்க)  நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஷ்கர் ஒரு பண்டைய பட்டு சாலை நகரமாகும், இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. 

அறிகுறிகள் அற்ற, உறுதிப்படுத்தப்படாத தொற்றாளர்கள் வெறும் 138 நபர்கள் தான் என்ற அசட்டுதனம் இல்லாமல்

பொருளாதாரம்,அரசியல் ஆதாரம் என்றெல்லாம் யோசித்து காலம் கடத்தாமல் அங்கே வைரஸ் பொசிட்டிவ், இங்கே பொசிட்டிவ் என்று கூவி அறிக்கை விடாமல், தகரம் அடைத்து தனிமை படுத்தாமல் ஒட்டுமொத்தமாக நகரின் 4.75 மில்லியன் மக்களும் -  பல்கலைக்கழகங்களைத் தவிர அனைத்து பள்ளிகளையும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதாக காஷ்கர் அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, 

ஆனால் பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்கள் திறந்திருக்கும். காஷ்கர் பிராந்தியத்தில் உள்ள நான்கு நகரங்கள் ‘அதிக ஆபத்து’ உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் கடுமையான பயண மற்றும் இயக்க கட்டுப்பாடுகள்  நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

Link :China

1919 நவம்பரில் சீனாவில் எதோ வைரஸ் பரவி , எதோ ஒரு நகரில் இருக்கும் இலட்சக்கணக்கான மக்களைமுடக்கி ஒரே நாளில் பெரிய மருத்துவமனை,ஒரே நாளில் ஆயிரம் படுக்கை எல்லாமே ஓரிரு நாளில்  நடந்து முடிந்தது. மாஸ்க் எனும் முக மூடி, மனிதர்களுக்கு சானிடைசர் குளியலும், இறந்தவர்களை குவியலாக புதைத்ததும் வீட்டு செல்ல பிராணிகளை கூட வீட்டு விடாமல் முகத்தை மூடி எதிர்ப்பு குரல்களை ஒடுக்கி சீனா போன்ற நாட்டின் பொருளாதார தன்னிறைவும், அதன் கட்டமைப்பும் காரணமாகி இருக்கலாம் என்றாலும் அவை எல்லாவற்றுள்ளும் முக்கியமான காரணம் மக்களின் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் என்பதை ஒப்புக்கொண்டு ஆக வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை சீன அரசியல் வாதிகளும் மக்களும் அரசியல் ஆதாயத்துக்கு பயன் படுத்தவில்லை என்பதை சீனாவின் முடக்கப்படாத பகுதி சீனா நண்பர்கள் மூலம் அறிய முடிகின்றது.,

ஒரு மாநகரத்தை பல மில்லியன் மக்களை வீட்டுக்குள் முடக்கும் முடிவை எடுக்க சில மணி நேரங்களே போதுமாக இருந்தது எனும் துணிச்சலையும் என்னமோ மேஜிக் போல் யாருக்கோ தானே என்று வேடிக்கை பார்த்தோம். 

நோய் தொற்றின் ஆரம்ப நிலையிலேயே இணைய தளங்களை தடை செய்து, தொலைபேசி தொடர்புகளை தடுத்து, ஊடகங்களை தம் வசப்படுத்தி அனைத்துக்கும் மேல் உலக சுகாதார நிறுவன அதிகாரிகளின் ஆதரவையும் தன் பக்கம் ஈர்த்து கொண்டது. 

அதிவேக அதிரடி நடவடிக்கையில் தன் நாட்டினுள் உருவான வைரஸ் அரக்கனை கட்டுப்படுத்தி விட்டார்கள் என்று நிம்மதி அடையும் நேரம்  பிப்ரவரியில் இத்தாலிக்குள் நுழைந்த வைரஸ் தொற்றாளர் ஒருவரால் வெறும் மூன்று நாட்களுக்குள் கொத்து, கொத்தாய் பல உயிர்களை இழந்த பின்னே ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஆறுதலாக தடுப்பு நடவடிக்கைகளை தொடங்கியது. 

( முதல் அலையின் போது சீனா எப்படி கொரோனா வைரஸ் தொற்றாளர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது என்பதையும், ஏனைய நாடுகள் எவ்வாறு முன்னேற்பாடுகள் செய்ய முடியும் என்பதையும் தெளிவாக வெளியிடவில்லை ) 

வேகம் .. சர்வாதிகார வேகம் விவேகமற்ற முடிவு என்று ஜனநாயக நாட்டில் வாழும் அனைவரும் விமர்சித்தார்கள். சீனாவில் பரவிய வைரஸ் தானே? அனுபவிக்கட்டும் எனும் அல்டசியத்துடன் மனிதாபிமான உதவிகளை கூட செய்யாமல் வேடிக்கை பார்த்தார்கள். 

சீனாவில் கொரோனா வைரஸ் தானே உருவானதா? திட்டமிட்டு உருவானதா?

அமெரிக்க-சீனா உரசல், பேசி வைத்து எல்லாம் நடத்துகின்றார்கள், அரசியல், பொருளாதார நாடகம், சீனா உண்மை நிலை மறைக்கின்றது,  இந்த வைரஸ் தரும் இழப்புகளுக்கு சீனாவே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனும்  விமரிசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ( அவ்வாறு சிந்தனை திருப்பல்களுக்கு திட்டமிட்டு திருப்பபடுகின்றோம் ) பாதுகாப்பு மற்றும்  அறிவியல் பூர்வமாக நடவடிக்கைகளை கவனித்து, சிந்தித்து  அழுத்தம் கொடுக்க முடியாதவாறு சீனாவை குறித்த  எதிர்மறை  கருத்து பரவலாக்கபட்டிருக்கின்றன. 

ஏனைய நாட்டு அரசு நிர்வாகங்களுக்கும் மக்களுக்கும்  சீனா தொற்றுநோயை விரைவாகவும் திறமையாகவும் எப்படி கட்டுப்படுத்த முடிந்தது எனும் வழி காடடலை தருகின்றது தானே? 

தொடர்வோம்

#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா

#coronavirus_வதம்_செய்யும்

China Part 2



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!