23 அக்டோபர் 2020

பெண்களுக்கு ஆண் துணை வேண்டும்.,!

 ""பெண்களுக்கு ஆண் துணை வேண்டும். சிங்கிள் மதராக இருப்பது எளிதான விஷய்ம் இல்லை“  வனிதா

ஆணோ, பெண்ணோ தனித்து வாழ்ந்து சாதித்தவர்கள் அநேகர் தான். அதெல்லாம் அவரவர் வாழும் சூழலை பொறுத்தது. 

கணவன் எனும் பெயரில் ஒருவர் இருந்தும் இல்லாமல் நேர்மையாக நிமிர்ந்து வாழ்ந்து , உழைத்து தன்னையும், தன் பிள்ளைகளையும் பாதுகாத்து, படிக்க வைக்கும்  பெண்களை என்ன சொல்விர்கள்? 

எப்போதும் மேல் தட்டு பணக்கார செலிபிறட்டி  சமூகத்தை வைத்து  நிஜ உலகு குறித்து முடிவுக்கு வர முடியாது. வரவும் கூடாதுங்க..! 

பெண்களுக்கு துணை என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான். அதுக்கு பின் அவங்களே பக்குவப்பட்டு விடுவார்கள். ஆண்கள் இளவயது  திமிரில் துணை வேண்டாம் என்பர், வயது போன பின்பு யோசிப்பார்கள். 

அதே போல் ஒரு பெண்ணுக்கு துணை என்பது கணவனாக  மட்டும் இல்ல.. மகன், பேரன், நண்பன், அண்ணன் தம்பி சகோதர உறவில் கிடைக்கும் பாசம், கொஞ்சம் அக்கறை கூட போதுமாக இருக்கும். ஆனால் ஆண்களால் அது முடியாது. 

இன்றைய சூழலில் பலர் ஒரே வீட்டில் மனதாலும், உடலாலும் பிரிந்து குடும்பம், கௌரவம் என்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். 

சேர்ந்து வாழ்வோர் பிரிந்து வாழ, பிரிந்து வாழ்வோர் சேர்ந்து வாழ ஆசை படுவது தான்யதார்த்த நிலை ( அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை ) 

அவ்வளவு தான்..! 

அப்படியே இதையும் பாருங்கோ..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!